Wednesday, October 23, 2013

கேள்வியின் நாயகன் யுதிஷ்டிரனே | சபா பர்வம் - பகுதி 68

The authority of the question is Yudhishthira | Sabha Parva - Section 68 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 24)

பதிவின் சுருக்கம் : மன்னர்களிடமும், கௌரவர்களிடமும் திரௌபதி கேள்வி கேட்பது; பீஷ்மர் பதில் உரைக்க இயலாது என்றும், இந்தக் கேள்விக்கு பதிலை யுதிஷ்டிரனே சொல்ல வேண்டும் என்றும் சொல்வது...

Draupadi questionied Bhishma

திரௌபதி, "மனிதர்களில் மோசமானவனே, தீய மனதுடைய துச்சாசனா சற்று பொறுப்பாயாக. உயர்ந்த கடமையாக இருக்கும் ஒரு செயலை நான் செய்ய வேண்டும். நான் இதுவரை அதைச் செய்யவில்லை. இந்தப் பாவியின் {துச்சாசனனின்} பலம் நிறைந்த கரங்களால் வலுக்கட்டாயமாக இழுக்கப்படுவதால், நான் எனது உணர்வுகளை இழந்தேன்.(1) நான் இந்த குருக்களின் சபையில் இருக்கும் மரியாதைக்குரிய பெரியோர்களை வணங்குகிறேன். இதை நான் முன்கூட்டி செய்யாதது என் தவறாகாது" என்றாள்".(2)

வைசம்பாயனர் சொன்னார், "பாதிக்கப்பட்டவளும், ஆதரவற்றவளுமான திரௌபதி, இப்படி நடத்தப்படுவதற்கு உரியவள் இல்லையென்றாலும், முன்பைக் காட்டிலும் அதிக பலத்துடன் இழுக்கப்பட்ட போது, அந்தக் குருக்களின் சபையில் தரையில் விழுந்து, இப்படி அழுதாள்,(3) "ஐயோ, இதற்கு முன்பு ஒரே ஒரு முறைதான், அதுவும் சுயம்வரத்தின்[1] போதுதான், சபையில் கூடியிருந்த மன்னர்களால் நான் பார்க்கப்பட்டேன். அதன் பிறகு ஒரு முறை கூட நான் {எவராலும்} பார்க்கப்படவில்லை. {அப்படிப்பட்ட} நான் இன்று இந்தச் சபையின் முன்னால் அழைத்து வரப்பட்டிருக்கிறேன்.(4) முன்பு அரண்மனையில் இருந்தபோது, காற்றும், சூரியனும் கூட கண்டிராத ஒருத்தி, ஒரு கூட்டத்தின் பார்வைக்கு வெளிப்படுத்தப்பட்டாள்.(5) ஐயோ, அரண்மனையில் இருந்தபோது எவளைக் காற்று தீண்டினால் கூட பாண்டுவின் மகன்களுக்கு துயரத்தைக் கொடுக்குமோ, அவளே இன்று பாண்டவர்களால் துன்பப்பட்டு, இந்தப் பாவியால் பற்றி இழுத்தவரப் பட்டிருக்கிறாள்.(6) ஐயோ, இந்தக் கௌரவர்கள், இந்த நிலைக்குத் தகாத தங்கள் மருமகள், அவர்கள் முன்பும் பாதிக்கப்படுவதைப் பொறுத்திருக்கின்றனர்.(7) காலங்கள் இணைப்பிலிருந்து அப்பாற்பட்டு போனதாகத் தெரிகிறது {விபரீத காலமென்று நினைக்கிறேன்}. உயர் பிறப்பு பிறந்தும்[2], கற்புடன் இருந்தும், நான் இந்த பொது சபைக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டேன் என்பதைவிட வேறு என்ன துயரம் எனக்கு வேண்டும்? எதற்காக இந்த மன்னர்கள் அறியப்பட்டிருக்கின்றனரோ, அந்த அறம் எங்கே?(8,9)

[1] சுயம்வரத்தின் போதுதான், சபையில் கூடியிருந்த மன்னர்களால் பார்க்கப்பட்டேன். அதன் பிறகு ஒரு முறை கூட நான் பார்க்கப்படவில்லை. மேலும் விபரங்களுக்கு பார்க்க: சுயம்வர அரங்கிற்கு வந்தாள் திரௌபதி! - ஆதிபர்வம் பகுதி 187


பழங்காலத்தின் மன்னர்கள், தாங்கள் மணந்த மனைவிகளை பொது சபைக்கு அழைத்து வருவதில்லை என்று கேள்விப்படுகிறோம். ஐயோ, என்றுமழியாத அந்தப் பழக்க வழக்கங்கள் கௌரவரிடம் இருந்து மறைந்தே போய்விட்டன. இல்லையென்றால், பாண்டவர்களின் கற்புள்ள மனைவியும், பிருஷதன் மகனின் {திருஷ்டத்யும்னன்} தங்கையும், வாசுதேவன் {கிருஷ்ணனின்} தோழியுமான நான், இந்தச் சபையின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டதெவ்வாறு?(10) கௌரவர்களே, நான், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் மணந்த மனைவியாவேன், இம்மன்னன் {யுதிஷ்டிரன்} பிறந்த அதே புகழ்பெற்ற {க்ஷத்திரிய} குலத்திலேயே நானும் பிறந்தேன். நான் பணிப்பெண்ணா? அல்லது வேறா? என்று இப்போது எனக்குச் சொல்வீராக. நான் உங்கள் பதிலை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்.(11) குருக்களின் பெயரை அழிக்க வந்த இந்தப் பாதகன் என்னைக் கடுமையாகத் துன்புறுத்துகிறான். கௌரவர்களே, இனிமேலும் என்னால் தாங்க முடியாது. மன்னர்களே, நான் வெல்லப்பட்டேனா? வெல்லப்படவில்லையா? என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அஃது என்னவாக இருப்பினும் நான் உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என்றாள் {திரௌபதி}.(12,13)

இந்த வார்த்தைகளைக் கேட்ட பீஷ்மர், "ஓ அருளப்பட்டவளே, அறத்தின் பாதை நுட்பமானது என்று நான் ஏற்கனவே சொன்னேன். இந்த உலகத்தின் சிறந்த ஞானியும் அதை {அறத்தைப்} புரிந்து கொள்வதில் எப்போதும் தோல்வியுறுகிறான்.(14) உலகத்தில் பலம் வாய்ந்த மனிதன் எதை அறம் என்று நினைக்கிறானோ, உண்மை வேறாக இருப்பினும், அதையே மற்றவர்களும் அறமாகக் கருதுகின்றனர். ஆனால், பலவீனமான மனிதன் எதை அறமாகக் கருதுகிறானோ அஃது உயர்ந்த அறமாக இருப்பினும், அதை எள்ளளவும் கருத மாட்டார்கள்.(15) ஈடுபட்டிருக்கும் காரியத்தின் முக்கியத்துவத்தாலும், அதன் சிக்கல் மற்றும் நுட்பமான தன்மையாலும், நீ கேட்கும் கேள்விக்குத் தீர்மானமான பதிலை என்னால் சொல்ல இயலவில்லை.(16) இருப்பினும், அனைத்துக் குருக்களும் பேராசைக்கும் முட்டாள்தனத்துக்கும் அடிமையாகிவிட்டார்கள் என்பது நிச்சயம். நமது குலத்தின் அழிவு வெகு தொலைவில் இல்லை.(17) 

ஓ அருளப்பட்டவளே {திரௌபதியே}, நீ மருமகளாக நுழைந்திருக்கும் குடும்பம் எப்படிப்பட்டதெனில், அந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள், எவ்வளவுதான் துன்பத்தால் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் அறத்திலிருந்தும் நெறிகளிலிருந்தும் வழுவுவதில்லை.(18) ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, நீ இவ்வளவு துயரப்படும்போதும், உனது பார்வை அறத்திலும் அறநெறியில் நிறைந்திருக்கும் உனது நடத்தையும் உனக்கு தகுதியுடையதே.(19) அறநெறிகளை அறிந்த துரோணர் மற்றும் இங்கிருக்கும் பல முதியவர்கள், தங்கள் தலையைத் தொங்கப் போட்டு இறந்தவர்கள் போல உயிரற்ற உடலாக அமர்ந்திருக்கின்றனர்.(20) இருப்பினும், இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் அதிகாரம் உடையவன் யுதிஷ்டிரன் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீ வெல்லப்பட்டாயா? வெல்லப்படவில்லையா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியவன் அவனே {யுதிஷ்டிரனே}", என்றார் {பீஷ்மர்}.(21)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்