All should ever remember the Saraswati! | Shalya-Parva-Section-54 | Mahabharata In Tamil
(கதாயுத்த பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : சாண்டில்யரின் மகளான ஸ்ரீமதியின் ஆசிரமத்திலிருந்து பிலக்ஷப்பிரஸ்ரவணத் தீர்த்தத்திற்கும், அடுத்ததாகக் காரபவனத் தீர்த்தத்திற்கும், மித்ராவருண ஆசிரமத்திற்கும், பிறகு அங்கிருந்து யமுனா தீர்த்ததிற்குச் சென்ற பலராமன்; அங்கே யமுனா தீர்த்தத்தில் கூடிய முனிவர்களின் சபையில் நாரதரைக் கண்ட பலராமன்; பீம துரியோதன கதாயுத்தத்தைக் குறித்துப் பலராமனுக்குச் சொன்ன நாரதர்; தன் சீடர்களுக்கிடையிலான மோதலைக் காண விரும்பி களத்திற்கு விரைந்து சென்ற பலராமன்...
![]() |
மீட்கப்படுகிறாள் சரஸ்வதி |
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குருக்ஷேத்திரம் சென்று, அங்கே தானமளித்த அந்தச் சாத்வத குலத்தோன் {பலராமன்}, பேரழகுடன் கூடிய மிகப்பெரிய ஓர் ஆசிரமத்திற்குச் சென்றான்.(1) அந்த ஆசிரமத்தில் மதுக {இலுப்பை} மரங்கள், மாமரங்கள், பிலாக்ஷ {ஆல} மரங்கள், நியகிரோத {புங்க} மரங்கள், வில்வ மரங்கள், சிறப்பான பலா மரங்கள், அர்ஜுன {மருத} மரங்கள் நிறைந்திருந்தன.(2) புனிதக் குறியீடுகள் பலவற்றைக் கொண்ட அந்த நல்ல ஆசிரமத்தைக் கண்ட பலதேவன், அது யாருடையது என்று முனிவர்களிடம் கேட்டான்.(3)