Tuesday, October 15, 2013

நியாயமற்ற வழிகளில் வென்றான் சகுனி! - சபாபர்வம் பகுதி 60

Sakuni won, adopting unfair means | Sabha Parva - Section 60 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 16)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் செல்வங்களை சகுனி ஏமாற்றி வெல்லுதல்...

Sakuni

யுதிஷ்டிரன் சொன்னான், "இந்தப் பந்தயப் பொருளை நியாயமற்ற முறையில் வென்று விட்டாய். ஆனால், அதற்காக பெருமைப்படாதே, ஓ சகுனி. ஆயிரம் ஆயிரமாகப் பந்தயம் வைத்து நாம் விளையாடலாம்.(1) என்னிடம் ஆயிரம் நிஷ்கங்கள்[1] நிரம்பிய பல அழகான பெட்டிகளும் {ஜாடிகள்} எனது கருவூலத்தில் உள்ளன. மேலும் வற்றாத தங்கமும், அதிகமான வெள்ளியும், மற்ற தாதுப்பொருட்களும் உள்ளன. ஓ மன்னா, இதுவே நான் உன்னிடம் வைக்கும் பந்தயப் பொருளாகும்" என்றான்".(2)

[1] கும்பகோணம் பதிப்பில் "நூற்றெட்டு பலம் கொண்ட பொன் நாணயம்" என்ற அடிக்குறிப்பு இருக்கிறது.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொல்லப்பட்ட சகுனி, குரு குலத்தைத் தழைக்க வைப்பவர்களில் தலைவனும், பாண்டு மகன்களின் மூத்தவனும், மங்காத புகழ் கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(3)

யுதிஷ்டிரன், "எப்போதும் வெற்றியைத் தருவதும், சரியான அளவுகள் கொண்டதும், புலித்தோலால் மூடப்பட்டதும், அற்புதமான சக்கரங்களும் கொடிமரங்களும் பூட்டப்பட்டதும், சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், ஆயிரம் தேர்களுக்குச் சமமாக சுமக்கப்படுபவரின் இதயத்தை மகிழ்ச்சியால் நிறைப்பதுமாக இருக்கிறது எனது அரசத்தேர் {ராஜரதம்}. அந்த அழகான புனிதமான தேரின் சக்கரங்கள் எழுப்பும் ஒலியானது மேகக்கூட்டங்களின் உறுமல் போலவும், கடலின் முழக்கம் போலவும் இருக்கும். அந்த தேரில் சந்திர பிம்பம் போன்றவையும் வெண்மையானவையுமான உயர்ந்த சாதி குதிரைகள் எட்டு பூட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் குளம்படிகளில் இருந்து எந்த புவிசார்ந்த உயிரினமும் தப்ப முடியாது. ஓ மன்னா, இதுவே நான் பந்தயப் பொருளாக வைக்கும் எனது செல்வமாகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(4-6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(7)

யுதிஷ்டிரன், "கைகளிலும், தோள்களிலும் தங்க ஆபரணங்கள் பூண்டவர்களும், கழுத்தைச் சுற்றி நிஷ்கங்களும் மற்ற ஆபரணங்களும் பூண்டவர்களும்,(8) விலையுயர்ந்த மாலைகள் பூண்டவர்களும், ஆடம்பர ஆடைகள் உடுத்தியவர்களும், மேனியில் சந்தனம் பூசிக் கொண்டவர்களும், நகைகளும், தங்கமும் அணிந்தவர்களும், ஆய கலைகள் அறுபத்து நான்கில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களும், பாடுவதில் ஆடுவதில் சிறந்து விளங்குபவர்களும், எனக்காகக் காத்திருந்து எனது கட்டளையின் பேரில் தேவர்களுக்கும், ஸ்நாதக பிராமணர்களுக்கும், மன்னர்களுக்கும் சேவை செய்பவர்களும், இளமையானவர்களுமான ஆயிரம் பணிப்பெண்கள் என்னிடம் உண்டு. ஓ மன்னா, இந்தச் செல்வத்தை நான் பந்தயமாக வைக்கிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}".(9,10)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(11)

யுதிஷ்டிரன், "பட்டாடை உடுத்தியவர்களும், ஞானமும் புத்திசாலித்தனமும் கொண்டவர்களும், தாங்கள் இளமையாக இருப்பினும் தங்கள் புலன்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களும், காதுகளில் வளையங்கள் பூண்டவர்களும், இரவும் பகலும் தங்கள் கரங்களில் தட்டுகளுடனும் உணவுடனும் விருந்தினர்களை உபசரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களுமான பணியாட்கள் ஆயிரம் பேர் என்னிடம் உண்டு. ஓ மன்னா {துரியோதனா}, இந்த செல்லவத்தை நான் உன்னிடம் பந்தயமாக வைக்கிறேன்" என்றான்".(12,13)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(14)

யுதிஷ்டிரன், "ஓ சுபலனின் மகனே {சகுனியே}, பொற்கச்சைகளுடன் கூடியவையும், ஆபரணங்கள் பூண்டவையும், நெற்றிப் பொட்டிலும், கழுத்திலும் மற்ற பகுதிகளிலும் தாமரைக் குறியுடன் இருப்பவையும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பவையும்,(15) அழகான நீண்ட ஏர் போன்ற தடித்த வெள்ளை தந்தங்களுடன் கூடியவையும், மன்னர்களைத் தங்கள் முதுகில் சுமந்து செல்லத் தகுதி வாய்ந்தவையும், போர்க்களத்தில் அனைத்துவிதமான ஒலிகளையும் தாங்கிக் கொள்ளக்கூடியவையும், பேருடல் படைத்தவையும், எதிரி நகரின் சுவர்களைச் சாய்க்கவல்லவையும், புதிய மேகங்கள் போன்ற நிறத்தில் உள்ளவையுமான ஆயிரம் யானைகளும், அவை ஒவ்வொன்றுக்குக் எட்டு பெண் யானைகள் என ஒரு யானைக் கூட்டம் என்னிடம் இருக்கிறது. ஓ மன்னா, இந்த செல்வத்தை நான் பந்தயமாக வைக்கிறேன்" என்றான்".(16,17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படிச் சொன்ன யுதிஷ்டிரனிடம், சுபலனின் மகனான சகுனி சிரித்துக் கொண்டே, "பார், நான் அதை வென்றுவிட்டேன்!" என்றான்.(18)

யுதிஷ்டிரன், "என்னிடம் எவ்வளவு யானைகள் உண்டோ, அவ்வளவு தேர்கள் இருக்கின்றன. அத்தேர்கள் அனைத்திலும் தங்கத் தூண் மற்றும் கொடிக்கம்பம் நாட்டப்பட்டு நன்கு பழக்கப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்டு, போரிட்டாலும் போரிடாவிட்டாலும், ஒரு மாத ஊதியமாக ஆயிரம் நாணயங்களைப் பெறுபவர்களும், அற்புதமாகப் போரிடுபவர்களுமான போர்வீரர்களைக் கொண்டிருக்கின்றன. ஓ மன்னா, இந்த செல்வத்தை நான் உன்னிடம் பந்தயமாக வைக்கிறேன்" என்றான்".(19,20)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகள் பேசப்பட்ட போது, பகையில் உறுதி கொண்ட அந்தத் தீய சகுனி, யுதிஷ்டிரனிடம், "பார், நான் அதை வென்றுவிட்டேன்!" என்றான்.(21)

யுதிஷ்டிரன், "ஆபரணங்கள் பூண்டிருக்கும் இந்த தித்திரி, கல்மாஷம் என்ற கந்தர்வ வகை குதிரைகள், காண்டீபம் தாங்கும் அர்ஜுனனிடம் போரில் வீழ்ந்த சித்திரரதனால் மகிழ்ச்சியுடன் கொடுக்கப்பட்டவையாகும். ஓ மன்னா, இந்த செல்வத்தை, நான் உன்னிடம் பந்தயப் பொருளாக வைக்கிறேன்" என்றான்.(22,23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(24)

யுதிஷ்டிரன், "சுமைகளை இழுக்கப் பயன்படும் முதன்மையான உயர்வகை இழுவை விலங்குகள் {வண்டிமாடுகள்} பூட்டப்பட்ட பத்தாயிரம் தேர்களும் வாகனங்களும் என்னிடம் இருக்கின்றன.(25) பால் குடித்து, அரிசி {சோறு} உண்டு, துணிச்சலும் வலிவும் கொண்டு, அகலமான மார்புகளுடன் கூடியவர்களும், ஒவ்வொரு வகையில் {வர்ணத்தில்} இருந்தும் ஆயிரம் ஆயிரமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுமான அறுபதாயிரம் வீரர்கள் என்னிடம் இருக்கிறார்கள். ஓ மன்னா {துரியோதனா}, இந்த எனது செல்வத்தை நான் உன்னிடம் பணயமாக வைக்கிறேன்" என்றான்".(26,27)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் வென்றுவிட்டேன்!" என்றான்.(28)

யுதிஷ்டிரன், "என்னிடம் நானூறு நிதிகள் (பெரும் மதிப்பிலான நகைகள்) தாமிரம் மற்றும் இரும்பு தகடுகளால் உறையிடப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் விலையுயர்ந்த சுத்தமான ஜதரூப வகை {ஆணிப்பொன்} தங்க இலைகள் அளவில் ஐந்து துரோணங்கள் கொண்டவை ஆகும். ஓ மன்னா {துரியோதனா}, இந்த எனது செல்வத்தை நான் உன்னிடம் பணயமாக வைக்கிறேன்" என்றான்".(29-30)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைக் கேட்டு, பகடை பாச்சிகைகளுடன் தயாராக இருந்த சகுனி, நியாயமற்ற வழிமுறைகளைக் கையாண்டு யுதிஷ்டிரனிடம், "பார், நான் அதை வென்றுவிட்டேன்!" என்றான்".(31)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்