Thursday, May 24, 2018

வர்ணக் குறியீடுகள்? - சாந்திபர்வம் பகுதி – 189

The characteristics of varnas! | Shanti-Parva-Section-189 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 16)


பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் குறியீடுகளையும், பிரம்மத்துடன் கலப்பதற்கான தகுதிகளையும் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...


The characteristics of varnas! | Shanti-Parva-Section-189 | Mahabharata In Tamil
The characteristics of varnas! | Shanti-Parva-Section-189 | Mahabharata In Tamil
பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "ஒருவன் எந்தச் செயல்பாடுகளின் மூலம் ஒரு பிராமணனாகிறான்? எதனால் ஒரு க்ஷத்திரியனாகிறான்? ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, மேலும் என்ன செயல்பாடுகளின் மூலம் ஒருவன் வைசியானாகவும், சூத்திரனாகவும் ஆகிறான்? ஓ! பேச்சாளர்களில் முதன்மையானவரே, இவற்றை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டார்.(1)

பிருகு {பரத்வாஜரிடம், "ஜாதம் {ஜாதகர்ம} என்றழைக்கப்படும் சடங்குகள் மற்றும் அத்தகைய சடங்குகளால் புனிதமடைந்தவனும்; ஒழுக்கத்தில் தூய்மையானவனும்; வேத கல்வியில் ஈடுபடுபவனும்; நன்கு அறியப்பட்ட ஆறு செயல்களில் (காலையும், மாலையும் தூய்மைச் சடங்குகள் செய்தல்; மந்திரங்களை அமைதியாக ஓதுதல்; வேள்வி நெருப்பில் ஆகுதி ஊற்றுதல்; தெய்வங்களை வழிபடுதல், விருந்தோம்பல் கடமைகளின் படி விருந்தினர்கள் உபசரித்தல், விஸ்வதேவர்களுக்கு உணவளித்தல் ஆகிய ஆறு செயல்களில்) அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவனும்;(2) பக்திச் செயல்பாடுகள் அனைத்தையும் செய்பவனும்; தேவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் முறையாக உணவளிக்காமல் உண்ணாதவனும்; ஆசான் மீது பெரும் மதிப்பு கொண்டவனும்; நோன்புகள் மற்றும் வாய்மையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவனுமான ஒருவன் பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(3) எவனிடம் வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு[1], தவம் ஆகியன உள்ளனவோ அவனே பிராமணனாக அழைக்கப்படுகிறான்.(4)

[1] "கிரீனாம் Ghrina என்று இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் வெறுப்பு என்ற பொருளையும் கொண்டது. இங்கே இச்சொல் பயன்படுத்தப்படும்போது அறமற்ற செயல்பாடுகளில் கொள்ளும் வெறுப்பு என்ற பொருளையே தரும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸ்தயமும், தானமும், த்ரோஹமின்மையும், க்ரூரமின்மையும், பொறுமையும், தயையும், தவமும் எவனிடம் காணப்படுகின்றனவோ அவன் ப்ராம்மணனென்று சொல்லப்படுகிறான்" என்றிருக்கிறது.

போர்த்தொழிலில் ஈடுபடுபவனும், வேதம் கற்பவனும், (பிராமணர்களுக்குக்) கொடையளிப்பவனும், (தன்னால் பாதுகாக்கப்படுகிறவர்களிடம் இருந்து) செல்வத்தைப் பெறுபவனுமான ஒருவன் க்ஷத்திரியன் என்று அழைக்கப்படுகிறான்.(5)

கால்நடை வளர்ப்பு, உழவுத் தொழில், செல்வம் ஈட்டுவதற்கான வழிமுறைகளின் {வணிகத்தின்} மூலம் புகழை ஈட்டுபவனும், ஒழுக்கத்தில் தூய்மை கொண்டவனும், வேத கல்வியில் ஈடுபடுபவனுமான ஒருவன் வைசியன் என்றழைக்கப்படுகிறான்[2].(6)

[2] "6ம் சுலோகத்தின் முதல் வரியில் முதல் பாதி, பம்பாய் பதிப்பில் வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த இரண்டு உரைகளையும் நீலகண்டர் கவனித்திருக்கிறார். பொருளில் பம்பாய் பதிப்பு தெளிவாக இருந்தாலும் நான் இங்கே வங்கப் பதிப்பையே பின்பற்றியிருக்கிறேன். விசதி Vicati என்பது செயப்படு பொருளில் சொல்லப்படும் பிரதிஷ்ட pratishtaa ஆகும். அல்லது அதைப் போன்ற பெயர்ச்சொல்லைப் பொருளாகக் கொண்டதாகும். இதன் பொருள், "எவன் புகழை அடைகிறானோ முதலியனாவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "க்ருஷியிலும் பசுக்காதலிலும், வர்த்தகத்திலும் எப்பொழுதும் பரிசுத்தனாகிப் புகுகின்றவனும் வேதாத்யயனமுள்ளவனுமா யிருப்பவன் எவனோ அவன் வைஸ்யனென்று பெயருள்ளவனாகிறான்" என்றிருக்கிறது.

அனைத்து வகை உணவை உண்பதில் இன்பங்கொள்கிறவனும், அனைத்து வகை வேலைகளிலும் ஈடுபடுபவனும், ஒழுக்கத்தில் மாசுள்ளவனும், வேதங்களைக் கல்லாதவனும், தூய்மையற்ற ஒழுக்கம் கொண்டவனுமான ஒருவன் சூத்திரன் என்று சொல்லப்படுகிறான்.(7) ஒரு சூத்திரனிடம் {வாய்மை உள்ளிட்ட} இந்தப் பண்பியல்புகள்[3] காணப்பட்டாலும், ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையென்றாலும், அத்தகைய சூத்திரன் சூத்திரனுமல்ல, அத்தகைய பிராமணன் பிராமணனுமல்ல[4].(8)

[3] முன்பு பிராமணனுக்குச் சொல்லப்பட்ட வாய்மை, தானம், தீங்கிழையாமை, கருணை, வெட்கம், நல்லுணர்வு, தவம் என்ற ஏழு பண்பியல்புகள்.

[4] கும்பகோணம் பதிப்பில், "முன்கூறிய ஸத்யமுதலிய ஏழும் சூத்திரனிடத்திலும் காணத்தக்கனவாகும். இவை ப்ராமணன் முதலிய மூன்று ஜாதிகளிடமும் இல்லாமலுமிருக்கும். சூத்திரன் சூத்திரனாகவேயிருப்பானென்பதில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "{மேற்குறிப்பிடப்பட்ட} இந்தக் குறியீடுகள் ஒரு சூத்திரனிடம் காணப்படவில்லையெனில் அந்தச் சூத்திரன் சூத்திரனே அல்ல. அவை ஒரு பிராமணனிடம் காணப்படவில்லையெனில் அந்தப் பிராமணன் பிராமணனே அல்ல" என்றிருக்கிறது.

பேராசையும், கோபமும் அனைத்துவகையில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இவையும், தற்கட்டுப்பாடும் அறிவின் உயர்ந்த விளைவுகளாகும்.(9) அந்த ஆவல்கள் (பேராசை மற்றும் கோபம் ஆகிய) இரண்டையும் ஒருவன் முழு இதயத்துடன் தடுக்க வேண்டும். அவை ஒருவனுடைய உயர்ந்த நன்மையை அழிக்கவே தோன்றுகின்றன.(10) ஒருவன் தன் கோபத்திடம் இருந்து தன் செழிப்பையும், செருக்கிலிருந்து தவங்களையும், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் இருந்து அறிவையும், குற்றங்களில் இருந்து தன் ஆன்மாவையும் எப்போதும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,(11)

ஓ! மறுபிறப்பாளனே, எந்தப் புத்திசாலி கனியில் விருப்பமில்லாமல் அனைத்துச் செயல்களையும் செய்வானோ, எவனுடைய மொத்த செல்வமும் ஈகைக்காகவே இருக்கிறதோ, எவன் தினப்படியான ஹோமங்களைச் செய்வானோ அவனே உண்மையில் துறவியாவான் {தியாகியாவான்}. தீங்கிழைக்கும் செயல்கள் அனைத்தையும் தவிர்த்து உயிரினங்கள் அனைத்திற்கும் நண்பனாக ஒருவன் தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்[5].(12) கொடைகள் யாவற்றையும் ஏற்காத ஒருவன், தன் நுண்ணறிவின் மூலம், தன் ஆசைகளுக்கு முற்றான தலைவனாக இருக்க வேண்டும். எந்தத் துன்பமும் இல்லாத தன் ஆன்மாவிலேயே அவன் வாழ வேண்டும். அப்போது அவன் இம்மையிலும் எந்த அச்சமும் கொள்ள மாட்டான், மறுமையிலும் அச்சமற்ற உலகத்தை அடைவான்.(13) ஒருவன், தவங்களுக்கு அர்ப்பணிப்புள்ளவனாக, ஆசைகள் அனைத்தையும் முற்றாகத் தவிர்ப்பவனாக, எண்ணங்களை வெளியிடாத நோன்பை நோற்பவனாக, தன்னில் குவிந்த ஆன்மாவுடன் கூடியவனாக, வெல்லமுடியா புலன்களை வெல்ல விரும்புபவனாக, பற்றுகளுக்கு மத்தியில் பற்றற்றவனாக எப்போதும் வாழ வேண்டும்.(14)

[5] "இங்கே பேசுபவர் {பிருகு}, கர்ம சந்நியாசத்தின் {செயல்களைத் துறத்தல்) பண்பை விளக்குகிறார். சமாரம்பம் Samaarambha என்பது பொதுவாக அனைத்தை வகைச் செயல்களையும் குறிக்கும். எனினும், இங்கே வேள்விகள் மற்றும் பிற சாத்திர சடங்குகளை மட்டுமே குறிப்பிடுவது நோக்கமாகத் தெரிகிறது. இரண்டாவது வரியை உரைப்பதில் நான் நீலகண்டரைப் பின்பற்றியிருக்கிறேன். "அனைத்தையும் கொடையாக ஊற்றுபவன்" என்பது அதன் வெளிப்படையான பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

புலன்களுக்குப் புலப்படும் பொருட்கள் அனைத்தும் வெளிப்பாடு {வியக்தம்} என்றழைக்கப்படுகிறது. எனினும், புலன்களுக்கு எட்டாமல், வெளிப்பாடற்றதாக {அவியக்தமாக} இருப்பவையும், நுண்ணியப் புலனுணர்வால் மட்டுமே உறுதி செய்து கொள்ளக்கூடியவையுமான அனைத்தையும் அவன் அறிய முயல வேண்டும்[6].(15) நம்பிக்கையேதும் இல்லையென்றால், ஒருவனால் அந்த நுண்ணுணர்வை அடைய முடியாது. எனவே, அவன் நம்பிக்கையுடனே இருக்க வேண்டும். மனம் பிராணனிலும், பிராணன், பிரம்மத்திலும் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும்.(16) பற்றுகள் அனைத்திலிருந்தும் தொடர்பறுத்துக் கொள்ளும் ஒருவனே பிரம்மத்துடன் கலக்கலாம். வேறு எதையும் கவனிக்க வேண்டிய அவசியமில்லை. துறவுப் பாதையில் ஒரு பிராமணனால் எளிதாகப் பிரம்மத்தை அடைய முடியும்.(17) தூய்மை, நல்லொழுக்கம், அனைத்துயிரினங்களிடமும் கருணை ஆகியவையே ஒரு பிராமணனின் குறியீடுகளாகும்" என்றார் {பிருகு}.(18)

[6] மொத்த உலகமும் சாதாரணப் புலன்களுக்குப் புலப்படக்கூடியது. மொத்த உலகத்திற்குப் பின்னால் உள்ள நுட்பத்தை, யோகத்தினால் கூராக்கப்பட்ட நுண்ணியப் புலனுணர்வுகளால் அறிய முடியும். மரணத்தால் உடல் மட்டுமே கரைகிறது. லிங்க சரீரம் என்றழைக்கப்படுவதும், அடிப்படை பூதங்களின் தன்மாத்திரையினாலானதுமான நுண்ணிய உடல், அல்லது வடிவம் நீடித்திருக்கிறது. அஃது உலகின் பண்புகள் அனைத்தையும் உளவியல் வடிவில் தக்க வைத்துக் கொள்கிறது. பிரம்மத்துடன் கலப்பதற்கு முன்பு அந்த லிங்க சரீரமும் அழிவடைய வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 189ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்