Sunday, June 23, 2013

சரத்வானை மயக்கிய ஜாலவதி! - ஆதிபர்வம் பகுதி 130

Janapadi seduced Saratwat! | Adi Parva - Section 130 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 66)

பதிவின் சுருக்கம் : கௌதமருக்குப் பிறந்த சரத்வான்; சரத்வானின் ஆயுத அறிவியல் நாட்டம்; ஜாலவதியைச் சரத்வானிடம் அனுப்பிய இந்திரன்; நாணற்கற்றையில் பிறந்த கிருபர் மற்றும் கிருபி; அவர்களை வளர்த்த சந்தனு; சந்தனுவிடம் அறிமுகம் செய்து கொண்டு கிருபருக்கு ஆயுத அறிவியலை அளித்த சரத்வான்; பாரத இளவரசர்களுக்குக் குருவான கிருபர்...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, கிருபரின் பிறப்புக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக. நாணல் கற்றையிலிருந்து அவர் எவ்வாறு உண்டானார்? ஆயுதங்களை எவ்வாறு அவர் அடைந்தார்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா! பெரும் முனிவர் கௌதமருக்கு சரத்வான் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தார். அந்தச் சரத்வான் பிறக்கும்போதே (கைகளில்) கணைகளுடன் {அம்புகளுடன்} பிறந்தார்.(2) ஓ எதிரிகளை அழிப்பவனே, கௌதமரின் மகன் மற்ற அறிவியல்களில் {வேத கல்வியில்} நாட்டம் கொள்ளாமல் ஆயுதங்களின் அறிவியலில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.(3) மாணவப் பருவத்தில் வேத ஞானத்தை அடையும் பிராமணர்களைப் போல, கடும் தவத்தால் அந்தச் சரத்வான் ஆயுதங்களை அடைந்தார்.(4) கௌதமர் (கௌதமரின் மகனான {சரத்வான்}, ஆயுத அறிவியலில் நாட்டம் கொண்டதாலும், தமது கடும் தவங்களாலும் இந்திரனைப் பெரிதும் அச்சமடையச் செய்தார்.(5)


ஓ குரு குலத்தோனே {ஜனமேஜயா}, அப்போது தேவர்கள் தலைவன் {இந்திரன்}, ஜனபதி {ஜாலவதி} என்ற தேவலோக மங்கையை அழைத்து, "கௌதமரின் தவத்தைக் கலைக்க உன்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்" என்று சொல்லிக் கௌதமரிடம் அனுப்பினான்.(6) அவள் அந்தச் சரத்வானின் அழகான ஆசிரமத்திற்குச் சென்று, வில் மற்றும் அம்புகளுடன் இருந்த அந்தத் துறவியை மயக்கினாள்.(7) உலகில் ஈடு இணை சொல்லமுடியாத வடிவழகுடன் கானகத்தில் தனிமையில் ஒற்றையாடையுடன் இருந்த அந்த அப்சரஸைக் கண்ட சரத்வானின் கண்கள் பெரு மகிழ்ச்சியால் அகல விரிந்தன.(8) அந்த மங்கையைக் கண்டதால், அவரது கைகளில் இருந்த வில்லும், கணைகளும் நழுவின, அவரது உடல் முழுவதும் உணர்ச்சியால் ஆட்டம் கண்டது.(9) இருப்பினும், அவரது உயர்ந்த தவத் திறனாலும், ஆன்ம பலத்தாலும், அத்துறவி உணர்வுகளை எதிர்த்துப் பொறுமை காத்தார்.(10) இருப்பினும் விரைவாக அவர் அடைந்த மாற்றங்களால், அவரை அறியாமல் அவரது உயிர் நீர் வெளியேறியது.(11)

அவர் தனது வில்லையும் கணைகளையும், மான் தோலையும் அங்கேயே விட்டுவிட்டு, அந்த அப்சரசை விட்டு அகன்று ஓடினார். இருப்பினும், அவரது உயிர் நீர் நாணற்கற்றையில் வீழ்ந்து, இருகூறாகப் பிரிந்து, இரட்டைப் பிள்ளைகள் அதிலிருந்து உற்பத்தியாகினர்.(12,13) அப்போது, சந்தனுவின் படையில் பணியாற்றுபவர்களில் ஒருவன் தற்செயலாக அந்த இரட்டையர்களைக் கண்டான்.(14) தரையில் வில்லும், அம்புகளும், மான் தோலும் இருப்பதைக் கண்டு, அவர்கள் யாரோ போர்க்கலையில் திறன்வாய்ந்த பிராமணரின் பிள்ளைகள் என்று நினைத்தான்.(15) இப்படித் தீர்மானித்து, அந்தப் பிள்ளைகளை வில் அம்புடன் எடுத்துக் கொண்டு சென்று காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த மன்னனிடம் காட்டினான்.

இதைக் கண்ட மன்னன் இரக்கங்கொண்டு,(16) "இவர்கள் எனது பிள்ளைகளாகட்டும்" என்று சொல்லி, அரண்மனைக்குக் கொண்டுவந்தான். மனிதர்களில் முதன்மையானவனும், பிரதீபனின் மகனுமான சந்தனு, கௌதமரின் இரட்டையர்களைத் தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கான அறச்சடங்குகளைச் செய்வித்தான். அவர்களை வளர்க்கத் தொடங்கிய அவன், அவர்களைக் கிருபன் என்றும், கிருபி என்றும் அழைத்தான். தனது இரக்கத்தினால் (கிருபை) அவர்களை வளர்த்ததால் அவர்களுக்கு அப்பெயர்களை வைத்தான்.(17-19) கௌதமரின் மகன் {சரத்வான்}, தமது ஆசிரமத்தை விட்டகன்று, தொடர்ந்து ஆயுத அறிவியலை உறுதியுடன் பயின்றார்.பிறகு தனது தெய்வீகப் பார்வையால் தமது மகனும், மகளும் சந்தனுவின் அரண்மனையில் வளர்வதைக் கண்டார். இதன்காரணமாக அவர் அந்த ஏகாதிபதியிடம் சென்று, தனது குலம் முதல் அனைத்தையும் சொன்னார்.(20) அதன்பிறகு அவர் {சரத்வான்}, கிருபருக்கு ஆயுத அறிவியலின் நான்கு கிளைகளையும்[1], ஞானத்தின் பல கிளைகளையும் அதன் புதிர்களையும் விவரமாக எடுத்துரைத்தார்.(21) குறுகிய காலத்திற்குள் கிருபர் அந்த அறிவியலில் நிபுணத்துவம் பெற்றார். திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், பாண்டவர்களும், யாதவர்களும், விருஷ்ணிகளும் மற்றும் பல நாடுகளில் இருந்து வந்த பல இளவரசர்களும் அவரிடம் இருந்து ஆயுத அறிவியலில் பாடங்கள் கற்க அங்கே வந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(22,23)

[1] நான்கு வகைப் போர் = 1. ப்ரயோகம் - பயன்படுத்துவது, 2. சம்ஹாரம் - அழிப்பது 3.கல்பம் - ஆயுதத்துக்கு மந்திர பலம் கொடுப்பது 4. ரஹஸ்யம் - மறைமுக வித்தை


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்