Friday, September 06, 2013

மந்தபாலர் - ஜரிதை, லபிதை! - ஆதிபர்வம் பகுதி 231

Mandapala - Jarita and Labita! | Adi Parva - Section 231 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : மந்தபாலர் எனும் முனிவர் கடும் தவம் இருந்து, மேலுலகம் செல்வது; அவருக்கு சந்ததி இல்லாததால், சில இடங்களில் அவருக்கு அனுமதி இல்லாதிருப்பது; சந்ததியைப் பெருக்க அவர் சாரங்கப் பறவையாக மாறி ஜரிதையுடன் கூடுவது; பிறகு லபிதை என்பவளுடன் ஊர்சுற்றுவது; அக்னி காண்டவ வனத்தை எரிக்கப்போகிறான் என்பதை அறிந்து, தனது பிள்ளைகளை ஒன்றும் செய்யக்கூடாது என்று வேண்டுவது...

ஜனமேஜயன், "ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, அப்படி அந்தக் கானகம் எரிக்கப்பட்ட போது, சாரங்கம் என்று அழைக்கப்பட்ட பறவைகளை ஏன் அக்னி உட்கொள்ளவில்லை?(1) இது கானகத்தில் எப்போது நடந்தது? ஓ பிராமணரே! மய தானவனும், அசுவசேனனும் கொல்லப்படாதது எதற்காக என்று நீர் சொல்லிவிட்டீர்.  ஆனால், சாரங்கங்கள் தப்புவதற்கு என்ன காரணம் என்பதை நீர் சொல்லவில்லை.(2) ஓ பிராமணரே, அந்தப் பறவைகள் தப்பியது எனக்கு அற்புதமாகத் தோன்றுகிறது. அந்தக் கொடுமையான காட்டுத்தீயில் அவை ஏன் அழியவில்லை என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(3)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ எதிரிகளைக் கொல்பவனே {ஜனமேஜயா}, அந்தக் காட்டுத்தீயின் போது அக்னி ஏன் அந்தப் பறவைகள் எரிக்கவில்லை என்பதை நான் உனக்குச் சொல்கிறேன்.(4) ஓ மன்னா {ஜனமேஜயா}, மந்தபாலர் என்ற பெயரில் ஒரு பெரும் முனிவர் இருந்தார். அவர் சாத்திரங்களை அறிந்தவராகவும், கடும் தவம் மேற்கொள்பவராகவும், தவத்திற்குத் தம்மை அர்ப்பணித்தவராகவும், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவராகவும் இருந்தார்.(5) தங்கள் உயிர்நீரை மேல்நோக்கி எழ வைத்த முனிவர்களின் வழியைப் பின்பற்றிய அந்தத் துறவி, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, தனது அனைத்துப் புலன்களையும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்து, கல்விக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.(6) தவத்தின் கரையை அடைந்த பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா}, அவர் தனது மனித வடிவத்தை விட்டு, பித்ருக்களின் உலகத்தை அடைந்தார். ஆனால், அங்கே தமது ஆன்மச் செயல்களுக்கான கனியை {பலனை} அடைவதில் அவர் தோல்வி கண்டார்.(7)

கால தேவனைச் சுற்றி அமர்ந்திருந்த தேவர்களிடம் இதற்கான காரணத்தை அறிவதற்காக,(8) "எனது தவத்தகுதிகளால் அடைந்துவிட்டதாக நான் கருதிய இந்தப் பகுதிகள் அனைத்தும் ஏன் என்னால் அடைய முடியாதனவாக இருக்கின்றன. நான் இந்தப் பகுதிகளை அடையக்கூடிய அளவிற்கு அறச் செயல்கள் செய்யவில்லையா?(9) ஓ விண்ணுலகவாசிகளே, ஏன் இந்தப் பகுதிகள் எனக்கு எதிராக மூடப்பட்டிருக்கின்றன! எனது ஆன்ம தவத்தின் கனிகளைப் பெறுவதற்காக நீங்கள் சொன்னதை நான் செய்வேன்" என்று கேட்டார் {மந்தபாலர்}.(10)

அதற்குத் தேவர்கள், "ஓ பிராமணரே {மந்தபாலரே}, மனிதர்கள் பிறக்கும் போதே எந்தச் செயலுக்காக, எந்தப் பொருளுக்காகக் கடன்காரர்களாகப் பிறக்கிறார்கள் என்பதைச் சொல்கிறோம், கேட்பீராக. அறச்சடங்குகளும், விதிப்படியான கல்வியும், மக்கட்பேறினாலும் மனிதர்கள் பிறவிக் கடனுடன் பிறக்கிறார்கள். அதில் ஐயமில்லை.(11)  வேள்விகளாலும், தவத்துறவாலும், சந்ததியாலும் {மக்கட்செல்வம்} அந்தக் கடன்கள் அடைபடும். நீரோ ஒரு தவத் துறவி, வேள்விகளும் செய்திருக்கிறீர். ஆனால், உமக்குச் சந்ததி கிடையாதே.(12) உமக்குச் சந்ததி இல்லாததாலேயே உமக்கு எதிராக இப்பகுதிகள் மூடப்பட்டிருக்கின்றன. எனவே, பிள்ளைகளைப் பெறுவீராக. அப்படிச் செய்தால், நீர் பல்வேறு இன்பநிலைகளைக் கொண்ட பகுதிகளை அனுபவிப்பீர்.(13) ஒரு மகனே தனது தந்தையைப் புத் எனும் நரகத்தில் இருந்து மீட்கிறான் என்று வேதங்கள் சொல்கின்றன. எனவே, ஓ பிராமணர்களில் சிறந்தவரே {மந்தபாலரே}, சந்ததியைப் பெற முயற்சி செய்வீராக" என்றனர்".(14)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "விண்ணுலகவாசிகளின் இந்த வார்த்தைகளைக் கேட்ட மந்தபாலர், குறுகிய காலத்தில் எப்படி நிறைந்த மக்கள் செல்வத்தைப் பெறுவது என்பது குறித்துச் சிந்தித்தார்.(15) சிறிது நேரம் சிந்தித்த அந்த முனிவர், படைப்புகளில் பறவைகளே விரைவாக இனவிருத்தி செய்பவை என்பதைக் கண்டார். உடனே அவர் ஒரு சாரங்கப் பறவையாக மாறி, அதே இனத்தில் ஜரிதை என்ற பெயர் கொண்ட ஒரு பெண் பறவையையுடன் உறவு வைத்துக் கொண்டார்.(16) அவளிடம் அவர் நான்கு மகன்களைப் பெற்றார். அவர்கள் நால்வரும் வேதம் உரைப்பவர்களாக ஆனார்கள். அவர்கள் முட்டைகளில் இருக்கும்போதே, அந்த நான்கு மகன்களையும் அவர்களின் தாயையும் கானகத்தில் விட்டுவிட்டு லபிதையிடம் (லபிதை என்ற பெயரில் அழைக்கப்பட்ட மற்றொரு மனைவியிடம்) சென்றுவிட்டார்.(17,18) ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த மேன்மை மிகுந்த முனிவர் லபிதையின் துணை நாடிச் சென்று விட்டபிறகு, தனது சந்ததிகளின் மீது அன்பு கொண்ட ஜரிதை மிகவும் சிந்திக்கலானாள். தந்தையால் அந்தக் கானகத்தில் அவர்கள் கைவிடப்பட்டாலும், ஜரிதையின் முட்டையிலிருந்த அந்த முனிவரின் {மந்தபாலரின்} குழந்தைகளைக் கைவிடாமல் அன்புடன் காத்துவந்தாள். தனது இனத்துக்கே உரிய தாய்ப்பாசத்துன் அவள் {ஜரிதை}, அந்தப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வந்தாள்.(19,20)

சில காலம் கழித்து, லபிதையுடன் உலவிக் கொண்டிருந்த அந்த முனிவர் {மந்தபாலர்} காண்டவ வனத்தை எரிக்க அதை நோக்கி வரும் அக்னியைக் கண்டார்.(21) அந்த பிராமணர் மந்தபாலர், அக்னியின் நோக்கத்தை அறிந்து, குழந்தைகளாய் இருந்த தனது பிள்ளைகளையும் நினைத்துப் பார்த்து, பெரும் சக்தி கொண்ட அண்டத்தின் பிரதிநிதியான, அந்த நெருப்பு தெய்வத்தை மனநிறைவு கொள்ளச் செய்தார்.(22) இறகு முளைக்காத தனது பிள்ளைகளுக்கு வார்த்தை சொல்ல விரும்பிய அவர் {மந்தபாலர்} அக்னியிடம், "ஓ அக்னியே, நீயே இந்த உலகங்களின் வாயாவாய்! நீயே வேள்வியில் ஊற்றப்படும் புனித நெய்யைச் சுமந்து செல்பவன்! ஓ (பாவங்களை} சுத்தப்படுத்துபவனே, நீயே அனைத்து உயிர்களின் கூட்டுக்குள்ளும் வடிவமற்றவனாக {அரூபமாக} இருக்கிறாய்.(23) கல்விமான்கள் மூன்று தன்மைகள் படைத்த ஒருவனாக உன்னைச் சொல்கிறார்கள். ஞானமுள்ளவர்கள் உன்னை எட்டு (வாய்கள்) நிலைகள் கொண்டவனாக நினைத்து உனது முன்பிலேயே வேள்விகளைச் செய்கிறார்கள்.(24) பெரும் முனிவர்கள், இந்த அண்டமே உன்னால் படைக்கப்பட்டது என்று தீர்மானிக்கிறார்கள். ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீ இன்றி இந்த மொத்த அண்டமும் ஒரே நாளில் அழிந்துவிடும்.(25) தங்கள் மனைவியருடனும், பிள்ளைகளுடனும் உன்னை வணங்கும் பிராமணர்கள் தங்கள் நற்செயல்களின் மூலம் நித்தியமான நிலைத்த பகுதிகளை வென்றடைகிறார்கள்.(26) ஓ அக்னியே, கல்விமான்கள் உன்னை விண்ணில் மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் எனச் சொல்கிறார்கள். ஓ அக்னியே, உன்னால் உமிழப்படும் சுடர்கள் அனைத்து உயிர்களையும் உட்கொள்கின்றன {எரிக்கின்றன}.(27) ஓ பெரும் பிரகாசம் கொண்டவனே, இந்த அண்டமே உன்னால் படைக்கப்பட்டது. வேதங்கள் உனது வார்த்தையே. அனைத்து உயிர்களும், அசைவனவும், அசையாதனவும், நம்பி இருப்பது உன்னையே.(28) நீரானது முதன்மையாக நம்பி இருப்பது உன்னையே. அண்டம் நம்பியிருப்பதும் உன்னையே. காணிக்கைகளாகக் கொடுக்கப்படும் தூய்மையாக்கப்பட்ட நெய்யும், உணவுப் படையலையும் பித்ருகளுக்குக் கொடுப்பவன் நீயே.(29) ஓ தேவா, உட்கொள்பவன் நீயே, படைப்பவன் நீயே, பிருஹஸ்பதி நீயே, அசுவினி இரட்டையர்கள் நீயே; சூரியன் நீயே, சோமன் {சந்திரன்} நீயே, வாயுவும் நீயே" என்று வேண்டினார்".(30)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ ஏகாதிபதி! இப்படி மந்தபாலரால் துதிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அக்னி அந்த அளக்கமுடியாத சக்தி கொண்ட முனிவரிடம் மனநிறைவு கொண்டு,(31) மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவரிடம், "நான் உமக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். அப்போது குவிந்த கரங்களுடன் கூடிய மந்தபாலர் அந்தத் தூய்மையாக்கப்பட்ட நெய்யைச் சுமப்பவனிடம் {அக்னியிடம்}, "நீ காண்டவ வனத்தை எரிக்கும்போது, எனது பிள்ளைகளை தப்பவிடுவாயாக" என்று கேட்டார்.(32) அதற்கு அந்தச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைச் சுமப்பவன் {அக்னி}, "அப்படியே ஆகட்டும்" என்றான். எனவே, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் காண்டவ வனத்தை எரித்த போது மந்தபாலரின் பிள்ளைகளை எரிக்கவில்லை".(33)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்