Wednesday, July 11, 2018

ஸ்ரீ! - சாந்திபர்வம் பகுதி – 225

Sree! | Shanti-Parva-Section-225 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 52)


பதிவின் சுருக்கம் : பலியின் உடலில் இருந்து வெளியேறிய பெண்ணிடம் அவள் யார் என்பதைக் கேட்ட இந்திரன்; பலியின் உடலைவிட்டு வெளியேறிய காரணத்தைச் சொன்ன ஸ்ரீ; ஸ்ரீயை நான்கு இடங்களில் பிரித்து நிறுவிய இந்திரன்; ஸ்ரீக்கு எதிராகக் குற்றமிழைப்போரைத் தண்டிக்கப்போவதாகச் சொன்ன இந்திரன்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அதன்பிறகு, உயர் ஆன்ம பலியின் வடிவத்தில் இருந்து, சுடர்மிக்கக் காந்தியுடன் கூடிய உடலுடன் செழிப்பின் தேவி வெளிவருவதை நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} கண்டான்.(1) பாகனைத் தண்டித்தவனான அந்தச் சிறப்புமிக்கவன், ஒளியுடன் சுடர்விடும் அந்தத் தேவியைக் கண்டு, ஆச்சரியத்தால் விரிந்த கண்களுடன், பலியிடம் இந்த வார்த்தைகளைப் பேசினான்.(2)


சக்ரன் {இந்திரன் பலியிடம்}, "ஓ! பலியே, உன் உடலில் இருந்து வெளிப்படும் தன் சக்தியின் விளைவால் இவ்வாறு காந்தியுடன் சுடர்விடுபவளும், மகுடத்தால் தலை அலங்கரிக்கப்பட்டவளும், தோள்வளைகளை அணிந்தவளும், அனைத்துப் பக்கங்களிலும் மகிமையின் ஒளியை வெளியிடுபவளுமான இவள் யார்?" என்று கேட்டான்.(3)

பலி {இந்திரனிடம்}, "இவள் அசுர வனிதையா, தேவியா, மனிதப் பிறவியா என்பதை நானறியேன். நீ இவளிடம், கேட்கலாம், அல்லது கேட்காமலும் இருக்கலாம். உனக்கு விருப்பமானதைச் செய்வாயாக" என்றான்.(4)

சக்ரன் {இந்திரன் பலியிடம்}, "ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இத்தகைய ஒளியுடன் கூடியவளும், மகுடம் சூடியவளும், பலியின் உடலில் இருந்து இவ்வாறு வெளிவந்தவளுமான நீ யார்? நான் உன்னை அறியேன். கருணைகூர்ந்து எனக்கு உன் பெயரைச் சொல்வாயாக.(5) உண்மையில், தைத்தியர்களின் தலைவனைக் {பலியைக்} கைவிட்டு வந்த மாயா தேவியைப் போல, சுயகாந்தியில் சுடர்விட்டுக் கொண்டு இங்கே நிற்கும் நீ யார்? ஓ! கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக" என்றான்.(6)

ஸ்ரீ {செழிப்பின் தேவி / லட்சுமி}, "விரோசனன் என்னை அறியமாட்டான். விரோசனனின் மகனான இந்தப் பலியும் என்னை அறியமாட்டான். கல்விமான்கள் என்னைத் துஸ்ஸஹை என்ற பெயரைச் சொல்லி அழைத்தார்கள்[1]. சிலர் என்னை விதித்ஸை என்ற பெயரில் அறிவார்கள்[2].(7) ஓ! வாசவா, எனக்கு வேறு பெயர்களும் உண்டு. அவை பூதி, லக்ஷ்மி மற்றும் ஸ்ரீ என்பவையாகும்[3]. ஓ சக்ரா, நீயும் என்னை அறியமாட்டாய். தேவர்களில் எவரும் என்னை அறியமாட்டார்கள்" என்றாள்.(8)

[1] "பெரும் சிரமத்திற்கிடையில் சுமக்கப்படும் ஒன்று என்பது இந்தப் பெயரின் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

[2] "இதன் பொருள் செயலில் ஆசை என்பதாகும்; எனவே, அபரிமிதம், அல்லது ஏராளம் என்பது செயல் அல்லது உழைப்பின் விளைவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "இந்தப் பெயர்கள் அனைத்தும் ஏராளம் என்பதையும், செழிப்பையும் குறிப்பிடுவனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சக்ரன் {செழிப்பின் தேவியான ஸ்ரீயிடம்}, "ஓ! சுமக்கக் கடினமான பெண்ணே, நீண்ட காலம் பலிக்குள் வாழ்ந்திருந்த நீ இப்போது ஏன் அவனைவிட்டு அகன்று செல்கிறாய்? இஃது என் செயலின் நிமித்தமாக நேர்கிறதா? அல்லது பலி செய்த எந்தச் செயலுக்காகவாவது நேர்கிறதா?" என்று கேட்டான்.(9)

ஸ்ரீ {இந்திரனிடம்}, "படைப்பாளனோ, விதி சமைப்பவனோ என்னை ஆள்வதில்லை. காலமே என்னை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகரச் செய்கிறது. ஓ! சக்ரா, பலியை அவமதியாதே" என்றாள்.(10)

சக்ரன் {ஸ்ரீயிடம்}, "ஓ! மகுடத்தால் அலங்கரிக்கப்பட்ட தேவி, என்ன காரணத்திற்காக நீ பலியைக் கைவிடுகிறாய்? (என்னுடன் வாழ்வதற்காக) ஏன் என்னை நீ அணுகுகிறாய்? ஓ! இனிய புன்னகை கொண்டவளே, இதை எனக்குச் சொல்வாயாக" என்றான்.(11)

ஸ்ரீ {இந்திரனிடம்}, "வாய்மை, கொடைகள், நன்னோன்புகள், தவங்கள், ஆற்றல் மற்றும் அறம் ஆகியவற்றில் நான் வாழ்கிறேன். பலி இவை அனைத்தில் இருந்து வீழ்ந்துவிட்டான்.(12) முன்பு அவன் பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு மிக்கவனாக இருந்தான். அவன் உண்மைநிறைந்தவனாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவனாகவும் இருந்தான். எனினும், பின்னாட்களில் அவன் பிராமணர்களிடம் பகையுணர்வை வளர்த்தான், மேலும் தெளிந்த நெய்யை அழுக்கான கரங்களுடன் தீண்டினான்[4].(13) முன்பு அவன் எப்போதும் வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுவான். இறுதியாக, காலத்தால் பீடிக்கப்பட்டு அறியாமையில் குருடான அவன், என்னை இடையறாமல் துதிப்பதாக அனைவரிடமும் தற்புகழ்ச்சி செய்யத் தொடங்கினான்.(14) ஓ! சக்ரா, (இந்தக் குற்றங்களுக்காக) இவனைக் கைவிடும் நான், இதுமுதல் உன்னிடம் வசிக்கப் போகிறேன். நீ கவனமாகவும், தவங்கள் மற்றும் ஆற்றலுடனும் என்னைச் சுமக்க வேண்டும்" என்றாள்.(15)



சக்ரன், "ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, உன்னை எப்போதும் சுமப்பதற்குத் தேவர்கள், மனிதர்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் மத்தியிலும் ஒருவர் கூட இல்லை" என்றான்.(16)

ஸ்ரீ, "ஓ! புரந்தரா {இந்திரா}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், அல்லது ராட்சசர்களில் எவராலும் என்னை எப்போதும் சுமக்க முடியாது" என்றாள்.(17)

சக்ரன், "ஓ மங்கலமான பெண்ணே, நீ எப்போதும் என்னிடமே வசிப்பதற்கு நான் என் நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிச்சயம் உன் ஆணைகளை ஏற்பேன். எனக்கு உண்மையாகப் பதிலளிப்பதே உனக்குத் தகும்" என்றான்.(18)

ஸ்ரீ, "ஓ! தேவர்களின் தலைவா, நான் எப்போதும் உன்னுடன் எவ்வாறு இருக்க முடியும் என்பதைச் சொல்கிறேன். வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கும் விதியின் படி என்னை நான்கு பகுதிகளாகப் பிரிப்பாயாக" என்றாள்.(19)

சக்ரன், "நான் என் சக்திக்கும் பலத்துக்கும் தக்கபடியான வசிப்பிடங்கள் உனக்கு ஒதுக்குகிறேன். ஓ! லக்ஷ்மி, என்னைப் பொருத்தவரையில், எவ்வழியிலாவது உனக்குக் குற்றமிழைக்காதவாறு எப்போதும் கவனத்துடன் இருக்கப் போகிறேன்.(20) மனிதர்களுக்கு மத்தியில் உள்ளவளும், அனைத்துப் பொருட்களின் மூதன்னையுமான பூமியானவள் அவர்கள் அனைவரையும் சுமக்கிறாள். அவள் உன்னில் நான்கில் ஒரு பகுதியைச் சுமப்பாள். அதற்கான பலம் அவளுக்கு இருக்கிறதென நான் நினைக்கிறேன்" என்றான்.(21)

ஸ்ரீ, "இதோ என்னில் ஒரு கால் பகுதியைக் கொடுத்தேன். இது பூமியில் நிறுவப்படட்டும். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இரண்டாம் பகுதிக்கு உரிய நிலையை அமைப்பாயாக" என்றாள்.(22)

சக்ரன், "மனிதர்களுக்கு மத்தியில் உள்ள திரவ வடிவில் உள்ள நீர்நிலைகள் மனிதர்களுக்குப் பல்வேறு தொண்டுகளைச் செய்கின்றன. அந்த நீர் நிலைகள் உன் மேனியின் நான்கில் ஒரு பகுதியைச் சுமக்கட்டும். உன்னில் ஒரு பகுதியைச் சுமக்கும் பலம் அவற்றுக்கு இருக்கிறது" என்றான்.(23)

ஸ்ரீ, "நீர்நிலைகளில் நிறுவப்படுவதற்காக எனது மற்றொரு கால்பகுதியையும் நான் கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன் பிறகு, எனது மூன்றாம் பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக" என்றாள்.(24)

சக்ரன், "வேதங்கள், வேள்விகள் ஆகியவையும், தேவர்கள் அனைவரும் நெருப்பிலேயே நிறுவப்பட்டுள்ளனர். உனது மூன்றாம் பகுதியை நெருப்பில் இடும்போது அதனை அது சுமக்கும்" என்றான்.(25)

ஸ்ரீ, "நெருப்பிலிடப்போகும் எனது மூன்றாம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, இதன்பிறகு, எனது இறுதி பகுதிக்குரிய இடத்தை ஒதுக்குவாயாக" என்றாள்.(26)

சக்ரன், "நல்லோர், பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டோர், பேச்சில் உண்மை நிறைந்தோர் ஆகியோர் உன்னில் நான்காம் பகுதியைச் சுமக்கட்டும். அதைச் சுமக்கும் சக்தி நல்லோருக்குண்டு" என்றான்.(27)

ஸ்ரீ, "நல்லோருக்கு மத்தியில் நிலைநிறுத்தப்பட இருக்கும் எனது நான்காம் பகுதியை இதோ கொடுத்தேன். ஓ! சக்ரா, பல்வேறு உயிரினங்களுக்கு என் பகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன, நீ என்னைத் தொடர்ந்து பாதுகாப்பாயாக" என்றாள்.(28)

சக்ரன், "எனது இந்த வார்த்தைகளைக் கேட்பாயாக. நான் இவ்வாறே உன்னைப் பல்வேறு உயிரினங்களுக்கு மத்தியில் பிரித்துக் கொடுத்துவிட்டேன். அந்த உயிரினங்களுக்கு மத்தியில் உனக்கு எதிராகக் குற்றமிழைப்போர் என்னால் தண்டிக்கப்படுவார்கள்" என்றான்.

தைத்தியர்களின் தலைவன் பலி, ஸ்ரீயால் இவ்வாறு கைவிடப்பட்ட பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(29)

பலி, "தற்போது சூரியன், மேற்கைப் போலவே கிழக்கிலும், தெற்கைப் போலவே வடக்கிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(30) எனினும், இந்தச் சூரியன் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, சுமேருவுக்கு மத்தியில் உள்ள பிரம்மலோகத்தில் மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நேரப்போகும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் முறியடிப்பேன்.(31) அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு பிரம்மலோகத்தில் மட்டுமே நிலையாக ஒளிரும்போதும் மீண்டும் அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு இடையில் தோன்றும் பெரும்போரில் நான் நிச்சயம் உங்கள் அனைவரையும் வெற்றிக் கொள்வேன்" என்றான்[4].(32)

[4] "புராணக் கோட்பாட்டின்படி உலகமானது மேரு மலைகளைச் சுற்றி அமைந்திருக்கிறது என உரையாசிரியர் விளக்குகிறார். பிரம்ம லோகம் அதன் மேலே நிலைத்திருக்கிறது. சூரியன் மேருவை வலம் வந்து திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுகிறான். இது வைவஸ்வத மன்வந்தரம் Vaivaswata Manwantara (விவஸ்வானின் மகனுடைய காலம் அல்லது காலகட்டம்) என்றழைக்கப்படும் காலத்தில் நடைபெறும். ஆனால், இந்தக் காலம் கடந்து சாவர்னிக மன்வந்தரம் Saarvarnika தோன்றியதும் சூரியன் மேருவின் உச்சியில் உள்ள பகுதியில் மட்டுமே ஒளிர்வான், சுற்றிலும் இருளே இருக்கும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சக்ரன் {பலியிடம்}, "பிரம்மன் உன்னை ஒருபோதும் கொல்லக்கூடாது என எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஓ! பலியே இந்தக் காரணத்தினாலேயே நான் உன் தலையில் என் வஜ்ரத்தை வீசாமல் இருக்கிறேன்.(33) ஓ! தைத்தியர்களின் தலைவா, நீ விரும்பும் இடத்திற்குச் செல்வாயாக. ஓ! பேரசுரா, உன்னில் அமைதி நிலைக்கட்டும். நெடுங்கோட்டில் {தீர்க்கரேகையில்} மட்டுமே சூரியன் ஒளிரும் எந்தக் காலமும் நேராது.(34) சூரியனின் இயக்கத்தை முறைப்படுத்தும் சட்டங்களை ஏற்கனவே சுயம்பு (பிரம்மன்) விதித்திருக்கிறார். அனைத்து உயிரினங்களுக்கும் ஒளியையும், வெப்பத்தையும் கொடுத்தபடியே அவன் {சூரியன்} இடையறாமல் இயங்குவான்.(35) ஆறு மாதங்கள் வடக்கு நோக்கிய {உத்தராயண} போக்கிலும், அடுத்த ஆறு மாதங்கள் தெற்கு நோக்கிய {தக்ஷிணாயணப்) போக்கிலும் அவன் {சூரியன்} பயணிப்பான். சூரியன் (ஒன்றன்பின் ஒன்றாக) இவ்வழியிலேயே பயணித்து, உயிரினங்கள் அனைத்திற்காகக் குளிர்காலத்தையும் வெயில் காலத்தையும் உண்டாக்குவான்" என்றான்".(36)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, இவ்வாறு இந்திரனால் சொல்லப்பட்ட தைத்தியர்களின் தலைவனான பலி, தெற்கு நோக்கிச் சென்றான். புரந்தரன் வடக்கு நோக்கிச் சென்றான்.(37) ஆயிரங்கண் இந்திரன், முற்றிலும் செருக்கற்ற வகையில் அமைந்த பலியின் இந்தப் பேச்சைக் கேட்ட பிறகு வானத்திற்கு உயர்ந்தான்" {என்றார் பீஷ்மர்}.(38)

சாந்திபர்வம் பகுதி – 225ல் உள்ள சுலோகங்கள் : 38

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்