Friday, March 02, 2018

வெற்றியாளனின் நடந்தை! - சாந்திபர்வம் பகுதி – 96

The behaviour of the conqueror! | Shanti-Parva-Section-96 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 96)


பதிவின் சுருக்கம் : வெல்லப்பட்ட எதிரியை நடத்த வேண்டியதெவ்வாறு? கைப்பற்றப்பட்ட கன்னிகையிடம் நடந்து கொள்ளும் முறை என்ன? கைப்பற்றப்பட்ட உடைமைகளை எவ்வாறு கையாள வேண்டும்? எதிரிநாட்டு மக்கள் எவ்வாறு இணங்கச் செய்யப்பட வேண்டும்? வேர்களை உறுதியாகக் கொண்டவனும், உலகின் வழிகளை அறிந்தவனுமான மன்னன் எவன்? பிரதர்த்தன், திவோதாசன் மற்றும் நாபாகன் ஆகியோர் படையெடுத்துச் சென்று செய்ததென்ன?  போன்றவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் ஒடுக்கும் செயல் மொத்த பூமியின் அரசுரிமையையும் ஒரு மன்னனுக்குக் கொடுக்கும் என்றாலும், அவன் ஒருபோதும் அவ்வாறு அடக்க விரும்பக்கூடாது. நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வெற்றியடையும் எந்த மன்னன்தான் அதன்பிறகு மகிழ்ச்சியடைவான்?(1) அநீதியால் களங்கப்படும் வெற்றியானது, நிச்சயமற்றதும், சொர்க்கத்திற்கு வழிநடத்தாததுமாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, அத்தகு வெற்றியானது, மன்னன் மற்றும் பூமி ஆகிய இரண்டையும் பலவீனப்படுத்தும்.(2) கவசம் நழுவிய போர்வீரன், "நான் உன்னவன்" என்று சொல்லி சரணடைந்தவன், கரங்கூப்புபவன், தன் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டவன் ஆகியோரை வெறுமனே கைப்பற்ற வேண்டுமேயன்றி ஒருபோதும் கொல்லக்கூடாது.(3) ஓர் எதிரி மன்னன், படையெடுப்பாளனின் துருப்புகளால் வெல்லப்பட்டால், பின்னவன் வெல்லப்பட்ட தன் எதிரியுடன் போரிடக்கூடாது. மறுபுறம், அவன் அவனைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து, "நான் உன் அடிமை" என்று சொல்லும் வகையில் ஒரு வருடகாலம் அவனை இணங்கியிருக்கச் செய்ய வேண்டும். அவன் அதைச் சொன்னாலும், சொல்லாவிட்டாலும், வெற்றியாளனின் வீட்டில் ஒரு வருடம் வாழும் வெல்லப்பட்ட அந்த எதிரி, புதிய வாழ்வுக் காலத்தையே அடைகிறான்[1].(4)


[1] "இந்த இடத்தில் மூலச் சொற்கள் மிக நீண்டவையாகச் சிக்கலானவையாக இருக்கின்றன. எனவே, நான் உரையாசிரியரின் விளக்கத்தையே இங்கே விரித்துச் சொல்லியிருக்கிறேன். இரண்டாவது வரியின் இறுதிப் பாதியைப் பொறுத்தவரையில் நான் நீலகண்டனின் விளக்கத்தைப் பின்பற்றவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவரை ஓராண்டு அடக்கி வைக்க வேண்டும். அதன்பிறகு அவன் மறுபிறப்புள்ளவனாகிறான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "அவன் ஒரு வருடத்திற்கு அன்புடன் (வீட்டுக்காவலில்) தங்க வைக்கப்பட வேண்டும். அஃது அவன் மீண்டும் பிறந்ததைப் போல இருக்கும்" என்றிருக்கிறது.

ஒரு மன்னன், வெல்லப்பட்ட எதிரியின் வீட்டில் இருந்து ஒரு கன்னிகையைப் பலவந்தமாகக் கொண்டு வந்தால், அவளை ஒரு வருடம் {பாதுகாப்பாக} வைத்திருந்து, பிறகு அவள் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறாளா, அல்லது வேறு எவரையும் திருமணம் செய்து கொள்கிறாளா என்று கேட்க வேண்டும். அவள் ஏற்கவில்லை என்றால், அவள் {அவளது நாட்டுக்கே} திரும்ப அனுப்பப்பட வேண்டும். பலவந்தமாக அடையப்பட்ட பிற செல்வங்களைப் {அடிமைகள் [பணியாட்கள்]} பொறுத்தவரையிலும் கூட இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(5) கள்வர்கள் மற்றும் {மரண} தண்டனைக்குக் காத்திருப்போர் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்வத்தை மன்னன் ஒருபோதும் தனதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரியிடம் இருந்து பலவந்தமாகக் கைப்பற்றப்பட்ட பசுக்கள், பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அவ்விலங்குகளின் பாலை அருந்துவார்கள். எதிரியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட காளைகள் உழவுப் பணியில் நிறுவப்பட வேண்டும், அல்லது எதிரியிடமே மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்[2].(6) ஒரு மன்னன், மற்றொரு மன்னனிடமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. எவன் மன்னனாக இல்லையோ அவன் வேறொரு மன்னனை ஒருபோதும் தாக்கக்கூடாது.(7) ஒரு பிராமணன், அமைதியை விரும்பியவனாக, போரிட்டுக்கொள்ளும் இரு படைகளுக்கு மத்தியில் அச்சமில்லாமல் சென்றால், இரு தரப்பும் உடனடியாகப் போரைக் கைவிட வேண்டும்.(8) ஒரு பிராமணனைக் கொல்லவோ, காயப்படுத்தவோ செய்பவனும் ஒரு நித்திய விதியை உடைப்பான். எந்த க்ஷத்திரியனாவது அவ்விதியை உடைத்தால், அவன் தன் வகையில் இழிந்தவனாவான்.(9) இதனுடன் சேர்த்து, அறத்தை அழித்து, நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மீறும் அந்த க்ஷத்திரியன், ஒரு க்ஷத்திரியனாக இருக்கத் தகாதவனாகவே கருதப்பட்டுச் சமூகத்தில் இருந்து விரட்டப்பட வேண்டும்.(10)

[2] "இந்தச் சுலோகமும் மூலத்தில் மிக நீளமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {5 மற்றும் 6ம் சுலோகங்கள்}, "பராக்ரமத்தால் அபகரிக்கப்பட்ட கன்னிகையை ஒரு வருஷத்திற்கு முன் வினவக்கூடாது {அடிக்குறிப்பில், ’ஒரு வருஷத்திற்குப் பின், "நீ மணம்புரிய விரும்புவது என்னையா, அல்லது மற்றவனையா’ என்று கேட்டு அவளிஷ்டம் போலச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது}. பலாத்காரமாக அபகரிக்கப்பட்ட பொருளும் மற்றமுள்ள யாவும் இவ்விதமேயாகும். {அடிக்குறிப்பில், "சத்துருவினிடமிருந்து அபகரிக்கப்பட்ட வேலைக்காரன் முதலானவர்களையும், ஒரு வருஷம் சென்றவுடன் சத்துருவுக்கே கொடுத்துவிட வேண்டும். அப்படிச் செய்வது இனாம் கொடுத்தது போலாகும் என்பது பொருள்" என்றிருக்கிறது}. கொலை செய்யத்தக்கவனுடைய பொருளை வைத்துக் கொள்ளக்கூடாது; செலவு செய்துவிட வேண்டும். (அவனுடைய) பசுக்களின் பாலை பிராமணர்களே குடிக்கலாம்; காளைகளையும் உபயோகித்துக் கொள்ளலாம். அவன் குற்றவாளியாக இல்லாவிட்டால் அவனை க்ஷமிக்க வேண்டும்" என்றிருக்கிறது. அடிமை என்ற சொல் பணியாள் என்றே கொள்ளப்பட வேண்டும்.

வெற்றியடைய விரும்பும் ஒரு மன்னன் அத்தகு நடத்தையை ஒருபோதும் பின்பற்றக்கூடாது. நியாயமாக வென்ற வெற்றியை விட ஈட்டுதவற்கு வேறென்ன பெரிதாக இருக்கிறது?(11) (அண்மையில் வெற்றிகொள்ளப்பட்ட ஒரு நாட்டில் உள்ள) எளிதில் சினங்கொள்கின்ற வர்க்கத்தினர், ஆறுதலான வார்த்தைகளாலும், கொடைகளாலும் தாமதமில்லாமல் இணங்கச்செய்யப்பட வேண்டும். இது மன்னன் பின்பற்றத் தகுந்த நல்ல கொள்கையாகும். இதைச் செய்வதற்குப் பதில் இம்மனிதர்களைக் கொள்கையில்லாத அளவில் ஆள முனைந்தால், அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று (வெற்றியாளனுடைய) எதிரிகளின் தரப்பைச் சேர்ந்து, (வெற்றியாளனை எதிர்ப்பதற்கானப்) பேரிடர் நேரக் காத்திருப்பார்கள்.(13) நிறைவில்லாத மனிதர்கள், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் இடர்களைக் கவனித்து, ஆபத்தான காலங்களில் காலதாமதமின்றிப் பின்னவனுடைய {மன்னனுடைய} எதிரிகளின் தரப்பில் சேர்ந்து கொள்வார்கள்.(14) ஓர் எதிரி நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் வஞ்சிக்கப்படக்கூடாது. அதே போல அவன் மரணம் அடையும் அளவுக்குக் காயப்படுத்தப்படக்கூடாது. அவ்வாறு தாக்கினால் அவனது உயிரே போய்விடக் கூடும்[3].(15)

[3] "வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால் எதிரி கொல்லப்படக்கூடாது, அவ்வாறு கொல்லப்பட்டால் அது பாவம்நிறைந்த செயலாகும். எனினும், நியாயமான போரில் ஓர் எதிரியைக் கொல்வது தகுதிவாய்ந்தது {புண்ணியம் நிறைந்தே} என்பதே இங்குப் பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

குறைந்த வளங்களே கொண்ட ஒரு மன்னன், அதை வைத்துக் கொண்டு நிறைவுடன் இருந்தால், அவன் வாழ்வதே பெரிதெனக் கருதுபவனாவான்[4].(16) எந்த மன்னன், பரந்து விரிந்த, செல்வம் நிறைந்த ஆட்சிப் பகுதிகளைக் கொண்டவனோ, பற்றுறுதியுடன் கூடிய குடிமக்களைக் கொண்டவனோ, மனநிறைவுடன் இருக்கும் பணியாட்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்டவனோ, அவனே தன் வேர்களை உறுதியாகக் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.(17) எந்த மன்னனின் ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள், சாத்திரங்களை நன்கறிந்தவர்கள், கௌரவங்களுக்குத் தகுந்த பிறர் ஆகியோர் முறையாகக் கௌரவிக்கப்படுகிறார்களோ, அவனே இவ்வுலகின் வழிகளை அறிந்தவன் என்று சொல்லப்படுகிறான்.(18) இத்தகு நடத்தையின் மூலமே இந்திரன் உலகத்தின் அரசுரிமையைப் பெற்றான். இந்த நடத்தையின் மூலமே பூமி சார்ந்த மன்னர்கள், இந்திரனின் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(19)

[4] "இந்தச் சுலோகம் புரிந்து கொள்ளும் வகையில் இல்லை, அல்லது முன்பு சொன்னதற்குத் தொடர்புடையதாகவும் இல்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் {அந்த இரண்டு சுலோகங்களில்}, "விரோதியை அவமதித்து வஞ்சிக்கக்கூடாது. எவ்விதத்திலும் அதிகமாக அடிக்கவுங்கூடாது. அதிகமாக அடிக்கப்பட்ட மனிதன் ஒருஸமயம் உயிரையும் விட்டுவிடுவான். துன்பப்படுத்தப்பட்டவன் சிறிது திரவியத்தைப் பெற்றிருந்தும் ஸந்தோஷப்பட மாட்டான். அவ்விதமுள்ளவன் உயிர் ஒன்றை மாத்திரமே பெரிதாக நினைப்பான்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஓர் எதிரி நிந்திக்கப்படவோ, எவ்வழியிலும் கடுமையாகத் தாக்கப்படவோ கூடாது. கடுமையாகத் தாக்கப்பட்டால் அம்மனிதனின் உயிரே முடிந்துவிடும். ஒருவன் சிறிதளவே உடைமைகளைப் பெற்றிருந்தாலும், அவன் பெரிய குற்றமேதும் இழைக்கப்படாததால் நிறைவுடன் இருக்க வேண்டும். உயிர் மட்டுமே எஞ்சியிருக்கிறது என்று இவ்வாறு மீண்டும் மீண்டும் அவன் நினைப்பான்" என்றிருக்கிறது.

மன்னன் பிரதர்த்தனன், பெரும்போரில் தன் எதிரிகளை அடக்கி, தானியங்கள், மருத்துவ மூலிகைகள் உள்ளிட்ட அவர்களுடைய செல்வமனைத்தையும் எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய நிலத்தைத் தீண்டாமல் விட்டுவிட்டான்.(20) மன்னன் திவோதாசன், தன் எதிரிகளை அடக்கிய பிறகு, அவர்களுடைய வேள்வி நெருப்பில் எஞ்சியவற்றையும், (காணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த) தெளிந்த நெய்யையும், அவர்களது உணவையும் எடுத்துக் கொண்டான். இதன் காரணமாக அவன் வெற்றி கொண்டதன் தகுதியை இழந்தான்[5].(21) மன்னன் நாபாகன் (தன் படையெடுப்புகள் முடிந்ததும்), கல்விமான்களான பிராமணர்கள் மற்றும் தவசிகளின் செல்வத்தைத் தவிர்த்து, மொத்த நாடுகளையும் அதன் ஆட்சியாளர்களோடு சேர்த்துப் பிராமணர்களுக்கான வேள்விக்கொடையாகக் கொடுத்தான்.(22) ஓ யுதிஷ்டிரா, பழங்காலத்தின் நீதிமிக்க மன்னர்கள் அனைவரின் நடத்தைகள் சிறப்பானவையாக இருக்கின்றன. அவற்றை நான் மொத்தமாக அங்கீகரிக்கிறேன்.(23) எந்த மன்னன் தன் செழிப்பை விரும்புவானோ, அவன் சிறப்பான அனைத்தின் துணை கொண்டு படையெடுக்க முனைய வேண்டுமேயன்றி, வஞ்சகத்துடனோ, செருக்குடனோ அல்ல" என்றார் {பீஷ்மர்}.(24)

[5] "மன்னன் பிரதர்த்தனன் முறையானதை எடுத்துக் கொண்டதால் எந்தப் பாவத்தையும் இழைக்கவில்லை. எனினும் மன்னன் திவோதாசன் எடுக்கக்கூடாததை எடுத்ததால் அவன் வெற்றிகொண்டதன் தகுதி {புண்ணியம்} அனைத்தையும் இழந்தான் என்பதே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 96ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்