Friday, July 06, 2018

தமம் - தற்கட்டுப்பாடு! - சாந்திபர்வம் பகுதி – 220

Self Restraint! | Shanti-Parva-Section-220 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 47)


பதிவின் சுருக்கம் : தற்கட்டுப்பாடு கொண்டவனின் குறியீடுகளையும், தற்கட்டுப்பாட்டின் சிறப்புகளையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எதைச் செய்வதன் மூலம் மகிழ்ச்சியையும், எதைச் செய்வதன் மூலம் துன்பத்தையும் ஒருவன் அடைகிறான்? ஓ! பாரதரே, எதைச் செய்வதன் மூலம் ஒருவன் அச்சத்தில் இருந்து விடுபட்டு, (வாழ்வின் நோக்கங்களைப் பொறுத்தவரையில்) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக இங்கே பயணிக்கிறான்?" என்று கேட்டான்.(1)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஸ்ருதிகளை நோக்கிச் செலுத்தப்பட்ட புத்தியைக் கொண்டிருந்த பழங்காலத்தவர், பொதுவாக அனைத்து வகையினருக்கும் {வர்ணத்தாருக்கும்}, மிகக் குறிப்பாகப் பிராமணர்களுக்கும் தற்கட்டுப்பாடு {தமம்} எனும் கடமையையே உயர்வாக மெச்சினார்கள்.(2) அறச்சடங்குகளைப் பொறுத்தவரையில் தற்கட்டுப்பாடு {தமம்} இல்லாதவர்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. அறச்சடங்குகள், தவங்கள், வாய்மை ஆகிய இவை அனைத்தும் தற்கட்டுப்பாட்டிலேயே நிறுவப்பட்டுள்ளன.(3) தற்கட்டுப்பாட்டு ஒருவனின் சக்தியை அதிகரிக்கிறது. தற்கட்டுப்பாடு புனிதமானதாகச் சொல்லப்படுகிறது. தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன் பாவமற்றவனாகவும், அச்சமற்றவனாகவும் ஆகி பெரும் விளைவுகளை வெல்கிறான் {அடைகிறான்}.(4) தற்கட்டுப்பாடு உடையவன் மகிழ்ச்சியாக உறங்கி, மகிழ்ச்சியாக விழிக்கிறான். அவன் இவ்வுலகில் மகிழ்ச்சியாகவே திரிகிறான், அவனது மனம் எப்போதும் உற்சாகமாக இருக்கிறது.(5)



தற்கட்டுப்பாடு கொண்டவனால் அனைத்துவகைக் கிளர்ச்சிகளும் அமைதியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. தற்கட்டுப்பாடு இல்லாத ஒருவன் அதே போன்ற முயற்சியில் தவறுகிறான். தற்கட்டுப்பாடு கொண்ட ஒரு மனிதன், (காமம், ஆசை, கோபம் முதலிய வடிவங்களில் இருக்கும்) தனது எண்ணற்ற எதிரிகளைத் தனிப்பட்ட உடல்களாக வசிப்பவையாகக் காண்கிறான்.(6) தற்கட்டுப்பாடு இல்லாத மனிதர்கள், புலிகளையும், ஊனுண்ணும் பிற விலங்குகளையும் போல எப்போதும் அனைத்து உயிரினங்களையும் அச்சத்தில் ஆழ்த்துகின்றனர். {தற்கட்டுப்பாடு இல்லாத} இம்மனிதர்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே சுயம்பு (பிரம்மன்) மன்னர்களைப் படைத்தான்.(7) (நான்கு) வாழ்வு முறைகள் {ஆசிரமங்கள்} அனைத்திலும், பிற அறங்கள் அனைத்தைக் காட்டிலும் தற்கட்டுப்பாட்டைப் பயில்வதே தனிச்சிறப்புடையது. அனைத்து வாழ்வு முறைகளின் {ஆசிரமங்களின்} மூலமும் அடைவதைவிடத் தற்கட்டுப்பாட்டின் மூலம் அடையப்படும் கனிகள் {பலன்கள்} மிக அதிகமாகும்.(8) நான் இப்போது, தற்கட்டுப்பாட்டை உயர்வாக மதிக்கும் மனிதர்களின் குறியீடுகளைக் குறித்து உனக்குச் சொல்லப் போகிறேன்[1]. உயர்ந்த பண்பு, அமைதியான மனநிலை {பரபரப்பின்மை}, மனநிறைவு, நம்பிக்கை,(9) மன்னிக்கும் தன்மை, மாறாத எளிமை, அதிகம் பேசாமை, பணிவு, பெரியோர்களிடம் மரியாதை, நலநாட்டம், அனைத்து உயிரினங்களிடமும் கருணை, வெளிப்படைத்தன்மை,(10) மன்னர்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்போரைக் குறித்த பேச்சையும், போலியான, பயனற்ற விவாதங்களையும், பிறரைப் புகழ்வதையும், இகழ்வதையும் தவிர்த்தல் ஆகியவையே அவை {தற்கட்டுப்பாடு கொண்டவர்களின் குறியீடுகளாகும்}. தற்கட்டுப்பாட்டுடன் கூடிய மனிதன், விடுதலையை {முக்தியை} விரும்பி, தற்போதைய இன்பங்களையும், துன்பங்களையும் அமைதியாகத் தாங்கிக் கொள்பவனாக, எதிர்பார்ப்புகளைக் கொண்டோரின் மூலம் ஒருபோதும் கிளர்ச்சியடையவோ, சோர்வடையவோ மாட்டான்.(11)

[1] சமுதாயம் Samudayah என்பது ஹேது hetu என்பதற்கு இணையாக உரையாசிரியரால் விளக்கப்படுகிறது. கும்பகோணம் பதிப்பில், "எந்தக் குணங்களின் கூட்டம் தமமாகுமோ அந்தக் குணங்களுக்குரிய குறிகளைக் கூறுகிறேன்" என்றிருக்கிறது.

பழிவாங்கும் குணம் மற்றும் அனைத்து வகை வஞ்சனைகள் அற்றவனாக, புகழ்ச்சியாலோ, பழியாலோ அசைக்கப்பட முடியாதவனாக இருக்கும் அத்தகைய மனிதன், நன்னடத்தை, நல்ல பழக்கவழக்கம், தூய ஆன்மா, உறுதிப்பாடு ஆகியவற்றைக் கொண்டவனாகவும், தன் ஆசைகளின் முற்றான தலைவனாகவும் இருப்பான்.(12) அத்தகைய மனிதன் இவ்வுலகில் வெகுமதிகளைப் பெற்று, மறுமையில் சொர்க்கத்திற்குச் செல்வான். அடைய முடியாதவற்றைத் தன் உதவியின் மூலம் அனைத்து உயிரினங்களையும் அடையச் செய்யும் அத்தகைய மனிதன், மகிழ்ச்சிக் களிப்படைபவனாகிறான்[2].(13) உலகளாவிய நன்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அத்தகைய மனிதன், எவருடனும் ஒருபோதும் பகையை வளர்க்க மாட்டான். ஆழ்ந்த அமைதி கொண்ட பெருங்கடலைப் போல அமைதியான அவன், ஞானத்தால் ஆன்மா நிறைந்தவனாகவும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாகவும் இருப்பான்.(14) புத்தியைக் கொண்டவனும், உலகளாவிய மதிப்புக்குத் தகுந்தவனுமான அத்தகைய தற்கட்டுப்பாடு கொண்ட மனிதன், எந்த உயிரினத்திடமும் அச்சத்தையூட்டாதவனாகவும், தானும் எந்த உயிரினத்திடமும் அச்சங்கொள்ளாதவனாகவும் இருப்பான்.(15)

[2] "வறியவர்களுக்கு உணவும் உடைகளுக்கும் கொடுப்பது, பஞ்சகாலத்தில் தேவையானவற்றைக் கொடுப்பது ஆகியவை இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் ,"மோக்ஷத்தில் விருப்பமுள்ளவனும், அனுபவ ஸமயங்களில் வருங்காலத்தை விரும்பாதவுனும், பகையைச் செய்யாதவனும், உண்மையான உபசாரமுள்ளவனும், நிந்தையிலும், ஸ்துதியிலும் ஸமமாயிருப்பவனும், நன்னடத்தையுள்ளவனும், நல்ல சீலமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், தைரியமுள்ளவனுமாகப் பரிசுத்தமாயிருப்பவன் இவ்வுலகில் பூஜையைப் பெற்று இறந்த பின்னும் ஸ்வர்க்கத்தை அடைகிறான்;எல்லாப் பிராணிகளுக்கும் அரிதான பொருளை அளிப்பவனும் ஸுகமுள்ளவனுமாகிக் களிப்பான்" என்றிருக்கிறது.

பெரும் பொருள்களை அடைகையில் ஒருபோதும் மகிழ்சியடையாமலும், துயரத்தில் ஒருபோதும் துன்பங்கொள்ளாமலும் இருக்கும் அவன், நிறைவான ஞானத்தைக் கொண்டவனாகச் சொல்லப்படுகிறான். அத்தகைய மனிதனே தற்கட்டுப்பாடு உடையவனாகச் சொல்லப்படுகிறான். உண்மையில் அத்தகைய மனிதனே மறுபிறப்பாளனாகச் சொல்லப்படுகிறான்.(16) சாத்திரங்களை அறிந்தவனாக, தூய ஆன்மா கொண்டவனாக இருக்கும் தற்கட்டுப்பாடுடைய மனிதன், நன்மைக்காகச் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும் செய்து, உயர்ந்த கனிகளை {பலன்களை} அனுபவிக்கிறான்.(17) எனினும், தீய ஆன்மா கொண்டவர்களோ, நலநாட்டம், மன்னிக்கும்தன்மை, அமைதி, நிறைவு, இனிய பேச்சு, வாய்மை, ஈகை, ஆறுதல் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் பாதையில் செல்ல மாட்டார்கள்.(18) அவர்களுடைய பாதையானது, காமம், கோபம், பேராசை, பிறரிடம் பொறாமை, தற்புகழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டதாகும். காமம் மற்றும் கோபத்தை அடக்கி, பிரம்மச்சரிய நோன்பைப் பயின்று, தன் புலன்களின் முற்றான தலைவனாகும் ஒரு பிராமணன்,(19) தன்னை மிகக் கடுமையான தவங்களில் ஈடுபடுத்திக் கொண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டும், தனக்கு முழுமையான அழிவு கிடையாது என்பதை அறிந்தாலும் தன் காலம் வரும் வரை உடலைத் தாங்கிக் கொண்டிருப்பவனாகக் காத்திருந்து இந்த உலகில் வாழ்ந்து வர வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(20)

சாந்திபர்வம் பகுதி – 220ல் உள்ள சுலோகங்கள் : 20

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்