Sunday, August 19, 2018

எழுபத்தோரு தனியுருக்கள்! - சாந்திபர்வம் பகுதி – 255

Seventy one entities! | Shanti-Parva-Section-255 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 82)


பதிவின் சுருக்கம் : ஐம்பூதங்களின் ஐம்பது குணங்களையும், மனத்தின் ஒன்பது குணங்களையும், புத்தியின் ஐந்து குணங்களையும், ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய எழுபத்தோரு தனியுருக்களை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, ஓ! பாவமற்றவனே, பூதங்களின் கணக்கீட்டைக்குறித்துத் தீவிற்பிறந்த முனிவரின் {துவைபாயனரின் / வியாசரின்} உதடுகளிலிருந்து விழுந்த வார்த்தைகளை மிக்கப் பெருமையுடன் மீண்டும் கேட்பாயாக.(1) (அறியாமைகள் அனைத்தையும் கடந்து) சுடர்மிக்க நெருப்பைப் போல இருந்த அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, புகையால் மூடப்பட்ட நெருப்புக்கு ஒப்பான தனது மகனிடம் {சுகரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார். ஓ! மகனே, அவர் சொன்னவற்றில் கற்பிக்கப்பட்ட நானும் கூட (அறியாமையை அகற்றும்) அந்தக் குறிப்பிட்ட ஞானத்தை மீண்டும் விளக்கப் போகிறேன்.(2)

அசையாமை, கனம், கடினத்தன்மை, படைக்குந்தன்மை, மணம், அடர்த்தி, அனைத்து வகை மணங்களையும் ஈர்க்கும் வல்லமை, இணக்கம் {பிணைப்பு}, (காய்கறிகள் மற்றும் விலங்குகளைப் பொறுத்தவரையில்) வசிக்கும்தன்மை, பொறுமை அல்லது தாங்கிக் கொள்ளும் வல்லமை என்றழைக்கப்படும் மனப்பண்பு ஆகியவை பூமியின் குணங்களாகும்.(3)

குளிர்ச்சி, சுவை, ஈரம், நீர்மை, மென்மை, ஏற்புடைமை, நாவு, பாயுந்தன்மை {பெருகுதல்}, உறையச் செய்யுந்தன்மை, பூமிய சார்ந்த பொருட்கள் பலவற்றை உருக்கும் சக்தி ஆகியவை நீரின் குணங்களாகும்.(4)

தடுக்கப்பட முடியாத சக்தி, எரியும் தன்மை, வெப்பம், மென்மையாக்கும் வல்லமை {சமைத்தல்}, ஒளி, துக்கம், நோய், வேகம், சீற்றம் மற்றும் மாற்றமில்லாத மேல்நோக்கிய அசைவு ஆகியன நெருப்பின் {தேயுவின்} குணங்களாகும்.(5)

வெப்பமும் {உஷ்ணமும்}, குளிர்ச்சியும் {சீதமும்} இல்லாத தீண்டல் {ஸ்பரிசம்}, பேச்சுப் புலனுக்குத் துணை செய்யும் வல்லமை, (அசைவைப் பொறுத்தவரையில்) சார்பற்றிருக்கும் {சுதந்திரத்} தன்மை, பலம், வேகம், {மலஜலம் உள்ளிட்ட} அனைத்து வகை உமிழ்வுக்கும், வெளியேற்றத்திற்கும் துணைபுரியும் சக்தி, பிற பொருட்களை உயர்த்தும் சக்தி, உள்ளிழுத்து வெளியிடும்மூச்சுகள், (சித்தின் குணமான) உயிர், (மரணத்தோடு கூடிய) பிறப்பு ஆகியவை காற்றின் {வாயுவின்} குணங்களாகும்.(6)

ஒலி, விரிவு {படர்ந்திருத்தல்}, உள்ளடக்கும் வல்லமை {துவாரத்தன்மை}, தேவைகளுக்கு ஆதாரமாக இல்லாத புகலிடமின்மை, புலப்படா நிலை, மாறும் வல்லமை, தடுப்பை உண்டாக்க இயலாமை, கேள்விப் புலனை உண்டாக்கும் பொருள் காரணம், மனித உடலில் உள்ள வெறுமையான இடங்கள் {துவாரங்கள்} ஆகியன வெளியின் {ஆகாயத்தின்} குணங்களாகும்.(7)



அறிவிக்கப்பட்டபடி இவையே ஐந்து அடிப்படை பூதங்களின் சாரங்களாக அமையும் ஐம்பது குணங்களாகும்[1].(8)

[1] "முனிவர்கள் ஒரு பூதத்தைத் தாங்கள் அறிந்த குறிப்பிட்ட குணங்களை இயற்கூறுகளாகக் கொண்ட அறியப்படாத பொருளாக அல்லாமல், அக்குணங்களின் தொகையாகவே கருதுகின்றனர் என்பது இதில் தெளிவாகிறது. எனவே, மனித மனத்தைப் பொறுத்தவரையில், பருப்பொருளானது, விரிவு, பிரிந்து போதல் முதலிய இயற்கூறுகளைக் கொண்ட அறியப்படாத பொருள் என்ற கருத்துக்கு எந்தச் சான்றாணையும் கிடையாது; மறுபுறம் பருப்பொருளானது, நமக்குத் தோன்றுவதைப் போலவே, விரிவு, பிரிந்து போதல் முதலிய இயற்கூறுகளின் ஒருங்கிணைந்த நிலையே ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "(இப்படி) ஐம்பூதங்களிலும் கண்டறியப்பட்ட குணங்கள் ஐம்பதென்று சொல்லப்பட்டன" என்றிருக்கிறது.

பொறுமை, ஆராய்தல் அல்லது நீண்ட வாதம், நினைத்தல், மறதி அல்லது பிழை {ப்ரமம்}, கற்பனை {மனோரதம்}, பொறை {தாங்குந்திறன்}, நன்மை நோக்கிய மனச்சார்பு, தீமை நோக்கிய மனச்சார்பு, நிலையில்லாமை ஆகியவை மனத்தின் {ஒன்பது} குணங்களாகும்.(9)

நல்ல மற்றும் தீய சிந்தனைகள் இரண்டின் அழிவு (கனவற்ற உறக்கம்), விடாமுயற்சி, கவனக்குவிப்பு, தீர்மானம், நேரடி சான்றைச் சார்ந்து அனைத்து பொருட்களையும் உறுதிசெய்து கொள்வது ஆகியன புத்தியின் ஐந்து குணங்களாகும்" என்றார் {பீஷ்மர்}.(10)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "புத்திக்கு ஐந்து குணங்கள் இருக்கின்றன என எவ்வாறு சொல்லப்படுகிறது? மேலும், ஐம்புலன்களும் எவ்வாறு (ஐம்பூதங்களின்) குணங்களாகச் சொல்லப்படுகின்றன? ஓ! பாட்டா, இவை அனைத்தையும் புரிந்து கொள்வது மிகக் கடினமாக இருப்பதால் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(11)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "புத்தியானது, ஐம்பூதங்களையும் தன்னகத்தைக் கொண்டுள்ளதால் அது {புத்தி} மொத்தமாக அறுபது குணங்களைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது[2]. அந்தக் குணங்கள் அனைத்தும் ஆன்மாவோடு கலந்த நிலையிலேயே நீடித்திருக்கின்றன. ஓ! மகனே, பூதங்கள், அவற்றின் ( ஐம்பது) குணங்கள், (அவற்றோடு மனத்தின் ஒன்பது குணங்கள் மற்றும் புத்தியின் ஐந்து குணங்கள்) ஆகிய அனைத்தும் சிதைவடையாதவனால் படைக்கப்பட்டன என்று வேதங்கள் அறிவிக்கின்றன. எனவே இந்த எழுபத்தோரு {71} தனியுருக்களும் (ஆன்மாவைப் போல) நித்தியமானவை அல்ல[3].(12) ஓ! மகனே, (அண்டத்தின் தோற்றம் மற்றும் பிற நிகழ்வுகளைக் குறித்து) உன் முன்பு முன் சொன்ன சுலோகங்களில் வைக்கப்பட்ட வெளிப்பாடுகளுக்கு முரண்பட்ட கோட்பாடுகள் அனைத்தும் அறிவுக்கண்ணின் முன்பு பழுதானவையாக இருக்கின்றன. எனினும், பரப்பிரம்மம் குறித்து நான் சொன்ன அனைத்தையும் இவ்வுலகில் மிகக் கவனமாகக் கவனித்து, பிரம்மஞானம் அளிக்கும் பலத்தை அடைந்த பிறகு, இதய அமைதியை வெல்ல {அமைதியான புத்தியை அடைய} முனைவாயாக"[4] என்றார் {பீஷ்மர்}.(13)

[2] "பூதங்கள் எண்ணிக்கையில் ஐந்தாகும். அவற்றின் குண எண்ணிக்கை ஐம்பதாகும். புத்திக்கெனக் குறிப்பிட்ட சிறப்புக் குணங்களுடன் அந்த ஐந்தும், ஐம்பதும் சேர்க்கப்படுகிறது. எனவே, புத்தியின் குண எண்ணிக்கை அறுபதை அடைகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] பூதங்கள் ஐந்து, அவற்றின் குணங்கள் ஐம்பது, மனம், மனத்தின் குணங்கள் ஒன்பது, புத்தி, புத்தியின் குணங்கள் ஐந்து ஆக மொத்தம் எழுபத்தோரு தனியுருக்கள்

[4] "இது மிகக் கடினமான சுலோகமாகும். அண்டத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கோட்பாடுகளை யுதிஷ்டிரன் கவனிப்பதை பீஷ்மர் விரும்பவில்லை, மாறாக, பிரம்மத்தை அடையும் வழிமுறைகளை மிகக் கவனமாகக் கவனிக்கச் சொல்கிறார். அமைதியான இதயம் கொள்வது என்பது நிர்விருத்திகா புத்தி Nirvrittikaa buddhi கொள்வதைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அஃது உனக்கு வேதவிருத்தமாகப் பிறரால் சொல்லப்பட்டது. ஆராயுமிடத்தில் அது குற்றமுள்ளது. ஆகையால் இப்பொழுது இவ்வுலகில் பிரம்மத்தவம் முழுமையையும் அடைந்து பிரம்மத்தின் பிரபாவத்தால் சாந்தமான புத்தியை உடையவனாகக் கடவாய்" என்றிருக்கிறது.

சாந்திபர்வம் பகுதி – 255ல் உள்ள சுலோகங்கள் : 13

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்