Thursday, October 31, 2013

சுவடுகளைத் தேடி.... (திரௌபதி சிரித்தாள்)

செப்டம்பர் 9, 2013 அன்று சபா பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கினேன். அன்று விநாயகர் சதுர்த்தி. சபா பர்வத்தில் கதையோட்டம் அதிகம் இருக்காது, கதாபாத்திரங்கள் பேசும் மொழிகளே அதிகம் இருக்கும். பல புரியாத சொற்களுக்கு அகராதியைத் தேடி மொழி பெயர்க்க வேண்டியிருக்கும். ஆகையால், சபாபர்வத்தை ஆரம்பித்த போது, இதை முடிக்க குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் என்று எண்ணினேன்.


ஆனால், என் நண்பர் திரு.ஜெயவேலன் அவர்கள், "அவ்வளவு நாளெல்லாம் ஆகாதுங்க... சீக்கிரம் முடிங்க... ஒரு மாசத்துல முடிச்சிருவீங்க பாருங்க. ஆயுத பூஜைக்குள் முடிக்கிறதுனு மனசுல முடிவு பண்ணி முடிங்க" என்றார்.

நானும் என்னால் முடிந்த மட்டும் மற்ற அலுவலகப் பணிகளுக்கிடையில் பகலிலும் சிறிது நேரம் ஒதுக்கி மொழிபெயர்த்தேன். இருப்பினும், நான் எதிர்பார்த்தது போலவே சற்று சிரமமாகத் தான் இருந்தது. ஐம்பதாவது பகுதி வந்த போது தேதி அக்டோபர் 9, 2013 ஆகியிருந்தது. 13-அக்டோபர்-2013 அன்று ஆயுத பூஜை. கண்டிப்பாக அதற்குள் முடிக்க முடியாது. அதுவும் இனிமேல் வரப்போகும் முப்பது பகுதிகளும் கதை நகராது. அனைத்திற்கும் அகராதியை நாட வேண்டியிருக்கும். கண்டிப்பாக இன்னும் முப்பது நாளாவது ஆகும். இதை நான் நினைத்துக் கொண்டிருந்த போதே அதற்கு முந்தைய நாள் எழுதிய பதிவின் தலைப்பு என் நினைவுக்கு வந்தது.

தலைப்பின் பெயர், "திரௌபதி சிரித்தாளா?". ஆம் திரௌபதி சிரிக்கத்தான் செய்தாள். "நீங்கள் திட்டம் போட்டு முடிக்க, இது நீங்கள் நினைத்தது போல எழுதும் காப்பியமா? இதை முடிக்க பேரருள் வேண்டாமா? இது மனித முயற்சியால் மட்டும் நடக்கக்கூடிய காரியமா? மகாபாரதத்தைப் பெயர்க்கத் தொடங்கிய போதுதான் விளையாட்டாக ஆரம்பித்தாய்... முடிப்பதும் நீ நினைத்தது போன்ற விளையாட்டா? முடிப்பது உன் கையில் இல்லை மகனே!" என்று என் கண் முன்னே வந்து நின்று சிரித்தாள்.

அகங்காரத்துடன் பாண்டவ மாளிகைக்குள் நுழைந்த துரியோதனன், நீருக்குள் விழுந்து கர்வபங்கப்பட்ட போது திரௌபதி சிரித்தாள். இப்போதும் நம் முன்னே வந்து சிரிக்கிறாளே. "ஆம்! நாமும் துரியோதனன் போலத் தானே இருக்கிறோம். பெரும் நதியில் ஒரு கையளவு நீரை அள்ளிப் பருகிவிட்டு. இதை முழுவதும் குடிக்க எத்தனை நாள் ஆகும் என்று திட்டம் போட்ட கதையாக அல்லவா இருக்கிறது. இதற்குள் எவ்வளவு கர்வம் வந்து விட்டது நமக்கு. இனி நாளெல்லாம் குறிக்கக்கூடாது. அது போகிற போக்கில் போகட்டும். என்று முடியுமோ! அன்று அதுவாகவே முடியும்.

இன்று நாம் துரியோதனனாகத் தான் இருக்கிறோம். இந்தக் காப்பியம் பெயர்த்து முடிக்கப்படும் போது, நிச்சயம் பரமனுக்குப் பிடித்த அகங்காரமற்ற உண்மையான மனிதனாக இருக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டேன். என்ன ஆச்சரியம், அடுத்த சில நாட்களிலேயே {18 நாட்கள்} எண்பது பகுதிகளும் நான் எதிர்பார்த்தைவிட விரைவாக முடிந்தது.

இன்று காலை திரு.ஜெயவேலன் அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். சபா பர்வத்தை முடித்துவிட்டீர்கள். வாழ்த்துகள். மஹாபாரதப் பதிவுகளின் பக்க பார்வைகள் {page views} 2 லட்சம் கடந்து விட்டது. பார்த்தீர்களா? என்று கேட்டார். ஆம் பார்த்தேன் என்றேன். ஆதிபர்வம் முடித்த போது 1 லட்சம் பார்வைகள் பெற்றிருந்தது நமது வலைப்பூ. ஆனால் சபா பர்வத்துக்கு மிக விரைவாக மேலும் 1 லட்சம் பார்வைகள் கிடைத்தன.

அதற்கு பெரிதும் காரணமானவர் திரு.ஜெயவேலன் அவர்கள். நமது வலைப்பூவில் நான் செலவிட்ட நேரத்தைவிட அதிகம் செலவிட்டவர் அவர்தான். நேரத்தை மட்டுமல்ல பொருளையும் செலவளித்தார். முகநூலில் நமது பதிவுகளைப் பகிர்ந்து கொண்டே இருந்தார். அந்தப் பதிவுகளை ஊக்கப்படுத்த முகநூலுக்கு கட்டணமும் செலுத்தினார். முகநூலில் 12,000 likeகள் கிடைத்திருக்கிறது.

தொலைபேசியைத் துண்டித்தபோது, நான் இன்று உங்களை வந்து சந்திப்பேன். வெளியில் செல்லும் எண்ணம் எதுவும் இல்லை அல்லவா என்று கேட்டுவிட்டுத்தான் துண்டித்தார். காலை 11 மணி அளவில் எனது அலுவலகத்திற்கு வந்தார். வரும்போதே ஒரு பை நிறைய புத்தகங்களை அள்ளி வந்தார். "அனைத்தும் புராணங்கள். அனைத்தையும் முடிந்த வரை படிங்க. மஹாபாரத மொழியாக்கத்துக்கு இவை உங்களுக்குப் பயன்படும்" என்று சொல்லி கொடுத்தார். பிறகு, மேலும் முழு மஹாபாரத வலைப்பூவை எப்படியெல்லாம் மெருகேற்றலாம் என்பது குறித்து  விவாதித்தோம்.

"வனபர்வத்தையும் விரைவாகப் பெயர்க்கவேண்டும். எவ்வளவு நாட்கள் ஆகும் என்று கேட்டார். அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த திரௌபதியை அவர் கவனித்திருக்க வாய்ப்பில்லை. நான் கண்டேன். மனதிற்குள் திரௌபதியை வணங்கினேன். கண்ணை மூடிக்கொண்டு குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்றேன். அவ்வளவு நாள் எல்லாம் ஆகக்கூடாதுங்க. பாருங்க ஆறு மாதத்தில் முடிச்சுடுவீங்க என்றார். அதை திரௌபதியின் வாக்காகவே கருதி, "நம்ம கையில என்ன இருக்கு, நீங்க சொன்ன காலத்துக்குள்ள முடிக்க நான் கண்டிப்பா முயற்சிப்பேன்" என்றேன். கண்திறந்து பார்த்தேன். திரௌபதி அங்கில்லை. என்ன நினைத்தாளோ தெரியவில்லை.

அவர் கிளம்பும் நேரம் வந்தது. "ஐயோ மறந்துட்டேங்க என்று பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து எனது கைகளில் கொடுத்தார். "பணம் தானே" என்றேன். "இல்லைங்க பரிசு" என்றார். "எனக்குத்தான் தெரியுதே. இது பணம் தான்" என்றேன். "உங்களுக்குப் பணம், எனக்கு பரிசுங்க" என்றார். "சீக்கிரம் வனபர்வத்தை ஆரம்பிங்க" என்று சொல்லிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் பறந்தார்.

கவரைப் பிரித்துப் பார்த்தேன். எதிர்பார்த்தது போலவே எட்டாயிரம் ரூபாய் இருந்தது. ஒரு வாரமாக உடம்பு முடியாமல் வீட்டில் படுத்திருந்தவர். சபா பர்வம் முடிந்தது என்று தெரிந்ததுமே, புத்தகங்களை எடுத்துக் கொண்டு என்னைப் பார்க்க வந்து விட்டார். நான் திரு.ஜெயவேலன் அவர்களிடம் கடன் பட்டுக் கொண்டே இருக்கிறேன். எப்படி அடைக்கப் போகிறேன்? தெய்வங்களை வேண்டிக் கொள்வதைவிட என்னால் ஆகக்கூடியது எதுவுமில்லை.

திரு.செல்வராஜ் ஜெகன் என்ற நண்பர் ஒருவர், சபா பர்வம் ஐம்பது பகுதிகள் முடிந்ததுமே. அந்த ஐம்பது பகுதிகள் வரை ஒரு Ms word கோப்பாக படங்களுடன் சேகரித்து அனுப்பி வைத்து, இதை மின்னூலாக்கி வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சபாபர்வம் மொத்தம் 80 பகுதிகள் தானே, ஆகையால் முழுவதுமாகவே போட்டுவிடலாம் என்று அவருக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்.

வன பர்வத்தில் இருபது பகுதிகள் சென்ற பிறகு சபா பர்வம் மின்னூலை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். உடனே வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள், அனைத்துப் பகுதிகளையும் சேகரித்து உடனே அனுப்பி விடுவார். ஆனால், அப்படி உடனே வெளியிட்டால் வலைப்பூவின் பக்க பார்வைகள் {page view} குறைகின்றன. பக்க பார்வைகளுக்காக திரு.ஜெயவேலன் நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆகையால், வனபர்வத்தில் சில பகுதிகள் சென்ற பிறகே சபா பர்வம் மின் நூல் வெளி வரும்.

மேலும், ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கும் ஆதிபர்வம் மின்னூலில் பல பிழைகள் இருக்கின்றன. அந்த மின்னூலை வெளியிட்ட பிறகு, திரு.ஜெயவேலன் அவர்கள் நிறைய திருத்தங்களைச் செய்திருக்கிறார். மின்னூல் வெளியிட்டு விட்டால், அதுவே இறுதியானது என்று வாசகர்கள் யாரும் நினைத்துக் கொள்ள வேண்டாம். பிழைகள் சுட்டிக்காட்டப்படும் போதெல்லாம், முழு மஹாபாரதப் பதிவுகள் திருத்தத்துக்கு உட்பட்டே தீரும். ஆகையால் மின்னூலை பதிவிறக்கி வைத்துக் கொண்டாலும், வலைப்பூவில் செய்யப்படும் திருத்தங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் கவனித்துக் கொள்ள வசதியாகத் தான் நமது வலைப்பூவில் மஹாபாரத ஆக்கம் - நாட்குறிப்பு என்ற ஒரு பகுதியை ஆரம்பித்திருக்கிறோம்.

மேலும் புதிய சேர்க்கைகளாக மகாபாரத நீதிமொழிகள் , மஹாபாரத பாத்திரங்களின் பெயர்க்காரணங்கள் , மஹாபாரத வரைபடங்கள் (Maps from Mahabharatha)  போன்ற பகுதிகளை திரு.ஜெயவேலன் அவர்கள் தொடங்கி பராமரித்து வருகிறார். மேலும் நான் எனது பங்கிற்கு, www.hindunet.org என்ற வலைத்தளத்தில் Dr.K.N.S.பட்நாயக் The Mahabharata Chronology என்று ஆங்கிலத்தில் கொடுத்திருப்பதை , நமது வலைப்பூவில், மஹாபாரதம் கால அட்டவணை என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறேன்.

நான் சொல்ல நினைத்தது அனைத்தையும் சொல்லிவிட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்துகிறேன். இதுவரை ஆதரவளித்த நண்பர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தர வேண்டும். இந்தப் பதிவுகள் அனைத்து தமிழர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதே நம் விருப்பம். ஆகையால், முழு மஹாபாரதப் பதிவுகளைப் படிக்கும் வாசக நண்பர்கள், முகநூல் {Facebook}, கீச்சு (Twitter) போன்ற சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பிற வலைத்தளங்களிலும் இப்பதிவுகளைப் பகிர்ந்து, தங்கள் ஆதரவை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
30.10.2013


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்