Friday, June 21, 2013

இளவரசர்களின் குருவானார் கிருபர்! - ஆதிபர்வம் பகுதி 129

Kripa became the Guru of the princes! | Adi Parva - Section 129 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 65)

பதிவின் சுருக்கம் : பீமனைக் காணாமல் தவித்த யுதிஷ்டிரன்; குந்தி அடைந்த துயரம்; எட்டு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த பீமன்; செய்திகளனைத்தையும் அறிந்தும் அமைதிகாத்த பாண்டவர்கள்; மீண்டும் விஷம் கலந்த துரியோதனன்; விஷத்தைச் செரித்துவிட்ட பீமன்; பாண்டவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிய துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி; பிள்ளைகளின் குருவாகக் கிருபரை நியமித்த திருதராஷ்டிரன்...

வைசம்பாயனர் சொன்னார், "அதே நேரத்தில் கௌரவர்களும், பாண்டவர்களும் விளையாடி முடித்துவிட்டு, பீமன் இல்லாமலேயே நகரம் திரும்பினர்.(1) சிலர் குதிரைகளிலும், சிலர் யானைகளிலும், சிலர் ரதங்களிலும் மற்ற வாகனங்களிலும் ஹஸ்தினாபுரம் சென்றடைந்தனர். வழியிலேயே ஒருவருக்கொருவர், "பீமன் நமக்குமுன் சென்றிருப்பான்" என்று சொல்லிக் கொண்டனர்.(2) தீய துரியோதனன் பீமன் தொலைந்ததால் இதயத்தில் மகிழ்ந்து, தனது தம்பிகளுடன் நகரத்துக்குள் நுழைந்தான்.(3) தீயவை அறியாத அறம்சார்ந்த யுதிஷ்டிரன், மற்றவர்களையும் தன்னைப் போல் நேர்மையாக நினைத்துக் கொண்டான்.(4)

அந்தப் பிருதையின் மூத்த மகன், தனது தம்பியின் மீதுள்ள அன்பால், தனது தாயிடம் சென்று, அவளை வணங்கி, "ஓ தாயே, பீமன் வந்துவிட்டானா?(5) ஓ நற்றாயே, அவனை எங்கேயும் நான் காணவில்லை. அவன் எங்கே சென்றிருக்கிறான்? அவனை நந்தவனத்திலும், அழகான சோலையிலும் நீண்ட நேரமாக நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம்.(6) ஆனால் அவனை எங்கும் காணவில்லை. இறுதியாக நாங்கள் அந்த வீரப்பீமன் எங்களுக்கு முன்பே இங்கே வந்திருப்பான் என்று நினைத்தோம்.(7) ஓ சிறப்புமிக்க பெருமாட்டியே, நாங்கள் இங்கே பெரும் கவலையுடன் வந்தோம். அவன் இங்கு வந்திருந்தால், இப்போது எங்குச் சென்றுவிட்டான்? அவனை நீ எங்கேயும் அனுப்பியிருக்கிறாயா?(8) பலசாலியான அந்தப் பீமனைக் குறித்து எந்தத் தெளிவும் எனக்கு இல்லை. {நிறைய சந்தேகங்களுடன் இருக்கிறேன்}.(9) அவன் தூங்கிக்கொண்டிருந்தான், இங்கும் அவன் வரவில்லை. அதனால் அவன் (உயிருடன்) இல்லை என்றே நான் நினைக்கிறேன்" என்றான்.(10)

பெரும் புத்திசாலியான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட குந்தி அதிர்ச்சியால் உரக்கக்கூவியபடி, "அன்பு மகனே, நானும் பீமனைக் காணவில்லை. அவன் என்னிடம் வரவில்லை.(11) ஓ... விரைவாக உனது தம்பிகளுடன் சென்று அவனைக் கவனமாகத் தேடுவாயாக" என்றாள்.

துயரத்தால் குந்தி தனது மூத்த மகனிடம் இப்படிச் சொல்லிவிட்டு,(12) விதுரனை அழைத்து, "ஓ சிறப்புமிக்க க்ஷத்ரி {விதுரா}, பீமசேனனைக் காணவில்லை. அவன் எங்குச் சென்றுவிட்டான்?(13) அவனது மற்ற சகோதரர்கள் அனைவரும் நந்தவனத்திலிருந்து திரும்பிவிட்டனர். பெரும் கரம் கொண்ட பீமன் மட்டும் இன்னும் வீடு வரவில்லை.(14) துரியோதனன் அவனை விரும்பவில்லை. அந்தக் கௌரவன் {துரியோதனன்} கபடக்காரன், வீண் வழக்காடுபவன், தாழ்ந்த மனதுடையவன் மற்றும் விவேகமற்றவனுமாவான். அரியணையின் மீது வெளிப்படையான துராசையைக் கொண்டுள்ளான்.(15) அவன் கோபத்தால் எனது அன்புக்குரியவனைக் கொன்றுவிட்டானோ என்று அஞ்சுகிறேன். இஃது எனக்குக் கடும் துன்பத்தை விளைவிக்கிறது. நிச்சயமாக இஃது எனது இதயத்தை எரிக்கிறது" என்றாள்.(16)

விதுரன், "அருளப்பட்ட பெருமாட்டியே, அப்படிச் சொல்லாதே. உனது மற்ற மகன்களைக் கவனத்துடன் காத்துக் கொள்வாயாக. அந்தத் தீய துரியோதனனை குற்றஞ்சாட்டினால், அவன் உனது மற்ற மகன்களையும் கொன்று விடக்கூடும்.(17)அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, உனது மகன்கள் அனைவரும் நீண்டநாட்களுக்கு வாழ்வார்கள் என்று சொல்லியிருக்கிறார். எனவே, பீமன் கண்டிப்பாகத் திரும்பி வந்து உனது இதயத்துக்கு மகிழ்வூட்டுவான்" என்று மறுமொழி கூறினான்".(18)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த ஞானமுள்ள விதுரன் குந்தியிடம் இப்படிச் சொல்லிவிட்டுத் தனது வசிப்பிடத்திற்குத் திரும்பினான். குந்தி பெரும் துயரத்துடன் தனது இல்லத்திலேயே தங்கியிருந்தாள்.(19) அதேவேளையில், பீமசேனன் எட்டு நாட்களுக்குப் பிறகு, தனது துயிலிலிருந்து எழுந்து, தான் அருந்திய ரசம் முழுவதும் செரித்திருந்ததால், பெரும் பலவானாகத் தன்னை உணர்ந்தான். அவன் விழித்ததைக் கண்ட நாகர்கள் அவனுக்கு ஆறுதலளித்து உற்சாகமூட்டியபடியே,(20,21) "ஓ பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனே, பலத்தைக் கொடுக்கும் இந்த ரசத்தை நீ குடித்ததனால், அஃது உனக்குப் பத்தாயிரம் யானைகளின் பலத்தைக் கொடுத்திருக்கிறது. இப்போது உன்னை யாராலும் போரில் வெல்லமுடியாது.(22) ஓ குரு குலக் காளையே, மங்கலமானதும், புனிதமானதுமான இந்த நீரில் நீராடி வீடு திரும்புவாயாக. நீ இல்லாததால் உனது சகோதரர்கள் அமைதியை இழந்தவர்களாக இருக்கின்றனர்" என்றனர்.(23)

அதன்பிறகு பீமன் அந்த நீரில் நீராடி தன்னைத் தூய்மைப்படுத்தி, வெள்ளுடை தரித்துக் கொண்டான். வெண்மலர்களாலான பூமாலைகளைச் சூடிக் கொண்டு, நாகர்களால் கொடுக்கப்பட்ட பரமான்னத்தை (அரிசியும், சர்க்கரையும் கலந்த கூழ்) உண்டான். பிறகு அந்த எதிரிகளை அடக்குபவன், பல்வேறு தெய்வீக ஆபரணங்களையும் பூண்டு, பாம்புகளின் வாழ்த்துகளையும், துதிகளையும் பெற்றுக் கொண்டு, பதிலுக்குத் தனது மரியாதையையும் செலுத்திப் பாதாள லோகத்திலிருந்து எழுந்து வந்தான்.(24-26) நாகர்கள் அந்தத் தாமரைக் கண் கொண்ட பாண்டவனை நீரிலிருந்து தூக்கி, அவன் விளையாடிக் கொண்டிருந்த அதே நந்தவனத்தில் இறக்கிவிட்டு, அவன் கண் எதிரிலேயே மறைந்தனர்.(27,28)

பூமியின் பரப்புக்குத் திரும்பிய பலசாலியான பீமன், தனது தாயிடம் மிக வேகமாக ஓடிச் சென்றான்.(29) அவளுக்கும், தனது மூத்த சகோதரனுக்கும் தலைவணங்கி, தனது இளைய சகோதரர்களின் உச்சியை முகர்ந்து பார்த்த {தலையை மணத்திப் பார்த்து} அந்த எதிரிகளை ஒடுக்குபவன் {பீமன்},(30) அவனது தாய் மற்றும் மனிதர்களில் காளைகளைப் போன்ற தனது சகோதரர்களின் அணைப்புக்குள் சென்றான். அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரப் பாசத்துடன், திரும்பத் திரும்ப, "இன்று நக்கென்ன மகிழ்ச்சி! இஃது என்ன ஒரு மகிழ்ச்சி!" என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(31)

பிறகு, பெரும் பலமும், வீரமும் கொண்ட பீமன் நடந்தது அத்தனையும் தனது சகோதரர்களிடம் தெரிவித்தான். துரியோதனின் தீச்செயல், நாகர்களின் உலகத்தில் கிடைத்த நற்பேறு மற்றும் கெடுபேறுகளைக் {துரதிர்ஷ்டங்களைக்} கொண்ட நிகழ்வுகள் அனைத்தையும் விவரித்தான்.(32,33) அத்தனையும் கேட்ட யுதிஷ்டிரன், "இக்காரியத்தில் அனைவரும் அமைதியாக இருங்கள். இதைப் பற்றி யாரிடமும் பேசாதீர்கள்.(34) இன்றிலிருந்து, ஒருவருக்கொருவர் உங்களைக் கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்று சொன்னான்.   நேர்மையான யுதிஷ்டிரனால் இப்படி எச்சரிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனுடன் சேர்ந்து மிகுந்த விழிப்புணர்வு கொண்டனர். குந்தியின் மகன்களுக்கு அப்படி எந்தக் கவனக்குறைவும் ஏற்படாதவண்ணம், விதுரன் நல்ல ஆலோசனைகள் வழங்கினான்.(35,36)

சில காலம் கழித்து, மறுபடியும் துரியோதனன் பீமனின் உணவில் புத்தம்புதிய கடும் விஷத்தைக் கலந்தான்.(37) ஆனால், பாண்டவர்கள் மீது யுயுத்சு (திருதராஷ்டிரனுக்கு வைசிய மனைவியின் மூலம் பிறந்தவன்) கொண்ட நட்பினால், அந்தக் காரியத்தை அவர்களுக்குத் தெரிவித்துவிட்டான். இருப்பினும் விருகோதரன் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை விழுங்கி, முழுவதுமாகச் செரித்தும் விட்டான்.(38) அந்தக் கடும் விஷத்தால் பீமனிடம் {அவன் அதைச் செரித்துவிட்டதால் அவனிடம்} எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.(39) பீமனின் அழிவுக்காகக் கலக்கப்பட்ட நஞ்சு வேலை செய்யாததால், துரியோதனன், கர்ணன்[1] மற்றும் சகுனி ஆகியோர் கூடிப் பாண்டவர்களின் மரணத்திற்காக இன்னும் பல தீய திட்டங்களை வகுத்தனர்.(40) அந்தத் திட்டங்கள் அனைத்தையும் பாண்டவர்கள் அறிந்தாலும், விதுரனின் ஆலோசனைப்படித் தங்கள் கடுஞ்சீற்றத்தை அடக்கிக் கொண்டனர்[2].(41)


[1] கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் பதிப்புகளில் இங்கே கர்ணன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பே கர்ணனின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த இடத்தோடு இந்தப் பகுதி முடிந்து விடுகிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே முடிகிறது. ஆனால் கங்குலியிலும், கும்பகோணம் பதிப்பிலும் பின்வரும் செய்தியும் இருக்கிறது. பின்வரும் செய்தி மூன்று ஸ்லோகங்களில் அடங்கியிருக்கலாம் என்ற நம்பிக்கையில், (42-44) என ஸ்லோக எண்களைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

அதே நேரத்தில் மன்னன் (திருதராஷ்டிரன்), குரு இளவரசர்கள் சோம்பலுடன், குறும்புத்தனங்கள் நிரம்பி வளர்வதைக் கண்டு, கௌதமரை அவர்களுக்குக் குருவாக நியமித்தான். அவர்களை {இளவரசர்கள்} அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். நாணற்புதரில் பிறந்த கௌதமர் {கௌதமரின் பேரனான கிருபர்}, வேதங்களில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார். குரு இளவரசர்கள் அவரிடம் ஆயுதக் கல்வியைக் கற்கத் தொடங்கினர்" {என்றார் வைசம்பாயனர்}.(42-44)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்