Saturday, September 07, 2013

குஞ்சுகளிடம் இருந்து விலகிய அக்னி! - ஆதிபர்வம் பகுதி 234

Agni; deviated from the young birds! | Adi Parva - Section 234 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : சாரங்கப் பறவைக் குஞ்சுகள் அக்னியிடம் வேண்டுவது; அதில் இளையவனான துரோணனின் பாடலில் அக்னி மயங்குவது; அப்பறவைகளை எரிக்காமல் விடுவது…

ஜரிதாரி, "ஞானமுள்ள மனிதன் மரணத்தைக் குறித்த விழிப்புடன் இருப்பான். எனவே, அவன் மரணத்தைச் சந்திக்கும் அந்த நேரத்தில் எந்தத் துயரமும் கொள்ளமாட்டான்.(1) ஆனால் குழம்பிய ஆன்மா, விழிப்புடன் இருப்பதில்லை. எனவே அவன் மரணத்தைச் சந்திக்கும்போது, வலியையும், துயரத்தையும் உணர்ந்து, முக்தி பெறுவதில்லை" என்றான்.(2)

இரண்டாவது சகோதரனான சாரிசிரிகன், "நீ அமைதியும் புத்திசாலித்தனமும் கொண்டவன். நமது உயிருக்கு அச்சுறுத்தலான சமயம் வந்திருக்கிறது. பலரில் ஒருவரே ஞானமுள்ளவனாகவும் வீரமுள்ளவனாகவும் வரமுடியும். இதில் ஐயமில்லை" என்றான்.(3)

மூன்றாவது சகோதரனான ஸ்தம்பமித்ரன், "மூத்த சகோதரனே காப்பாளன் என்று அழைக்கப்படுகிறான். மூத்த சகோதரனே (இளையவர்களை) ஆபத்திலிருந்து மீட்பவன். மூத்தவனே அவர்களைக் காப்பதில் தவறினால், இளையவர்களால் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டான்.(4)

நான்காவதும் மிக இளையவனுமான துரோணன், "ஏழு நாவுகளையும் ஏழு வாய்களையும் கொண்ட கொடும் நெருப்புத் தேவன் {அக்னி}, சுடர் விட்டு எரிந்து, தன் வழியில் எதிர்ப்படும் அனைத்தையும் நக்கிக் கொண்டு, நமது வசிப்பிடத்தை நோக்கி வருகிறான்" என்றான்".(5)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "தங்களுக்குள் இப்படிப் பேசிக் கொண்ட மந்தபாலரின் மகன்கள் ஒவ்வொருவரும் அக்னியிடம் அர்ப்பணிப்புடன் கூடிய துதியைப் பாடினார்கள். ஓ ஏகாதிபதியே அவர்களின் பாடலை நான் உரைக்கிறேன் கேட்பாயாக.(6)

ஜரிதாரி, "ஓ நெருப்பே, காற்றின் ஆன்மா நீயே, பூமியின் தாவரங்களுக்கு உடலாக இருப்பவன் நீயே, ஓ சுக்ரா, உனக்கு நீர் {தண்ணீர்} காரணம் அதுபோல நீருக்கு காரணன் நீயே.(7) ஓ பெரும் சக்தி கொண்டவனே, உனது சுடர்கள் சூரியனின் கதிர்களைப் போலத் தங்களைப் மேலும் கீழுமாக, முன்பும் பின்புமாக அனைத்துப் பக்கங்களிலும் பெருக்கிக் கொள்கின்றன" என்றான்.(8)

சாரிசிரிகன், "ஓ புகையைக் கொடியாகக் கொண்ட தேவனே {அக்னியே}, எங்கள் தாயை {ஜரிதையை} காணவில்லை, நாங்கள் எங்கள் தந்தையையும் அறிந்ததில்லை. எங்களுக்குச் சிறகுகள் இன்னும் முளைக்கவில்லை. எங்களைக் காக்க யாருமில்லை. எனவே, ஓ அக்னியே, நாங்கள் குழந்தைகளாக இருப்பதால் எங்களைக் காப்பாயாக.(9)  ஓ அக்னியே, துயரத்தில் இருக்கும் எங்களை, உனது அதிர்ஷ்டமான உருவத்தாலும், உனது ஏழு சுடர்களாலும் காப்பாற்று! நாங்கள் உன்னிடம் பாதுகாப்பை நாடுகிறோம்.(10) ஓ அக்னி (அண்டத்துக்கு) வெப்பத்தைக் கொடுப்பவன் நீயே. ஓ தலைவா, உன்னைத்தவிர வேறு யாரும் சூரியனின் கதிர்களுக்கு வெப்பத்தைக் கொடுக்க முடியாது. சிறுவர்களாகவும் முனிவர்களாகவும் இருக்கும் எங்களைக் காப்பாற்றுவாயாக. ஓ ஹவ்யவாஹனா  (வேள்வி நெய்யைச் சுமப்பவனே), வேறு வழியில் சென்று மனநிறைவு அடைவாயாக" என்றான்.(11)

ஸ்தம்பமித்ரன், "ஓ அக்னியே, அனைத்தும் நீயே. இந்த முழு அண்டத்தையும் படைத்தவன் நீயே. அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்பவன் நீயே. முழு அண்டத்தையும் தாங்கி நிற்பவன் நீயே.(12) வேள்வி நெய்யைச் சுமந்து செல்பவன் நீயே. அந்த அற்புதமான வேள்வி நெய்யும் நீயே. ஞானமுள்ளோரால் ஒருவனாகவும் (காரணகர்த்தாவாகவும்), பலராகவும் (விளைவுகளாகவும்) அறியப்படுபவன்.(13) மூன்று உலகங்களையும் படைத்தவன் நீயே, நேரம் வரும்போது உன்னைப் பெருக்கிக் கொண்டு அவற்றை அழிப்பவன் நீயே. உற்பத்திக்குக் காரணன் நீயே, அண்டத்தில் கரைந்திருக்கும் சாறு நீயே" என்றான்.(14)

துரோணன், "ஓ அண்டத்தின் தலைவா, பலத்தால் வளர்ந்து, உடல்களில் தங்கி, உயிரினங்கள் உண்ணும் உணவை செரிக்க வைப்பவன் நீயே. எனவே அனைத்தும் உன்னுள்ளேயே நிலைத்திருக்கின்றன.(15) ஓ சுக்ரா, உனது வாயிலிருந்து வேதங்கள் வெளிவந்தன. சூரியனாக இருந்து உலகத்தின் நீரையும், உலகம் விளைவிக்கும் அனைத்து நீர் ஆதாரங்களையும் குடித்துக் கொண்டிருப்பவன் நீயே. அப்படிக் குடித்து, அதை மழையாகக் கொடுப்பவன் நீயே. மழையாய் வந்து அனைத்தையும் வளரச் செய்பவன் நீயே.(16) ஓ சுக்ரா, இந்தச் செடிகளும் அடர்த்தியான இலைகள் கொண்ட கொடிகளும் உன்னிடம் இருந்தே உண்டாகின. குளங்களும், தடாகங்களும், பெருங்கடலும் உன்னிடம் இருந்தே அருளப்பட்டன.(17) ஓ கடும் கதிர்கள் கொண்டவனே, எங்களது இந்த உடல் வருணனை {நீர்க்கடவுள்} நம்பி இருக்கிறது. எங்களால் உனது வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. எனவே, எங்களுக்கு நற்பேற்றைத்தரும் காப்பாளனாக இருப்பாயாக. எங்களை அழித்துவிடாதே.(18) ஓ தாமிர நிறக் கண்களை உடையவனே, சிவந்த கழுத்துக் கொண்டவனே, நடக்கும் பாதையைக் கருப்பு நிறத்தால் குறிப்பவனே, தனது கரையில் இருக்கும் வீட்டை சமுத்திரம் காப்பது போல, வேறு திசைக்குத் திரும்பி எங்களை நீ காப்பாயாக" என்றான்".(19)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிரம்மத்தை உச்சரிப்பவனான துரோணனால் இப்படிக் கேட்டக்கொள்ளப்பட்ட அக்னி, தான் கேட்டதில் {புகழப்பட்டதில்} பெரும் மனநிறைவு கொண்டு, தான் மந்தபாலருக்கு அளித்த உறுதியையும் நினைவு கூர்ந்து அவனிடம்,(20) "ஓ துரோணரே! நீர் முனிவர். நீர் சொன்னது அனைத்தும் பிரம்மம் (வேத உண்மை). நான் உங்களை மகிழ்ச்சியடையச் செய்வேன். அஞ்சாதீர்.(21) உண்மையில், நான் இக்கானகத்தை உட்கொள்ளும் போது, தனது மகன்களைக் காக்க வேண்டும் என்று மந்தபாலர் என்னிடம் வேண்டினார். அவர் {மந்தபாலர்} என்னிடம் பேசிய பேச்சுகளும், உமது பேச்சும் எனக்கு நிறைவை அளித்தன. நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வீராக. ஓ பிராமணர்களில் சிறந்தவரே, நான் உமது துதியால் பெரும் மனநிறைவு அடைந்தேன். ஓ பிராமணரே! நீர் அருளப்பட்டிருப்பீராக" என்றான் {அக்னி}.(22,23)

துரோணன், "ஓ சுக்ரா, இந்தப் பூனைகள் தினமும் எங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றன. ஓ ஹுதாசனா; அவற்றின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்த்து அவைகளை உட்கொள்வாயாக" என்றான்".(24)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அக்னி அந்தச் சாரங்கப் பறவைகளிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுத் தனது நோக்கத்தைத் தெரிவித்தான். மேலும், ஓ ஜனமேஜயா, அவன் பலத்தால் வளர்ந்து, அந்தக் காண்டவ வனத்தை மேலும் எரிக்கத் தொடங்கினான்".(25)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்