Thursday, October 03, 2013

சிசுபாலன் சொன்ன கிழட்டு அன்னத்தின் கதை - சபாபர்வம் பகுதி 40

The story of the old swan as told by Sisupala | Sabha Parva - Section 40 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரை நிந்திக்க கிழட்டு அன்னத்தின் கதையைச் சொன்ன சிசுபாலன்...

old swan

சிசுபாலன், "உனது குலத்தில் புகழற்ற கிழப் பாவியே {பீஷ்மரே}, எண்ணற்ற போலிப் பயங்கரங்களைக் காட்டி இந்த ஏகாதிபதிகளை மிரட்ட உனக்கு வெட்கமாக இல்லையா?(1) குருக்களின் முதன்மையானவனான நீ, வாழ்வின் மூன்றாம் நிலையில் {பிரம்மச்சரியம்} வாழ்ந்து கொண்டு, அறம் குறித்து விரிவான ஆலோசனையை வழங்கிக் கொண்டிருக்கிறாய்.(2) ஒரு படகு மற்றொரு படகுடன் கட்டப்பட்டது போலவோ, ஒரு குருடன் இன்னொரு குருடனைத் தொடர்வதைப் போலவோ, குருக்கள் {குரு குலத்தவர்கள்} உன்னைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டுள்ளனர்.(3) பூதனயைக் கொன்றான் என்றும், இன்ன பிறச் செயல்களைச் செய்தான் என்றும் இவனை (கிருஷ்ணனைப்) பற்றிச் சொல்லி மேலும் ஒரு முறை எங்கள் இதயங்களைக் காயப்படுத்தியிருக்கிறாய்.(4)

கேசவனைப் {கிருஷ்ணனை} புகழ விரும்பி இப்படி முரட்டுத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் பேசும் உன் நாக்கு நூறு துண்டுகளாகப் பிளக்காமல் இருப்பது ஏன்?(5) ஞானத்தில் மேன்மையான நீ, அற்ப புத்தி கொண்ட மனிதனும் இகழ விரும்பும் ஒரு மாட்டு இடையனைப் புகழ விரும்புவது எவ்வாறு?(6) குழந்தையாக இருந்த கிருஷ்ணன் ஒரு பிணந்தின்னிக்கழுகைக் கொன்றதிலும், அல்லது போர்க்கலையில் நிபுணத்துவம் இல்லாத அஸ்வத்தையும் {குதிரையையும்}, ரிஷபத்தையும் {காளையையும்} அவன் {கிருஷ்ணன்} கொன்றதிலும் குறிப்பிடத்தக்க அம்சம் என்ன?(7) தேர் {சகடம்} என்ற அசையாத ஒரு துண்டு மரத்தை இவன் உதைத்துக் கீழே தள்ளினான் என்றால், ஓ பீஷ்மா, அதில் என்ன அற்புதம் இருக்கிறது?(8) ஓ பீஷ்மா, எறும்புப் புற்று போல இருக்கும் கோவர்த்தன மலையை ஒரு வாரம் காலம் இவன் தாங்கியதில் என்ன குறிப்பிடத்தகுந்த அம்சம் இருக்கிறது?(9) 'ஒரு மலையின் மேல் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதிக உணவை உண்டான்' என்று நீ சொல்வதுதான் எனக்கு அதிக ஆச்சரியத்தைத் தருகிறது.(10) ஆனால், அறவிதிகளை அறிந்த நீ, கம்சனின் உணவை உண்டு, அவனையே கொன்ற இவனது தீய செயலை பெரும் சாதனையாக நினைக்கிறாய்.(11)

குருகுலத்தின் புகழற்றவனே {பீஷ்மனே}, அறவிதிகள் குறித்து நீ அறியாமையுடன் இருக்கிறாய். நான் இப்போது உனக்குச் சொல்வதை ஞானமுள்ளோரிடம் நீ கேட்டதில்லையா?(12) அறம்சார்ந்த ஞானமுள்ளோர், நேர்மையானவர்களிடம், யாரிடம் நாம் உணவைப் பெறுகிறோமா, யாரின் நிழலில் இருக்கிறோமோ அந்தப் பெண்களிடமும், பசுக்களிடமும், பிராமணர்களிடமும் உனது ஆயுதத்தைத் தூக்காதே என்று சொல்வார்கள். ஓ பீஷ்மா, இந்தப் படிப்பினைகள் அனைத்தையும் நீ தூக்கியெறிந்துவிட்டாய்.(13,14) ஓ குரு குலத்தின் புகழற்றவனே {பீஷ்மா}, கேசவனைப் {கிருஷ்ணனைப்} புகழ விரும்பி, ஏதோ நான் எதையும் அறியாதவனைப் போல அவன் {கிருஷ்ணன்} மேன்மையானவன் என்றும், பெருமை வாய்ந்தவன் என்றும் என் முன்னிலையில் பிதற்றுகிறாய்.(15) உனது வார்த்தையால், ஓ பீஷ்மா, பெண்ணையும், வழிபடத்தகுந்த பசுவையும் கொன்றவனை {கிருஷ்ணனைப்} புகழ்வதில் என்ன பெரிய பாடத்தை அறிய முடியும்? ஓ பீஷ்மா, இப்படிப்பட்டவன் {கிருஷ்ணன்} எப்படி புகழ்ச்சிக்குத் தகுதியுடையவனாக இருப்பான்?(16) "இவனே {கிருஷ்ணா} ஞானமுள்ளோரில் முதன்மையானவன், இவனே அண்டத்தின் தலைவன்" என்ற உனது வார்த்தைகளைக் கேட்டு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} இதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடப்போகிறான்.ஆனால் நிச்சயமாக, இவையெல்லாம் பொய்யே.(17) 

புகழ்ந்து பாடுபவனின் வரிகள், அது அடிக்கடிப் பாடப்பட்டாலும், அதைப் பாடுபவன் மீது எந்தக் கருத்தையும் ஏற்படுத்தாது. ஒவ்வொரு உயிரினமும் பூலிங்கப் பறவைப் (சிங்கத்தின் பற்களுக்கிடையே இருக்கும் இறைச்சியை உண்பது) போல தனது மனப்போக்கின் படி நடக்கின்றன.(18) இந்த உனது மனப்போக்கு காரியம் சார்ந்ததே. அதில் சிறிது சந்தேகமும் இல்லை. உன்னை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு, கிருஷ்ணனை வழிபாட்டுக்குத் தகுந்தவன் என்று கருதும் பாண்டுவின் மகன்கள் பாவகர மனப்போக்கையே கொண்டுள்ளனர். அறவிதிகள் அறிந்தும், நீ ஞானமுள்ளோர் பாதையில் இருந்து விழுந்துவிட்டாய்.(19,20) எனவே நீயும் பாவியே. ஓ பீஷ்மா, தன்னை அறம்சார்ந்தவனாகவும், ஞானத்தில் மேன்மையானவனாகவும் கருதும் ஒருவன், அறநோக்கங்களில் இருந்து இப்படி விலகிச் செல்வானா?(21) 

நீதியின் வழிகளை நீ அறிந்திருந்தால், ஞானத்தின் வழியை நீ அறிந்திருதால், நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ பீஷ்மா, ஞானத்திலும், அறத்திலும் செருக்கு கொண்டிருக்கும் உன்னால், வேறு ஒருவனிடம் இதயத்தை வைத்திருந்த அறம்சார்ந்த பெண்ணான அம்பை[1] கடத்திச் செல்லப்பட்டது ஏன்? உன்னால் கொண்டு வரப்பட்டும், அந்தப் பெண்ணின் {அம்பைன்} நிலையை அறிந்த நேர்மையான அறவழிகளுக்குக் கட்டுப்பட்ட உனது தம்பி விசித்திரவீரியன் அவளை {அம்பையை} திருமணம் செய்து கொள்ளவில்லை. அறம் குறித்து சுயபுராணம் பாடும் உனது கண்களுக்கு எதிரிலேயே, உனது தம்பியின் விதவை மனைவிகள் {அம்பிகை, அம்பாலிகை} அடுத்தவரிடம் {வியாசரிடம்} பிள்ளைகள் பெற்றனரே அது நேர்மையா வழிதானா?(22-24) இதில் அறம் எங்கே இருக்கிறது, ஓ பீஷ்மா? உனது அறியாமையாலும், ஆண்தன்மையற்ற நிலையாலும் ஏற்ற இந்த பிரம்மச்சரியம் கனியற்றதாகும்.(25)

[1] அம்பை கடத்திச் செல்லப்பட்டாள்? - பார்க்க: காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் பகுதி 102 

அறவிதிகளை அறிந்தவனே, உனது நற்பேற்றை நான் காணவில்லை. நீதிகளை இந்த வழிகளில் விவரமாக எடுத்துக் கூறும் நீ பெரியவர்களிடம் பணி செய்திருக்க மாட்டாய்.(26) வழிபாடு, பரிசு, கல்வி, வேள்விகள் ஆகிய அனைத்தும் தகுதியால் ஒரு பங்கு அல்ல, ஒரு மகனைப் பெறுவதில் பதினாறில் ஒரு பங்குகூட இவை அனைத்தும் சேர்ந்து ஈடாகாது.(27) ஓ பீஷ்மா, கணக்கற்ற நோன்புகளால் கிடைக்கும் தகுதியும், நோன்புகள்களால் கிடைக்கும் தகுதியும் ஒருவன் பிள்ளையற்று இருந்தால் கனியற்றதாகிவிடுகிறது.(28) நீ பிள்ளையற்றவன், கிழவன், போலி நீதிகளை உரைப்பவன். கதைகளில் வரும் அன்னப்பறவை போல, இப்போது உனது உறவினர்கள் கையாலேயே நீ சாகப் போகிறாய்.(29) ஞானம்படைத்தோர் இதை முதலிலேயே சொல்லியிருக்கின்றனர். நீ கேட்பதற்காக அதை முழுமையாக உனக்குச் சொல்கிறேன்.(30)

பழங்காலத்தில் ஒரு கடற்கரையில் ஒரு கிழட்டு அன்னப்பறவை வாழ்ந்து வந்தது. எப்போதும் நீதியைப் பேசியும், ஆனால் நடத்தையில் வேறு விதமாக இருந்தும், இறகுகள் முளைத்த குலத்திற்கு {பறவைகளுக்குப்} பாடம் நடத்தியது.(31) "அறம் பயில்வாயாக, பாவம் கைவிடுவாயாக' என்ற வார்த்தைகளையே மற்ற பறவைகள் அதனிடம் இருந்து அடிக்கடி கேட்டன.(32) ஓ பீஷ்மா, முட்டையிடும் இனம்சார்ந்த அந்தப் பறவைகள், கடலில் உலவிக் கொண்டு, அந்தக் கிழட்டுப் பறவைக்காக உணவு கொண்டு வந்தன என்று நாம் கேள்விப் படுகிறோம்.(33) ஓ பீஷ்மா, அந்தப் பறவைகள் அனைத்தும், தங்கள் முட்டைகளை அந்த முதிய பறைவையின் காவலில் வைத்துவிட்டு, கடலின் நீருக்குள் குதித்து உணவு தேடின. தன்னலனில் மட்டுமே அக்கறை கொண்டதும், பாவியுமான அந்தக் கிழட்டு அன்னப்பறவையோ, முட்டாள்த்தனமாகத் தன்னை நம்பிக் கொண்டிருக்கும் மற்ற பறவைகளின் முட்டைகளைத் தின்றது. சில காலம் கழித்து, முட்டைகளின் எண்ணிக்கை குறைந்ததை ஒரு ஞானமுள்ள பறவை கண்டது. ஒரு நாள் இந்தக் காரியத்தைத் தனது கண்களாலேயே கண்டது.(34,35) அந்தக் கிழட்டு அன்னப்பறவையின் இந்தப் பாவகரச் செயலைக் கண்ட அந்தப் பறவை, மற்ற பறவைகளிடம் சென்று துயருடன் பேசியது.(36) பிறகு, ஓ குருக்களில் சிறந்தவனே, அந்தப் பறவைகள் அனைத்தும் அந்தக் கிழட்டுப் பறவையின் தீய செயலைக் கண்டு, அந்தப் போலி நடத்தையுள்ள பாவியை அணுகி, அதைக் கொன்றன.(37)

உனது நடத்தையும், ஓ பீஷ்மா, அந்தக் கிழட்டு அன்னப்பறவையைப் போலவே இருக்கிறது. அந்த அன்னப்பறவைகள் கிழட்டு அன்னப்பறவையைக் கொன்றது போல கோபத்தில் இருக்கும் இந்தப் பூமியின் அதிபதிகள் உன்னைக் கொல்லப் போகிறார்கள்.(38) புராணங்களை அறிந்த மனிதர்கள், ஓ பீஷ்மா, இது சம்பந்தமாக ஒரு பழமொழியைச் சொல்வார்கள். நான், ஓ பாரதா {பீஷ்மா} அதைத் திரும்பச் சொல்கிறேன்.(39) அஃது இதுதான்: ஓ இறகுகளால் உன்னைத் தாங்குபவனே {பறவையே}, உனது இதயம் (ஆசைகளால்) பாதிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் நீ (அறத்தை) போதிக்கிறாய்; ஆனால், முட்டைகளை உண்ணும் இந்தப் பாவகர காரியம் உனது பேச்சை மீறிய செயலாக இருக்கிறது!" என்றான் {சிசுபாலன்}.(40)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்