Monday, September 02, 2013

மதுவும் பெண்களும் - திரௌபதியும் சுபத்திரையும்! - ஆதிபர்வம் பகுதி 224

Wine and women - Draupadi and Subhadra! | Adi Parva - Section 224 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : இந்திரப்பிரஸ்தத்தை யுதிஷ்டிரன் முறையாக ஆண்டது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனிடம் விடைபெற்று, கேளிக்கைக்காக கானகத்திற்குச் சென்றது; அங்கே மங்கையரிடம் இன்பமாக இருந்தது; மதுவின் மயக்கத்தில் இருந்த திரௌபதியும் சுபத்திரையும், போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு ஆடைகளையும் ஆபரணங்களையும் பரிசாகத் தந்தது; அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு இடத்திற்கு அர்ஜுனனும் கிருஷ்ணனும் சென்றது; அங்கே ஒரு பிராமணனைக் கண்டது...

வைசம்பாயனர் சொன்னார், "திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் உத்தரவின் பேரில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்ட பிறகு, மற்ற மன்னர்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.(1) நற்குறிகளும், மேன்மையான சாதனைகளையும் செய்யும் உடலுக்குள் இருக்கும் ஆன்மா மகிழ்ச்சியாக வாழ்வது போல அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும், நீதிமானான யுதிஷ்டிரனின் ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், அறம், இன்பம், பொருள் ஆகியவற்றுக்குத் தகுந்த அளவுகளில் ஏதோ அவை அனைத்தும் தனக்கு விருப்பமானவை போல மரியாதை செய்தான்.(3) அறம், இன்பம், பொருள் ஆகிய மூன்று நிலைகளுடன், நான்காவது நிலையாகத் தானும் இருந்து பிரகாசித்தான்.(4) யுதிஷ்டிரனைத் தங்கள் மன்னனாகக் கொண்ட குடிமக்கள், தங்கள் மன்னனிடம், வேதங்களைக் கற்பதில் ஆர்வம் கொண்ட ஏகாதிபதியையும், பெரும் வேள்விகள் செய்பவனையும், நன்மக்களைக் காப்பாற்றுபவனையும் கண்டனர்.(5)

யுதிஷ்டிரனின் செல்வாக்கால், பூமியின் அனைத்து ஏகாதிபதிகளின் நற்பேறும் அவனிடம் நிலைத்ததால், மக்களின் இதயம் பரமாத்மாவுடன் தியானத்தில் நிலைத்திருந்தது. எனவே, சுற்றி சுற்றி எங்கிலும் அறம் வளரத் தொடங்கியது.(6) தனது தம்பிகளின் துணையுடனும் அவர்களுக்கு மத்தியிலும், மன்னன் {யுதிஷ்டிரன்}, நான்கு வேதங்களால் தாங்கப்பட்ட வேள்வி போலப் பிரகாசித்தான்.(7) பிருஹஸ்பதியைப் போன்று இருந்த கற்ற பிராமணர்கள், படைப்புத் தலைவனுக்காகக் {பிரம்மனுக்காக} காத்திருக்கும் தேவர்களைப் போலத் தனஞ்சயனின் {அர்ஜுனன்} தலைமையில் அந்த ஏகாதிபதிக்காக {யுதிஷ்டிரனுக்காக}, காத்திருந்தனர்.(8) களங்கமற்ற முழு நிலவைப் போல இருந்த யுதிஷ்டிரனைக் கண்டு அன்பின் மிகுதியால் அனைத்து மக்களின் கண்களும் இதயங்களும் சமமானப் பெரு மகிழ்வு கொண்டன.(9) அவன் தங்கள் மன்னன் என்பதற்காக மட்டுமல்லாமல் அவனிடம் கொண்ட பெரும் அன்பினாலும் மக்கள் அவனிடம் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த மன்னனும் {யுதிஷ்டிரன்} எப்போதும் தனது குடிகளுக்கு ஏற்புடையதையே செய்தான்.(10)

இன்சொல்லும் பெரும் புத்திசாலித்தனமும் கொண்ட யுதிஷ்டிரன், முறையற்றதையோ, உண்மையற்றதையோ, தாங்கமுடியாததையோ, ஏற்கத்தகாததையோ ஒரு போதும் செய்வில்லை.(11) பெரும் சக்தியுடன் கூடிய அந்தப் பாரதக் குலத்தின் ஏகாதிபதிகளில் சிறந்தவன் {யுதிஷ்டிரன்}, மற்றவர்களின் நலனைத் தனது நலன் போலக் கருதி மகிழ்ச்சியுடன் தனது நாட்களைக் கடத்தினான்.(12) அவனது {யுதிஷ்டிரனது} தம்பிகளும் தங்களது சக்தியால் மற்ற மன்னர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து, அமைதியைக் கெடுக்க எந்த எதிரியும் இல்லாது இருந்தார்கள்.(13)

சில நாள் கழித்து, கிருஷ்ணனிடம் பேசிய பீபத்சு {அர்ஜுனன்}, "கோடை நாட்கள் வந்துவிட்டன. எனவே, ஓ கிருஷ்ணா, நாம் யமுனைக் கரைக்கு செல்வோம்.(14) ஓ மதுவைக் கொன்றவனே {மதுசூதனா}, ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நண்பர்களுடன் அங்கு விளையாடிவிட்டு, மாலையில் இங்குத் திரும்பி வருவோம்" என்றான்.(15)

அதன் பேரில் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "ஓ குந்தியின் மகனே {அர்ஜுனனே}, அதுதான் எனது விருப்பமும்கூட. ஓ பார்த்தா, நண்பர்கள் சூழ மனத்திற்கு நிறைவாக நாம் நீர்விளையாடித் திரும்புவோம்" என்றான் {கிருஷ்ணன்}".(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ பாரதா {ஜனமேஜயா}, ஒருவருக்கொருவர் ஆலோசனை செய்த பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்}, யுதிஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, நண்பர்களுடன் சேர்ந்து {யமுனையை நோக்கிப்} புறப்பட்டுச் சென்றனர்.(17) {யமுனையின் கரையில்} உயர்ந்த மரங்களுடன் கூடிய ஓர் அற்புதமான இடத்தை அடைந்தனர். பல உயர்ந்த மாளிகைகளுடன் கூடிய அந்த இடம் தேவர்களின் நகரைப் போல விளங்கியது.(18) அந்த இடத்தில் கிருஷ்ணனும் பார்த்தனும் {அர்ஜுனனும்}, எண்ணற்ற விலை உயர்ந்த உணவு வகைகளையும், மது வகைகளையும், மற்றும் இன்பத்திற்கான அனைத்துப் பொருட்களையும், மலர்வளையங்களையும், நறுமணப் பொருட்களையும் குவித்தனர். தூயக் கதிர்கள் கொண்ட ரத்தினங்களால் அந்தப்புரங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த அறைகளுக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் இன்பமாக விளையாடினர்.(19,20)

அந்த விருந்தில் கலந்து கொண்ட பெண்கள் பருத்து, உருண்டிருந்த இடைகளுடனும், பருத்த கனமான முலைகளுடனும், அழகான கண்களுடனும், மதுவுண்டதால் தடுமாற்றம் கொண்ட தளர்ந்த நடையுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.(21) சில பெண்கள் தங்கள் விருப்பப்படிக் கானகத்திலும், சிலர் நீரிலும், சிலர் அறைகளிலும் பார்த்தன் {அர்ஜுனன்}, கோவிந்தன் {கிருஷ்ணன்} ஆகியோர் வழிகாட்டுதல் மற்றும் ஆணையின்படி விளையாடிக் கொண்டிருந்தனர்.(22) மதுவின் மிகையான மயக்கத்தில் இருந்த திரௌபதியும், சுபத்திரையும் அங்கே விளையாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு விலையுயர்ந்த ஆடைகளையும், ஆபரணங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தனர்.(23) அப்படி வாங்கிய மங்கையரில் சிலர் ஆனந்தக் கூத்தாடினர், சிலர் பாட ஆரம்பித்தனர், சிலர் சிரித்துக் கொண்டு கேலி பேசத் தொடங்கினர். சிலர் இன்னும் அருமையான மதுவகைகளைக் குடிக்கத் தொடங்கினர்.(24) சிலர் ஒருவர் முன்னேற்றத்தை ஒருவர் தடுத்து, ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் தொடங்கினர். சிலர் ஒருவரோடு ஒருவர் கமுக்கம் பேசினர்.(25)

அந்த மாளிகைகளும், கானகமும், புல்லாங்குழலின் இசையாலும், வீணை மற்றும் மிருதங்கங்களின் இசையாலும் நிறைந்து வளமையாகக் காட்சியளித்தன.(26) இப்படிப்பட்ட சூழ்நிலையில் அர்ஜுனனும் வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அனைவரும் இருக்கும் அந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர்.(27) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, எதிரி நகரங்களை அடக்குபவனான அர்ஜுனனும் அந்த உயர் ஆன்மக் கிருஷ்ணனும் இரு விலை உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.(28) அப்படி அமர்ந்த வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மகிழ்ச்சியுடன் கடந்த காலச் சாதனைகளைக் குறித்தும் தங்கள் வீரத்தைக் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் பேசிக் கொண்டிருந்தனர்.(29)

அப்படி மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வாசுதேவனையும், தனஞ்சயனையும் நோக்கி வானுலகில் இருந்து வந்த அசுவினிகளைப் போல ஒரு குறிப்பிட்ட பிராமணன் வந்தான். அப்படி வந்த பிராமணன் ஆச்சா மரத்தைப் போல உயரமாக வளர்ந்தவனாக இருந்தான். அவனது நிறம் உருக்கிய தங்கத்தைப் போல இருந்தது. அவனுடைய தாடி வெளிர் மஞ்சள் நிறத்துடன் முனைகளில் பச்சை நிறத்துடன் இருந்தது. அவன் தனது உயரத்திற்கேற்ற அகலம் கொண்ட உடலைப் பெற்றிருந்தான்.(31) சடா முடியும், மரவுரியும் தரித்துக் காலைச் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையும், சிவந்த நிறத்தையும் கொண்டிருந்த அவன் காண்பதற்கு எரியும் நெருப்பைப் போலத் தோன்றினான்.(32) பிரகாசத்துடன் இருக்கும் அந்த பிராமணர்களில் முதன்மையானவனைக் கண்ட அர்ஜுனனும் வாசுதேவனும் {கிருஷ்ணனும்} தங்கள் ஆசனங்களை விட்டு விரைவாக எழுந்து, அவனை அணுகி, அவனது உத்தரவுக்காகக் காத்திருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(33)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்