Friday, August 23, 2013

"பாவிகளின் பேச்சைக் கேட்காதீர்" விதுரன்! - ஆதிபர்வம் பகுதி 207

Vidura said, "Don't Listen to wretches" | Adi Parva - Section 207 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : விதுரன் பீஷ்மருக்கும், துரோணருக்கும் ஆதரவாகப் பேசுவது; துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனியைப் பாவிகள், முட்டாள்கள், சிறுவர்கள் என்று விதுரன் பழித்தது; துரியோதனன் தவறால் நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தது...

வைசம்பாயனர் சொன்னார், "துரோணர் முடித்ததும், விதுரன் ஆரம்பித்தான், "ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது நண்பர்கள் உமக்கு நன்மையையே சொல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், உமக்கு அதைக் கேட்பதில் விருப்பமில்லை எனவே, அந்த வார்த்தைகளுக்கு உமது காதில் இடம் கிடைக்கவில்லை.(1) சந்தனுவின் மகனும், குருகுலத்தவரில் முதன்மையானவருமான பீஷ்மர் சொன்னது அற்புதமானதும், உமது நன்மைக்கானதும் ஆகும். ஆனால் நீர் அதைக் கேட்க மறுக்கிறீர்.(2) ஆசானான துரோணர் சொல்வதும் உமது நன்மைக்கே, ஆனால் அதைக்கூட ராதையின் மகனான கர்ணன் மதிக்க மறுக்கிறான்.(3) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாலும், மனிதர்களில் சிங்கங்களான இந்த இருவரைவிடச் {பீஷ்மர், துரோணர்} சிறந்த நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்.(4) ஓ மன்னா, வயதில் மூத்தவர்களும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்தவர்களான இந்த இருவரும், எப்போதும் உம்மையும், பாண்டுவின் மகன்களையும் சமமான பார்வையிலேயே மதிக்கிறார்கள்.(5)

ஓ பாரதக் குலத்தின் மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்கள் இருவரும் அறத்தில் ஆகட்டும், உண்மை பேசுவதில் ஆகட்டும் தசரதனின் மகன் ராமனுக்கும், கயனுக்கும் எந்தவிதத்திலும் இளைத்தவர்கள் இல்லை.(6) இதற்கு முன்பு அவர்கள் உமக்கு எந்தத் தீய ஆலோசனையும் வழங்கியது கிடையாது. ஓ மன்னா, நீரும் அவர்களுக்கு எந்தக் காயத்தையும் ஏற்படுத்தியது கிடையாது. எனவே, எப்போதும் உண்மையுடன் நடந்து கொள்ளும் இந்த மனிதப் புலிகள், குறிப்பாக நீர் அவர்களைக் காயப்படுத்தாது இருக்கும்போது உமக்குத் தீய ஆலோசனையை ஏன் வழங்க வேண்டும்?(7,8) ஞானம் கொண்ட இந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், நேர்மையற்ற ஆலோசனைகளை உமக்கு வழங்கமாட்டார்கள்.(9) ஓ குரு குலத்தின் வழித்தோன்றலே {திருதராஷ்டிரரே}, அறவிதிகளை நன்கு அறிந்த இந்த இருவரும், செல்வத்திற்கு மயங்கி, பாகுபாட்டுடன் உங்களை ஏமாற்ற எதையும் சொல்ல மாட்டார்கள் என்பது என் உறுதியான நிலைப்பாடாகும்.(10)

ஓ பாரதா {திருதராஷ்டிரரே}, அவர்கள் சொன்னது அனைத்தும் உமது நன்மைக்கு ஆனதாகவே நான் கருதுகிறேன். ஓ ஏகாதிபதியே, துரியோதனனையும் மற்றவர்களையும் போலவே பாண்டவர்களும் உமது மகன்களே ஆவர் என்பதில் ஐயமில்லை.(11) எனவே, பாண்டவர்களைக் குறித்துத் தீய ஆலோசனைகள் வழங்கும் உமது ஆலோசகர்களுக்கு, உமது நலனில் அக்கறை இல்லை எனக் கொள்வீராக.(12) உமது பிள்ளைகள் குறித்து உமது இதயத்தில் ஏதாவது பாகுபாடு இருக்குமேயானால், ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அதை வெளிக்கொணர வகைசெய்யும் {உமது இந்த} ஆலோசகர்கள் உமக்கு நன்மையைச் செய்யவில்லை என்பது உறுதியாகும்.(13) எனவே, ஓ மன்னா, இந்தப் பெரும் பிரகாசமுடையவர்களானச் சிறப்பு மிகுந்தவர்கள் {பீஷ்மரும், துரோணரும்}, தீயவற்றிற்கு வழி கோலும் எதையும் சொல்லவில்லை என நான் நினைக்கிறேன். இருப்பினும் நீர் இதைப் புரிந்து கொள்ளவில்லை.(14) வெற்றிகொள்ளப்பட முடியாத பாண்டவர்களைப் பற்றி இந்த மனிதக் காளைகள் {பீஷ்மரும், துரோணரும்} சொன்னவை முற்றிலும் உண்மையே. ஓ மனிதர்களில் புலியே, அதுகுறித்து வேறுவிதமாக நினைக்காதீர். நீர் அருளப்பட்டு இருப்பீராக.(15)

பாண்டுவின் மகனும், அழகனும், வலக்கையையும், இடக்கையையும் இணையான சக்தியுடன் பயன்படுத்துபவனுமான தனஞ்சயனை {அர்ஜுனனை} மகவத்தே {இந்திரனே} வந்தாலும் போரில் வெல்ல முடியுமா?(16) பத்தாயிரம் யானைகளின் பலம் கொண்டவனும், பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பெரும் பீமசேனனை தேவர்களாலும் வெல்ல முடியுமா?(17) உயிர்வாழ ஆசைப்படுபவர்கள் யாரேனும், யமனின் பிள்ளைகளைப் போல இருக்கும் அந்த இரட்டையர்களை {நகுலனையும், சகாதேவனையும்} போரில் வெல்ல முடியுமா?(18) அமைதி, கருணை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை {சத்தியம்}, ஆற்றல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து வாழும் பாண்டவர்களில் மூத்தவனை {யுதிஷ்டிரனை} யாரால் எப்படி வெல்ல முடியும்?(19) ராமனை (பலதேவனை {பலராமனைத்}} தங்கள் கூட்டாளியாகக் கொண்டு, ஜனார்த்தனனை (கிருஷ்ணனை) ஆலோசகராகக் கொண்டு, சாத்யகியை தங்கள் ஆதரவாளனாகவும் கொண்ட அவர்கள் ஏற்கனவே எல்லோரையும் போரில் வீழ்த்திவிட்டனர். துருபதனைத் தங்கள் மாமனாராகக் கொண்டு, துருபதனின் மகன்களான, திருஷ்டத்யும்னன் மற்றும் பிருஷதனின் குலத்தில் வந்த பிற மகன்களையும் மைத்துனர்களாகக் கொண்டவர்கள், நிச்சயம் வெல்ல முடியாதவர்கள் ஆவர்.(20)

ஓ ஏகாதிபதியே, இவையாவற்றையும் மனத்தில் கொண்டு, நாட்டின் மீது அவர்களின் உரிமை கோரல், உங்கள் உரிமையை விடப் பழையது {முதன்மையானது} என்பதை எண்ணி அவர்களிடம் அறத்தின் {தர்மத்தின்} படி நடந்து கொள்வீராக.(21) புரோசனனின் செயலால் உண்டான விளைவில், ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, வசை {பழிச்சொல்} படிந்த கறை உம்மேல் உள்ளது. இப்போது, பாண்டவர்களிடம் அன்பாக நடந்து கொண்டு, அதைக் கழுவிக் கொள்வீராக.(22) ஓ ஏகாதிபதியே, பாண்டவர்களிடம் உமது அன்பான நடத்தை என்பது, குரு குலத்தைச் சார்ந்த நமது அனைவரின் உயிரையும் காத்து, நமக்குப் பெரிய நன்மையைத் தரும். அது க்ஷத்திரிய குலத்தின் வளர்ச்சிக்கே நம்மை அழைத்துச் செல்லும்.(23) நாம் ஏற்கனவே துருபதனிடம் போரிட்டிருக்கிறோம்; இப்போது நாம் அவனைக் கூட்டாளியாக அடைய முடிந்தால், நமது தரப்புக்கு அது பலத்தையே சேர்க்கும்.(24) ஓ மன்னா, தசார்ஹர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களும், பலசாலிகளுமாவர். கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ அவர்கள் அங்கேயே இருப்பார்கள். எங்கே கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கேயே நிச்சயம் வெற்றியும் இருக்கும் என்பதை அறிந்து கொள்வீராக.(25)

ஓ மன்னா, தேவர்களால் சபிக்கப்படாமல், சமரசம் மூலம் தடுக்க முடிந்ததைப் போர் மூலம் தடுக்க முற்பட்டால், அவர்களுக்குத் தேவர்களின் சாபம் கிடைக்காதா?(26) பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} உயிருடன் இருக்கிறார்கள் என்பதை அறிந்த குடிமக்களும், மற்ற குடிகளும் பெரும் மகிழ்ச்சியடைந்து, அவர்களைக் காண ஆவலாக உள்ளனர்.  ஓ ஏகாதிபதி, அவர்களுக்கு ஏற்புடைய வகையில் நடந்து கொள்வீராக.(27) துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் பாவிகள், முட்டாள்கள் மற்றும் சிறுவர்களாவர். அவர்களின் வார்த்தைகளைக் கேட்காதீர்.(28,29)) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனனின் தவறால் நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவர் என்று அனைத்து அறங்களையும் கொண்ட உமக்கு நான் முன்பே சொல்லியிருக்கிறேன்" என்றான் {விதுரன்}.(30)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்