Wednesday, August 21, 2013

திரௌபதியை பாண்டவர்களுக்கு எதிராக தூண்டுவோம் - ஆதிபர்வம் பகுதி 203

Duryodhana, “incite Draupadi against her husbands” | Adi Parva - Section 203 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : துரியோதனன், திரௌபதியை பாண்டவர்களுக்கு எதிராகத் தூண்டவும், பாண்டவர்களைக் கொல்லவும் சொன்னது; குறிப்பாக பீமனின் பெருமைகளைச் சொல்லி, அவனைக் கொன்றால் பாண்டவர்கள் நாடு கேட்க மாட்டார்கள் என்று சொன்னது; கர்ணனிடம் கருத்து கேட்ட துரியோதனன்...

வைசம்பாயனர் சொன்னார், "திருதராஷ்டிரன், " நீங்கள் பரிந்துரைப்பதைத்தான் நான் சரியாகச் செய்ய விரும்புகிறேன். ஆனால், எனது சிறு சதை {முக} மாற்றத்தினாலும் விதுரனுக்கு அதைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை.(1) எனவே, ஓ மகனே, எனது மனத்தின் சிறு குறிப்பையும் விதுரன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, நான் அவனது முன்னிலையில், பாண்டவர்களைப் புகழ்ந்தேன்.(2) இப்போது விதுரன் சென்றுவிட்டான். ஓ சுயோதனா (துரியோதனா) உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓ ராதேயா (கர்ணா) உனக்கு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்வதற்கு இதுவே தகுந்த நேரம்" என்றான்.(3)

அதற்குத் துரியோதனன், "ஓ தந்தையே, நம்பிக்கைக்குரிய, திறம்வாய்ந்த, கைதேர்ந்த பிராமணர்களைக் கொண்டு, குந்தியின் மகன்களுக்கும் {யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோருக்கும்}, மாத்ரியின் மகன்களுக்கும் {நகுலன், சகாதேவன் ஆகியோருக்கும்} இடையே {பேத முறையில்} வேற்றுமையை உருவாக்க வேண்டும்.(4) அல்லது துருபதனுக்கும், அவனது மகன்களுக்கும், அவனது நாட்டின் அமைச்சர்களுக்கும் {தான முறையில்} பெரும் செல்வங்களைப் பரிசாகக் கொடுத்து, குந்தியின் மகனான யுதிஷ்டிரனைக் கைவிடச் செய்ய வேண்டும்.(5)

அல்லது நமது ஒற்றர்கள், பாண்டவர்களிடம் ஹஸ்தினாபுரத்தில் வசிப்பதால் உண்டாகும் தோதின்மைகளை {வசதியின்மைகளைத்} தனியாக விளக்கி, நம்மிடம் இருந்து பிரிந்து பாஞ்சாலத்திலேயே அவர்கள் நிரந்தரமாகத் தங்கும் வகையில், அவர்களைத் துருபதனின் ஆட்சிப் பகுதியிலேயே வசிப்பதற்குத் தூண்ட வேண்டும்.(6,7) அல்லது பெரும் வழிவகைகளை அறிந்த சில புத்திசாலி ஒற்றர்களைக் கொண்டு வேற்றுமையின் விதைகளைப் பாண்டவர்களுக்குள் தூவி, அவர்களை ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளச் செய்ய வேண்டும்.(8) அல்லது அவர்களை {ஒற்றர்களைக்} கொண்டு கிருஷ்ணையை {திரௌபதியை} அவளது கணவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட வேண்டும். அவளுக்குப் பல தலைவர்கள் {கணவர்கள்} இருப்பதால், இந்தக் காரியம் கடினமானது அன்று. அல்லது சிலரைக்கொண்டு பாண்டவர்கள் கிருஷ்ணை {திரௌபதி} மீது வெறுப்பு கொள்ளச் செய்தால், பதிலுக்குக் கிருஷ்ணை {திரௌபதி} அவர்கள் மீது வெறுப்பைக் கொள்வாள்.(9) அல்லது, ஓ மன்னா, நுண்ணறிவு கொண்ட சில ஒற்றர்களை அங்கு செல்ல வைத்து, {தண்ட முறையில்} கமுக்கமாகப் பீமசேனனைக் கொல்ல வைக்க வேண்டும். அவர்கள் அனைவரிலும் பீமனே பலசாலியாவான்.(10)

முன்பொரு காலத்தில் பாண்டவர்கள், பீமனை மட்டுமே நம்பி, நம்மை அவமதித்திருக்கிறார்கள். பீமன் கடுமையானவன், வீரமானவன். அவனே பாண்டவர்களின் பாதுகாவலன்.(11) அவன் கொல்லப்பட்டால், மற்றவர்களின் பலமும் சக்தியும் குறைந்துவிடும். அவர்களது ஒரே பாதுகாவலான பீமனை இழந்துவிட்டால், மறுபடியும் நாட்டைப் பெற அவர்கள் முனைய மாட்டார்கள்.(12) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, பின்னாலிருந்து பீமன் காத்தால்தான், அர்ஜுனன் போரில் தன்னிகர் இல்லாதவன். பீமனில்லாத அர்ஜுனன், ராதேயனின் {கர்ணனின்} கால்பங்கு பலத்துக்கும் ஈடாக மாட்டான்.(13) ஓ மன்னா, நிச்சயமாக, பீமனில்லாத பாண்டவர்கள், நமது பலத்திற்கு முன்னால் தங்களை அற்பமாக உணர்ந்து, நாட்டைப் பெற உண்மையிலேயே முனைய மாட்டார்கள்.(14) அல்லது, ஓ ஏகாதிபதியே இங்கே வந்து, நமக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் தங்கள் அமைதியை நிரூபித்தால், அதன் பிறகு நாம் (கணிகர் விளக்கியபடியே) அரசியல் அறிவியலின் ஆணைப்படி அவர்களை எப்படி ஒடுக்க வேண்டுமோ அப்படி ஒடுக்கலாம்.(15)

அல்லது, சில அழகான பெண்களைக் கொண்டு, பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} அவர்கள் மீது {பாண்டவர்கள் மீது} வருத்தம் கொள்ள வைக்கச் செய்யலாம்.(16) அல்லது ஓ ராதேயா {கர்ணா}, நமது தூதர்களை அங்கு அனுப்பி, அவர்களை இங்குக் கொண்டுவந்து, நம்பிக்கைக்குரிய ஆட்களைக் கொண்டு, மேற்கண்ட எந்த முறையிலாவது அவர்களைக் கொல்லலாம்.(17)  ஓ தந்தையே, இந்த (பல்வேறு  முறைகளில் உமக்கு குறையில்லாததாகத் தெரியும் எதையாவது கைக்கொள்வீராக. காலம் கடக்கிறது. இதற்கு மேலும் நாம் தவறிழைக்காமல் முனைய வேண்டும்.(18) ஓ ஏகாதிபதி, மன்னர்களில் காளையான துருபதனிடம்  அவர்களது நம்பிக்கை நிறுவப்படுவதற்கு முன் அவர்களைத் தாக்கி நாம் வெற்றி கொள்ள வேண்டும். (ஆனால் அவர்கள் துருபதனின் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆகிவிட்டால், பின்பு நாம் நிச்சயம் தோல்வியைத் தான் சந்திப்போம்).(19). ஓ தந்தையே, இவையே பாண்டவர்களைத் தோல்வியடையச் செய்ய நான் கொண்டிருக்கும் கருத்துகள். இவை நன்மையா, தீமையா என்பதைத் தீர்மானித்துக்  கொள்வீராக. ஓ கர்ணா, நீ என்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான் {துரியோதனன்}.(20)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்