Monday, September 16, 2013

பிரம்ம சபை! - சபாபர்வம் பகுதி 11

The Sabha of Brahma! | Sabha Parva - Section 11 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : பிரம்மாவின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது...

நாரதர் சொன்னார், "ஓ குழந்தாய் {யுதிஷ்டிரா}, யாராலும் விவரிக்க முடியாத பெருந்தகப்பனின் சபா மண்டபத்தைப் பற்றி அப்படியே சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) பழங்காலத்தில், கிருத யுகத்தில் (பொற்காலத்தில்), ஓ மன்னா {யுதிஷ்டிரா}, சிறப்புமிக்க தேவனான ஆதித்தியன் {சூரியன்} (ஒரு முறை) விண்ணுலகில் இருந்து மனிதர்களின் மண்ணுலகுக்கு இறங்கி வந்தான்.(2) சுயம்புவான பிரம்மனின் சபா மண்டபத்தை ஏற்கனவே கண்டிருந்த ஆதித்தியன் பூமியில் மனித உருவோடு மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்தான். அச்சந்தர்ப்பத்தில், ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, அளவிடமுடியாத, பொருளாலாகாத, விவரிக்க முடியாத, உருவம் மற்றும் வடிவம் குறித்து சொல்ல முடியாத, பிரகாசத்தால் அனைத்துயிர்களின் இதயங்களையும் மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் சபையான பெருந்தகப்பனின் தெய்வீக சபையைப் பற்றி அந்தப் பகலின் தேவன் {சூரியன்} என்னிடம் பேசினான்.(3,4)

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்தச் சபையின் நற்தகுதிகளைக் கேட்டு, ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, நான் அதைக் காண விரும்பினேன். பிறகு நான் ஆதித்தியனிடம் {சூரியனிடம்},(5) "ஓ மேன்மையானவனே {சூரியவனே}, நான் பெருந்தகப்பனின் {பிரம்மனின்} புனிதமான சபையைக் காண விரும்புகிறேன். ஓ ஒளியின் தலைவனே {சூரியனே}, ஓ மேன்மையானவனே எனக்குச் சொல். எந்த ஆன்ம நோன்புகளால், அல்லது எந்த செயல்களால் அல்லது எந்த வசீகரத்தால் அல்லது எந்த சடங்குகளால், நான் அந்த அற்புதமான பாவங்களை விலக்கும் சபையைக் காண முடியும்?" என்று கேட்டேன்.(6,7)

எனது வார்த்தைகளைக் கேட்ட பகலின் தேவனான ஆதித்தியன் {சூரியன்}, ஆயிரம் கதிர்களைக் கொண்ட அந்தத்தேவன் {சூரியன்}, ஓ பாரத குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, இப்படி பதிலளித்தான், "மனத்தைத் தியானத்தில் ஒருமுகப்படுத்தி, பிரம்மனை நோக்கி ஆயிரம் ஆண்டுகள் தவம் இருக்க வேண்டும்." என்றான். நான் இமய மலைச்சாரலுக்குச் சென்று, அந்தத் தவத்தைச் செய்தேன்.(8,9) தவத்தின் முடிவில் அந்த மேன்மையான பாவங்களற்ற பெரும் சக்தி கொண்ட களைப்பறியா தேவனான சூரியன், பிரம்மனின் சபைக்கு என்னைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.(10)

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாத வகையில் இருந்தது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு வடிவை ஏற்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது.(11) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், வடிவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை.(12) அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும்.(13) அந்த சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனதாகும். அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது.(14-16) விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன் {பிரம்மன்}, மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.

தக்ஷன், பிரசேதஸ், புலஹர், மரீசி, குரு கசியபர்,(17,18) பிருகு, அத்திரி, வசிஷ்டர், கௌதமர், அங்கிரஸ், புலஸ்தியர், கிரது, பிரஹலாதன், கர்த்தமர் ஆகிய {பதினான்கு} பிரஜாபதிகளும் {சிருஷ்டிகர்த்தர்களும்}, அதர்வண வேதத்தின் அங்கிரஸ் {அதர்வாங்கிரஸர்}, வாலகில்லியர், மரீசிபர், புத்திகூர்மை, விண்வெளி, ஞானம், காற்று, வெப்பம், நீர், பூமி,(19,20) ஒலி, தீண்டல் {தொடு உணர்ச்சி}, வடிவம், சுவை, மணம், இயற்கையும் அதன் வகைகளும், உலகின் அடிப்படை மற்றும் முக்கிய காரணங்கள் ஆகிய அனைத்தும் அங்கே தலைவன் பிரம்மனின் மாளிகையிலேயே வசிக்கின்றன.(21)

பெரும் சக்தி படைத்த அகஸ்தியர், பெரும் ஆன்ம சக்தி படைத்த மார்க்கண்டேயர், ஜமதக்னி, பரத்வாஜர், சம்வர்த்தர், சியவனர், மேன்மையான துர்வாசர், அறம்சார்ந்த ரிஷ்யசிருங்கர், பெரும் ஆன்மத் தகுதிகள் சிறப்புமிக்க சனத்குமாரர்கள், யோககுருக்களான அசிதர் மற்றும் தேவலர், உண்மையை அறிந்த ஜைகீஷவ்யர், ரிஷியர், அஜிதசத்ரு, பெரும் சக்தி கொண்ட மணி,(22-24) எட்டு கிளைகளுடன் கூடிய குணப்படுத்தும் சிகிச்சைகளின் அறிவியல் ஆகியவை வடிவம் கொண்டும், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, நட்சத்திரங்களுடனும் நட்சத்திர இணைப்புகளுடனும் கூடிய சந்திரன், தனது அனைத்து கதிர்களுடன் கூடிய ஆதித்தியன் {சூரியன்},(25) காற்றுகள், வேள்விகள், {வேள்விகளில்} நோக்கங்களின் தீர்மானங்கள், முக்கிய கொள்கைகள், ஆகிய சிறப்பு மிகுந்தவையும், நோன்பு நோற்கும் உயிர்களும் உருவம் கொண்டு அங்கே பிரம்மனின் சபையில் இன்னும் பலருடன் கூடி அவரைச் சேவிக்க இருக்கின்றனர். செல்வம், அறம், ஆசை, இன்பம், வெறுப்பு, துறவு, அமைதி ஆகியவை அந்தத் தலைமை தேவனின் அரண்மனையில் காத்திருக்கின்றன.(26,27)

கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களின் இருபது {இருபத்தேழு}[1] இனங்களும் மற்றும் அவர்களின் ஏழு இனங்களும் {மொத்தம் இருபத்தேழு இனங்கள்}, லோகபாலர்கள் (பல பகுதிகளைக் காக்கும் தலைவர்கள்),(28) சுக்ரன், பிருஹஸ்பதி, புதன், அங்காரகன் (மங்களன் {செவ்வாய்}), சனி, ராகு, மேலும் பல கிரகங்களும், (சாம வேதத்தின்) மந்திரங்களும், (அதே வேதத்தின்) சிறப்பு {ரதந்திர} மந்திரங்களும், ஹரிமத் {ஹரிமான்} மற்றும் வசுமத் {வசுமான்} (சடங்குகள்), இந்திரனுடன் கூடிய ஆதித்தியர்கள், அக்னிசோமன், இந்திராக்னி என்ற இரு அக்னிகள் {அக்னீஷோமா, மித்ராவருணா முதலிய இரட்டை தேவர்கள்}, {ஏழு} மருத்துகள்,(29,30) விஸ்வகர்மன், வசுக்கள், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, பித்ருக்கள், அனைத்து வகையான புனிதமான படையல்கள் {ஹோமத்திரவியங்கள்}, ரிக், சாம, யஜுர், மற்றும் அதர்வண ஆகிய நான்கு வேதங்கள், கல்வி அறிவியல்கள்,(31,32) வரலாறுகள் மற்றும் அனைத்து சிறு பிரிவிலான கல்விகள், வேதங்களில் பல்வேறு கிளைகள், கோள்கள், வேள்விகள், சோமன் {சந்திரன்}, அனைத்து தேவர்கள்,(33) சாவித்ரி {காயத்ரி}, ஏழு வகையான செய்யுட்கள் {வாக்குகள்}, புத்தி, பொறுமை, நினைவு {ஞாபகம்}, ஞானம், நுண்ணறிவு, புகழ், மன்னிக்கும்தன்மை,(34) சாம வேதங்களின் பாடல்கள் {சுலோகங்கள்}, பொதுவான பாடல்களின் {சுலோகங்களின்} அறிவியல், பல்வேறு உரைகளும் பாடல்களும், பல்வேறு உரைகளுடன் கூடிய விவாதங்கள் ஆகியவை அனைத்தும் உருவம் கொண்டு, ஓ மன்னா, பல தரப்பட்ட அறங்களும், செய்யுட்களும், கதைகளும், சுருக்கப்பட்ட விரிவுரைகளும் ஆகிய அனைத்தும் அந்தத் தலைமைத் தேவனின் {பிரம்மனின்} சபையில் காத்திருக்கின்றன.(35,36)

[1] கும்பகோணம் மற்றும் மன்மதநாததத்தர் பதிப்புகளில் இந்த எண்ணிக்கை இருபத்தேழு என்றே இருக்கிறது.

க்ஷணம் {பொழுது}, லவங்கள், முகூர்த்தங்கள், பகல், இரவு, பக்ஷங்கள் {தேய்பிறை, வளர்பிறை நாட்கள்}, மாதங்கள், ஆறு பருவகாலங்கள் {ருதுக்கள்}, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, வருடங்கள், யுகங்கள், நான்கு வகையான பகல்களும் இரவுகளும் (மனிதர்கள், பித்ருக்கள், தேவர்கள், பிரம்மா ஆகியோருக்கு தனித்தனி பகல்களும் இரவுகளும் இருக்கின்றன) நித்தியமானவை, அழிவில்லாதவை, தேயாதவை, அருமையான காலச்சக்கரம், அறச்சக்கரம் ஆகியவை அங்கே காத்திருக்கின்றன. ஓ யுதிஷ்டிரா, அதிதி, திதி, தனு, ஸுரஸை, வினதை, இரை, காலிகை, சுரபி, தேவி, ஸரமை, கௌதமி,(37-40) பிரபை, கத்ரு ஆகிய தேவர்களின் அன்னையர், ருத்ராணி, ஸ்ரீ, லக்ஷ்மி, பத்ரை,(41) சஷ்டி, பூமி {பிருத்விதேவி}, கங்கை, ஹ்ரீ, ஸ்வாஹா, கீர்த்தி, ஸுராதேவி, சச்சி {இந்திராணி}, புஷ்டி, அருந்ததி, ஸம்விருத்தி, ஆசை, நியதி, ஸ்ருஷ்டி, ரதி ஆகிய பல தேவிமார் அங்கே அனைத்தையும் படைத்தவனுக்காகக் {பிரம்மனுக்காகக்} காத்திருக்கின்றனர்.(42,43) ஆதித்தியர்கள், வசுக்கள், ருத்திரர்கள், மருத்துக்கள், அஸ்வினிகள், விஸ்வேதேவர்கள், ஸாத்தியர்கள், மனோ வேகம் கொண்ட பித்ருக்கள் ஆகியோர் பெருந்தகப்பனுக்காகக் காத்திருக்கின்றனர்.(44)

ஓ மனிதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, பித்ருக்களில் ஏழு வகை உண்டு என்பதை அறிந்து கொள்வாயாக. அதில் நான்கு வகையினருக்கு வடிவம் உண்டு, மீதம் மூன்று வகையினருக்கு வடிவம் கிடையாது.(45) சிறப்பு வாய்ந்த வைராஜர்கள், அக்னிஷ்வாத்தர்கள், கர்ஹபத்தியர்கள் (உடல் இல்லா மூன்று வகையான பித்ருக்கள்) விண்ணுலகில் உலவுகிறார்கள் என்பது நன்கு அறியப்பட்டதாகும்.(46) சோமபர்கள், ஏகசிருங்கர்கள், சதுர்வேதர்கள், கலர்கள் ஆகிய பித்ருக்கள் நான்கு வகை மனிதர்களால் எப்போதும் வழிபடப்படுகின்றனர்.(47) சோம பானத்தால் நிறைவடைந்த அவர்கள் சோமனை {சந்திரனை} முதலில் நிறைவடையச் செய்கின்றனர். பித்ருக்களின் அந்த அனைத்து இனங்களும் படைப்புத் தலைவனுக்காக,(48) அந்த அளவிடமுடியா தலைமைத் தேவனுக்காக மகிழ்ச்சியாக அங்கே காத்திருக்கின்றனர்.

ராட்சசர்கள், பிசாசங்கள், தானவர்கள், குஹ்யர்கள்,(49) நாகர்கள், பறவைகள் மற்றும் பலவகைப்பட்ட விலங்குகள் அசைவன அசையாதன ஆகியன அனைத்தும் பெருந்தகப்பனை வணங்கி நிற்கின்றன.(50) தேவர்களின் தலைவன் புரந்தரன் {இந்திரன்}, வருணன், குபேரன், யமன், உமையுடன் கூடிய மஹாதேவன் ஆகியோர் அங்கே எப்போதும் வருகின்றனர்.(51) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, மஹாசேனன் (கார்த்திகேயன் {முருகன்}), பெருந்தகப்பனை வணங்கி நிற்கிறான். நாராயணன், தெய்வீக முனிவர்கள், வாலஹில்ய முனிவர்கள், பெண்களால் பிறந்தவர்களும், பெண்களால் பிறக்காதவர்களும், மேலும் உலகில் உள்ள அனைத்து அசைவன அசையாத ஆகியவையும் என்னால் அங்கே காணப்பட்டதாக அறிந்து கொள்வாயாக.(52,53)

ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, தங்கள் உயிர்வித்தை மேலெழும்பச் செய்த எண்பதாயிரம் முனிவர்களையும், மகன்களைப் பெற்ற ஐம்பதாயிரம் முனிவர்களையும் நான் அங்கு கண்டேன்.(54) விண்ணுலக வாசிகள் அனைவரும் தாங்கள் விருப்பப்படும்போது எல்லாம் தலைமைத் தேவனை {பிரம்மனைக்} கண்டு தலைவணங்கித் திரும்பி வந்தனர்.(55) ஓ மனிதர்களின் மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பனும், பிரபஞ்சத்தின் ஆன்மாவும், அளவிடமுடியா புத்திகூர்மையும், புகழும், அனைத்து உயிர்களிடத்திலும் சமமான அன்பு கொண்டவரும், சுயம்புவுமான பிரம்மாவை தகுதிக்கேற்றவாறு மதித்து, இனிமையான பேச்சாலும், பொருட்களைப் பரிசாகக் கொடுத்தும், தேவர்களும், தைத்தியர்களும், நாகர்களும், பிராமணர்களும், யக்ஷர்களும், பறவைகளும், காலேயர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும், மற்றும் அனைத்து மேன்மையான உயிரினங்களும் அங்கே அவரது விருந்தினர்களாக வந்தனர்.(56-58)

ஓ குழந்தாய் (யுதிஷ்டிரா}, அந்த அருமையான சபை எப்போதும் வந்து செல்பவர்களால் கூட்டமாக நிறைந்து இருக்கிறது.(59) அனைத்து சக்திகளும் நிறைந்து, பிரம்மரிஷிகளால் வழிபடப்பட்டிருக்கும் அந்த தெய்வீக சபை பிரம்மனின் அருள்பார்வையினால் ஒப்பற்றத்தாய் பேரெழிலுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.(60) ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரனே}, இந்த உனது சபை மனிதர்களின் சபைகளில் ஒப்பற்று இருப்பது போல, பிரம்மனின் சபை, அனைத்து உலகங்களிலும் ஒப்பற்று இருக்கிறது.(61) நான், விண்ணுலகில் இருக்கும் இந்தச் சபைகளை எல்லாம் கண்டிருக்கிறேன். இந்த உனது சபை, மனிதர்களின் உலகில் நிச்சயமாக முதன்மையானது என்பதில் மாற்றுக்கேள்வி கிடையாது" {என்றார் நாரதர்}.(62)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்