Tuesday, August 28, 2018

தர்மலக்ஷணம்! - சாந்திபர்வம் பகுதி – 259

The indications of Righteousness! | Shanti-Parva-Section-259 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 86)


பதிவின் சுருக்கம் : நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள், நன்னோக்கம், களவு செய்யாமை, தீங்கிழையாமை, ஈகை முதலியவையே அறத்தின் குறியீடுகளென யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இந்தப் பூமியில் வசிக்கும் மனிதர்கள் அனைவரும், அறத்தின் {தர்மத்தின்} இயல்பு குறித்த ஐயங்களால் நிறைந்திருக்கின்றனர். அறம் என்றழைக்கப்படும் இஃது என்ன? அறம் எங்கிருந்து வந்தது? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக.(1) அறம் இவ்வுலகத் தொண்டுக்குரியதா? மறுமைக்கான தொண்டுக்குரியதா? அல்லது இம்மை மற்றும் மறுமை ஆகிய இரண்டிற்குமான தொண்டுக்குரியதா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(2)

[1] கும்பகோணம் பதிப்பில், "இந்தத் தர்மம் இவ்வுலகில் பயனுடையதா? அல்லது பரலோகத்தில் பயனுடையதாகுமா? அல்லது இவ்விரண்டு உலகத்திலும் பயனுடையதா?" என்றிருக்கிறது.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நல்லோரின் ஒழுக்கம், ஸ்மிருதிகள், வேதங்கள் ஆகிய இம்மூன்றும் அறத்தின் (மூலக்) குறியீடுகளாகும். இவை தவிர, கல்விமான்கள் (ஒரு செயலை நிறைவேற்றும்) நோக்கத்தை நான்காவதாக {மூலக் குறியீடாக} அறிவித்திருக்கிறார்கள்.(3) பழங்காலத்தின் முனிவர்கள் எவை அறச்செயல்கள் என்பதை அறிவித்து, தகுதியின் {புண்ணியத்தின்} அடிப்படையில் அவற்றை மேன்மையானவை, தாழ்ந்தவை என்றும் வகுத்திருக்கிறார்கள். உலகக் காரியங்களின் ஒழுங்கிற்காகவே அறவிதிக்ள விதிக்கப்பட்டுள்ளன.(4) இம்மை மற்றும் மறுமை என்ற ஈருலகங்களிலும் அறமானது மகிழ்ச்சியையே தன் கனியாக விளைவிக்கிறது. நுட்பமான வழிகள் மூலம் தகுதியை {புண்ணியத்தை} அடைய இயலாத பாவம்நிறைந்த மனிதர்கள், பாவத்தால் மட்டுமே களங்கமடைகிறார்கள்.(5)

பாவிகளைத் தங்கள் பாவங்களில் இருந்து ஒருபோதும் தூய்மைப்படுத்த முடியாது என்ற கருத்தைச் சிலர் கொண்டுள்ளனர். அறமற்ற செயலைச் செய்தும், அதே வழிமுறையின் மூலம் அறச்செயலுக்கான தகுதியை ஒருவன் அடைவதைப் போலவே, ஆபத்துக் காலங்களில் பொய் பேசும் ஒருவன், மெய் பேசும் ஒருவனின் தகுதியை அடைகிறான். ஒழுக்கமே அறத்தின் புகலிடமாகும். ஒழுக்கத்தின் துணையுடன் கூடிய அறம் யாது என்பதை நீ அறிய வேண்டும்.(6) (தன் களங்கங்களைக் காணாமலும், அறிவிக்காமலும், பிறரின் களங்கங்களை அறிவிப்பது மனிதனின் இயல்பாகும்). {மறைமுகமாகப்} பிறருக்கு உடைமையானவற்றைக் களவு செய்யும் கள்வன், தன் களவால் உண்டான பயன்களை வெளிப்படையான அறச்செயல்களுக்குச் செலவிடுகிறான். அரசற்ற காலத்தில் பிறர் உடைமைகளை அபகரிப்பதில் அக்கள்வன் பேரின்பம் கொள்கிறான்.(7) எனினும், களவின் மூலம் தான் அடைந்ததைப் பிறர் களவாடும்போது, அவனே (அக்குற்றமிழைத்தவர்களைத் தண்டிக்க) ஒரு மன்னனை விரும்புகிறான். உடைமையின் உரிமையில் குற்றமிழைக்கப்பட்டதாகப் பெரிய அளவில் உளக் கொதிப்படையும் அத்தகைய வேளையிலும் கூட, தங்கள் உடைமைகளில் நிறைவுடன் வாழ்வோரின் செல்வத்தில் அவனே ரகசியமாகப் பேராசை கொள்கிறான்.(8) (தானே களவால் பாதிப்படைந்தவனாக இருக்கும்போதும்) அவன், அச்சமில்லாமலும், தன் மனத்தில் எந்த ஐயமும் இல்லாமலும், பாவம் அனைத்தும் கழுவப்பட்ட மனத்துடன் மன்னனின் அரண்மனைக்குச் செல்கிறான். அவன் எந்தப் பாவச்செயலின் களங்கத்தையும் தன் இதயத்திற்குள் காண்பதில்லை.(9) உண்மை பேசுவதே தகுதிவாய்ந்ததாகும் {புண்ணியம் நிறைந்ததாகும்}. வாய்மையைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வாய்மையாலேயே அனைத்தும் தாங்கப்படுகின்றன, அனைத்தும் வாய்மையையே சார்ந்திருக்கின்றன.(10)

பாவம் நிறைந்த கொடியவர்கள் கூட, தங்களுக்குள் உண்மையை {சத்தியத்தைக்} காக்க உறுதிபூண்டு, அனைத்து வகைச் சச்சரவுகளையும் புறந்தள்ளி, ஒற்றுமையடைந்து வாய்மை சார்ந்து தங்கள் (பாவச்) செயல்களில் தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் போலியாக நடந்து கொண்டால், நிச்சயம் அவர்கள் அழிவையே அடைவார்கள்.(11) பிறருக்குச் சொந்தமானதை ஒருவன் அபகரித்துக் கொள்ளக்கூடாது. இஃது ஒரு நித்தியக் கடப்பாடாகும். இது பலவீனரால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று என வலிய மனிதர்கள் கருதுகிறார்கள்.(12) எனினும், இம்மனிதர்களின் விதி எதிராக மாறும்போது, இந்தத் தடையாணை அவர்களது அங்கீகாரத்தைப் பெறுகிறது. மேலும் பலத்திலோ, ஆற்றலிலோ பிறரை விஞ்சி நிற்போர் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(13) எனவே, நீ எந்தத் தீய செயலிலும் ஒருபோதும் உன் இதயத்தை நிலைநிறுத்தாதே. இவ்வழியில் நடந்து கொள்பவனுக்கு நேர்மையற்ற மனிதர்களிடமோ, கள்வர்களிடமோ, மன்னனிடமோ அச்சமேதும் ஏற்படுவதில்லை. எவருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதன் தூய இதயத்துடன் அச்சமில்லாமல் வாழ்கிறான்.(14) காட்டில் இருந்து வசிப்பாரற்ற ஒரு கிராமத்திற்கு விரட்டப்பட்ட மானைப் போலவே ஒரு கள்வன் அனைவரையும் {கண்டு} அஞ்சுவான். அவன் பிற மக்களையும் தன்னைப் போலப் பாவிகளாகவே நினைக்கிறான்.(15)



தூய இதயம் கொண்ட ஒருவன் எப்போதும் உற்சாகத்தில் நிறைந்தவனாக எத்திக்கிலும் அச்சமில்லாதவனாக இருப்பான். அத்தகையவன் ஒருபோதும் தன் ஒழுங்கீனத்தைப் பிறரிடம் காணமாட்டான்[2].(16) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்வதில் ஈடுபடுவோர், ஈகை பயில்வதும் மற்றொரு உயர்ந்த கடமையெனச் சொல்லியிருக்கின்றனர். செல்வம் படைத்தோர், வறியவர்களே இந்தக் கடமையை விதித்திருக்கின்றனர் என நினைக்கிறார்கள்.(17) எனினும், அந்தச் செல்வந்தர்களின் ஊழில் திருப்பம் நேர்வதன் விளைவால் வறுமையைச் சந்திக்கும்போது ஈகை பயிற்சியானது தன்னை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. மிகப் பெரும் செல்வந்தர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள் என்ற அவசியமேதுமில்லை.(18) இஃது எவ்வளவு வலியைத் தரவல்லது என்பதையறிந்த ஒருவன், பிறர் தனக்கு இழைக்கும் போது விரும்பாத எதையும் ஒருபோதும் பிறனுக்கு இழைக்கக்கூடாது.(19) மாற்றான் மனைவியை விரும்பும் {காதலிக்கும்} ஒருவனால், (அதே வரம்புமீறலைச் செய்யும்) வேறொருவனுக்கு என்ன சொல்ல முடியும்? {அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?}. எனினும், அத்தகைய மனிதனும்கூடத் தன் மனைவியை மற்றொரு காதலனுடன் காணும்போது, அச்செயலை மன்னிக்க இயலாததைக் காணமுடிகிறது[3].(20)

[2] "அத்தகைய மனிதனும் குறைகள் கொண்டவனே. சபலத்தின் காரணமாக ஒரு கணத்தில் தான் செய்த ஒரு குற்றத்தை மற்றவர்களும் செய்வார்கள் என்று அவன் ஒருபோதும் கருதுவதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] கும்பகோணம் பதிப்பில், "எவன் பிறன் மனைவிக்கு ஜாரனாவனோ {சோர புருஷனாக இருக்கிறானோ} அவன் யாரை என்ன சொல்லத் தகுதியுள்ளவன்? பிறனொருவன் தன் மனைவிக்கு ஜாரனாக ஏற்படுவானானால் அப்பொழுது அவன் பொறுக்கமாட்டானென்பது என் எண்ணம்" என்றிருக்கிறது.

மூச்சு விட வேண்டும் என விரும்பும் ஒருவன், அதே செயலைச் செய்யும் மற்றொருவனை ஒரு கொலைபாதகச் செயலின் மூலம் எவ்வாறு தடுக்க நினைக்கலாம்?[4] ஒருவன் எதை எதைத் தனக்கு விரும்புவானோ, அவற்றை நிச்சயம் அடுத்தவருக்கும் விரும்ப வேண்டும்.(21) ஒருவன் தான் உடைமையாகக் கொண்டுள்ள அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு, வறியோரின் தேவைகளில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இதன் காரணமாகவே (வணிகம் அல்லது வட்டிக்கு விடுதல் ஆகியவற்றின் மூலம்) ஒருவனுடைய செல்வத்தைப் பெருக்கும் நடைமுறையைப் படைப்பாளன் ஏற்படுத்தினான்.(22) ஒருவன் எவ்வழியில் நடந்தால் தேவர்களைச் சந்திப்பான் என்று நம்புவானோ அவ்வழியிலேயே நடக்க வேண்டும்; அல்லது செல்வம் ஈட்டப்படும் வேளைகளில், வேள்வி மற்றும் கொடை முதலிய கடமைகளைப் பின்பற்றுவது மெச்சத்தகுந்ததாகும்[5].(23)

[4] கும்பகோணம் பதிப்பில், "எவன் தான் உயிர்வாழ விரும்புகிறானோ அவன் பிறனை எப்படித் துன்பம் செய்யலாம்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தான் உயிர்வாழ வேண்டும் என விரும்பும் ஒருவன் எவ்வாறு மற்றொருவனைக் கொல்லலாம்" என்றிருக்கிறது

[5] கும்பகோணம் பதிப்பில், "எந்த நல்வழியில் தேவர்கள் மகிழ்ச்சியடைவார்களோ அந்த வழியில் இருக்க வேண்டும். அல்லது, லோப மார்க்கத்திலிருந்தாலும் தர்மமான (லோபமார்க்கத்தில்) இருப்பது நலம்" என்றிருக்கிறது.

ஏற்புடைய (அமைதியான) வழிமுறைகளின் மூலம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதே அறம் எனத் தவசிகள் சொல்லியிருக்கிறார்கள். ஓ! யுதிஷ்டிரா, அறம் மற்றும் மறத்தின் {அநீதியின்} குறியீடுகளைத் தீர்மானிப்பதில் இதுவே நோக்கில் கொள்ளப்படும் அடிப்படைத் தத்துவம் என்பதைக் காண்பாயாக.(24) பழங்காலத்தில் படைப்பாளன் {பிரம்மன்}, உலகை ஒன்றாகத் தாங்கிக் கொள்ளும் ஊட்ட சக்தியுடன் அறத்தை {தர்மத்தை} ஏற்படுத்தினான். சிறப்புகள் நிறைந்த நல்லோரின் ஒழுக்கமானது, நுட்பமான பல கருத்துகளைச் சார்ந்த அறத்தை அடைவதற்கு (எண்ணற்ற) நலம்தரும் கட்டுப்பாடுகளைக் கொண்டதாகும்.(25) ஓ! குருகுலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, அறத்தின் குறியீடுகளே உனக்கு இப்போது மீண்டும் சொல்லப்பட்டது. எனவே, ஒருபோதும் நீ உன் புத்தியைத் தீச்செயலில் நிலைக்கச் செய்யாதே" என்றார் {பீஷ்மர்}.(26)

சாந்திபர்வம் பகுதி – 259ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்