Thursday, June 14, 2018

கர்மப்பயன்! - சாந்திபர்வம் பகுதி – 203

The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 30)


பதிவின் சுருக்கம் : புலப்படாததாக இருக்கும் ஆன்மாவின் இருப்பையும், எவ்வாறு ஆன்மாவை உணரலாம் என்பதையும் பிருஹஸ்பதிக்கு விளக்கிச் சொன்ன மனு...


The fruits of acts! | Shanti-Parva-Section-203 | Mahabharata In Tamil
மனு {பிருஹஸ்பதியிடம்}, "புலன்களுடன் ஒன்றிணையும் மனம், கடந்தகாலத்தில் பெறப்பட்ட பொருட்களின் மனப்பதிவுகளை நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவுகூர்கிறது. புலன்கள் அனைத்தும் (தங்கள் தங்களுக்குரிய செயல்பாடுகளில் இருந்து) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால்,[1] புத்தியின் வடிவில் உள்ள உயர்ந்தது (ஆன்மா), தன் உண்மையான இயல்பில் நீடித்திருக்கிறது.(1) (அத்தகைய நேரத்தில்) ஆன்மாவானது, புலன்நுகர் பொருட்களின் ஒருங்கமைவையோ, முரணையோ கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், அனைத்துத் திசைகளில் இருந்தும் அவற்றைத் திரட்டி ஒன்றாகப் பற்றி வைக்கும்போது, பொருத்தமற்ற பொருட்கள் அனைத்திற்கும் மத்தியில் அஃது அவசியம் உலவ நேர்கிறது. எனவே, அஃது (அமைதியான) சாட்சியாக இருக்கிறது. உடலுக்குள் பொதிந்திருக்கும் ஆன்மாவானது, தனிப்பட்ட சுதந்திர இருப்பாக இருக்கிறது[2].(2)


[1] "இறந்தவன் போல் உறங்கும்போது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "கனவில் ஆன்மாவானது, பல்வேறு நேரங்கள் மற்றும் இடங்களுக்குரிய பொருட்களையும், நிகழ்வுகளையும் ஒன்றாகத் திரட்டும்போதும், காலம் மற்றும் இடம் தொடர்பான பொருத்தமில்லா முரண்கள் தோன்றும்போதும், அது புலன்கள் மற்றும் உடலில் இருந்து தனிப்பட்ட, சுதந்திர இருப்பைக் கொண்டுள்ளது என்பது இங்கே சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ரஜஸ், தமஸ், மற்றும் மூன்றாவதாகச் சத்வம் ஆகியவை {குணங்கள்} இருக்கின்றன. மேலும் புத்திக்கு, விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் என்று மூன்று நிலைகளும் இருக்கின்றன. ஆன்மாவானது, அந்த நிலைகள், முதலில் குறிப்பிட்டப்பட்ட மூன்று வகைக் குணங்களின் இயல்புகள், முரண்பட்டவையான இன்பங்கள் மற்றும் துன்பங்கள் ஆகியவற்றைக் குறித்த அறிவைப் பெற்றிருக்கிறது[3]. ஆன்மாவானது, மரத்துண்டில் உள்ள நெருப்பில் நுழையும் காற்றைப் போலப் புலன்களுக்குள் நுழைகிறது.(3) ஒருவன் தன் கண்ணால் ஆன்மாவின் வடிவத்தைக் காணவோ, புலன்களுக்கு மத்தியில் உள்ள தீண்டலின் புலனுணர்வால் அதை {ஆன்மாவை} உணரவோ முடியாது. மேலும் ஆன்மாவானது, காதால் உணரப்படும் பொருளாகவும் இல்லை. எனினும், ஸ்ருதிகளின் துணை மற்றும் ஞானியரின் போதனைகள் மூலம் அதை {ஆன்மாவைக்} காணலாம். புலன்களைப் பொறுத்தவரையில், அதை {ஆன்மாவைத்} தொடரும் குறிப்பிட்ட புலனானது, தன் உணர்வை இழந்து, புலன் என்ற தன் இருப்பையே இழக்கிறது.(4)

[3] "சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றின் விளைவாலும், அந்த மூன்று குணங்களினால் உண்டாகும் புத்தியின் மூன்று நிலைகளுடனான தொடர்பாலும் எழும் இன்ப துன்பங்களின் அறிவை மட்டுமே ஆன்மா கொண்டுள்ளது என்பதை இது காட்டுகிறது. எனினும், ஆன்மாவானது அவற்றை அறிந்தாலும் அவற்றை அனுபவிப்பதோ, அவற்றால் துன்புறுவதோ இல்லை. அஃது அனைத்திற்கும் அமைதியான, செயலற்ற சாட்சியாக மட்டுமே இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

புலன்களால் தங்கள் தங்களுக்குரிய வடிவங்களைத் தாங்களே உணர முடியாது. ஆன்மாவானது (அறிவதையும், அறியப்படுவதையும உணர்வதால்) அனைத்தையும் அறிந்ததாக இருக்கிறது. அஃது அனைத்துப் பொருட்களையும் பார்க்கிறது. அனைத்தையும் அறிந்ததாக இருப்பதால், (முன்னர்ச் சொன்னது போலப் புலன்களால் உணரப்படாத) ஆன்மாவே புலன்களைக் காண்கிறது.(5) இமய மலையின் மறு பக்கத்தை யாரும் பார்த்ததில்லை, அதே போலச் சந்திர வட்டிலின் பின்புறத்தையும் யாரும் பார்த்ததில்லை. எனினும் அவை இல்லை என்று சொல்ல முடியாது.(6) அதேபோலவே, புலன்களால் உணரப்படாததாக இருப்பினும், அனைத்து உயிரினங்களிலும் வசிப்பதும், நுட்பமானதும், அறிவையே தன் சாரமாகக் கொண்டதுமான ஆன்மா இல்லை என்று யாராலும் சொல்ல முடியாது.(7)

நிலவின் களங்கங்களின் வடிவில் உலகம் பிரதிபலிக்கப்படுவதையே மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் பார்த்தாலும் கூட, உலகமே அங்கே பிரதிபலிக்கப்படுகிறது என்பதை அறிவதில்லை. ஆன்ம அறிவும் அவ்வாறானதே ஆகும். அந்த அறிவு தானாகவே வர வேண்டும். ஆன்மாவானது ஆன்மாவையே சார்ந்திருக்கிறது.(8) பிறப்புக்கு முன்பும், இறப்புக்குப் பிறகும் புலப்படக்கூடிய பொருட்களின் வடிவமற்ற தன்மையைச் சிந்தித்த ஞானிகள், மேலீடான வடிவங்களாக இருக்கும் வடிவமற்ற பொருட்களைப் புத்தியின் துணையால் பார்க்கின்றனர். சூரியனின் நகர்வு காணப்படவில்லையெனினும், அஃது எழுவதையும் மறைவதையும் கண்டு, சூரியனுக்கு அசைவிருக்கிது என்று தீர்மானிக்கப்படுகிறது[4].(9) அதே போலவே, ஞானமும் கல்வியும் கொண்டவர்கள், ஆன்மாவானது எட்ட முடியாத தொலைவில் இருந்தாலும், நுண்ணறிவு {புத்தி} எனும் விளக்கின் உதவியுடன் அதை {ஆன்மாவைக்} கண்டு, அருகில் உள்ள ஐந்து வகைப் பூதங்களையும் பிரம்மத்துடன் கலக்க முனைகிறார்கள்.(10)

[4] "இதை விளக்க உரையாசிரியர் ஒரு மரத்தைப் பயன்படுத்துகிறார். பிறப்பதற்கு முன்பு மரமில்லை; அழிந்த பிறகும் அஃது இல்லை; இடைப்பட்ட வேளையில் மட்டுமே அஃது இருக்கிறது. அதன் வடிவமற்ற தன்மை, அல்லது ஏதுமற்ற தன்மை இந்த இரண்டு நிலைகளிலேயே வெளிப்படுகிறது. எது கடந்த காலத்தில் இல்லையோ, எது எதிர்காலத்தில் இருக்காதோ, அது நிகழ்காலத்தில் இருக்கிறது என்று கருதப்படுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.



உண்மையில், வழிமுறைகளைச் செயல்படுத்தாமல் எந்த நோக்கமும் நிறைவேற்றப்பட முடியாது. மீனவன், இழைகளால் செய்யப்பட்ட வலைகளின் வழியின் மூலமே மீனைப் பிடிக்கிறான்.(11) விலங்குகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற விலங்குகள் கைப்பற்றப்படுகின்றன. பறவைகளை வழிமுறைகளாகக் கொண்டே பிற பறவைகள் பிடிக்கப்படுகின்றன. யானைகளை நியமித்தே பிற யானைகள் பிடிக்கப்படுகின்றன. இவ்வழியில் ஆன்மாவை அறிவுக் கோட்பாட்டின் மூலம் உணரலாம்.(12) பாம்பின் கால்களைப் பாம்பே அறியும் என நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையிலேயே ஒருவன், மொத்த உடலுக்குள் நுட்பமான வடிவத்தில் வசிக்கும் ஆன்மாவைத் தன் அறிவின் மூலம் காண்கிறான்.(13) மக்கள் தங்கள் புலன்களின் மூலம் புலன்களை அறிவதில்லை. அதேபோல, உயர்ந்ததான ஆன்மாவை வெறும் உயர்ந்த புத்தியால் மட்டுமே காண முடியாது. (14)

தேய்பிறையின் பதினைந்தாவது நாள் {புது நிலவின் / அமாவாசை} இரவில் நிலவு மறைக்கப்படுவதால் அதைக் காண முடியாது. எனினும், அதற்கு அழிவு ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது. உடலில் வசிக்கும் ஆன்மாவின் வழக்கும் அவ்வாறானது ஆகும்.(15) தேய்பிறையின் பதினைந்தாவது நாளில், நிலவின் மொத்த உடலும் புலப்படாத் தன்மையை அடைகிறது. அதே வகையிலேயே உடலில் இருந்து விடுபட்ட ஆன்மாவையும் உணர முடியாது.(16) நிலவானது, ஆகாயத்தின் மற்றொரு புள்ளிக்கு நகர்ந்ததும், மீண்டும் ஒளிரத்தொடங்குவதைப் போலவே, ஆன்மாவும் புதிய உடலை அடைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறது.(17) நிலவின் பிறப்பு, வளர்ச்சி, மறைவு ஆகிய அனைத்தும், கண்களால் நேரடியாக உணரப்படுகிறது. எனினும், இந்தத் தோற்றப்பாடுகள், அந்த ஒளிக்கோளின் மொத்த வடிவுக்கும் பொருத்தமாக இருக்கின்றன. அவை ஆன்மாவின் குணங்களைப் போன்றவையல்ல.(18) தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} நிலவு மறைந்து, மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்போது, மறைந்து போன அதே ஒளிக்கோளாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையிலேயே, பிறப்பு, வளர்ச்சி, வயது ஆகிய மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருந்தாலும் ஒரு மனிதன் தன் அடையாளத்தில் ஐயங்கொள்ளாத வகையில் அதே நபராகவே கருதப்படுவான்.(19)

ராகு எவ்வாறு நிலவை அணுகுகிறது, விடுகிறது என்பது தெளிவாகக் காணப்படுவதில்லை. அந்த வகையிலேயே ஆன்மாவும், ஒருவனுடைய உடலை விட்டுப் பிரிவதையும், மற்றொன்றுக்குள் நுழையவதையும் காண முடியாது.(20) சூரியன் அல்லது நிலவுடன் இருக்கும்போது மட்டுமே ராகு புலப்படுகிறது. அதே போலவே ஆன்மாவும், உடலில் இருக்கும்போது மட்டுமே உணரப்படும் பொருளாக இருக்கிறது.(21) சூரியன் அல்லது சந்திரனிலிருந்து விடுபட்டதும் ராகுவைக் காண முடியாது. அதே போலவே, ஆன்மாவும் உடலைவிட்டு அகன்றதும் காணப்பட முடியாது.(22) மேலும், தேய்பிறையின் பதினைந்தாம் நாளில் {அமாவாசையில்} சந்திரன் மறையும்போது, நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திரக்கூட்டங்களால் அது கைவிடப்படாதிருப்பதைப் போல, ஆன்மாவானதும் உடலில் இருந்து பிரிந்தாலும், அந்த உடலால் அடைந்த செயல்களின் கனிகளை {கர்மப்பலன்களைக்} கைவிடுவதில்லை" என்றார் {மனு}.(23)

சாந்திபர்வம் பகுதி – 203ல் உள்ள சுலோகங்கள் : 23

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்