Monday, April 23, 2018

வேடனின் கதி! - சாந்திபர்வம் பகுதி – 149

The end which the fowler attained! | Shanti-Parva-Section-149 | Mahabharata In Tamil

(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 19)


பதிவின் சுருக்கம் : புறாக்கள் அடைந்த நற்பேற்றைக் கண்ட வேடன், தானும் அதே கதியை அடைய வேண்டும் என்றெண்ணி நெடும்பயணம் மேற்கொண்டான்; இறுதியில் ஒரு பெருங்காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நுழைந்து சொர்க்கத்தை அடைந்தான்; இந்தக் கதையைச் சொல்லி, இதனைக் கேட்பதன் மூலம் ஒருவன் அடையும் பலனை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "{பரசுராமர் முசுகுந்தனிடம் தொடர்ந்தார்}, ஓ! மன்னா, அந்த இணை {புறாக்கள்} தெய்வீகத் தேரில் அமர்ந்திருப்பதை வேடன் கண்டான். அந்த இணையைக் கண்ட அவன் {வேடன்}, (தன் பேறின்மையை நினைத்துக்) கவலையில் நிறைந்தவனாக, அதே கதியை அடையும் வழிமுறைகளைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கினான்.(1) அவன் தனக்குள்ளேயே, "அந்தப் புறாவைப் போன்ற துறவுகளின் மூலம் நான் அத்தகைய உயர்ந்த கதியை அடைய வேண்டும்" என்று நினைத்தான். பறவைகளைக் கொன்று வாழ்ந்த அந்த வேடன் இந்தத் தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, திரும்பி வராத பயணத்திற்குப் புறப்பட்டான்.(2) (உணவை அடைவதற்கு) எந்த முயற்சியும் செய்யாமல், காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த அவன், சொர்க்கத்தை அடையும் விருப்பத்தால் தன் பற்றுகள் அனைத்தையும் கைவிட்டான்.(3)

சிறிது தொலைவுக்குச் சென்றதும், பரந்ததும், குளுமையான தூய நீர் நிறைந்ததும், தாமரைகளால் அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகை நீர்க்கோழிகளால் நிறைந்ததுமான ஓர் இனிமையான தடாகத்தைக் கண்டான்.(4) அத்தகைய தடாகத்தைப் பார்ப்பதாலேயே ஒருவனுடைய தாகம் தணிந்து விடும் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா {முசுகுந்தா}, எனினும் நோன்புகளால் மெலிந்திருந்த அந்த வேடன்,(5) அதில் தன் கண்களைச் செலுத்தாமல், இரைதேடும் விலங்குகள் வசித்த ஒரு காட்டின் பெரும்பரப்பை முன்கூட்டிய உறுதி செய்துகொண்டு, அதற்குள் மகிழ்ச்சியாக நுழைந்தான். அந்தக் காட்டுக்குள் நுழைந்தபிறகு, அவன் கூர் முனைகளைக் கொண்ட முட்களால் பெரிதும் பீடிக்கப்பட்டான்.(6)

அந்த முட்களால் கிழிபட்டு, புண்ணடைந்து, மேனியெங்கும் குருதியால் மறைக்கப்பட்ட அவன், பல்வேறு வகை விலங்குகள் நிறைந்ததும், மனிதர்களற்றதுமான அந்தக் காட்டில் திரியத் தொடங்கினான்.(7) பலமிக்கக் காற்றால் பெருமரங்களுக்கிடையில் நடந்த உராய்வின் விளைவாக ஒரு பெரிய காட்டுத்தீ எழுந்தது.(8) சீற்றமிக்க அந்தப் பூதம் {அக்னி}, யுக முடிவில் ஏற்படுவதைப் போலத் தன் காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு, நெடுமரங்கள், அடர்த்தியான புதர்கள் மற்றும் கொடிகளால் நிறைந்த அந்தப் பெருங்காட்டை எரிக்கத் தொடங்கியது.(9)

உண்மையில், காற்றின் மூலம் வீசப்பட்ட தழல்களுடனும், அனைத்துத் திசைகளிலும் பறக்கும் கீற்றுக் கூட்டங்களுடனும் கூடியவனும், அனைத்தையும் எரிப்பவனுமான அந்தத் தேவன் {அக்னி}, பறவைகளும், விலங்குகளும் நிறைந்த அந்த அடர்த்தியான காட்டை எரிக்கத் தொடங்கினான்.(10) தன் உடலைக் கைவிட விரும்பிய அந்த வேடன், பரவும் தீயை நோக்கி மகிழ்ச்சியான இதயத்துடன் ஓடினான்" {என்றார் பரசுராமர்}.(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அந்நெருப்பால் எரிக்கப்பட்ட அந்த வேடன், தன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்தவனாக, உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12)

அவனது இதய நோய் விலகியது; இறுதியில் அவன், யக்ஷர்கள், கந்தர்வர்கள் மற்றும் தவ வெற்றியால் மகுடம்சூட்டப்பட்டவர்களுக்கு மத்தியில் இந்திரனைப் போன்ற காந்தியுடன் சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனாகத் தன்னைத் தானே கண்டான்.(13) இவ்வாறு அந்தப் புறாவும், அர்ப்பணிப்புமிக்க அதன் மனைவியும், அந்த வேடனுடன் சேர்ந்து தங்கள் தகுதிமிக்கச் செயல்களால் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(14) இவ்வாறு தன் தலைவனைப் பின்தொடரும் {தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்ட} ஒரு பெண், விரைவாகச் சொர்க்கத்தை அடைந்து, நான் சொன்ன பெண்புறாவைப் போலக் காந்தியுடன் ஒளிர்வாள்[1].(15)

[1] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் புண்ய கர்மத்தால் ஆண்புறாவும், பதிவ்ரதையான பெண்புறாவும், வேடனும் ஸ்வர்க்கமடைந்தார்கள். இவ்விதமே, வேறு எந்த ஸ்திரீ பதியை அனுசரித்திருக்கிறாளோ அவளும் சீக்கிரமாகப் பெண்புறாவைப் போலத் தேவலோகத்திலிருந்து கொண்டு விளங்குவாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவ்வழியிலேயே, தங்கள் மங்கலச் செயல்களின் காரணமாக ஆண்புறாவும், தன் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்டிருந்த பெண்புறாவும், லுப்தகனின் துணையுடன் உண்மையில் சொர்க்கத்திற்குச் சென்றனர். இவ்வழியில் தன் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒரு பெண் இந்தப் பெண்புறாவைப் போல விரைவில் சொர்க்கத்தில் நிறுவப்பட்டு அங்கே ஒளிர்ந்து கொண்டிருப்பாள்" என்றிருக்கிறது. கணவனைப் பின்தொடர்வது என்று கங்குலியில் உள்ள சொற்றொடர் இந்த இரண்டு பதிப்புகளிலும் இல்லை. எனவே இந்தத் தொடரைக் கணவனிடம் அர்ப்பணிப்புக் கொண்ட பெண் என்றே கொள்ள வேண்டும்.

இதுவே அந்த உயர் ஆன்ம வேடன் மற்றும் புறாவின் பழைய வரலாறாகும். இவ்வாறே அவர்கள் தங்கள் அறச் செயல்களால் உயர்ந்த தகுதியுள்ள கதியை அடைந்தனர்.(16) இந்தக் கதையைத் தினமும் கேட்கவோ, தினமும் உரைக்கவோ செய்பவனின் மனத்தில் தவறுகள் ஊடுருவினாலும் அவனுக்கு எந்தத் தீங்கும் நேராது.(17) ஓ! யுதிஷ்டிரா, ஓ! அறவோர் அனைவரிலும் முதன்மையானவனே, சரணடைந்த ஒருவனைக் காப்பது உண்மையில் தகுதியுடையவோரின் உயர்ந்த செயலாகும். பசுவைக் கொன்றவனும், இந்தக் கடமையைச் செய்தால், அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(18) எனினும், சரணடைந்தவனைக் கொல்லும் மனிதனோ, ஒருபோதும் {அந்தப் பாவத்திலிருந்து} தூய்மையடையமாட்டான். புனிதமானதும், பாவத்தைத் தூய்மைப்படுத்துவதுமான இந்தக் கதையைக் கேட்பதன் மூலம் ஒருவன் துன்பத்தில் இருந்து விடுபட்டு, இறுதியில் சொர்க்கத்தை அடைவான்" என்றார் {பீஷ்மர்}.(19)

சாந்திபர்வம் பகுதி – 149ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்