Tuesday, August 27, 2013

பெண் பித்தால் அழிந்த சகோதரர்கள்! - ஆதிபர்வம் பகுதி 214

Brothers deceased due to lust! | Adi Parva - Section 214 | Mahabharata In Tamil

(ராஜ்யலாப பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : சுந்தனும், உபசுந்தனும் பெரும் இன்பத்துடன் போதையில் இருப்பது; அவர்கள் இருக்கும் இடத்திற்குத் திலோத்தமை சென்றது; அவள் காரணமாக அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது; இருவரும் அழிவது; நாரதர் பாண்டவர்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்த வலியுறுத்துவது; அவர் முன்னிலையிலேயே அவர்களுக்குள் ஒரு விதி பிறப்பது...

நாரதர் தொடர்ந்தார், "அதே வேளையில் அசுரச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} முழு உலகத்தையும் அடக்கி எதிரிகள் அற்று இருந்தனர். மூன்று உலகங்களையும் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு, தங்கள் முயற்சிகளால் ஏற்பட்ட களைப்பும் நீங்கிய பிறகு, அவர்களால் இனி செய்யப்பட வேண்டியது எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.(1) கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள், பூமியை ஆண்ட மன்னர்கள் ஆகியோரின் செல்வங்களையெல்லாம் அபகரித்து வந்து, தங்கள் நாட்களை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.(2) அவர்கள் தங்களுக்கு (மூன்று உலகிலும்) எதிரிகளே இல்லை என்று கண்டபோது, இன்பத்திற்கும் மகிழ்ச்சிக்கும் தங்களை அர்ப்பணித்து, மற்ற முயற்சிகள் அனைத்தையும் கைவிட்டுத் தேவர்களைப் போல வாழ்ந்தனர்.(3) அவர்கள், பெண்கள், வாசனைப் பொருட்கள், பூ மாலைகள், இசை, குடி என அனைத்து வகை இன்பங்களையும், அனைத்து புலன் நுகர் பொருட்களையும் தாராளமாக அனுபவித்தனர்.(4) தேவர்களைப் போல அவர்கள் அபரிமிதமான இன்பங்களையும், கேளிக்கையையும் அனுபவித்துக் கொண்டு வீடுகளிலும், தோப்புகளிலும், நந்தவனங்களிலும், காடுகளிலும், மலைகளிலும் என அவர்கள் விரும்பிய இடங்களில் எல்லாம் திரிந்து கொண்டிருந்தனர்.(5)

ஒரு நாள் விந்திய மலைகளில் இருக்கும் கற்கள் நிறைந்ததும், பூத்துக்குலுங்கும் சால மரங்களும் நிறைந்த சமவெளிகளுக்கு இன்பம் அனுபவிப்பதற்காகச் சென்றனர்.(6) மிகவும் ஏற்புடையவையும், விரும்பத்தக்கவையுமான அனைத்து பொருட்களையும் அங்கே கொண்டு வந்த அந்தச் சகோதரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} அற்புதமான இருக்கைகளில் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும், அழகான பெண்கள் துணையுடனும் அமர்ந்தனர்.(7) அந்த மங்கையர், அந்தச் சகோதரர்களை மகிழ்விக்க எண்ணி, அங்கே இசையுடன் கூடிய நடனத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்தச் சகோதரர்களை வாழ்த்திப் பாடல்கள் பாடப்பட்டன.(8)

அதேவேளையில், சிவப்புப் பட்டாலான ஒற்றையாடையுடன் தனது அழகுகளை எல்லாம் வெளிப்படுத்திய திலோத்தமை, காட்டுப்பூக்களைப் பறித்துக் கொண்டே அந்த வழியில் வந்தாள்.(9) ஆற்றங்கரையில் வளர்ந்திருக்கும் கர்ணீகாரங்களில் மலர்களைச் சேகரித்தபடியே, அந்தப் பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் {சுந்தன், உபசுந்தன்} இருந்த இடத்திற்கு அவள் {திலோத்தமை} மெதுவாக வந்தாள்.(10) அந்த அசுரச் சகோதரர்கள் நிறையக் குடித்துப் போதையுடன் இருந்த போது, அந்தக் கற்பனைக்கெட்டாத அழகு கொண்ட மங்கையைக் {திலோத்தமையைக்} கண்டு அதனால் தாக்குண்டனர்.(11) அவர்கள் தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து அந்த மங்கையிருக்கும் இடத்திற்குச் சென்றனர். காமத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அந்த இருவரும், தனக்கே அந்தப் பெண் வேண்டும் எனக் கேட்டனர்.(12)

சுந்தன் அந்த மங்கையின் வலது கையைப் பற்றி இழுத்தான்.  உபசுந்தன் இடது கையைப் பற்றினான்.(13) தாங்கள் பெற்ற வரங்களாலும், பெரும் பலத்தாலும், செல்வங்கள் மற்றும் ரத்தினங்களாலும், தாங்கள் குடித்த மதுவினாலும், மிகுந்த போதைக்குள்ளாகி,(14) அவைகளால் மதம் கொண்டு, விருப்பம் மற்றும் ஆசையினால் உந்தப்பட்டு, கோபத்தினால் புருவம் சுருக்கி அவர்கள் ஒருவருக்கொருவர் இவ்வாறு பேசிக் கொண்டனர்.(15) "அவள் எனது மனைவி, எனவே உனக்கு அவள் பெரியவள்" என்றான் சுந்தன். "அவள் எனது மனைவி, எனவே அவள் உனக்குக் கொழுந்தியாள்" என்ற மறுமொழி கூறினான் உபசுந்தன்.(16) பிறகும் அவர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} ஒருவருக்கு ஒருவர், "அவள் எனதே, உனதல்ல" என்றனர். விரைவில் மிகுந்த கோபத்துக்கு உள்ளாகினர். அந்த மங்கையின் அழகால் பைத்தியம் கொண்டு, ஒருவருக்குள் ஒருவர் தாங்கள் கொண்டிருந்த தங்கள் அன்பையும், பாசத்தையும்) மறந்து, ஆசையால் நினைவிழந்து, கடும் கதாயுதங்களைக் கையில் ஏந்தினர்.(17,18)

இருவரும், (அவள் {திலோத்தமை} கரம் பற்றுவதில்) "நானே முதல்வன், நானே முதல்வன்" என்று சொல்லி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அந்த முரட்டு அசுரர்கள் {சுந்தனும், உபசுந்தனும்} தரையில் விழுந்து, ரத்தத்தில் குளித்து, வானத்தில் இருந்து விழுந்த இரு சூரியன்களைப் போலக் கிடந்தனர். அங்கே அவர்களுடன் வந்திருந்த பெண்களும் மற்ற அசுரர்களும் இதைக் கண்டு அச்சத்தாலும், துயரத்தாலும் ஓடிப் பாதாள லோகத்தில் தஞ்சம் அடைந்தனர்.(19,20)

தூய ஆன்மா கொண்ட பெருந்தகப்பன் {பிரம்மன்}, தேவர்களுடனும், பெரும் முனிவர்களுடனும் அங்கே வந்தார். அந்தச் சிறப்பு மிக்கப் பெருந்தகப்பன் திலோத்தமையைப் பாராட்டி, அவளுக்கு ஒரு வரம் தர விரும்புவதாகச் சொன்னார். அந்தத் தலைமைத் தெய்வம், வரம் கொடுக்க விரும்பி திலோத்தமையிடம்,(21,22) "ஓ அழகான மங்கையே, நீ ஆதித்யர்களின் உலகத்தில் சஞ்சரிக்கலாம். யாரும் நீண்ட நேரம் பார்க்க முடியாத வகையில் உனது பிரகாசம் பெரிதாக இருக்கும்!" என்றார்.(23)  அனைத்து உயிர்களுக்கும் பெரும்பாட்டன் அவளுக்கு இந்த வரத்தைக் கொடுத்த பிறகு, மூன்று உலகங்களுக்கும் தலைவனாக இந்திரனை முன்பு போலவே நிறுவி, தனது இடத்திற்குத் திரும்பினார்".(24)

நாரதர் தொடர்ந்தார், "இப்படியே, எப்போதும் ஒற்றுமையாகவும், அதற்காகவே முன்னுதாரணமாகவும் கொள்ளப்பட்ட அந்த அசுரர்கள், திலோத்தமைக்காகக் கோபத்தில் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டனர்.(25) எனவே அன்பினால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாரதக் குலத்தில் வந்த முதன்மையானவர்களே, எனக்கு ஏற்புடையது எதையும் செய்ய நீங்கள் விரும்புவீர்கள். ஆனால், திரௌபதி குறித்து உங்களுக்குள் வேற்றுமை வராதபடிக்கு உங்களுக்குள் ஓர் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார் {நாரதர்}.(26)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பெரும் முனிவர் நாரதரால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தச் சிறப்புமிகுந்த பாண்டவர்கள், தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஆலோசித்து, அளவிட முடியாத சக்தி கொண்ட அந்தத் தெய்வீக முனிவரின் முன்னிலையில், தங்களுக்குள் ஒரு விதியை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்களுக்குள் ஏற்படுத்தப்பட்ட விதி என்னவென்றால், அவர்களில் ஒருவர் திரௌபதியுடன் அமர்ந்திருக்கும்போது, மற்ற நால்வரில் எவரேனும் அவர்களைக் கண்டால், அவன் பனிரெண்டு வருடங்களுக்கு[1] பிரம்மச்சாரியாகக் கானகத்திற்குள் ஓய்ந்து போக வேண்டும். இப்படி ஒரு விதியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்ட, அந்த அறம் சார்ந்த பாண்டவர்களைக் கண்ட பெரும் முனிவர் நாரதர், அவர்களிடம் பெரும் மனநிறைவு கொண்டு, தான் விரும்பிய இடத்திற்குச் சென்றார்.(27-29) இப்படியே, ஓ ஜனமேஜயா! நாரதரால் உந்தப்பட்ட பாண்டவர்கள், தங்களுக்குள் பொது மனைவியைக் குறித்து ஒரு விதியை அமைத்துக் கொண்டனர். மேலும், இதனால்தான், ஓ பாரதா {ஜனமேஜயா}, அவர்களுக்குள் இது விஷயத்தில் சச்சரவு ஏற்படவில்லை" {என்றார் வைசம்பாயனர்}.(30)


[1] வேறு பதிப்புகளில் 12 மாதம் என்றும் இருக்கிறது. ஆனால் அர்ஜுனன் அந்தத் தேசாந்தரத்தில் இந்தியாவின் பல பகுதிகளைக் கடக்கிறான். அவற்றை 12 மாதங்களில் கடக்க முடியுமா என்பதும், 12 வருடங்கள் தேவைப்படுமா என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதே!


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்