Wednesday, August 07, 2013

முழு மஹாபாரதத்திற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்புரை

எழுத்தாளர்
திரு.ஜெயமோகன்
நண்பர்களே!

முழு மஹாபாரதம் குறித்து ஒரு மதிப்புரை கேட்டு திரு. ஜெயமோகன் அவர்களுக்கு மின்மடலொன்று அனுப்பியிருந்தேன். அந்த எனது மடலையும், அதற்கு திரு.ஜெயமோகன் அவர்களின் பதில் மடலையும் கீழே தருகிறேன். தனிப்பட்ட முறையில் திரு.ஜெயமோகன் அவர்கள் எனக்குப் பதிலுரைத்திருந்தாலும், அதை இத்தளத்தில் பகிர்ந்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று கருதி அதை கீழே தருகிறேன்.


***************************************

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
ஒரு முறை, நீங்கள் யார் என்றே தெரியாமல் விஷ்ணுபுரம் புத்தகம் வாங்கினேன்.  ஐம்பது பக்கங்கள் படித்திருப்பேன். அதையும், நான் மறுபடி மறுபடி படிக்க வேண்டியிருந்தது. உங்கள் வார்த்தைகளில் அவ்வளவு நிறை இருந்தது. ஒரு வார்த்தையை படிக்காமல் விட்டாலும், நான் கண்ட மனக்காட்சியில் ஒரு காட்சி வெட்டபட்டதுபோல உணர்ந்து. மறுபடியும் மறுபடியும் படித்த பக்கங்களையே படித்துக் கொண்டிருந்தேன். அப்போது யார் இந்த எழுத்தாளர், யார் இவர்,  வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறாரே என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் அப்புத்தகத்தை முழுவதும் என்னால் படிக்க முடியவில்லை. நண்பர் ஒருவர் படித்துவிட்டுத் தருகிறேன் என்று வாங்கிச் சென்றார். அவ்வளவுதான் அப்புத்தகம் எங்கிருக்கிறது என்றே தெரியவில்லை. அவரும் இதோ அதோ என்கிறாரே ஒழிய கொடுக்க மாட்டேன் என்கிறார். வேறு புத்தகம் தான் வாங்க வேண்டும்.

பின்பு பல காலம் கழித்து உங்கள் வலைத்தளத்தைக் கண்டுபிடித்தேன். அதில் உள்ள கதைகள் பெரும்பாலனவற்றைப் படித்திருக்கிறேன்.
நான் இதுவரை உங்கள் தளத்தில் சிறுகதைகள் படித்ததில், எனக்கு மிகவும் பிடித்தது. 1. வணங்கான், 2. மெல்லிய நூல், 3.இறுதி யந்திரம். குறிப்பாக வணங்கானைப் பல முறை படித்திருக்கிறேன். நண்பர்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். சில நெருங்கிய நண்பர்களுக்கு முழுதாக வாசித்தும் காட்டியிருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் படித்துவிட்டு உங்களுக்கு மறுமொழி கூற வேண்டும் என்று நினைப்பேன். இருப்பினும், அதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. ஆனால், என்னை அறியாமலேயே உங்களுடன் எனக்கு ஒரு தொடர்பு கிடைத்தது.

நான் முழு மஹாபாரதம் என்ற வலைப்பூவில் கிசாரி மோகன் கங்குலி அவர்களின் The Mahabharata புத்தகத்தை மொழி பெயர்த்து வருகிறேன். அதைப் படித்த ஒரு நண்பர் அதைக்குறித்து உங்களுக்கு ஒரு மின்மடல் அனுப்ப, அதை நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். அதற்கும் நேரடியாக உங்களுக்கு நான் நன்றி சொல்லாமல் என் வலைப்பூவிலேயே நன்றி சொல்லியிருந்தேன். மன்னிக்க வேண்டும்.

அறிமுகம் இல்லாத ஒரு பெரிய மனிதரிடம் எப்படி அணுகுவது என்பதில் எப்போதும் எனக்குத் தயக்கமே இருந்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியே உங்களை இது வரை அணுகாததும்.

நீங்கள், உங்கள் வாசகர் ஒருவர் எழுதிய கடிதத்தின் மூலம் உங்கள் வலைத்தளத்தில் முழு மஹாபாரதம் வலைப்பூவை ஏற்கனவே அறிமுகப்படுத்திவிட்டீர்கள். அதற்கு நன்றி.

இருப்பினும் அவ்வலைப்பூவில், இதுவரை ஆதிபர்வத்தில் 171 பகுதிகள் மொழி பெயர்த்துள்ளேன். அவற்றுக்கான உங்கள் மதிப்புரை ஏதேனும் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதியே இக்கோரிக்கை மடலை எழுதுகிறேன்.

கடைசியாக நான் மொழிபெயர்த்த பகுதியைக் காண
http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section171.html என்ற லிங்குக்குச் செல்லலாம்.

ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நன்றி!

அன்புடன்,
செ. அருட்செல்வப்பேரரசன்

 ***************************************

அன்புள்ள அருட்செல்வப்பேரரசன்

மொழியாக்கம் நன்றாக இருக்கிறது. இதுவரை வந்த மொழியாக்கங்களின் பெரிய சிக்கல்கள் இரண்டு. ஒன்று அவை சம்ஸ்கிருதச் சொற்களை நிறையவே போட்டு ஒருவகை மணிப்பிரவாளமொழியை கையாண்டிருந்தன. இன்னொன்று சம்ஸ்கிருதச் சொற்றொடர்களின் அமைப்பை அப்படியே நகல் செய்து ‘யாருடைய கைகளால் அன்னம் கிடைக்கப்பெறுகிறதோ அந்த...’ என்பதுபோன்ற சொற்றொடர்களை உருவாக்கியிருந்தன. ஆகவேதான் அவை சமகால வாசிப்புக்கு அன்னியமாக உள்ளன

உங்கள் மொழியாக்கம் இன்றைய மொழியில் அமைந்துள்ளது. ஆகவே இதன் பயன் மிக அதிகம். இணையத்தில் இருப்பதனால் தேவையான பகுதிகளை எளிதாகத் தேடி வாசிக்க முடிகிறது. இரண்டு விஷயங்களை விதிகளாக கைக்கொள்ளலாம். ஒன்று, கூடுமானவரை நல்ல சமகால தமிழ்ச்சொற்களைக் கையாளவேண்டும். இரண்டு, கூட்டுச்சொற்றொடர்களை கூடுமானவரை தவிர்த்து எளிமையான சொற்றொடர்களை பயன்படுத்தலாம்.

இன்னொரு ஆலோசனை, மகாபாரதப் பகுதிகளுக்குக் கீழே விவாதங்களைச் சேர்க்கவேண்டாம். இணையதளத்திலேயே அவற்றுக்கு ஒரு தனி இணைப்பு [ஹைப்பர் லிங்க்] கொடுங்கள். அதில் விவாதங்களை வைத்துக்கொள்ளுங்கள். விவாதங்களுக்கு வரும் வினாக்கள் மிக அபத்தமான, ஆரம்பநிலையில் உள்ளன. மகாபாரதத்துடன் இவற்றையும் வாசிக்க நேர்வது சோர்வளிக்கிறது.

இந்த மகாபாரதப் பக்கங்களுக்கு ஒரு நிரந்தரத்தன்மை உண்டு. விவாதங்கள் மிகமிகத் தற்காலத்தன்மை கொண்டவை. ஒருகட்டத்தில் இந்த சில்லறைக்கேள்விகள் மகாபாரத மொழியாக்கத்துக்கே சுமையாக ஆகிவிடக்கூடும். மேலும் ஆரம்பக்கட்ட மகாபாரத வாசகர்களை தேவையில்லாமல் திசைதிருப்பவும் இவை வழிவகுக்கும்.

ஆகவே மகாபாரதப்பகுதிகள் தனியாக, நூலின் அத்தியாயங்கள் போலவே இருக்கட்டும். கேள்வி பதில்களுக்கு பக்கவாட்டில் ஒரு தனி வழியை திறந்துவிடுங்கள்

வாழ்த்துக்கள். பெரிய பணி. மகத்தான பணி . நன்றி

ஜெ
 ***************************************

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
எனது கோரிக்கையை உடனே நிறைவேற்றி, எனக்கு ஆலோசனை தந்தமைக்கு நன்றி.

நான் ஒரு வரைகலைஞனாக இருப்பதால், வெளியே எங்கும் சென்று நான் மொழிபெயர்த்ததைத் தட்டெழுதத் தேவையில்லை. வெளியே எங்கும் சென்று பிளாகரில் பதிவுகளை ஏற்றத்தேவையில்லை. அனைத்தையும் நானே என் வீட்டிலேயே செய்துவிடுவதால் அன்றன்று மொழிபெயர்த்ததை அன்றன்றே பதிவேற்றிவிட முடிகிறது. அதனால் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கத் துணிந்தேன்.
ஆனால்,என்னதான் நான் மஹாபாரதம் படித்திருந்தாலும், ஒரு சிலர் கேட்கும் கேள்விகளுக்கு, அதை மறுபடியும் தேடிப் பார்த்துத்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது. அந்த நேரத்தில் இன்னும் ஒரு பகுதியை மொழிபெயர்த்துவிடலாம். பணியும் வேகமாக நிறைவடையும்.

நீங்கள் சொன்ன ஆலோசனைகள் என்ன என்று எனக்குப் புரிகிறது. இருப்பினும் அதை உடனே செய்ய இயலவில்லை. முழு மஹாபாரதம் வலைப்பூவை பிளாகரில் நானே தான் வடிவமைத்துக் கொண்டேன். எனக்கு அதிகம் எச்டிஎம்எல் (HTML) தெரியாது. ஆகையால், நீங்கள் சொன்னவாறு விவாதங்களுக்கென்று தனி பக்கத்தை ஒதுக்க உடனே எனக்குத் தெரியவில்லை.

இருப்பினும் அதுகுறித்து கூகுளில் தேடி, விரைவில் நீங்கள் சொன்னவாறு மாற்றி அமைத்துவிடுவேன்.  நான் சலிப்படையாதிருக்க மட்டுமல்லாது, பாரதத்தைப் படிக்க வருவோர் சலிப்படையாமல் இருக்கவே அதைச் செய்யப் போகிறேன்.
ஏதோ ஒரு வாசகன் என்று நினையாமல், எனது வலைப்பூவையும் ஒரு பார்வையிட்டு ஒரு மதிப்புரை தந்தமைக்கு நன்றி.  ஏதாவது நான் பிழை செய்கிறேன் என்று உங்களுக்கு எப்போதாவது பட்டால், என்னைத் திருத்தத் தயங்க வேண்டாம்.
எனது மொழியாக்கம் தற்காலத் தமிழில் இருக்க வேண்டும் என்றும் எளிமையாக இருக்க வேண்டும் என்றும் மிகவும் சிரத்தை கொள்கிறேன். முடிந்தவரை வடமொழி கலவாமல் எழுத முயல்கிறேன். இருப்பினும் தவிர்க்க முடியாத இடங்களில் வந்து விடுகிறது. இயன்ற வரை இனி கூட்டுச்சொற்களையும் தவிர்க்க முயல்வேன்.
நன்றி.

அன்புடன்,
செ.அருட்செல்வப்பேரரசன் 
 ***************************************

நண்பர்களே!

மேற்கண்ட காரணங்களுக்காக நான் இவ்வலைப்பூவில் உள்ள மறுமொழி பெட்டகத்தை நீக்குகிறேன். உங்களுக்கு ஏதேனும் என்னுடன் கருத்து பரிமாரிக் கொள்ள வேண்டுமென்றால் என்னைத் தொடர என்ற லிங்கில் உள்ள தேர்வுகளில் பல வழிகளில் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது எளிமையான வழியாக மேலே தலைப்புப் பட்டையில் வலது கடைசியில் இருக்கும் தொடர்புக்கு என்ற படிவத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படிவத்தைப் பயன்படுத்தினால், உங்கள் கருத்துகள் எனது மின்னஞ்சலுக்கே (dhevakidtpin@gmail.com) நேரடியாக வந்து சேரும்.


இனி வாசகர்கள் மற்ற தலைப்புகள் குறித்து சிந்தித்துத் தடுமாறாமல் முழு மஹாபாரதத்தை[f சிரமமில்லாமல் படிக்கலாம் என்று நினைக்கிறேன்.

நன்றி.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்