Sunday, August 25, 2013

நாரதர் சொன்ன திலோத்தமை கதை! - ஆதிபர்வம் பகுதி 210

The story of Tilottama said by Narada! | Adi Parva - Section 210 | Mahabharata In Tamil

(ராஜ்யலாப பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் சபைக்கு நாரதர் வருகை; சுந்தன் உபசுந்தன் கதையை மேலோட்டமாகச் சொல்வது; அந்தக்கதையை விரிவாகச் சொல்லுமாறு பாண்டவர்கள் நாரதரை வேண்டுவது…

ஜனமேஜயன், "ஓ தவத்தை செல்வமகாக் கொண்டவரே! எனது முப்பாட்டன்களான அந்த உயர் ஆன்மா கொண்ட சிறப்பு வாய்ந்த பாண்டவர்கள், இந்திரப்பிரஸ்தத்தின் அரசுரிமையைப் பெற்ற பிறகு என்ன செய்தார்கள்? அவர்களுடைய மனைவியான திரௌபதி அவர்கள் அனைவருக்கும் எப்படிக் கீழ்ப்படிந்து நடந்தாள்?(1,2) அனைவரும் ஒரு மனைவியிடம் இணைக்கப்பட்டு இருக்கும்போது, மனிதர்களை ஆண்ட அந்தச் சிறப்புமிகுந்த ஆட்சியாளர்களிடம், கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} குறித்து எந்த மன வேற்றுமையும் நிகழவில்லையா?(3) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} இணைந்த பின் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எப்படி நடந்து கொண்டனர் என்பதைக் குறித்து அனைத்தையும் நான் முழுமையாகக் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான் {ஜயமேஜயன் வைசம்பாயனரிடம்}.(4)

வைசம்பாயனர் சொன்னார், "எதிரிகளை வாட்டுபவர்களான அந்தப் பாண்டவர்கள், திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் நாட்டை அடைந்த பிறகு, கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்ந்து காண்டவப்பிரஸ்தத்தில் மகிழ்ச்சியாக தங்கள் நாட்களைக் கடத்தினர்.(5) பெரும் சக்தி கொண்ட யுதிஷ்டிரன், எப்போதும் உண்மையைப் பற்றிக் கொண்டு, அந்த நாட்டை அடைந்ததிலிருந்து, தனது தம்பிகளின் துணையுடன் அறம் சார்ந்து அதை ஆண்டான்.(6) பெரும் ஞானம் கொண்ட பாண்டுவின் மகன்கள், உண்மைக்குத் தங்களை அர்ப்பணித்து, அனைத்து எதிரிகளையும் வென்று, அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்க்கையைத் தொடர்ந்தனர்.(7) மனிதர்களில் காளைகளான அவர்கள், பெருமதிப்பிற்குரிய தங்கள் அரச அரியணையில் அமர்ந்து, தங்கள் அரசியல் கடமைகளை நிறைவேற்றினர்.(8)

ஒருநாள், அப்படி அவர்கள் அனைவரும் அமர்ந்திருக்கும்போது, ஊர்சுற்றி வந்த தெய்வீக முனிவரான நாரதர் அங்கே வந்தார்.(9) அம்முனிவரைக் கண்ட யுதிஷ்டிரன், அவருக்குத் தான் அமர்ந்திருந்த அழகான ஆசனத்தைக் கொடுத்தான். அந்தத் தெய்வீக முனிவர் அமர்ந்த பிறகு, ஞானமுள்ள யுதிஷ்டிரன், அவனது கையாலேயே அவருக்கு அர்க்கியத்தைக் {நீரில் மலர் தூவி கொடுப்பது} கொடுத்தான். அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அந்த முனிவரிடம் தனது நாட்டின் நிலையைப் பற்றிச் சொன்னான்.(10,11) அந்த முனிவர் {நாரதர்}, வழிபாடுகளை ஏற்றுக் கொண்டு பெரும் மனநிறைவை அடைந்து, அவனை {யுதிஷ்டிரனை} வாழ்த்தி ஆசீர்வதித்தார். அந்த மன்னனை அமரக் கட்டளையிட்டார். முனிவரால் {நாரதரால்} கட்டளையிடப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்} அமர்ந்தான். (12)

மன்னன் {யுதிஷ்டிரன்}, கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} அந்தச் சிறப்புமிக்கவரின் {நாரதரின்} வருகையைச் சொல்லி அனுப்பினான். முனிவரின் வருகையைப் பற்றிக் கேள்விப்பட்ட திரௌபதி, தன்னைச் சரியான முறையில் தூய்மைப்படுத்திக் கொண்டு, மிகுந்த மரியாதையுடன் பாண்டவர்களுடன் நாரதர் இருந்த இடத்திற்கு வந்தாள். அறம்சார்ந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, தெய்வீக முனிவரின் {நாரதரின்} பாதங்களை வழிபட்டு, அவர் முன்பு குவிந்த கரங்களுடன் கண்களுக்கு மறைவாக நின்றாள்.(13-15) சிறப்புவாய்ந்த நாரதர், அவளைப் பலவாறாக வாழ்த்தி, அந்த இளவரசியை ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைத்தார்.(16)

அந்தச் சிறப்புமிக்க முனிவர், கிருஷ்ணை {திரௌபதி} சென்றதும், யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பாண்டவர்கள் அனைவரையும் தனியாக அழைத்து,(17) "புகழ்பெற்ற பாஞ்சால இளவரசி {திரௌபதி} நீங்கள் அனைவரும் மணந்த மனைவியாவாள். எனவே, உங்களுக்குள் வேற்றுமை உருவாகாதவாறு, உங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.(18) பழங்காலத்தில், மூவுலகங்களாலும் கொண்டாடப்பட்ட சகோதரர்களான சுந்தன், உபசுந்தன் ஆகிய இருவொரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர். தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டால் அன்றி வேறு ஒருவர் அவர்களை அழிக்க முடியாது {அப்படிப்பட்ட வரத்தை அவர்கள் பெற்றிருந்தனர்}.(19) அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே நாட்டை ஆண்டு, ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து, ஒரே படுக்கையில் உறங்கி, ஒரே ஆசனத்தில் அமர்ந்து, ஒரே தட்டில் உணவும் உண்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் திலோத்தமைக்காக ஒருவரை ஒருவர் கொன்றனர்.(20) எனவே, ஓ யுதிஷ்டிரா, நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உள்ள நட்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் வேற்றுமை உருவாகாமல் செயல்படுங்கள்" என்றார் {நாரதர்}.(21)

இதைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ பெரும் முனிவரே, அசுரர்களான சுந்தனும், உபசுந்தனும் யாருடைய மகன்கள்? எப்போது அவர்களுக்குள் வேற்றுமை உருவாகி ஒருவரை ஒருவர் கொன்றனர்?(22) சகோதரர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் கொல்ல வைத்த திலோத்தமை யாருடைய மகள்? அவள் ஓர் அப்சரசா (நீர்த் தேவதையா) அல்லது ஏதாவது தேவனின் மகளா?(23) ஓ தவத்தை செல்வமாகக் கொண்டவரே! ஓ பிராமணரே {நாரதரே}, நடந்தது அத்தனையும் அது நடந்தவாறே அறிய நாங்கள் விரும்புகிறோம். இது குறித்த எங்கள் ஆவல் அதிகரிக்கிறது" என்றான் {யுதிஷ்டிரன்}".(24)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்