Friday, May 25, 2018

பூமியே மூதன்னை! - சாந்திபர்வம் பகுதி – 190

The earth is the progenitrix! | Shanti-Parva-Section-190 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 17)


பதிவின் சுருக்கம் : உண்மை சொர்க்கத்திற்கும், பொய் நரகத்திற்கும் இட்டுச் செல்லும்; பொய்யாலுண்டாகும் துன்பங்கள்; இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றைப் பரத்வாஜருக்கு விளக்கிய பிருகு...


The earth is the progenitrix! | Shanti-Parva-Section-190 | Mahabharata In Tamil
The earth is the progenitrix! | Shanti-Parva-Section-190 | Mahabharata In Tamil
பிருகு {பரத்வாஜரிடம்}, "உண்மையே பிரம்மம்; உண்மையே அனைத்து உயிரினங்களையும் உண்டாக்குகிறது. உண்மையின் மூலமே இந்த மொத்த அண்டமும் தாங்கப்படுகிறது; உண்மையின் துணை கொண்டே ஒருவன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(1) பொய்மையானது இருளின் மற்றொரு வடிவமாக மட்டுமே இருக்கிறது. இருள் கீழ்நோக்கியே வழிகாட்டும். இருளால் பாதிப்படைந்தோரும், அதனால் மறைக்கப்பட்டோரும், சொர்க்கத்தின் ஒளிமிக்க உலகங்களைக் காணத் தவறுகின்றனர்.(2) சொர்க்கம் ஒளி என்றும், நரகம் இருள் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அண்டத்தில் வசிக்கும் உயிரினங்கள் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் அடையலாம்.(3) இவ்வுலகிலும், உண்மையும் பொய்மையும், அறம் மற்றும் மறம், ஒளி மற்றும் இருள், இன்பம் மற்றும் துன்பம் என்பவைபோன்ற முரண்பட்ட வழிமுறைகளுக்கும், முரண்பட்ட குறியீடுகளுக்கும் வழிவகுக்கும்.(4) இவற்றில் எது உண்மையோ அஃது அறமாகும்; எஃது அறமோ அஃது ஒளியாகும்; எது ஒளியோ அஃது இன்பமாகும். அதேபோலவே, எது பொய்மையோ அது மறமாகும்; எது மறமோ அஃது இருளாகும்; எது இருளோ அது துன்பம் அல்லது துயரமாகும்.(5)


ஞானம் கொண்டோர், இவ்வுலக வாழ்வானது உடல் மற்றும் மனம் சார்ந்த கவலையிலும், நிச்சயம் துன்பத்தில் முடியக்கூடிய இன்பத்திலும் மூழ்கியிருப்பதைக் கண்டு, ஒருபோதும் திகைப்படையாதவர்களாக இருக்கிறார்கள்.(6) எவன் ஞானியோ அவன் கவலையில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முனைவான். உயிரினங்களின் மகிழ்ச்சியானது, இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிலும் நிலையற்றதாகும்[1].(7) இருளில் மூழ்கியிருக்கும் உயிரினங்களின் மகிழ்ச்சியானது, ராகுவால் பீடிக்கப்படும் சந்திரனின் காந்தியைப் போல மறைந்து போகிறது[2].(8) உடல் சார்ந்தது, மனம் சார்ந்தது என்று இன்பம் இரு வகையாகச் சொல்லப்படுகிறது. இம்மையிலும், மறுமையிலும், புலப்படக்கூடியவையும், புலப்படாதவையுமான (செயல்களின்) கனிகள் இன்பத்தின் நிமித்தமாகவே (வேதங்களில்) குறிப்பிடப்படுகின்றன[3]. முத்தொகையின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றின்} கனிகள், அல்லது விளைவுகளில், இன்பத்தைவிட முக்கியமானது வேறேதும் இல்லை. மகிழ்ச்சியே விரும்பத்தக்கது. அதுவே ஆன்மாவின் பண்பாகும். அறமும், பொருளும் அதற்காகவே நாடப்படுகின்றன. அறமே அதன் வேராகும். உண்மையில், இதுவே அதன் தோற்றுவாயாகும். அனைத்து செயல்களும் மகிழ்ச்சியை அடைவதையே முடிவான இலக்காகக் கொண்டிருக்கின்றன" என்றார் {பிருகு}.(9)

[1] "சொர்க்கத்தில் அடையப்படும் இன்பநிலை எப்போதும் நீடிக்கக்கூடியதல்ல. அஃது இம்மையில் அடையப்படும் தகுதியின் அளவுக்குத் தக்க காலம் வரையே நீடிக்கக்கூடியது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "சூரியனும், சந்திரனும் தைத்தியன் ராகுவால் விழுங்கப்படுகின்றன என்பதே சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் புராணக் கொள்கையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "மகிழ்ச்சியை அடைய விரும்பும் மனிதர்கள், இந்தக் கனிகளைப் பெற முனைவார்கள் என்பதாலேயே வேதங்கள் இக்கனிகளை அறிவிக்கின்றன என்ற பொருளைத் தருவதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, "இன்பமே உயர்ந்த பொருள் என்று நீர் சொல்கிறீர். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. (நீர் சொல்வது போல) இவ்வளவு விரும்பத்தக்கதாக உள்ள ஆத்மாவின் இந்தப் பண்பை அடைய முனையாமல் முனிவர்கள் வேறு ஏதோ உயர்ந்த வெகுமதியை அடைவதில் ஈடுபடுகிறார்கள். மூவுலகங்களின் படைப்பாளனான பலமிக்கப் பிரம்மன், பிரம்மச்சரிய நோன்பை நோற்றுத் தனியாக வாழ்ந்து வருவதாகக் கேள்விப்படுகிறோம். இன்பத்தை நிறைவு செய்வதன் மூலம் அடையப்படும் மகிழ்ச்சியில் அவன் ஒருபோதும் பற்றுடன் இல்லை. மேலும், அண்டத்தின் தெய்வீகத் தலைவனான உமையின் தலைவன் {சிவன்}, (இன்பத்திற்கான தேவனான) காமனை இல்லாமல் செய்தான். இதன் காரணமாக, உயர் ஆன்ம மக்கள் இன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை என்று நாம் சொல்கிறோம். மேலும் அஃது ஆன்மாவின் உயர்ந்த பண்பாகத் தெரியவில்லை. இன்பத்தைவிட வேறேதும் உயர்ந்ததில்லை என்று தெய்வீகமான நீர் {தேவரீர்} சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. நாம் செய்யும் செயல்களின் விளைவுகளாக, நற்செயல்களில் இருந்து இன்பமும், பாவச்செயல்களில் இருந்து துன்பமும் இரண்டு வகைகளில் எழுகின்றன என்று சொல்லப்படுவது வெற்றுமொழியாக மட்டுமே இவ்வுலகில் இருக்கிறது" என்றார் {பரத்வாஜர்}[4].(10)

[4] பரத்வாஜரின் இந்த நீண்ட, பெரிய கேள்விக்கு ஒரே ஒரு ஸ்லோக எண்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே போலப் பின்வரும் 11ம் ஸ்லோகமும் வெகு நீளமாக இருக்கிறது.

பிருகு {பரத்வாஜரிடம்}, "இது பின்வருமாறு சொல்லப்படுகிறது: பொய்மை இருளில் {அறியாமையில்} இருந்து எழுகிறது. இருளில் {அறியாமையில்} மூழ்கியிருப்போர் அறத்தையல்லாமல் {தர்மத்தையல்லாமல்}, மறத்தை {அதர்மத்தை} மட்டுமே பின்தொடர்ந்து, கோபம், பேராசை, வன்மம், பொய்மை, மற்றும் இவை போன்ற வேறு தீமைகளுக்கும் வசப்பட்டவர்களாகிறார்கள். அவர்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. மறுபுறம், பல்வேறு வகை நோய், துன்பம் மற்றும் தொல்லைகளில் அகப்படுகின்றனர். மரணம், சிறை மற்றும் இவ்வகைத் துன்பங்கள் பிறவற்றாலும், பசி, தாகம் மற்றும் களைப்பு ஆகியவற்றால் உண்டாகும் கவலைகளாலும் அவர்கள் வதைக்கப்படுகின்றனர். மழை, காற்று, எரியும் வெப்பம், மிகைப்பட்ட குளிர் ஆகியவற்றில் இருந்து எழும் எண்ணற்ற உடல் துன்பங்களையும் அவர்கள் அடைகிறார்கள். செல்வ இழப்பு, நண்பர்களிடம் இருந்து பிரிவு, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றால் உண்டாகும் எண்ணற்ற மனத் துன்பங்களிலும் மூழ்குகிறார்கள்.(11)

பல்வேறு வகை உடல் மற்றும் மனத் துன்பங்களால் தீண்டப்படாதவர்களே இன்பத்தை அறிவார்கள்.(12) இந்தத் தீமைகள் ஒருபோதும் சொர்க்கத்தில் காணப்படுவதில்லை. அங்கே இனிய தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. அங்கே சொர்க்கத்தில் இடையறாத நறுமணமும் வீசிக்கொண்டிருக்கிறது. சொர்க்கத்தில் பசியோ, தாகமோ, முதுமையோ, பாவமோ கிடையாது.(13) சொர்க்கத்தில் இடையறாத இன்பம் இருக்கிறது. இவ்வுலகில் {இம்மையில்} இன்பம் மற்றும் துன்பம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. நரகத்திலோ துன்பம் மட்டுமே இருக்கிறது. எனவே, இன்பமே அடையத்தக்க பொருளில் உயர்ந்ததாகும்.(14) இந்தப் பூமியே {பூமாதேவியே} அனைத்து உயிரினங்களின் மூதன்னையாக இருக்கிறாள். பெண்கள் அவளது இயல்பையே பெற்றிருக்கின்றனர். ஆண்விலங்கானது, பிரஜாபதியைப் போன்றதாகும். உயிர்வித்தானது, படைக்கும் சக்தி என அறியப்பட வேண்டும்.(15) இவ்வழியிலேயே படைப்பு நேர வேண்டுமெனப் பழங்காலத்தில் பிரம்மனால் விதிக்கப்பட்டது. தன் செயல்களால் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும், இன்பத்தையோ, துன்பத்தையோ அடைகிறார்கள்" என்றார் {பிருகு}[5].(16)

[5] "கிட்டத்தட்ட இந்த மொத்த பகுதியும் உரைநடையாகவே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இதுவரை புரிந்து கொள்ளக் கடினமான தத்துவங்களையும் எளிதாகச் சொல்லிவந்த பிருகு இங்கே தெளிவற்றுப் பேசுவதாகத் தெரிகிறது. மேலும் 10 மறறும் 11ம் ஸ்லோகங்களின் நீளம், நாம் இதுவரை மொழிபெயர்த்தவற்றிலுள்ள ஸ்லோகங்களின் சராசரி நீளத்தைவிட மிக மிக அதிகமாக இருக்கிறது. இந்தப் பகுதி இடைசெருகலாக இருக்கக்கூடும். ஆனால் இடைசெருகல்கள் நீக்கப்பட்ட படைப்பாகச் சொல்லப்படும் பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி கங்குலியில் உள்ளவாறே இருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 190ல் உள்ள சுலோகங்கள் : 16

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்