Thursday, February 28, 2013

ஏலாபத்திரன் ஞானம்! | ஆதிபர்வம் - பகுதி 38

Elapatra's Knowledge! | Adi Parva - Section 38 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 26)

பதிவின் சுருக்கம் : சாபத்தின் விளைவைத் தடுக்க முடியாது என்று எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; தேவர்களிடம் பேசிய பிரம்மனின் பேச்சைப் பாம்புகளிடம் எடுத்துச் சொன்ன ஏலாபத்திரன்; ஜரத்காருவை எதிர்நோக்கும்படி வாசுகியைத் தூண்டியது...

பிரம்மனிடம் தேவர்கள்
சௌதி சொன்னார், "அனைத்துப் பாம்புகளின் பேச்சையும், வாசுகியின் வார்த்தைகளையும் கேட்ட ஏலாபத்திரன், அவர்களிடம் {பாம்புகளிடம்},(1) "அந்த வேள்வி தடுக்கப்படக் கூடியதல்ல. எவனிடமிருந்து இந்த அச்சம் தோன்றியிருக்கிறதோ அந்தப் பாண்டவ குலத்து மன்னன் ஜனமேஜயனும் தடுக்கப்பட முடியாதவனே.(2) ஓ மன்னா {வாசுகி}, எவன் விதியினால் பாதிக்கப்பட்டானோ, அவன் விதியிடம் மட்டுமே தஞ்சம் அடைய வேண்டும். வேறு எதுவும் அவனுக்குப் புகலிடமாக அமைய முடியாது.(3) பாம்புகளில் சிறந்தவர்களே, நமது அச்சத்தின் காரணம் விதியில் வேர் விட்டிருக்கிறது. எனவே, விதி மட்டுமே நமது புகலிடமாக இருக்க முடியும். நான் சொல்வதைக் கேட்பீராக.(4) பாம்புகளில் சிறந்தவர்களே, அந்தச் சாபம் உச்சரிக்கப்படும்போது, அச்சத்தினால் நான் நமது தாயின் {கத்ருவின்} மடியிலேயே பதுங்கியிருந்தேன். பாம்புகளில் சிறந்தவர்களே, ஓ பெரும் காந்தி மிக்கத் தலைவனே (வாசுகி), {நான் பதுங்கியிருந்த} அந்த இடத்தில், (இந்தச் சாபத்தால்) கவலை கொண்ட தேவர்கள் பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} பேசும் வார்த்தைகள் எனக்குக் கேட்டன.(5,6)

Wednesday, February 27, 2013

பாம்புகளின் ஆலோசனை! | ஆதிபர்வம் - பகுதி 37

Consultation of the Snakes! | Adi Parva - Section 37 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 25)

பதிவின் சுருக்கம் : தங்கள் தாயுடைய சாபத்திலிருந்து தப்பிக்க ஆலோசனையில் ஈடுபட்ட பாம்புகள்; பாம்புகள் சொன்ன திறனற்ற ஆலோசனைகளைக் கேட்டு கவலை கொண்ட வாசுகி...

சௌதி சொன்னார், "அந்தப் பாம்புகளில் சிறந்தவனான வாசுகி, தனது தாயின் சாபத்தைக் கேட்டு, அதை {அந்தச் சாபத்தை} எப்படிச் செயலிழக்க வைப்பது என்பது குறித்து சிந்தித்தான்.(1) தனது சகோதரர்கள் ஐராவதன் மற்றும் ஏனைய பாம்புகளுடன் சேர்ந்து எந்தக் காரியத்தைச் செய்தால் அது சிறந்ததாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினான்.(2)

உலகைத் தாங்கு ஆதிசேஷா! | ஆதிபர்வம் - பகுதி 36

Bear the earth Adisesha! | Adi Parva - Section 36 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 24)

பதிவின் சுருக்கம் : தாயை விட்டுப் பிரிந்து கடுமையான தவமியற்றிய சேஷன்; சேஷன், பிரம்மன் உரையாடல்; உலகைச் சுமக்கப் பணிக்கப்பட்ட சேஷன்...

உலகைத் தாங்கும் ஆதிசேஷன்
சௌனகர், "ஓ குழந்தாய்! {சௌதியே}, பெரும் சக்தியுடனும், எளிதில் வெல்லப்பட முடியாதவர்களுமாக வரம் அருளப்பட்ட, பல பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிட்டாய். {கத்ரு தந்த} அந்தச் சாபத்தைக் கேட்ட பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்?" என்று கேட்டார்.(1)

"சௌதி சொன்னார், "அவர்களில் {பாம்புகளில்} புகழ்வாய்ந்தவனும், சிறப்பு மிக்கவனுமான சேஷன், தனது தாயை விட்டுச் சென்று, கடுமையான விரதங்களை நோற்றுக் காற்றை மட்டும் உண்டு, கடுந்தவம் செய்தான்.(2) அவனது தவங்களை கந்தமாதன மலையிலும், பதரி, கோகர்ண மலைகளிலும், புஷ்கர வனத்திலும், இமய மலையின் அடிவாரத்திலேயும் மேற்கொண்டான்.(3)

Monday, February 25, 2013

பாம்புகளின் பெயர் வரிசை! | ஆதிபர்வம் - பகுதி 35

Namelist of the Snakes! | Adi Parva - Section 35 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 23)

பதிவின் சுருக்கம் : பாம்புகளின் பெயர்ப்பட்டியலைக் கேட்ட சௌனகர்; அவற்றில் முக்கியமானவற்றைச் சொன்ன சௌதி...

சௌனகர், "ஓ சூதப் புதல்வா! {சௌதியே}, நீ இதுவரை, பாம்புகள் ஏன் அவற்றின் தாயாலே {கத்ருவினாலே} சபிக்கப்பட்டன என்றும், வினதை ஏன் தனது மகனால் {அருணனால்} சபிக்கப்பட்டாள் என்றும்,(1) கத்ரு மற்றும் வினதைக்கு அவர்களது கணவர் {கசியபர்} கொடுத்த வரங்களைப் பற்றியும், வினதையின் மகன்களின் பெயர்களையும் {அருணன், கருடன்} சொல்லிவிட்டாய்.(2) ஆனால், நீ இன்னும் பாம்புகளின் பெயர்களைக் கூறவில்லையே? அவற்றில் முக்கியமான பாம்புகளின் பெயர்களைக் கேட்க ஆவலுடன் இருக்கிறோம்" என்று கேட்டார்.(3)

Sunday, February 24, 2013

பாம்புகளின் நாவுகள் பிளந்தன! | ஆதிபர்வம் - பகுதி 34

Snakes tongue divided into twain! | Adi Parva - Section 34 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 22)

பதிவின் சுருக்கம் : கருடனிடம் நட்பு கொண்ட இந்திரன்; தன் பலத்தைச் சொன்ன கருடன்; பாம்புகளைத் தன் உணவாகக் கேட்ட கருடன்; பாம்புகளிடம் அமுதத்தைக் காட்டிய கருடன்; அமுதத்தைக் கவர்ந்தான் இந்திரன்; பாம்புகளின் நாவுகள் பிளந்தன...

சௌதி தொடர்ந்தார், "அதன் பின்பு கருடன், "ஓ புரந்தரா! {இந்திரா}, நீ விரும்புவது போலவே உனக்கும் எனக்குமான இடையில் நட்பு உண்டாகட்டும். எனது பலம் தாங்க முடியாதது என்பதை அறிந்து கொள்வாயாக.(1) ஓ ஆயிரம் வேள்வி செய்தவனே! தன் பலத்தைத் தானே உயர்வாகப் பேசுவதை நல்லவர்கள் அனுமதிக்க மாட்டார்கள், தங்கள் பெருமையையும் பேச மாட்டார்கள்.(2) ஓ நண்பனே! காரணமில்லாத தற்பெருமை சரியானதல்ல என்றாலும், நீ நண்பனாகிவிட்டுக் கேட்டபடியால், உனக்குப் பதிலளிக்கிறேன்.(3) ஓ சக்ரா! {இந்திரா}, மலைகளுடனும், கானகங்களுடனும் பெருங்கடல்களின் நீருடனும் இருக்கும் இந்த முழுப் பூமியை, அதன் மேல் நீ இருப்பினும் எனது இறகு ஒன்றைக் கொண்டே என்னால் சுமக்க முடியும்.(4) அனைத்து உலகங்களையும், அதனுள் இருக்கும் அசைவன, அசையாதன ஆகியவற்றையும் ஒன்றாகச் சேர்த்தாலும் அனைத்தையும் சோர்வில்லாமல், எனது பலத்தால் நான் சுமக்க முடியும் என்பதை நீ அறிந்து கொள்வாயாக" என்றான்."(5)

அமுதத்தைக் கவர்ந்த கருடனின் மகிமை! | ஆதிபர்வம் - பகுதி 33

Garuda's glory, who took away Amrita! | Adi Parva - Section 33 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 21)

பதிவின் சுருக்கம் : தடைகளை மீறி அமுதத்தைக் கவர்ந்த கருடன்; கருடனைத் தன் வாகனமாக்கிக் கொண்ட விஷ்ணு; தன் தேரின் கொடிமரத்தில் அவனுக்கு இடமளித்தது; வஜ்ராயுதத்திற்கு ஓர் இறகை அளித்த கருடன்; கருடனின் பலத்தை அறிய விரும்பிய இந்திரன்...

சௌதி சொன்னார், "அந்தப் பறவையானாவன் {கருடன்}, கதிரவனின் கதிர்களைப் போலப் பொன்னொளி கொண்ட உருவம் தரித்துக் கடலில் வேகமாகச் செல்லும் நீரோட்டம் போலப் பெரும் சக்தியுடன், (அமுதுள்ள இடத்திற்குள்) நுழைந்தான்.(1) கத்தியைப் போன்ற கூர்மையான முனைகள் கொண்டு இடைவிடாமல் சுழலும் எஃகுச் சக்கரம் ஒன்று அமுதத்தின் அருகே நிறுவப்பட்டிருந்ததைக் கண்டான்.(2)

தேவர்களைக் கலங்கடித்த கருடன்! |ஆதிபர்வம் - பகுதி 32

Garuda attacked the Gods! | Adi Parva - Section 32 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 20)

பதிவின் சுருக்கம் : கருடனுடன் மோதிய தேவர்கள்; தோற்றோடிய தேவர்கள்; பல நதிகளின் நீர்கொண்டு அமுதமிருக்கும் இடத்தில் இருந்த நெருப்பை அணைத்த கருடன்...

சௌதி சொன்னார், "ஓ பிராமணர்களில் முதன்மையானவரே! இப்படித் தேவர்கள் போருக்குத் தயாராக இருக்கையில், பறவைகளின் மன்னன் கருடன், அந்த விவேகமுள்ளவர்கள் முன் விரைவாக வந்தான்.(1) அவனது பெரும்பலத்தைக் கண்ட தேவர்கள் அச்சத்தால் நடுங்கி, ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(2) சோமத்தை (அமுதத்தைக்) காப்பவர்களில் அளவிட முடியா பலத்துடனும், நெருப்பு போன்ற சுடரொளியுடனும், பெரும் சக்தியுடனும் கூடிய பௌமனன் (தேவ தச்சன் {விஸ்வகர்மா}) இருந்தான்.(3) சிறிது நேரமே நீடித்த ஒரு பயங்கர மோதலுக்குப் பிறகு, பறவைகள் மன்னனால் {கருடன்}, கூர்நகங்களாலும், அலகாலும், சிறகுகளாலும் அடிபட்ட அவன் இறந்தவனாகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான்.(4)

வாலகில்யர்களின் கோபம்! | ஆதிபர்வம் - பகுதி 31

The wrath of the Valakhilyas! | Adi Parva - Section 31 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 19)

பதிவின் சுருக்கம் : சௌனகர் கேட்ட கேள்விகள்; கசியபர் செய்த வேள்வியில் வாலகில்யர்களை அவமதித்த இந்திரன்; மற்றொரு இந்திரனை உருவாக்கத் தவமிருந்த வாலகில்யர்கள்; கருடனின் பிறப்புக்குக் காரணமாக அமைந்த வாலகில்யர்கள்...

சௌனகர், "ஓ சூதப் புதல்வா! {சௌதியே}, ”இந்திரன் செய்த தவறு என்ன? அவன் கவனக்குறைவாகச் செய்த செயல் என்ன? எப்படி வாலகில்யர்களின் தவப்பயனின் விளைவால் கருடன் பிறந்தான்?(1) கசியபர் எப்படிப் பறவைகளின் அரசனை {கருடனை} மகனாக அடைந்தார்? எப்படி எல்லா உயிரினங்களாலும் வெல்ல முடியாதவனாகவும், கொல்ல முடியாதவனாகவும் அவன் {கருடன்} இருக்கிறான்?(2) எப்படி அந்த விண்ணோடியால் விரும்பிய இடத்திற்கெல்லாம் செல்லவும், விரும்பிய சக்தியை அடையவும் முடிகிறது? இவ்விவரங்கள் புராணங்களில் உள்ளதெனில் நான் அதைக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டார் {சௌனகர்}.(3)

Saturday, February 23, 2013

கருடனுக்குப் பெயர் கொடுத்த வாலகில்யர்கள்! | ஆதிபர்வம் - பகுதி 30

Valakhilyas naming Garuda! | Adi Parva - Section 30 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 18)

பதிவின் சுருக்கம் : யானையையும், ஆமையையும் தூக்கிச் சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்த கருடன்; மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த வாலகில்யர்கள்; கருடனுக்குப் பெயர் கொடுக்கப்பட்டது; யானையையும், ஆமையையும் தின்ற கருடன்; அமுதத்தைக் காக்க உத்தரவிட்ட இந்திரன்...

சௌதி தொடர்ந்தார், "தனது காலால் பெரும் பலம் வாய்ந்த கருடன் தொட்டவுடனேயே, அந்த மரத்தின் கிளை ஒடிந்தது. அதைக் {ஒடிந்த கிளையை} கருடன் {அலகால்} பிடித்துக் கொண்டான்.(1) வியப்பால் தனது பார்வையைச் சுழலவிட்ட கருடன், வாலகில்ய முனிவர்கள் அதிலிருந்து {அந்த கிளையிலிருந்து} தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தவமியற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான்.(2) அந்தக் கிளை கீழே விழுந்தால் அந்த முனிவர்கள் கொல்லப்படுவார்கள் என்பதை உணர்ந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்தவன், யானையையும், ஆமையையும் இன்னும் இறுகப் பற்றினான்.(3,4)

Friday, February 22, 2013

விபாவசூரும் சுப்ரதீகனும்! | ஆதிபர்வம் - பகுதி 29

Vibhavasu and Supritika! | Adi Parva - Section 29 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 17)

பதிவின் சுருக்கம் : கருடனின் வாயில் சிக்கிய அந்தணன்; அவனையும், அவனது மனைவியையும் விடுவித்த கருடன்; கசியபரைக் கண்ட கருடன்; கருடனின் பசிபோக்க வழி சொன்ன கசியபர்; விபாவசூர் மற்றும் சுப்ரதீகன் ஆகியோரின் கதை...

சௌதி தொடர்ந்தார், "{அப்படிக் கருடன் நிஷாதர்களை விழுங்கிக் கொண்டிருக்கும் போது}, ஒரு பிராமணன் தனது மனைவியுடன் அந்த விண்ணதிகாரியின் தொண்டைக்குள் புகுந்தான். முன்னவன் {பிராமணன்} சுடர்விட்டெரியும் மரக்கரி போல் அந்தப் பறவையின் {கருடனின்} தொண்டையைச் சுட்டான். அவனிடம் கருடன்,(1) "ஒ பிராமணர்களில் சிறந்தவரே, எனது வாயை உமக்காகத் திறக்கும்போது விரைவாக வெளியேறுவீராக. என்னதான் பாவகரமான செயல்களிலேயே ஒரு பிராமணன் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அவன் என்னால் கொல்லப்படக் கூடாதவன்" என்றான்.(2) இப்படிக் கருடன் சொன்னவுடன் அந்த பிராமணன், "ஓ, எனது மனைவியான இந்த நிஷாதப் பெண்ணும் என்னுடன் வெளியே வரட்டும்" என்றான்.(3) அதற்குக் கருடன், "நிஷாத இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணையும் உம்முடன் அழைத்துக் கொண்டு விரைவாக வெளியே வருவீராக. எனது குடலின் வெப்பத்தால் இன்னும் நீங்கள் செரிக்கப்படாமல் இருப்பதால், காலந்தாழ்த்தாமல் உங்களைக் காப்பாற்றிக் கொள்வீராக" என்றான்.(4)

Thursday, February 21, 2013

கருடன் வேட்டை! | ஆதிபர்வம் - பகுதி 28

Garuda's Hunt! | Adi Parva - Section 28 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 16)

பதிவின் சுருக்கம் : அமுதத்தைத் தேடிச் சென்ற கருடனுக்குத் தாயின் அறிவுரை; நிஷாதர்களைக் கொன்று தின்ற கருடன்...

வினதையிடம் விடைபெற்று சென்ற கருடன்
சௌதி சொன்னார், "இப்படிப் பாம்புகள் சொல்ல, அதைக் கேட்ட கருடன் தனது தாயிடம், "நான் சென்று அமுதத்தைக் கொண்டு வருகிறேன். வழியிலேயே ஏதாவது நான் சாப்பிட விரும்புகிறேன். எனக்கு வழிகாட்டுவாயாக" என்றான்.(1) வினதை, "தொலைதூரத்தில், நடுக்கடலில் நிஷாதர்களின் அழகான வசிப்பிடம் இருக்கிறது. அங்கு வாழும் ஆயிரக்கணக்கான நிஷாதர்களைத் தின்று அமுதத்தைக் கொண்டு வருவாயாக.(2) ஆனால், எந்த ஒரு பிராமணனின் உயிரையும் மாய்க்க உன் மனதில் எண்ணாதே. எல்லா உயிரினங்களிலும் பிராமணன் கொல்லப்படக்கூடாது. அவன் உண்மையில் நெருப்பு போன்றவன்.(3) ஒரு பிராமணன் கோபம் கொள்ளும்போது, நெருப்பு போல, அல்லது சூரியனைப் போல அல்லது கூரிய முனை கொண்ட ஆயுதம் போல அல்லது விஷம் போல ஆகிறான்.

Wednesday, February 20, 2013

கருடனுக்குப் பாம்புகளிட்ட கட்டளை! | ஆதிபர்வம் - பகுதி 27

Snakes commanding Garuda! | Adi Parva - Section 27 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 15)

பதிவின் சுருக்கம் : ரமணீயகத் தீவில் பொழுதைக் கழித்த பாம்புகள், மீண்டும் கருடனிடம் வேறு தீவுகளுக்குத் தங்களைச் சுமந்து செல்லுமாறு கட்டளையிட்டது; கருடனுக்கும் தாய் வினதைக்கும் இடையில் நடந்த உரையாடல்; அடிமைத்தளையில் இருந்து தங்களை விடுவிக்கும்படி பாம்புகளிடம் கேட்ட கருடன்; அமுதத்தைக் கோரிய பாம்புகள்...

பாம்புகளிடம் பேசும் கருடன்
சௌதி சொன்னார், "மழையில் நனைந்த பாம்புகள், அதன்பிறகு மிகவும் மகிழ்ந்திருந்தன. அந்த அழகான இறகுகள் கொண்ட பறவையானவன் {கருடன்} தங்களைச் சுமந்து செல்ல விரைவாகத் தீவை அடைந்தனர்.(1) அந்தத் தீவு, மகரங்களின் இருப்பிடமாக, அண்டம் படைத்தோனால் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அங்கே அவர்கள் பயங்கரமான லவணச் சமுத்திரத்தைக் (உப்புக் கடல்) கண்டனர்.(2) கருடனுடன் வந்தவர்கள் அங்கே நீரால் சுத்தம் செய்யப்பட்ட ஓர் அழகான காடு கடலின் மடியில் இருந்ததையும், இறகுகள் கொண்ட இசைக்கலைஞர்களின் {பாடும் பறவைகளின்} இன்னிசை எங்கும் நிறைந்து இருந்ததையும் உணர்ந்தனர்.(3) {அப்படிப்பட்ட} அக்கானகத்தில் கருடனுடன் அப்பாம்புகள் வந்திறங்கினர். அங்கே, கொத்துக் கொத்தாக மரங்கள் பலவகைப்பட்ட மலர்களுடனும் பழங்களுடனும் நிறைந்து இருந்தன.

Tuesday, February 19, 2013

பாம்புகளைக் காப்பாற்றிய இந்திரன்! | ஆதிபர்வம் - பகுதி 26

Snakes saved by Indra! | Adi Parva - Section 26 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 14)

பதிவின் சுருக்கம் : மழையைப் பொழிந்த இந்திரன்; மகிழ்ச்சியுற்ற பாம்புகள்; ரமணீயகத் தீவை அடைதல்...

சௌதி சொன்னார், "தேவமன்னனும், குதிரைகளிலே சிறந்தவற்றைத் தன் தேரிலே கொண்டவனுமான இந்திரன், கத்ருவால் இப்படி வழிபடப்பட்ட பிறகு, வானவட்டத்தை நீலநிறப் பெருமேகங்களால் மறைத்து,(1) அம்மேகங்களிடம், 'உயிருண்டாக்கவல்ல, புனிதமான உங்கள் துளிகளைப் பொழியுங்கள்' என்று பணித்தான். அந்த மேகங்கள் மின்னலுடன் கூடிய ஒளி பொருந்தி, தடையேதுமின்றி ஒன்றோடொன்று ஆகாயத்தில் முழங்கியபடியே பெருமழையைப் பொழிந்தன.(2)

கத்ரு இந்திரனிடம் வேண்டுதல்! | ஆதிபர்வம் - பகுதி 25

Kadru's prayer to Indra! | Adi Parva - Section 25 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 13)

பதிவின் சுருக்கம் : வினதை கத்ருவையும், கருடன் பாம்புகளையும் நடுக்கடலில் உள்ள தீவை நோக்கிச் சுமந்து செல்வது; கதிரவனின் கதிர்களால் சுடப்பட்ட பாம்புகள் அடைந்த துன்பம்; இந்திரனிடம் வேண்டிய கத்ரு; கத்ரு சொன்ன இந்திரத்துதி...

சௌதி சொன்னார், "எந்த இடத்திற்கும் தன் இச்சைப்படி செல்லக்கூடிய அந்தப் பெரும்பலம்பொருந்திய பறவையானவன், தனது தாயின் {வினதையின்} இருப்பிடம் சென்று கடற்கரையில் இறங்கினான்.(1) அங்கே வினதை பந்தயத்தில் தோல்வியுற்று, {கத்ருவிற்கு} அடிமையாகச் சோகத்துடன் வாழ்ந்து வந்தாள்.(2)

Sunday, February 17, 2013

கதிரவனின் சாரதியாக அருணன்! | ஆதிபர்வம் - பகுதி 24

Aruna became the charioteer of Surya! | Adi Parva - Section 24 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 12)

பதிவின் சுருக்கம் : தன் பெரிய உடலைச் சுருக்கிக் கொண்ட கருடன்; சூரியனின் கோபம்; உலகைச் சுட்டெரித்த சூரியன்; சூரியனின் தேரோட்டியான அருணன்...

கதிரவனும் அருணனும்
சௌதி சொன்னார், "அனைத்தையும் கேட்டுவிட்டு, அந்த அழகான இறகுகளுடைய பறவையானவன் தனது உடலைக் கண்டு, தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டான்.(1)

அந்தப் பறவையான கருடன், "எவ்வுயிரும் அச்சப்பட வேண்டாம், எனது பயங்கர உருவைக் கண்டு நீங்கள் அச்சத்திலிருப்பதால், எனது சக்தியைச் சுருக்கிக்கொள்கிறேன்" என்றான்."(2)

சௌதி தொடர்ந்தார், "விருப்பப்பட்ட இடத்திற்குத் தங்குதடையின்றிச் செல்லக்கூடியவனும், எவ்வளவு சக்தியையும் விருப்பப்பட்ட அளவுக்குப் பெருக்கிக் கொள்ளக்கூடியவனுமான அந்தப் பறவையானவன் {கருடன்}, {தனது அண்ணன்} அருணனை முதுகில் ஏற்றிக் கொண்டு தனது தந்தையின் {கசியபரின்} இல்லத்தைத் தொடர்ந்து, பெருங்கடலுக்கு அக்கரையில் இருக்கும் தனது அன்னையின் {வினதையின்} பக்கத்தில் உள்ள கடற்கரையில் வந்து சேர்ந்தான். கதிரவனோ உலகங்களைத் தனது கொடுங்கதிர்களால் சுட்டெரிக்கத் தீர்மானிக்கும் நேரத்தில் பெரும் காந்திமிக்க அருணனைக் கிழக்குப் பகுதியில் அமர்த்தியிருந்தான்".(3,4)

பிறந்தான் கருடன்! | ஆதிபர்வம் - பகுதி 23

Garuda Born! | Adi Parva - Section 23 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : பந்தயத்தில் வீழ்ந்த வினதை; கத்ருவுக்கு அடிமையான வினதை; கருடன் பிறந்தது; தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்பட்ட கருடன்...

சௌதி சொன்னார் "கடலைக் கடந்ததும், துரிதமான வேகம் கொண்ட கத்ரு தன் சகோதரி வினதையுடன் குதிரைக்கு அருகில் இறங்கினாள்.(1) அவர்கள் இருவரும் வேகமாக ஓடக்கூடிய குதிரைகளில் முதன்மையான அந்தக் குதிரை {உச்சைஸ்ரவஸ்}, சந்திரக்கதிர்களைப் போல உடல் முழுவதும் வெள்ளையாகவும், (வாலில்) கருமுடிகளுடன் இருந்ததையும் கண்டனர்.(2) குதிரையின் வாலில் நிறையக் கருமுடிகள இருப்பதைச் சுட்டிக்காட்டிய கத்ரு, மிகவும் வாட்டமுற்றிருந்த வினதையைத் தனது அடிமையாக்கிக் கொண்டாள்.(3) இப்படிப் பந்தயத்தில் தோற்று, அடிமைத்தனத்திற்குள் தான் புகுந்துவிட்டதை எண்ணி வினதை மிகவும் வருந்தினாள்.(4)

Saturday, February 16, 2013

கத்ருவும் வினதையும் கடலைக் கடந்தனர்! | ஆதிபர்வம் - பகுதி 22

Kadru and Vinata crossed the Ocean! | Adi Parva - Section 22 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : கத்ரு மீது கொண்ட அச்சத்தினால் பாம்புகள் அவள் சொன்னதைச் செய்தது; கடலைக் கடந்த சகோதரிகள்...

"சௌதி சொன்னார், "தாயின் {கத்ருவின்} ஆசை நிராசையானால், அவள் தங்கள் மீது வைத்திருக்கும் பாசத்தைத் துறந்து தங்களை எரித்துவிடுவாளோ என்ற பயத்தில், பாம்புகள் தங்களுக்குள் கலந்து பேசி, அவளது ஆணையை நிறைவேற்றுவது என்று முடிவு செய்தனர்.(1) மற்றொருபுறம், அவள் கருணை தங்களுக்குக் கிடைக்குமானால், தங்களைச் சாபத்திலிருந்து விடுவிப்பாள் என்ற எண்ணத்தில், "நாம் நிச்சயமாகக் குதிரையின் வாலைக் கருப்பாக்குவோம்" என்றனர்.(2) பிறகு அந்தப் பாம்புகள் சென்று குதிரையின் வாலின் முடிகளாக மாறினர் என்று சொல்லப்படுகிறது. பந்தயம் கட்டிக்கொண்ட அந்தச் சக்களத்திகளும் {கசியபரின் மனைவிகள்}, ஓ பிராமணர்களில் சிறந்தவரே, தக்ஷனின் மகள்களும், சகோதரிகளுமான கத்ரு மற்றும் வினதை ஆகிய இருவரும், கடலின் அக்கரையைக் காண வான் வெளியில் மகிழ்ச்சியுடன் விரைந்தனர்.(3-5)

கடல் - ஆறுகளுக்கு அரசன்! | ஆதிபர்வம் - பகுதி 21

Ocean - King of rivers! | Adi Parva - Section 21 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 9)

பதிவின் சுருக்கம் : பந்தயத்தின் முடிவுக்காக உச்சைஸ்ரவத்தைக் காண கடலைக் கடந்து சென்ற சகோதரிகள்...

சௌதி சொன்னார், "ஓ தவத்தைச் செல்வமாகக் கொண்டவரே! {சௌனகரே}, இரவு கழிந்து காலையில் சூரியன் உதித்ததும், அந்த இரு சகோதரிகளான கத்ருவும், வினதையும், அடிமையாவதாகப் பந்தயம் கட்டிக் கொண்டு, பொறுமையின்மையால் அந்த உச்சைஸ்ரவஸ் குதிரையை அருகில் காண அவசரமாகச் சென்றனர்.(1,2) வழியில் அவர்கள் பெருங்கடலைக் கண்டனர். வெகு அகலமானதாகவும், ஆழமானதாகவும், கடக்கமுடியாததாகவும் இருந்த அந்தப் பெரும் நீர்க்கொள்ளிடம் (கடல்), உருண்டு கொண்டு, பயங்கரமாக உறுமிக் கொண்டு, மிகப் பெரிய, கருத்த, கடுமையான நீர்வாழ் உயிரினங்கள், திமிங்கலங்களையே விழுங்கும் பெரிய மீன்கள், மகரங்கள் {மீன் அல்லது நீர்நாயின் உடலும் யானை முகமும் கொண்ட புராண கால விலங்கு}, வெவ்வெறு வடிங்களினாலான ஆயிரக்கணக்கான உயிரினங்கள், மற்றும் எண்ணிலடங்கா ஆமைகள், முதலைகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டு,(3-5) ரத்தினங்களின் சுரங்கமாக, வருணனின் இல்லமாக (நீர்க்கடவுள்), நாகர்களின் அழகான, மிகச்சிறந்த வசிப்பிடமாக, ஆறுகள் அனைத்திற்கும் அரசனாக,(6) பூமிக்கடியில் உள்ள நெருப்பின் இருப்பிடமாக, அசுரர்களுக்கு நண்பனாக (அல்லது ஆதரவளிப்பவனாக), எல்லா உயிரினங்களுக்கும் பயங்கரமாக, பெரிய நீர்க்களஞ்சியமாக, காலத்திற்கும் மாற்ற முடியாததாக இருந்தது.(7)

Thursday, February 14, 2013

தாய் கத்ருவிடம் பாம்புகள் பெற்ற சாபம்! | ஆதிபர்வம் - பகுதி 20

Snakes cursed by their mother Kadru! | Adi Parva - Section 20 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 8)

பதிவின் சுருக்கம் : வினதைக்கும் கத்ருவுக்கும் இடையிலான பந்தயம்; தங்கள் தாயான கத்ருவிடம் சாபம் பெற்ற பாம்புகள்; கத்ருவின் சாபத்தை அங்கீகரித்த பிரம்மன்; விஷமுறிவு மருத்துவத்தைக் கசியபருக்குப் போதித்த பிரம்மன்...

சௌதி சொன்னார், "அமுதம் பாற்கடலில் எப்படிக் கடையப்பட்டது, பெரும் அழகும் ஒப்பிடமுடியாத சக்தியும் கொண்ட குதிரை உச்சைஸ்ரவஸ் எந்தச் சூழ்நிலையில் கிடைக்கப் பெற்றது போன்ற கதைகளை முழுமையாக உரைத்துவிட்டேன்.(1) இந்தக் குதிரையைக் குறித்துதான் கத்ரு வினதையிடம், "மனதிற்கினிய சகோதரி, உச்சைஸ்ரவம் எந்நிறம் கொண்டது என்பதை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் சொல்வாயாக" என்று கேட்டாள்.(2) வினதை, "அந்தக் குதிரைகளின் இளவரசன் நிச்சயமாக வெண்மையானவன்தான். நீ என்ன நினைக்கிறாய் சகோதரி? இதைப்பற்றி நாம் பந்தயம் வைப்போம்" என்றாள் {வினதை}.(3) கத்ரு "ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே {வினதையே}, அக்குதிரையின் வால்பகுதி கருப்பு என்று நான் நினைக்கிறேன். அழகானவளே {வினதையே}, யார் தோற்கிறார்களோ அவர்கள் வெல்பவர்களுக்கு அடிமை என்று பந்தயம் வைப்போம்" என்றாள் கத்ரு."(4)

அமுதத்துக்காக தேவாசுரப் போர்! | ஆதிபர்வம் - பகுதி 19

Devasura war for nectar! | Adi Parva - Section 19 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 7)

பதிவின் சுருக்கம் : அமுதத்துக்காக நடந்த தேவாசுரப் போர்; ராகுவின் தலையைக் கொய்த நாராயணன்; போரை வென்ற தேவர்கள்; அமுதகலசத்தை நாராயணனிடம் கொடுத்த இந்திரன்...

அசுரர்கள் மற்றும் தேவர்களுடன் மோகினி
சௌதி சொன்னார், "தைத்தியர்களும் தானவர்களும் முதல்தரமான கவசங்களை அணிந்துகொண்டு ஆயுதங்களால் தேவர்களைத்[1] தாக்கினர்.(1) அந்த நேரத்தில் துணிவுள்ள தலைவனான விஷ்ணு, கவர்ச்சியான பெண்ணுருக் கொண்டு நரனுடன் சேர்ந்து தானவர்களின் கைகளிலிலிருந்து அமுதத்தைப் பறித்தான்.(2)

[1] தைத்தியர்கள் என்போர் திதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தானவர்கள் என்போர் தனு என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். தேவர்கள் என்போர் அதிதி என்பவளுக்கும் கசியபருக்கும் பிறந்த பிள்ளைகளும், அவர்களது வம்சாவளியினரும் ஆவர். திதியும், தனுவும், அதிதியும் தக்ஷனின் மகள்கள் ஆவர். தக்ஷனின் 13 மகள்களைக் கசியபர் மணந்தார்.

Friday, February 08, 2013

காலகூட நஞ்சையுண்ட மகேஸ்வரன்! | ஆதிபர்வம் - பகுதி 18

Maheswara swallowed poisonous Kalakuta! | Adi Parva - Section 18 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 6)

பதிவின் சுருக்கம் : மந்தர மலையைப் பெயர்த்தெடுத்த அனந்தன் என்ற பாம்பு; கடைவதற்காகப் பெருங்கடலை வேண்டிய தேவர்கள்; ஆமையின் முதுகில் மந்தர மலையை வைத்தது; வாசுகி என்ற பாம்பைக் கயிறாக்கி மந்தர மலையைக் கொண்டு அந்தப் பெருங்கடலைக் கடைந்த தேவர்களும், அசுரர்களும்; கடைந்ததில் இறுதியாக வந்த காலகூட நஞ்சு; பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் அந்த நஞ்சை விழுங்குவது; பெண்ணுரு கொண்ட நாராயணன்...

பாற்கடல் கடைதல்
"சௌதி சொன்னார், "மேகம்போன்ற முகடுகளைக் கொண்டதும், மந்தரம் என்றழைக்கப்பட்டதுமான ஒரு மலை இருந்தது. அந்தச் சிறந்த மலையெங்கும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட மூலிகைகள் நிறைந்திருந்தன.(1) எண்ணற்ற பறவைகள் தங்கள் மெல்லிசைகளை எழுப்பியும், விலங்குகள் இரையைத் தேடியும் அலைந்து கொண்டிருந்தன. தேவர்கள், அப்சரஸ்கள் மற்றும் கின்னரர்கள் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.(2) பதினோராயிரம் யோஜனைகள்[1] மேலெழுந்தவாரியும், அதே அளவு {சம பங்கு} கீழிறங்கியவாறும் அஃது இருந்தது.(3) தேவர்கள் கடலைக் கடையும் மத்தாக அந்த மலையைப் பயன்படுத்த எண்ணி, அதைப் பெயர்த்தெடுக்க முயன்றுத் தோற்றனர். ஆகவே அவர்கள், ஒன்றாக அமர்ந்திருந்த விஷ்ணு மற்றும் பிரம்மனிடம்,(4) "எங்கள் நன்மைக்காக இந்த மலையை எப்படிப் பெயர்த்தெடுப்பது என்று ஆலோசனை வழங்குவீராக" என்று வேண்டினர்."(5)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்