Sunday, July 22, 2018

நாரதரின் பெருமை! - சாந்திபர்வம் பகுதி – 230

The greatness of Narada! | Shanti-Parva-Section-230 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 57)


பதிவின் சுருக்கம் : நற்குணங்களே உலகை வசப்படுத்தும் என்பதைச் சொல்ல நாரதரைக் குறித்து உக்ரசேனருக்கும், கிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அனைவரின் அன்புக்குரியவனாக, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவனாக, அனைத்துத் தகுதிகளையும் {புண்ணியங்களையும்}, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாக எவன் இருக்கிறான்" என்று கேட்டான்.(1)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக முந்தைய சந்தர்ப்பம் ஒன்றில் உக்ரசேனனால் கேட்கப்பட்டுக் கேசவனால் {கிருஷ்ணனால்} சொல்லப்பட்ட வார்த்தைகளை இப்போது நான் சொல்லப் போகிறேன்.(2)

உக்ரசேனன் {கிருஷ்ணனிடம்}, "மனிதர்கள் அனைவரும் நாரதரின் தகுதிகளைக் குறித்துப் பேசுவதில் பேராவல் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தத் தெய்வீக முனிவர் உண்மையில் அனைத்து வகைத் தகுதிகளையும் கொண்டவராக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். ஓ! கேசவா, இதைக் குறித்த யாவையும் எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டான்.(3)

வாசுதேவன், "ஓ! குகுரர்களின் தலைவரே {உக்ரசேனரே}, ஓ! மன்னா, நான் அறிந்த வரையில் நாரதரின் நற்பண்புகளைக் குறித்துச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பீராக. நாரதர் எந்த அளவுக்கு ஒழுக்கத்தில் நல்லவராகவும், பக்திமானாகவும் இருக்கிறாரோ அந்த அளவுக்கு அவர் சாத்திரங்களைக் கற்றவராக இருக்கிறார்.(4) இருப்பினும், அவரது ஒழுக்கத்தைப் பொறுத்தவரையில், அவர் ஒருவனின் குருதியைக் கொதிக்கச் செய்யும் செருக்கை ஒருபோதும் பேணிவளர்ப்பதில்லை. இதன்காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(5) நிறைவின்மை, கோபம், அலட்சியப் போக்கு {சபலம்}, அச்சம் ஆகியவை நாரதரிடம் கிடையாது. அவர்கள் காரிய தாமதம் செய்வதில் இருந்து விடுபட்டவராகவும், துணிவுமிக்கவராகவும் இருக்கிறார். இதன் காரணமாகவே அவர் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(6) நாரதர் அனைவரின் மதிப்புமிக்க வழிபாட்டுக்கும் தகுந்தவரே. ஆசை அல்லது பேராசையின் மூலம் அவர் தனது வார்த்தைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் எங்கும் கொண்டாடப்படுகிறார்.(7) அவர், ஆன்ம ஞானத்திற்கு வழிவகுக்கும் கோட்பாடுகளை முழுமையாக அறிந்தவராகவும், அமைதியான மனநிலை கொண்டவராகவும், பெருஞ்சக்தியைக் கொண்டவராகவும், தன் புலன்களுக்குத் தலைவராகவும் இருக்கிறார். அவர் வஞ்சனையில் இருந்து விடுபட்டவராக, பேச்சில் வாய்மைநிறைந்தவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(8) சக்தி, புகழ், நுண்ணறிவு, ஞானம், பணிவு, நற்பிறப்பு, தவங்கள் மற்றும் வயதால் அவர் புகழ்பெற்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(9) அவர் நன்னடத்தைக் கொண்டவராக இருக்கிறார். அவர் நன்றாக உடுத்தி நன்றாக அலங்கரித்துக் கொள்கிறார். தூய்மையான உணவை அவர் உண்கிறார். அவர் அனைவரிடமும் அன்புள்ளவராக இருக்கிறார். அவர் உடலாலும் மனத்தாலும் தூய்மையானவராக இருக்கிறார். அவர் இனிய பேச்சைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பொறாமை மற்றும் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(10)



நிச்சயமாக அவர் எப்போதும் அனைத்து மக்களின் நன்மையில் ஈடுபடுகிறார். அவரிடம் எந்தப் பாவமும் வசிப்பதில்லை. பிறரின் தீப்பேற்றில் அவர் ஒருபோதும் மகிழ்ச்சியடைவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(11) வேத மந்திரங்களைக் கேட்பதன் மூலமும், புராணங்களைக் கவனிப்பதன் மூலமும் அவர் உலகம் சார்ந்த ஆசைகள் அனைத்தையும் வெல்ல எப்போதும் முனைகிறார். அவர் பெருந்துறவியாவார், மேலும் அவர் எவரையும் ஒருபோதும் அவமதிப்பதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் வழிபடப்படுகிறார்.(12) அவர் அனைவரையும் சமமாகப் பார்க்கிறார்; எனவே, அவர் எவரிடமும் அன்பு கொள்வதுமில்லை எவரையும் வெறுப்பதுமில்லை. அவர் எப்போதும் கேட்பவனுக்கு இனிமையானவற்றையே பேசுகிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(13) அவர் சாத்திரங்களின் பெரும் கல்வியைக் கொண்டவராக இருக்கிறார். அவர் பல்வேறு இனிமையான காரியங்களைக் குறித்து உரையாடுகிறார். அவரது அறிவும், ஞானமும் பெரியனவாகும். அவர் பேராசையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனையில் இருந்தும் விடுபட்டவராக இருக்கிறார். பெரிய இதயம் கொண்டவராக இருக்கிறார். கோபத்தையும், பேராசையையும் வென்றவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(14) ஈட்டல் அல்லது இன்பம் தொடர்புடைய எந்தக் காரியத்திற்காகவும் அவர் ஒருபோதும் எவரிடமும் சச்சரவு செய்ததில்லை. அனைத்துக் களங்கங்களும் அவரிடம் இருந்து கிழித்து எறியப்பட்டன. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(15)

(பிரம்மத்திடம்) அவரது அர்ப்பணிப்பு உறுதியானதாகும். அவர் ஆன்மா பழியற்றதாகும். அவர் ஸ்ருதிகளை நன்கறிந்தவராக இருக்கிறார். கொடுமையில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். வஞ்சனை அல்லது குற்றங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவராக அவர் இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(16) (பிறரின்) பற்றுக்குரிய அனைத்துப் பொருட்களிலும் அவர் பற்றில்லாதவராக இருக்கிறார்.[1] அவர் ஒருபோதும் நீண்ட காலம் ஐயத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கியதில்லை. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(17) அவர் ஈட்டல் மற்றும் இன்பம் தொடர்புடைய பொருட்களில் எந்த ஏக்கமும் கொள்பவரில்லை. அவர் தன்னைத்தானே ஒருபோதும் புகழ்ந்து கொள்வதில்லை. அவர் வன்மத்தில் இருந்து விடுபட்டவராக இருக்கிறார். பேச்சில் மென்மை கொண்டவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(18) அவர் ஒன்றுக்கொன்று வெவ்வேறான மனிதர்கள் அனைவரின் இதயங்களிலும் எந்தப் பழியும் சொல்லாமல் அவற்றை {அவர்களின் இதயங்களைக்} கவனிக்கிறார். பொருட்களின் தோற்றம் தொடர்புடைய அனைத்து காரியங்களையும் அவர் நன்கறிந்தவராக இருக்கிறார்.(19) அவர் எவ்வகை அறிவியலையும் ஒருபோதும் அலட்சியம் செய்வதில்லை, அல்லது அவற்றில் வெறுப்பைக் காட்டுவதில்லை. அவர் தனது சொந்த தகுதிக்குரிய அறநெறியின்படி வாழ்கிறார். அவர் ஒருபோதும் கனியற்ற வகையில் காலத்தைக் கடத்துவதில்லை. அவரது ஆன்மா எப்போதும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(20)

உழைப்பைச் செலுத்த வேண்டிய காரியங்களில் அவர் எப்போதும் உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். அவர் அறிவையும், ஞானத்தையும் ஈட்டியிருக்கிறார். அவர் யோகத்தில் ஒரு போதும் தணிவடைந்ததில்லை. அவர் எப்போதும் கவனத்துடனும், முயற்சிக்கான ஆயத்தத்துடனும் இருக்கிறார். அவர் எப்போதும் கவனமிக்கவராக இருக்கிறார். இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(21) அவர் தன் குறைகள் எதற்காகவும் ஒருபோதும் நாணமடைந்ததில்லை. அவர் மிகுந்த கவனம் கொண்டவராக இருக்கிறார். அவர் எப்போதும் பிறருக்கான நன்மையில் அவர்களுடன் சேர்ந்து எப்போதும் ஈடுபடுகிறார். அவர் பிறரது இரகசியங்களை ஒருபோதும் வெளியிடுவதில்லை. இதன் காரணமாகவும் அவர் எப்போதும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(22) மதிப்புமிக்கப் பொருட்களை அடையும் சந்தர்ப்பங்களிலும் அவர் ஒருபோதும் திளைப்பின் வசப்படுவதில்லை. எந்த இழப்பிலும் அவர் ஒருபோதும் வருந்துவதுமில்லை. அவரது புத்தி உறுதியானதாகவும், நிலையானதாகவும் இருக்கிறது. அவரது ஆன்மா அனைத்துப் பொருட்களிலும் பற்றில்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவும் அவர் எங்கும் மதிப்புடன் கொண்டாடப்படுகிறார்.(23) இவ்வாறு அனைத்துத் தகுதிகளையும், சாதனைகளையும் கொண்டவரும், அனைத்து காரியங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்பவரும், தூய்மையான உடலும் மனமும் கொண்டவரும், முற்றிலும் மங்கலகரமானவரும், காலத்தின் போக்கு மற்றும் குறிப்பிட்ட செயல்களின் வாய்ப்புக்குரிய காலங்களையும் நன்கறிந்தவரும், இனிமையான பொருட்கள் அனைத்தையும் நன்கறிந்தவருமான அவரிடம் எவர்தான் அன்புபாராட்டாமல் இருப்பார்கள்?" என்று கேட்டான் {கிருஷ்ணன்}".(24)

சாந்திபர்வம் பகுதி – 230ல் உள்ள சுலோகங்கள் : 24

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்