Sunday, October 06, 2013

தலைகுப்புற விழுந்தான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 46

Duryodhana tumbled down | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் குளத்தில் விழுவது; தரையை குளம் என்று நினைத்து ஆடைகளை உயர்த்துவது; பிறகு யுதிஷ்டிரனிடம் விடைபெற்று ஹஸ்தினாபுரம் திரும்புவது; பாண்டவர்களின் வளமையைக் கண்டு துரியோதனன் அடையும் பொறாமை; அவற்றை சகுனியிடம் விவரித்தல்...

Duryodhana tumbling into the pool

வைசம்பாயனர் சொன்னார், "மனிதர்களில் காளையான துரியோதனன் தொடர்ந்து (பாண்டவர்களின்) சபாமண்டபத்துடன் கூடிய அரண்மனையிலேயே வசித்தான். அந்த குரு இளவரசன் {துரியோதனன்} சகுனியுடன் சேர்ந்து அந்த மாளிகை முழுவதையும் ஆராய்ந்தான்.(1) அந்தக் குரு இளவரசன் {துரியோதனன்} இத்தகைய தெய்வீக வடிவமைப்புகளை யானையின் பெயரை வைத்து அழைக்கப்படும் நகரத்தில் (ஹஸ்தினாபுரத்தில்) கண்டதேயில்லை.(2)

ஒரு நாள் மன்னன் துரியோதனன் அம்மாளிகையைச் சுற்றி வருகையில், ஒரு பளிங்கு தரைக்கு வந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, தனது அறியாமையால், அதை நீர் நிறைந்த குளம் என்று கருதித் தனது ஆடைகளை இழுத்துக் கொண்டான். பிறகு தனது தவறை உணர்ந்த அந்த மன்னன் {துரியோதனன்} அந்த மாளிகையில் பெரும் சோகத்துடன் உலவினான்.(3-5) சிறிது நேரம் கழித்து அம்மன்னன் {துரியோதனன்}, பளிங்கு போன்ற இதழ்களைக் கொண்ட தாமரைகளுடன் கூடிய குளத்தைக் கண்டு, தரை என்று கருதி தனது ஆடைகளுடன் உள்ளே விழுந்தான்.(6)

துரியோதனன் அந்தக் குளத்துக்குள் விழுந்ததைக் கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன் உரக்கச் சிரித்தான். அந்த அரண்மனையில் இருந்த பணியாட்களும் சிரித்தார்கள்.(7) மன்னனின் உத்தரவால் அந்தப் பணியாட்கள் அழகான உலர்ந்த ஆடைகளை அவனுக்காக {துரியோதனனுக்காக} கொண்டு வந்தனர். துரியோதனனின் பரிதாப நிலையைக் கண்ட பெரும் பலம் வாய்ந்த பீமன்,(8) அர்ஜுனன், இரட்டையர்கள் {நகுலன், சகாதேவன்} என அனைவரும் உரக்கச் சிரித்தனர். இது போன்ற கேலிகளுக்கு {அவமானங்களுக்கு} பழக்கப்படாத துரியோதனனால் அவர்களது சிரிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(9) 

அவன், தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு, அவர்களிடம் தனது பார்வையைச் செலுத்தாமலிருந்தான். மீண்டும் ஒரு வரண்ட தரையைத் தண்ணீரென நினைத்த அந்த ஏகாதிபதி {துரியோதனன்} தனது ஆடைகளைத் தூக்கிக் கட்டிக் கொண்டதைக் கண்டு அனைவரும் மீண்டும் சிரித்தார்கள். அந்த மன்னன் {துரியோதனன்} சிறிது நேரம் கழித்து பளிங்கினால் ஆன மூடிய கதவை தவறுதலாகத் திறந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.(10,11) அதைக் கடந்து செல்ல அவன் {துரியோதனன்} நினைக்கையில், அவனது தலை அந்தக் கதவில் மோதி, தள்ளாடியபடி நின்றான். மற்றொரு இடத்தில் திறந்திருந்த கதவை மூடியிருப்பதாக நினைத்து, அதைத் திறக்க தனது கையை நீட்டியபடி குப்புற விழுந்தான்.(12) மேலும் உண்மையில் திறந்திருந்த மற்றொரு கதவை மூடியிருப்பதாக நினைத்து, அந்த மன்னன் {துரியோதனன்} அதனின்று விலகிச் சென்றான்.(13) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், ராஜசூய வேள்வியில் அபரிமிதமான செல்வத்தைக் கண்டும், அந்த சபாமண்டபத்துக்குள் நடந்த பல பிழைகளுடனும் {ஏமாற்றங்களுடனும்} பாண்டவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினான்.(14,15)

அப்படி அவன் {துரியோதனன்} தனது நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போதே, பாண்டவர்களின் செல்வச்செழிப்பைக் கண்டு இதயம் பிளந்தவனாக, பாவத்தின் பக்கம் சேர்ந்து துன்புற்றான்.(16) பாண்டவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதையும், மன்னர்கள் அவர்களுக்கு கப்பம் கட்டுவதையும், மன்னர்கள் மட்டும் அல்லாமல் இளையவர்களும் முதியவர்களும், பாண்டவர்களுக்கு நன்மை செய்வதையும், கண்டு, பாண்டுவின் சிறப்புவாய்ந்த மகன்களின் {பாண்டவர்களின்} செல்வச்செழிப்பையும் பிரகாசத்தையும் நினைத்து, திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் மங்கிப் போனான்.(17,18) துயரால் பீடிக்கப்பட்ட இதயத்துடன் (தனது நகரத்தை நோக்கி) முன்னேறிய அவன் {துரியோதனன்}, மனத்தில் சபாமண்டபத்தையும், ஞானமுள்ள யுதிஷ்டிரனின் ஒப்பற்ற செழிப்பையுமே நினைத்துச் சென்றான்.(19) திருதராஷ்டிரனின் மகனான துரியோதனன், இப்படியே தனது நினைப்புகளில் மூழ்கி சுபலனின் மகனுடன் பேசாமல் வந்தான். அவன் {சகுனி} தொடர்ந்து பேச முயிற்சித்தாலும் ஒரு வார்த்தையும் பேசாமல் வந்தான்.(20) 

நினைவு தப்பி இருக்கும், அவனைக் கண்ட சகுனி, "ஓ துரியோதனா, நீ ஏன் பெருமூச்செறிகிறவன் போல இப்படிச் செல்கிறாய்?" என்று கேட்டான்.(21)


துரியோதனன், "ஓ மாமா, சிறப்புமிகுந்த அர்ஜுனனின் ஆயுதங்களின் வலிமையால் யுதிஷ்டிரன் முழு உலகத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையும், பிருதையின் {குந்தியின்} மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} வேள்வி, தேவர்களில் புகழ்வாய்ந்த சக்ரனின் {இந்திரனின்} வேள்வி போல இருந்ததையும் கண்டு,(22,23) பகலும், இரவுமாக பொறாமையால் எரிந்து, கோடைகாலத்தில் {ஆனி, ஆடி மாதங்களில்} வற்றிவிடும் ஆழமற்ற குளத்தைப் போன்றவனாக நான் இருக்கிறேன்.(24) சத்வதர்களின் தலைவனால் {கிருஷ்ணனால்} சிசுபாலன் கொல்லப்பட்ட போது, சிசுபாலன் பக்கம் நின்று பேச ஒரு ஆண் மகனும் இல்லாததைக் கண்டீரா?(25) 

பாண்டவர்களெனும் நெருப்பால் எரிக்கப்பட்டவர்களைப் போல இருந்த அவர்கள் அனைவரும் அந்தக் குற்றத்தை மன்னித்தார்களே; யாரால் அதை மன்னிக்க முடியும்?(26) வாசுதேவனால் {கிருஷ்ணனால்} செய்யப்பட்ட முறையற்ற அந்தப் பெருஞ் செயல், பாண்டுவின் சிறப்புமிகுந்த மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} பலத்தால் வெற்றியடைந்தது.(27) பல ஏகாதிபதிகள் ஏதோ வைசியர்கள் கப்பம் கட்டுவதுபோல, பல்வேறு பரிசுகளைக் குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரனுக்காகக் கொண்டு வந்தார்களே.(28) பிரகாசமிக்க யுதிஷ்டிரனின் செல்வத்தைக் கண்ட பிறகு, நான் பொறாமை கொள்ளக்கூடாது என்று எவ்வளவுதான் கருதினாலும், எனது இதயம் பொறாமையால் பற்றி எரிகிறது” {என்றான் துரியோதனன்}.(29)

இப்படித் தனது நிலையைப் பிரதிபலித்த துரியோதனன், நெருப்பால் சுடப்பட்டது போல காந்தார மன்னனிடம் {சகுனியிடம்} மறுபடியும் பேசினான்.(30) அவன் {துரியோதனன்}, "நான் சுடர்விட்டு எரியும் நெருப்பில் விழப்போகிறேன், அல்லது நஞ்சை விழுங்கப் போகிறேன், அல்லது நீரில் மூழ்கப்போகிறேன்.(31) ஆற்றல்மிக்க ஆண்மை கொண்ட எந்த மனிதன்தான் உலகத்தில் தனது எதிரிகள் செழிப்பிலும், தான் வறுமையிலும் வாழத் தாங்கிக் கொள்வான்?(32) எனவே, (எதிரிகளின்) இந்த செழிப்பையும், நற்பேற்றையும் கண்டும் தாங்கிக் கொண்டிருக்கும் நான் பெண்ணுமல்ல, பெண்ணல்லாதவனுமல்ல, ஆணுமல்ல, ஆணல்லாதவனுமல்ல.(33) உலகத்தின் மீதான அவர்களது {பாண்டவர்களது} ஆட்சி உரிமையையும், அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} இருக்கும் பரந்த மக்கள் கூட்டத்தையும், அந்த வேள்வியையும் கண்ட என்னைப் போன்ற யார்தான் பொறாமை கொள்ளாமல் இருப்பார்?(34) தனியாக அத்தகைய அரச செழிப்பை என்னால் பெற இயலாது; எனக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய எந்தக் கூட்டாளியையும் நான் காணவில்லை. இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறேன்.(35) 

குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} தெளிவான பெரும் செல்வச் செழிப்பைக் கண்ட பிறகு, நான் விதியே தலைமையானது என்றும், முயற்சிகள் பலனளிக்காது என்றும் கருதுகிறேன்.(36) ஓ சுபலரின் மகனே {சகுனியே}, முன்பு நான் அவனை {யுதிஷ்டிரனை} அழிக்க முயன்றேன். ஆனால் எனது முயற்சிகள் எல்லாவற்றையும் முறியடித்து, குளத்திற்குள் முளைக்கும் தாமரையென அவன் {யுதிஷ்டிரன்} செழிப்பில் வளர்ந்திருக்கிறான்.(37) இதன் காரணமாகவே நான் விதியை முதன்மையாகவும், முயற்சிகளைக் கனியற்றதாகவும் கருதுகிறேன். திருதராஷ்டிரனின் மகன்கள் சிதைவடைந்து வருகிறார்கள், பிருதையின் {குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்} நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறார்கள்.(38) பாண்டவர்களின் செழிப்பையும், சபா மண்டபத்தையும், அந்த வேலைக்காரர்கள் சிரித்ததையும் கண்டு எனது இதயம் நெருப்பில் இருப்பதைப் போல பற்றி எரிகிறது.(39) எனவே, ஓ மாமா, நான் ஆழ்ந்த துயரத்தில் இருப்பதையும், பொறாமையால் நிறைந்திருப்பதையும் அறிந்து கொண்டு, திருதராஷ்டிரரிடம் இது குறித்து சொல்வீராக", என்றான் {துரியோதனன்}.(40)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்