Tuesday, June 18, 2013

பாண்டுவின் இறுதிச்சடங்கு! - ஆதிபர்வம் பகுதி 127

Last rites of Pandu! | Adi Parva - Section 127 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 63)

பதிவின் சுருக்கம் : பாண்டு மற்றும் மாத்ரியின் எலும்புகளைப் பல்லக்கில் கங்கைக் கரைக்குக் கொண்டுவந்து, சடங்குகள் செய்து மீண்டும் அவற்றுக்கு எரியூட்டியது...

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அப்போது திருதராஷ்டிரன் விதுரனிடம், "ஓ விதுரா, மன்னர்களில் சிங்கத்தைப் போன்றவனுக்கும் (பாண்டு), மாத்ரிக்கும் ஈமக்கடன்கள் முறையான அரசமுறையில் நடைபெறட்டும்.(1) அவர்களின் ஆன்ம நன்மைக்காகப் பசுக்களையும், ஆடைகளையும், ரத்தினங்களையும், பலவகையான செல்வங்களையும் கேட்பவர்களுக்கு வேண்டிய அளவு கொடுப்பாயாக.(2) மாத்ரியின் இறுதிச் சடங்குகளைக் குந்தி விருப்பத்திற்கேற்றவாறு செய்ய வைப்பாயாக. மாத்ரியின் உடலைச் சூரியனோ, வாயுவோ காணமுடியாதபடி கவனமாக மூட ஏற்பாடு செய்வாயாக.(3) பாவமற்றவனான பாண்டுவுக்காக வருந்தாதே. அவன் மதிப்புமிக்க மன்னனாக இருந்து, தேவர்களுக்குச் இணையான வீரமகன்கள் ஐவரை விட்டுச் சென்றிருக்கிறான்" என்றான்".(4)



வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்ன விதுரன், பீஷ்மருடன் ஆலோசனை செய்து, பாண்டுவின் ஈமச்சடங்கைச் செய்யப் புனிதமான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தான்.(5) அந்தக் குடும்பத்தின் புரோகிதர்கள், தாமதம் செய்யாமல், தெளிந்த நெய்யின் மூலம் நறுமணத்துடன் சுடர்விட்டெரியும் புனிதமான நெருப்பை எடுத்துக் கொண்டு நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(6) நண்பர்களும், உறவினர்களும், ஆதரவாளர்களும் சேர்ந்து, அந்த ஏகாதிபதியின் உடலைத் துணியால் நன்றாக மூடி, அந்தப் பருவகாலத்திற்குரிய மலர்களாலும், பல்வேறு சிறந்த நறுமணத் திரவியங்களாலும் அஃதை அலங்கரித்தனர். பிறகு அதை எடுத்துச் செல்லும் பல்லக்கில் பூமாலைகளையும், ஆடம்பரத் துணிகளாலும் அலங்கரித்தனர். அந்த மன்னனின் மூடிய உடலை அரசியுடன் சேர்த்துப் பல்லக்கில் வைத்துத் தங்கள் தோள்களில் சுமந்து சென்றனர்.(7-9) அந்தப் பல்லக்குக்கு மேலே வெண்குடையைப் பிடித்துக் கொண்டு சாமரம் வீசிப் பல்வேறு இசைக்கருவிகளால் இன்னிசையை எழுப்பினர். அந்தக் காட்சி தகைமையுடனும், சிறப்புடனும் பிரகாசமாக இருந்தது.(10)

நூற்றுக்கணக்கானோர், அந்த மன்னனின் ஈமச்சடங்கில் கலந்து கொண்ட கூட்டத்திற்கு மத்தியில் ரத்தினங்களை விநியோகித்தனர்.(11) அந்தப் பெரும் விழாவுக்கு நீண்ட அழகான ஆடைகளையும், வெண்குடைகளையும், சாமரங்களையும் கொண்டு வந்தனர்.(12) புரோகிதர்கள் வெள்ளுடை தரித்து அந்தப் பல்லக்கை வலம் வந்து, பாத்திரத்தில் சுடர்விட்டெரிந்த புனிதமான நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டனர்.(13) பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் ஆயிரக்கணக்கில் வந்து தங்கள் மன்னனுக்காக ஓலமிட்டு அழுதனர்.(14)  "ஓ இளவரசரே {பாண்டுவே}, எங்கள் மீது நம்பிக்கையில்லாமல் பாவிகளான எங்களை விட்டுவிட்டு நிரந்தரமாக நீர் எங்குச் சென்றுவிட்டீர்?" என்று அவர்கள் கதறி அழுதனர்.(15)

பீஷ்மர், விதுரன் மற்றும் பாண்டவர்களும் கதறி அழுதனர். அப்போது, கங்கைக்கரையில் இருக்கும் ஓர் அழகான வனப்பகுதிக்கு வந்தனர்.(16) சிங்க இதயம் கொண்டவனும், உண்மையுடன் இருந்தவனுமான அந்த இளவரசன் {பாண்டு} மற்றும் அவனது துணையை {மாத்ரியை}ச் சுமந்து வந்த அந்தப் பல்லக்கை அங்கே வைத்தனர்.(17) பல தங்கப் பாத்திரங்களில் நீர் கொண்டு வந்து, பல வகை மணம் உள்ள குழம்புகளை அந்த இளவரசன் உடலில் பூசி, சந்தனக்குழம்பையும் மறுபடியும் பூசினர்.(18,19) அவர்கள் அதற்கு வெள்ளுடை உடுத்திவிட்டனர். அந்தப் புது உடையுடன் காணப்பட்ட மன்னன், உயிருடன் இருந்து விலையுயர்ந்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது[1].(20,21)

[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸிம்மமும், உயர்ந்த காரியங்களைச் செய்பவனுமாகிய பாண்டுவின் சரீரத்திலும், அவன் பாரியையான மாத்ரியின் சரீரத்திலும் எல்லா வாஸனைகளையும் சேர்த்து நல்ல அகிற்சேறும், உயர்ந்த சந்தனக்குழம்பும் பூசிப் பொற்குடங்களினால் சுற்றிலும் ஜலம் கொட்டி, வெண்சந்தனத்தையும், காரகிலோடு கூடிய புன்னைரஸத்தையும் எங்கும் பூசினர். பிறகு, பல தேங்களிலுண்டான வெளுப்பு வஸ்திரங்களை அவனுக்குப் போர்த்தினர். உயர்ந்த சயனத்தில் படுப்பதற்குத் தகுதியுள்ள புருஷஸ்ரேஷ்டனான பாண்டு மஹாராஜன் வஸ்திரங்களினாற் போர்க்கப்பட்ட பின் ஜீவித்திருப்பவன் போல விளங்கினான்" என்றிருக்கிறது. முன்பே எரிக்கப்பட்ட உடல்களின் மிச்சம் எவ்வாறு உயிருள்ளத்தாக தெரிய முடியும். பாண்டு மற்றும் மாத்ரியின் உடல்கள் முன்பே {காட்டிலேயே} எரிக்கப்படவில்லை என்பதையே இஃது உறுதிப்படுத்துகிறது. எனவே மாத்ரி ஈமச்சிதையேறியிருக்கக் கூடிய வாய்ப்பும் குறைகிறது.

புரோகிதர்களின் வழிகாட்டுதலுக்கிணங்கி ஈமச் சடங்குகள் நிறைவடைந்ததும், கௌரவர்கள், அரசன் மற்றும் அரசியின் இறந்த உடல்களில் தாமரைகளையும், சந்தனக்குழம்பையும், மற்றும் நறுமணத்தைலங்களையும் வைத்துத் தீயிட்டனர்.(22,23) உடல்கள் தீப்பற்றிக் கொண்டதும், கௌசல்யை {அம்பாலிகை}, "ஓ என் மகனே, எனது மகனே!" என்று வெடித்துக் கதறி உணர்வற்றுத் தரையில் விழுந்தாள்.(24) அவள் அப்படி விழுவதைக் கண்டு அந்நாட்டுக் குடிமக்களும், குடியேறிகளும் மன்னன் மீதிருந்த அன்பால் துயரையடைந்து கதறி அழுதனர்.(25) காற்றில் இருந்த பறவைகளும், தரையில் இருந்த விலங்குகளும் கூடக் குந்தியின் ஒப்பாரியால் துக்கமடைந்தன.(26)

அப்போது சந்தனுவின் மைந்தனான பீஷ்மரும், ஞானமுள்ள விதுரனும், மற்றவர்களும் தேற்ற முடியாதபடி துக்கத்திலிருந்தனர்.(27) அழுது கொண்டிருந்த பீஷ்மர், விதுரன், திருதராஷ்டிரன், பாண்டவர்கள் மற்றும் குரு பரம்பரையில் வந்த மகளிர் ஆகியோர் பாண்டுவுக்கு நீர்த் தர்ப்பணம் செய்தனர்.(28) இவையெல்லாம் முடிந்த பிறகு, அவர்களே துக்கத்திலிருந்தாலும், வருந்திக்கொண்டிருந்த பாண்டுவின் மகன்களை மக்கள் தேற்றவிழைந்தனர்.(29) அந்தப் பாண்டவர்கள் தங்கள் நண்பர்களுடன் வெறுந்தரையில் படுத்து உறங்கினர். இதைக்கண்ட பிராமணர்களும் மற்றும் குடிமக்களும் அவர்களது படுக்கைகளையும் துறந்தனர்.(30) குடிமக்களில் இளமையானவர்கள், முதிர்ந்தவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் மன்னன் பாண்டுவின் மகன்களுக்காக வருந்தி பனிரெண்டு நாட்களுக்குப் பாண்டவர்களோடு சேர்ந்து அழுது துக்கம் அனுஷ்டித்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(31)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்