Friday, September 07, 2018

உடல் வாடா அறமீட்டல்! - சாந்திபர்வம் பகுதி – 265

Religious merit without wasting body! | Shanti-Parva-Section-265 | Mahabharata In Tamil

(மோக்ஷதர்மம் - 92)


பதிவின் சுருக்கம் : கொல்லாமை குறித்து மன்னன் விசரக்கு சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; கொல்லாமையைப் பயிலும்போது, உடலுக்குத் துன்பத்தைக் கொடுக்காமல் அறம் செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


{யுதிஷ்டிரன் பீஷ்மரிடம்}, "ஒரு விதமான தீங்கையும் செய்யாதவர்கள் தங்கள் உடலையும், ஆபத்துகளையும் அறியாமல் இருக்கிறார்கள். தொழில் இல்லாதவனுக்கு உடற்பயணம் எவ்வாறு நடக்கும்?" என்று கேட்டான்}.[1]


[1] சென்ற பகுதியில் பீஷ்மர் "இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்" என்று யுதிஷ்டிரனிடம் கேட்கிறார். அடுத்தப் பகுதியின் தொடக்கத்திலேயே எத்தொடர்பும் இல்லாமல் ஒரு கதையைச் சொல்ல விழைகிறார். கும்பகோணம் பதிப்பில் யுதிஷ்டிரன் கேட்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. கங்குலியிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இக்கேள்வி இல்லை.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இதுதொடர்பாக, உயிரினங்கள் அனைத்திடமும் தான் கொண்ட கருணையின் மூலம் மன்னன் விசரக்கு {விசக்யு / விசக்நு /விசக்கண்ணன்} சொன்ன பழைய உரை குறிப்பிடப்படுகிறது.(1) உடல் சிதைக்கப்பட்ட ஒரு காளையைக் கண்டும், பசுவேள்வியில் கொல்லப்படும் பசுக்களின் வலிமிக்க வேதனைக் குரலைக் கேட்டும்,[2] விழாக்களில் துணைபுரிய அங்கே திரளும் கொடூரப் பிராமணர்களைக் கண்டும் அம்மன்னன் {விசரக்கு} இவ்வார்த்தைகளைச் சொன்னான்: "உலகில் உள்ள பசுக்கள் அனைத்தும் செழிக்கட்டும்" {என்றான்}. கொல்லத்தொடங்கும்போது (அந்த ஆதரவற்ற விலங்களுக்கு) ஆசி கூறும் இவ்வார்த்தைகள் சொல்லப்பட்டன.(3) மேலும் அந்த ஏகாதிபதி, "வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறுபவர்கள், புத்தியற்றவர்கள், நாத்திகர்கள் மற்றும் ஐயுறுவாதிகள், வேள்விகள் மற்றும் அறச்சடங்குகளின் மூலம் புகழை அடைய விரும்புவோர் ஆகியோர் மட்டுமே வேள்விகளில் விலங்குகள் கொல்லப்படுவதை உயர்வாகப் பேசுகிறார்கள்.(4) அற ஆன்மாவான மனு, (அறச்) செயல்கள் அனைத்திலும் தீங்கிழையாமையை மெச்சுகிறார். உண்மையில் மனிதர்கள், கனியிலுள்ள {பலனில்} விருப்பத்தால் தூண்டப்பட்டே வேள்விகளில் விலங்குகளைக் கொல்கிறார்கள்.(5)

[2] கும்பகோணம் பதிப்பில், "அந்த அரசன் யஜ்ஞசாலையில் யூபத்தை முறித்துக் கொண்டு நிற்கும் விருஷபத்தையும், தொழுவத்தில் (துன்பத்தையடைகையில்) விருஷபங்களுடைய மிகுதியா சப்தத்தையும் பார்த்து, "கோக்களுக்கு க்ஷேமமுண்டாக வேண்டும்" என்று பிரார்த்தித்தான்" என்றிருக்கிறது.

எனவே, (கொலை மற்றும் கொல்லாமை அல்லது தீங்கிழையாமை ஆகியவற்றைப் பொறுத்தவரையில்) அதிகாரமுடையவற்றை (சாத்திரங்களை) அறிந்த ஒருவன், அவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்த மிக நுட்பமான, உண்மையான கடமையின் போக்கையே பின்பற்ற வேண்டும். உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழைக்காமல் இருப்பதே கடமைகள் அனைத்திலும் உயர்ந்ததாகும்.(6) ஒருவன், வசிப்பாரற்ற இடத்தின் அருகில் வாழ்ந்து, கடும் நோன்புகளைப் பயில்வதைப் பழகி, வேதச் செயல்களால் {அறச்சடங்குகளில்} குறிப்பிடப்படும் கனிகளை {பலன்களை} அலட்சியம் செய்து, இல்லறத்தைக் கைவிட்டு துறவற வாழ்வுமுறையைப் பின்பற்ற வேண்டும்.(7) வேள்விகள், மரங்கள் மற்றும் யூபங்களை உயர்வாக மதிப்பிடும் மனிதர்கள் களங்கமுடைய இறைச்சியை {மட்டும்} உண்ணமாட்டார்கள். எனினும், இந்நடைமுறை மெச்சத்தகுந்ததில்லை[3].(8) கள், மீன், இறைச்சி, மது {ஆஸவம் / சாராயம்}, அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் பண்டங்கள், எள் {திலான்னம்} ஆகியன கபடர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. (வேள்விகளில்) இவற்றைப் பயன்படுத்த வேதங்களில் விதிக்கப்படவில்லை.(9) செருக்கு, தீர்மானப்பிழை {மயக்கம்} மற்றும் பேராசை ஆகியவற்றிலிருந்து இவற்றின் மீது விருப்பம் ஏற்படுகிறது[4].

[3] "சாதாரண மனிதர்கள், அறச்செயல் நடைமுறைகளிலும், வேள்விகளிலும் கொல்லப்படாத விலங்குகள் அனைத்தில் இருந்தும் கிடைக்கும் இறைச்சியைக் களங்கமுடையதாகக் கருதி அவ்விறைச்சி உண்பதைத் தவிர்க்கிறார்கள். எனினும், இங்கே பேசுபவர் {விசரக்கு}, வேள்விகளில் கொல்லப்படும் விலங்குகளின் அனைத்தின் இறைச்சியும் கூடக் களங்கமுடையவை என்பதால் இந்நடைமுறை மெச்சத்தகுந்ததில்லை என்று சொல்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] கும்பகோணம் பதிப்பில், "தூர்த்தர்களால் கள், மீன், தேன், மாம்ஸம், ஆஸவம் (சாராயம்), திலான்னம் {எள் எண்ணெய் கலந்த அன்னம்} இவை (முதலானை) உண்ணப்படுகின்றன. இவை வேதங்களில் சொல்லப்படவில்லை. காமத்தினாலும், லோபத்தினாலும், மோகத்தினாலும் இவைகளில் விருப்பம் வைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இறைச்சி, மது, சுரா, மீன், அஸவம் மற்றும் கிரிசரம் ஆகியவற்றை வஞ்சகர்கள் எண்ணினார்கள். அவை வேதங்களால் எண்ணப்படவில்லை. ஆசை, குழப்பம் மற்றும் பேராசை ஆகியனவே இந்தச் சபலங்களை அறிமுகப்படுத்தின" என்றிருக்கிறது.

உண்மையான பிராமணர்கள், ஒவ்வொரு வேள்வியிலும் விஷ்ணுவின் இருப்பை உணர்கிறார்கள்.(10) இனிய பாயசத்துடன் அவனது {விஷ்ணுவின்} வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களும் (அவற்றின் இலைகள் மற்றும் மலர்கள்),(11) தூய இதயம் கொண்டோர், தூய இயல்பு கொண்டோர் மற்றும் திறன்மிக்க ஞானமும், புனிதமும் கொண்டோரால் தகுந்ததாகக் கருதப்படும் எந்தச் செயலும், அவர்களால் தூய்மையானதாகக் கருதப்படும் வேறு எதுவும் அந்த உயர்ந்த தேவனுக்குக் காணிக்கையாக அளிக்கத்தகுந்தவையே; இவை அவன் ஏற்கத் தகாதவையல்ல" என்றார் {பீஷ்மர்}.(12)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "உடலும், அனைத்து வகை ஆபத்துகளும், பேரிடர்களும் தொடர்ந்து ஒன்றோடொன்று போரிட்டுக் கொண்டே இருக்கின்றன. எனவே, தீங்கு செய்யும் விருப்பத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டவனும், இக்காரியத்தில் செயல்பட இயலாதவனுமான ஒருவன் தன் உடலைப் பராமரித்துக் கொள்வதில் எவ்வாறு வெல்ல முடியும்?" என்று கேட்டான்[5].(13)

[5] "ஆபத்துகள் எப்போதும் உடலை அழிக்க முனைகின்றன. உடலானது அந்த ஆபத்துகளை அழிக்க எப்போதும் முனைகிறது. இந்த இடைவிடாத போர் அல்லது போராட்டம் தீங்கிழைக்கும் விருப்பத்தையே குறிக்கிறது. எனவே, இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவே தீங்கு செய்ய வேண்டியுள்ளதால், முற்றிலும் தீங்கிழையாத வாழ்வை எந்த மனிதனாலும் எவ்வாறு வாழ முடியும் என்பது யுதிஷ்டிரனின் கேள்வி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர், "ஒருவன் தகுதியை அடைய இயலும்போது, தன் உடல் நலிவுறாமலும், வலியை அனுபவிக்காமலும், அவனுக்கு மரணம் நேராத வகையிலும் செயல்பட வேண்டும்" என்றார்[6].(14)

[6] "ஒருவன் தன் உடலை வீணாக்காமல் அறத்தகுதியை ஈட்ட வேண்டும்; தகுதியை ஈட்டுவதற்காக அவன் தன் உடலை அழித்துக் கொள்ளக்கூடாது என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சாந்திபர்வம் பகுதி – 265ல் உள்ள சுலோகங்கள் : 14

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்