Wednesday, July 24, 2013

வியாசரைச் சந்தித்த பாண்டவர்கள்! - ஆதிபர்வம் பகுதி 158

Pandavas came across Vyasa! | Adi Parva - Section 158 | Mahabharata In Tamil

(ஹிடிம்ப வத பர்வம் - 5)

பதிவின் சுருக்கம் : காட்டில் பாண்டவர்களைச் சந்தித்த வியாசர்; ஏகச்சக்கர நகரத்தில் ஒரு பிராமணன் வீட்டில் பாண்டவர்களைத் தங்கச் செய்த வியாசர்...

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, பலம் வாய்ந்த தேர்வீரர்களான பாண்டவர்கள், (தங்கள் உணவுக்காக) மான்களையும் மற்றும் பல விலங்குகளையும் கொன்று, கானகம் விட்டுக் கானகம் சென்று கொண்டிருந்தனர்.(1) அவர்கள் அப்படிச் சுற்றித் திரிகையில் மத்ஸ்யம், திரிகர்த்தம், பாஞ்சாலம், கீசகம் ஆகிய நாடுகளையும் மற்றும் அவற்றிலிருந்த அழகிய கானகங்களையும், ஏரிகளையும் கண்டனர்.(2) அவர்கள் அனைவரும் தலையில் சடாமுடி தரித்து, மரப்பட்டைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஆடையாயுடுத்தியிருந்தனர். அவர்களுடன் இருந்த குந்தியும், துறவு ஆடைகளுடனேயே இருந்தாள்.(3)



அந்தப் பெரும் தேர் வீரர்கள் தங்கள் தாயை முதுகில் சுமந்தபடி வேகமாகவும், சில நேரங்களில் மறைந்து மெதுவாகவும் சென்றனர். சில நேரங்களில் பெரும் வேகத்துடனும் சென்றனர்.(4) அவர்கள் ரிக் மற்றும் பிற வேதங்களையும், அனைத்து வேதாங்கங்களையும், ஒழுக்கம் மற்றும் அரசியல் சார்ந்த அறிவியல்களையும் {சாலிஹோத்ர மஹரிஷியிடம்} கற்றனர். அறநெறிகளை நன்குணர்ந்த பாண்டவர்கள் அப்படிச் சுற்றித் திரிகையில் தங்கள் பாட்டனைச் (வியாசரைச்) சந்தித்தனர்.(5)

அந்தச் சிறப்புமிகுந்த கிருஷ்ண துவைபாயனரை வணங்கிய, அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள் {பாண்டவர்கள்}, தங்கள் தாயுடன் சேர்ந்து அவர் முன்னிலையில் கைகூப்பி நின்றனர்.(6) வியாசர் அவர்களிடம், "பாரதக் குலத்தின் காளைகளே, திருதராஷ்டிரன் மகன் மூலம் நீங்கள் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு நாடுகடத்தப்படும் நிலையை அடைவீர்கள் என்று நான் முன்பே அறிந்திருந்தேன்.(7) அதை அறிந்ததாலேயே உங்களுக்கு நன்மை செய்ய வேண்டி இங்கு வந்திருக்கிறேன். உங்களுக்கு நடந்ததை எண்ணித் துயரடையாதீர்கள். இவை எல்லாம் உங்கள் மகிழ்ச்சிக்காகவே என்பதை அறிந்து கொள்ளுங்கள்.(8) திருதராஷ்டிரன் மகன்களும் நீங்களும் எனது பார்வையில் ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், துயரத்திலிருப்பவர்களிடத்திலும், இளம் வயதில் இருப்பவர்களிடத்திலும் அவர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்குச் சாதகமாக மனிதர்கள் ஒருதலைப்பட்சமாகவே இருப்பார்கள்.(9) எனவே, இப்போது எனது பாசம் உங்களிடமே அதிகமாக இருக்கிறது. அந்தப் பாசத்தால் நான் உங்களுக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் சொல்வதைக் கேளுங்கள்.(10) இங்கிருந்து வெகு அருகில் ஒரு மகிழ்ச்சிகரமான நகரம் இருக்கிறது.  அங்கு எந்த ஆபத்தும் உங்களை அணுகாது. அங்கே நீங்கள் மாற்றுருவில் வாழ்ந்து, எனது வரவுக்காகக் காத்திருங்கள்" என்றார்".(11)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "சத்தியவதி மைந்தனான அந்த வியாசர், பாண்டவர்களுக்கு நன்மை செய்ய விரும்பி, அவர்களை ஏகச்சக்கர நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் குரு {வியாசர்} குந்தியிடம்,(12) "ஓ மகளே, மனிதர்களில் சிறந்தவனும், காளையுமான இந்த உனது மகன் யுதிஷ்டிரன், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்து, முழு உலகத்தையும் வென்று, அனைத்து ஏகாதிபதிகளையும் இந்தப் பூமி முழுவதையும் ஆள்வான்.(13) அவன், பீமன் மற்றும் அர்ஜுனனின் ஆற்றலால் கடலைக் கச்சையாக அணிந்திருக்கும் இந்த முழு உலகத்தையும் அடைந்து, அதன் ஆட்சி உரிமையை ஏற்று மகிழ்வான்.(14) உன் மகன்களும், பெரும் தேர் வீரர்களான மாத்ரியின் மைந்தர்களும் தங்கள் ஆட்சிக்குரிய பகுதிகளில் விரும்பியவாறு இருப்பார்கள்.(15) அந்த மனிதர்களில் புலிகள், ராஜசூயம் மற்றும் குதிரை வேள்விகள் போன்ற வேள்விகள் பலவற்றைச் செய்து பிராமணர்களுக்குப் பல பரிசுகளை அளிப்பார்கள்.(16) உனது மகன்கனான இவர்கள் தங்கள் மூதாதையர் அரசை அடைந்து, தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் ஆடம்பரமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பார்கள்" என்றார்".(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன வியாசர் அவர்களை ஒரு பிராமணரின் வசிப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.(18) தீவில் பிறந்தவரான அந்த முனிவர் {துவைபாயனர்}, பாண்டவர்களில் மூத்தவனிடம், "எனக்காக இங்கே காத்திருங்கள்! நான் இங்கே மீண்டும் வருவேன். இந்த நாட்டிற்கும், இந்தச் சூழ்நிலைகளுக்கும் உங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நீங்கள் இங்கே பெருமகழிச்சியடையலாம்" என்றார்.(19) ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் கரங்களைக் கூப்பியபடி அந்த முனிவரிடம் "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்கள். பிறகு, சிறப்புமிக்க குருவும், முனிவருமான அந்த வியாசர், எங்கிருந்து வந்தாரோ அங்கேயே திரும்பிச் சென்றார்" {என்றார் வைசம்பாயனர்}.(20)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்