Sunday, June 23, 2013

கிரிடச்சியிடம் {கிருதாசியிடம்} மயங்கிய பரத்வாஜர் - ஆதிபர்வம் பகுதி 131

Bharadwaja's burning desire for Ghritachi | Adi Parva - Section 131 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 67)

பதிவின் சுருக்கம் : கிரிடச்சியைக் கண்டு மயங்கிய பரத்வாஜர்; துரோணரின் பெயர்க்காரணம்; துரோணருக்கு ஆயுத கல்வி அளித்த அக்னிவேசர்; துரோணரும் துருபதனும் நண்பர்களானது; துரோணர் கிருபியை மணந்து அஸ்வத்தாமனைப் பெற்றது; பரசுராமரிடம் ஆயுத ஞானத்தைப் பெற்ற துரோணர்; துருபதனைக் காணச் சென்ற துரோணர்...

வைசம்பாயனர் சொன்னார், "மேன்மையான கல்வியைத் தனது பேரப்பிள்ளைகளுக்குக் கொடுக்க நினைத்த பீஷ்மர், பெரும் சக்தியும், போர் அறிவியலில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான ஓர் ஆசிரியரைத் தேடிக் கொண்டிருந்தார்.(1) ஓ பாரதர்களின் தலைவா, பெரும் புத்திசாலித்தனம் இல்லாத எவரும், ஆயுத அறிவியலின் நுட்பம் அறியாத எவரும், தேவர்களைப் போன்ற பலம் இல்லாத எவரும், குரு குலத்தவருக்குக் குருவாக இருக்கக்கூடாது என்றெண்ணிய கங்கையின் மைந்தன் {பீஷ்மர்}, ஓ மனிதர்களில் புலியே, பரத்வாஜரின் மகனும், வேதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவருமான துரோணரின் கீழ் கல்வி பயில பாண்டவர்களையும், கௌரவர்களையும் அனுப்பினார். பீஷ்மரால் கொடுக்கப்பட்ட வரவேற்பினால் பெரிதும் மகிழ்ந்தவரும், உலகப்புகழ்பெற்றவரும், சிறப்புவாய்ந்தவருமான துரோணர் அந்த இளவரசர்களைத் தனது சீடர்களாக ஏற்றுக் கொண்டார்.(2-5) துரோணர் அவர்களுக்கு ஆயுத அறிவியலையும் அதன் கிளைகள் அனைத்தையும் பயிற்றுவித்தார். ஓ ஏகாதிபதி! பெரும் பலம் வாய்ந்த கௌரவர்களும், பாண்டவர்களும் குறுகிய காலத்திற்குள் அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவம் பெற்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(6)


ஜனமேஜயன், "ஓ பிராமணரே! துரோணர் எப்படிப் பிறந்தார்? அவர் ஆயுதங்களை எங்கே, எப்படி அடைந்தார்? அவர் குரு குலத்தவரிடம் எப்படி வந்தார்? ஏன் வந்தார்? பெரும் சக்தியுடைய அவர் யாருடைய மகனாவார்?(7) ஆயுதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் முதன்மையான அவரது மைந்தன் அஸ்வத்தாமன் எப்படிப் பிறந்தான்? இவை அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்! அவற்றை விவரமாகச் சொல்லும்" என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர் சொன்னார், "பரத்வாஜர் என்ற பெயர் கொண்டவரும், கடும் நோன்புகள் நோற்பவருமான ஒரு பெரும் முனிவர், கங்கை உற்பத்தியாகும் இடத்திற்கருகே கடும் தவம் செய்து கொண்டு இருந்தார்.(9) அவர், பழங்காலத்தில் ஒரு நாள், பல பெருமுனிகளுடன் சேர்ந்து, அக்னி ஹோத்ர வேள்வி செய்வதற்காகத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக் கங்கையில் நீராடச் சென்றார்.(10) அந்த நதிக்கரைக்கு வந்ததும், சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்திருந்த, அழகும், இளமையும் கொண்ட கிரிடச்சி {கிருதாசி} எனும் அப்சரஸைக் கண்டார்.(11) அவள், தனது முகபாவத்தில் பெருமையும், கவர்ச்சிகரமான சோர்வும் கொண்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு நீரிலிருந்து எழுந்தாள். அவள் கரையில் நடந்து வந்த போது, அவளது ஆடை மெல்ல நழுவியது. அவளது ஆடை கலைந்ததைக் கண்ட அந்த முனிவர், எரியும் காமத்தீயால் தாக்குண்டார்.(12)

அடுத்த நொடியே உணர்வுகளின் வேகத்தால் அவரது உயிர் நீர் வெளியேறியது. அந்த முனிவர் அதை உடனடியாகத் துரோணம் (குடம்) என்ற ஒரு பாத்திரத்தில் பிடித்தார்.(13) ஓ மன்னா, பரத்வாஜரால் பாதுகாக்கப்பட்டு வந்த அந்தப் பாத்திரத்திலிருந்த உயிர்நீர் மூலம் துரோணர் பிறந்தார். இப்படிப் பிறந்த அந்தப் பிள்ளை வேதங்களை அதன் அதன் கிளைகளுடன் படித்தார்.(14) அதற்குச் சில காலத்திற்கு முன்பு, ஆயுத ஞானம் கொண்டவர்களில் முதன்மையான பெரும் சக்தி கொண்ட பரத்வாஜர், சிறப்பு வாய்ந்த அக்னிவேசருக்கு ஆயுத அறிவியலான ஆக்னேயத்தைப் போதித்தார்.(15) ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவனே, நெருப்பில் இருந்து பிறந்த அந்த முனிவர் (அக்னிவேசர்), தனது குருவின் பிள்ளையான துரோணருக்கு அந்தப் பெரும் ஆயுத ஞானத்தைக் கொடுத்தார்.(16)

பரத்வாஜருக்கு {துரோணரின் தந்தைக்கு} நல்ல நண்பராக, பிருஷதன் {துருபதனின் தந்தை} என்றொரு மன்னன் இருந்தான். அந்த நேரத்தில் பிருஷதனுக்குத் துருபதன் என்றொரு மகன் பிறந்தான்.(17) பிருஷதனின் மகனும், க்ஷத்திரியர்களில் காளையுமான அந்தத் துருபதன், துரோணருடன் விளையாடுவதற்காகவும், அவருடன் கல்வி பயில்வதற்காகவும் தினசரி பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(18) ஓ ஏகாதிபதி! பிருஷதன் இறந்த போது, பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட துருபதன் வடக்குப் பாஞ்சாலத்திற்கு மன்னனானான்.(19) அந்த நேரத்தில் சிறப்புமிக்க பரத்வாஜரும் சொர்க்கத்திற்கு உயர்ந்தார். அதைத் தொடர்ந்து, துரோணர் தனது தந்தையின் ஆசிரமத்திலேயே தங்கிக் கடும் நோன்புகளை மேற்கொண்டிருந்தார்.(20)

வேதங்களையும் அதன் கிளைகளையும் நன்கறிந்து, தனது துறவின் மூலம் தனது பாவங்களை எரித்தவரும், கொண்டாடப்படுபவருமான துரோணர், பிள்ளை பெறும் விருப்பத்தாலும், தனது தந்தையின் விருப்பத்திற்கு அடிபணிந்தும், சரத்வானின் மகள் கிருபியை மணந்து கொண்டார். அந்தப் பெண்மணி, எப்போதும் அறம் சார்ந்த செயல்களும், அக்னி ஹோத்ரம் செய்வதிலும் ஈடுபட்டுக் கடும் தவங்களை மேற்கொண்டு, அஸ்வத்தாமன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றாள். அஸ்வத்தாமன் பிறந்ததும், (தெய்வீக) குதிரை உச்சைஸ்ரவசைப் போல் கனைத்தான்.(21-23) அந்தக் கனைப்பைக் கேட்டு, வானத்திலிருந்து ஓர் அசரீரி, "இந்தக் குழந்தையின் குரல், கனைக்கும் குதிரையைப் போல எங்கும் எதிரொலிக்கிறது.(24) எனவே, இக்குழந்தை அஸ்வத்தாமன் (குதிரைக் குரலோன்) என்ற பெயரால் அழைக்கப்படட்டும்" என்றது. குழந்தையைப் பெற்றதால் பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்} பெரும் மகிழ்வு கொண்டார்.(25) அவர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து வசித்துத் தன்னை ஆயுத அறிவியல் ஆராய்ச்சிக்கு அர்ப்பணித்தார்.

ஓ மன்னா, இந்த நேரத்தில்தான், ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிக்கும் சிறப்பு மிகுந்தவருமான பிராமணர் ஜமதக்னேயர் {பரசுராமர்} தன்னிடம் உள்ள எல்லாச் செல்வங்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட விரும்புகிறார் என்று கேள்விப்பட்டார் துரோணர்.(26,27)

பரசுராமர்
ராமரின் {பரசுராமரின்} ஆயுத ஞானத்தையும், அவரது தெய்வீக ஆயுதங்களைப் பற்றியும் கேள்விப்பட்ட துரோணர் தனது இதயத்தில் அவற்றையும், ராமரிடம் இருந்த நீதிகள் சார்ந்த ஞானத்தையும் பெற நினைத்தார்.(28) பெரும் அறத்தகுதிகளைக் கொண்டவரும், பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவருமான துரோணர், கடும் நோன்புகள் நோற்கும் தனது சீடர்களுடன் மகேந்திர மலைக்குப் பயணப்பட்டார்.(29) மகேந்திர மலையை அடைந்த உயர்ந்த அறத்தகுதிகள் கொண்ட பரத்வாஜரின் மைந்தன், எதிரிகளைத் துடைத்தெறிந்தவரான, பிருகுவின் மைந்தன் {பரசுராமர்} தனது மனத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் பெரும் அமைதியுடன் இருப்பதைக் கண்டார்.(30) பிருகுவின் குலக்கொழுந்தைத் {பரசுராமரைத்} தமது சீடர்களுடன் அணுகித் தனது பெயரையும், அங்கீரசு முனிவர் வழியில் வந்த தன் கோத்திரத்தையும் சொன்னார்.(31) தனது தலையால் தரையைத் தொட்டு, ராமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். செல்வங்களைக் கொடுத்துவிட்டு, ஆழ்ந்த கானகத்திற்குள் செல்லத் திட்டமிட்டுள்ள ஜமதக்னியின் சிறப்புவாய்ந்த மகனைக் {பரசுராமரைக்} கண்ட துரோணர், "பெண்ணின் கருவிலில்லாமல், பரத்வாஜர் மூலம் உதித்தவன் நான் என்பதை அறிந்து கொள்வீராக!(32,33) என்னைச் சிறந்த பிராமணனாக அறிந்து கொள்வீராக. எனது பெயர் துரோணன் என்பதாகும். நான் உம்மிடம் இருந்து செல்வத்தைப் பெற விரும்பி வந்திருக்கிறேன்" என்றார்.(34)

இதைக்கேட்ட, அந்த க்ஷத்திரிய குலத்தை அழித்தவர், "நீ வரவேற்கப்படுகிறாய், ஓ மறுபிறப்பாளர்களில் சிறந்தவனே! நீ என்ன விரும்புகிறாய் என்பதைச் சொல்" என்று கேட்டார். பரத்வாஜரின் மைந்தன் {துரோணர்}, எல்லாச் செல்வங்களையும் கொடுத்துவிட எண்ணியிருந்த அழிப்பவர்களில் முதன்மையானவரிடம் {பரசுராமரிடம்}, "ஓ பல்வேறு வகைப்பட்ட நோன்புகள் நோற்றவரே, நான் நித்தியமான {அழிவற்ற, அளவற்ற} செல்வத்தை விரும்புகிறேன்" என்றார்.(35,36)

அதற்கு ராமர், "ஓ துறவை செல்வமாகக் கொண்டவனே, என்னிடம் இருந்த தங்கத்தையும், மற்றும் நான் என்ன செல்வமெல்லாம் வைத்திருந்தேனோ அவை அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.(37) நகரங்கள் பல கொண்ட இந்த ஆழிசூழ் {கடல் சூழ்ந்த} உலகையும் கசியபருக்குக் கொடுத்துவிட்டேன்.(38) இப்போது என்னிடம் எனது இந்த உடலும், பல மதிப்புமிக்க ஆயுதங்களும் மட்டுமே மீந்திருக்கின்றன.(39) இரண்டில் எதை வேண்டுமானாலும் நான் உனக்குக் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேன். உனக்கு என்ன வேண்டும் என்பதைக் கேள். அதை உனக்கு நிச்சயம் தருவேன். விரைவாகச் சொல்!" என்றார்.(40)

பரசுராமர் கொடுத்த ஆயுத அறிவியல் குறியீடு
துரோணர், "ஓ பிருகு மைந்தரே, உமது ஆயுதங்கள் அனைத்தையும் அவற்றை ஏவும், முற்றும் திரும்ப அழைக்கும் உகந்த புதிர்களுடன் {மந்திரங்கள்} எனக்குத் தாரும்" என்று கேட்டார்.(41)

"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன பிருகுவின் மைந்தர் {பரசுராமர்} தனது அனைத்து ஆயுதங்களையும் துரோணரிடம் கொடுத்தார். அவர் மொத்த ஆயுதங்களின் அறிவியலையும் அதன் விதிகளுடனும், புதிர்களுடனும் சேர்த்துப் போதித்துக் கொடுத்தார்.(42) அவை அனைத்தையும் ஏற்றுப் போதுமான அளவு அடைந்ததாக மனநிறைவு கொண்ட அந்த பிராமணர்களில் சிறந்தவர், இதயத்தால் மகிழ்ந்து, தனது நண்பன் துருபதனின் நகரத்திற்குப் பயணப்பட்டார்" {என்றார் வைசம்பாயனர்}.(43)

ஆதிபர்வம் பகுதி 131ல் உள்ள சுலோகங்கள் : 43


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்