Thursday, August 08, 2013

சம்வர்ணனும் தபதியும் - ஆதிபர்வம் பகுதி 173

Samvarana and Tapati | Adi Parva - Section 173 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : சூரியனின் மகளான தபதியின் வரலாறு; சூரியன் தன் பக்தனான சம்வர்ணனுக்கு தன் மகளைக் கொடுக்க விரும்பியது; தபதியை மலையில் கண்டு காமுற்ற சம்வர்ணன்; பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்த தபதி...

அர்ஜுனன், "நீ என்னைத் தபதேயா என்று (ஒரு முறைக்கும் அதிகமாக) அழைத்தாய். எனவே, அந்த வார்த்தையின் பொருளை அறிய நான் விரும்புகிறேன்.(1) ஓ அறம்சார்ந்த கந்தர்வா, குந்தி மைந்தர்களாகிய நாங்கள் நிச்சயமாகக் கௌந்தேயர்களே {குந்தி மைந்தர்களே}. ஆனால் நாங்கள் தபதேயர்கள் என்று அழைக்கப்படக் காரணமான தபதி என்பது யார்?'' என்று கேட்டான்".(2)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிக் கேட்கப்பட்ட கந்தர்வன், குந்தியின் மைந்தனான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} மூவுலகங்களும் அறிந்த பின்வரும் கதையைச் சொன்னான். கந்தர்வன்,(3) "ஓ பிருதையின் {குந்தியின்} மைந்தா, புத்திசாலி மனிதர்களில் முதன்மையானவனே, அந்த அழகான கதையை நான் உங்களுக்கு முழுமையாக உரைப்பேன்.(4) தபதேயா என்று நான் உன்னை அழைத்ததற்கான காரணத்தை விரிவாகச் சொல்லப்போகிறேன். கவனமாகக் கேட்பாயாக.(5) எவன் மொத்த ஆகாயத்தையும் தன்னொளியால் படர்ந்து  ஊடுருவி இருக்கிறானோ அந்த விவஸ்வானுக்கு {சூரியனுக்கு}, தனக்கு இணையான பிரகாசம் கொண்டவளாக தபதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள்.(6) தேவன் விவஸ்வானின் மகளான தபதி, சாவித்ரிக்கு இளைய தங்கையாவாள். அவள் தனது தவத்துறவுக்காக மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்டாள்.(7) தேவர்களிலும், அசுரர்களிலும், யக்ஷர்களிலும், அப்சரஸ்களிலும், கந்தர்வர்களிலும் கூட அவளுக்கு இணையான அழகு கொண்ட பெண் யாரும் இல்லை.(8) அளந்து வைத்த அளவு போலச் சரியான மற்றும் சமச்சீரான வனப்புகளுடைய உடலமைப்புடன், களங்கமற்ற குணம் கொண்டு, கரிய அகலமான கண்களுடன், அழகான ஆடை அணிந்த அந்தப் பெண், கற்புக்கரசியாகவும், சரியான நடத்தையுள்ளவளாகவும் இருந்தாள்.(9) ஓ பாரதா {அர்ஜுனா}, அவளைக் கண்ட சூரியன், அவளுக்கு இணையான அழகுடனும், நடத்தையுடனும், கல்வியுடனும் அவளுக்குக் கணவனாகும் தகுதியுடன் மூவுலகங்களிலும் யாரும் இல்லை என்று நினைத்தான்.(10)

அவள் வயதுக்கு வந்ததும், அவளுக்குச் சரியான கணவனைக் காண முடியாமால் அவளது தந்தை மன நிம்மதி இழந்து, சரியான மனிதரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்.(11) அந்த நேரத்தில், ஓ குந்தியின் மகனே, ரிக்ஷனின் மகனும், குரு குலத்தின் காளையுமான, பெரும் பலம் வாய்ந்த மன்னன் சம்வர்ணன், அர்க்கியம், பூமாலை, நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை, உறுதிகளுடனும் விரதங்களுடனும், பல்வேறு துறவு நோன்புகளுடனும் சூரியனை வணங்கி வந்தான்.(12,13) உண்மையில் அந்த மகிமைவாய்ந்த சம்வர்ணன், அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் பக்தியுடன் சூரியனை வழிபட்டான்.(14) அறவிதிகளைக் கடைப்பிடித்து வந்த சம்வர்ணன், பூமியில் இணையில்லாத அழகுடன் திகழ்வதைக் கண்ட சூரியன், அவனே தனது மகள் தபதிக்குச் சரியான இணை என்று நினைத்தான்.(15)

ஓ குரு குலத்தவனே {அர்ஜுனா}, தனது மகள் தபதியை அந்த மன்னர்களில் சிறந்தனும், உலகப்புகழ் கொண்ட குலத்தின் கொழுந்துமான சம்வர்ணனுக்கு அளிக்க விவஸ்வான் முடிவு செய்தான்.(16) சூரியன் எப்படி ஆகாயத்தில் தனது பிரகாசத்தைப் பரப்பினானோ, அப்படியே மன்னன் சம்வர்ணனும், அனைத்துப் பகுதிகளையும் தனது நற்சாதனைகளின் பிரகாசத்தால் பிரகாசிக்க வைத்தான்.(17) ஓ பார்த்தா {அர்ஜுனா}, பிராமணர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களும் சம்வரணனை வழிபட்டார்கள்.(18) நற்பேறு அருளப்பட்டவனான மன்னன் சம்வர்ணன், நண்பர்களின் இதயங்களை வெல்வதில் சோமனை {நிலவை} விஞ்சினான். எதிரிகளின் இதயங்களை எரிப்பதில் சூரியனை விஞ்சினான்.(19) ஓ கௌரவா {அர்ஜுனா}, தபனா (சூரியன்} தனது மகள் தபதியை, அனைத்து அறங்களும் சாதனைகளும் கொண்ட மன்னன் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்தான்.(20)

ஒரு சமயத்தில், ஓ பார்த்தா {அர்ஜுனா}, அழகும், அளவிலா ஆற்றலும் கொண்ட அந்த மன்னன் சம்வர்ணன், மலையின் சாரலில் இருக்கும் அடர்ந்த கானகத்திற்குள் வேட்டைக்காகச் சென்றான்.(21) அவன் மான்களைத் தேடி உலவிக் கொண்டிருக்கும்போது, ஓ பார்த்தா, அம்மன்னனின் அருமையான குதிரை, சோர்வலும், களைப்பாலும், தாகத்தாலும் அந்த மலையிலேயே இறந்தது.(22) அந்தக் குதிரையைக் கைவிட்ட அம்மன்னன், ஓ அர்ஜுனா, அந்த மலையின் சாரலில் நடந்து உலாவினான். அப்படி உலாவும் போது, அந்த ஏகாதிபதி! பெரிய கண்களுடைய ஓர் அழகான மங்கையைக் கண்டான்.(23) அந்த எதிரிகளைத் தண்டிப்பவனான அந்தச் சிறப்புமிக்க மன்னன், தனியனாகத் தனியாக இருக்கும் அந்த கன்னிகையைப் பார்த்துக் கொண்டே அசைவில்லாமல் நின்றான்.(24) அந்த இடத்தில் அவ்வளவு அழகோடிருந்தவளைக் கண்ட மன்னன், அவளை ஸ்ரீ {லட்சுமி} என்றே நினைத்தான். அடுத்து அவளைச் சூரியனின் கதிரில் உருவான வடிவம் என்று நினைத்தான்.(25)

நெருப்புக்கு ஒப்பான பிரகாசத்தைக் கொண்ட அவள், அருளுடைமையாலும், இனிமையாலும் நிலவைப் போலவும் இருந்தாள்.(26) அந்த மலையின் சாரலில் நின்று கொண்டிருந்த அந்தக் கரிய கண் படைத்தவள், பொற்சிலையெனப் பிரகாசமாக நின்றாள்.(27) கொடிகளுடனும் செடிகளுடனும் கூடிய அந்தமலையே, இந்த மங்கையின் அழகாலும், அவள் அணிந்து வந்த ஆடையாலும், பொன்மயமாக மாறியதாகத் தோன்றிற்று.(28) அவன், முன்பு கண்டிருந்த பெண்கள் அனைவரையும்  அழகில் குறைவானவர்களாக அறிந்து, தான் அவளைக் கண்டது, தனது கண்கள் செய்த புண்ணியம் என்று நினைத்தான்.(29) அம்மன்னன், தான் பிறந்ததிலிருந்தே இப்படியொரு அழகைக் கண்டதில்லை என்றே நினைத்தான். அந்த மங்கையால், அம்மன்னனின் இதயமும் கண்களும் வெல்லப்பட்டன. கயிற்றால் கட்டப்பட்டவன் போல அவன் அந்த இடத்திலேயே உணர்வுகளற்று வேர் முளைத்து நின்றான்.

இவ்வழகைப் படைத்த படைப்பாளியானவன், நிச்சயம் அசுரர்கள் மற்றும் மனிதர்களின் உலகை நன்றாகக் கடைந்த பிறகே செய்திருக்க வேண்டும் என்று அந்த மன்னன் நினைத்துக் கொண்டான்.(30,31) இப்படிப் பல்வேறு சிந்தனைகளுடன் இருந்த மன்னன் சம்வர்ணன், அந்த மங்கையின் அழகு என்ற செல்வம், மூவுலகங்களிலும் இல்லாதது என்ற தீர்மானத்துக்கு வந்தான்.(32) புனிதமான வழியில் வந்த அந்த ஏகாதிபதி! அந்த அழகான மங்கையைக் கண்டு, காமனின் (மன்மதனின்) கணைகளால் துளைக்கப்பட்டுத் தனது மன அமைதியைத் தொலைத்தான்.(33)

ஆசையெனும் கடுந்தீயால் உந்தப்பட்டுத் தனது இளமையின் ஆரம்பத்திலிருந்த அந்த அப்பாவிப் பெண்ணிடம்,(34) "ஓ வழவழப்பான தொடைகளைக் கொண்டவளே, நீ யார், யாருடையவள்? நீ ஏன் இங்கு இருக்கிறாய்? ஓ இனிமையாகப் புன்னகைப்பவளே, இந்த ஏகாந்தமான கானகத்தில் ஏன் தனிமையில் திரிகிறாய்?(35) களங்கமற்ற சரியான அனைத்துக் குணங்களுடனும், ஆபரணங்கள் போன்ற உனது அங்கங்களை மறைக்க வேறு ஆபரணங்கள் கொண்டு மறைத்திருப்பவளே, உன்னைப் பார்த்தால் அசுரராகவோ, யக்ஷராகவோ, ராட்சசராகவோ, நாகராகவோ, கந்தர்வராகவோ, மனிதப் பிறப்பாகவோ தெரியவில்லை.(36,37) ஓ அற்புதமானவளே, நான் இதுவரை கண்டதிலும், கேட்டதிலும் சிறந்த பெண் நீ தான். உனது அழகை யாருடனும் ஒப்பு நோக்க முடியாது!(38) ஓ அழகான முகம் கொண்டவளே, மதியை {நிலவை} விட இனிமையான முகமும், தாமரை இதழ்களைப் போன்ற அருள் நிறைந்த கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டதால், காமதேவன் என்னைத் துளைத்தெடுக்கிறான்" என்றான்.(39)

மன்னன் சம்வர்ணன் கானகத்திலிருந்த அந்த மங்கையிடம் இப்படிச் சொன்னதும், அம்மங்கை ஆசைத்தீயில் வெந்துகொண்டிருந்த அந்த ஏகாதிபதியிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.(40) அதற்குப் பதிலாக, மேகத்தினூடே இருக்கும் மின்னலைப் போல அந்த அகன்ற கண்களுடைய மங்கை, அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே மறைந்து போனாள்.(41) அம்மன்னன் அனிவை இழந்த ஒருவனைப் போல அந்தத் தாமரை இதழ் கண்களைக் கொண்ட பெண்ணை கானகம் முழுவதும் தேடினான்.(42) ஆனால், அவளைக் கண்டுபிடிப்பதில் தோல்வியுற்ற அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் தனக்குள்ளேயே பெரும்புலம்பல் புலம்பித் துயரத்துடன் அங்கேயே அசைவற்று நின்றான்" {என்றான் சித்திரரதன்}.(43)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்