History of Shraddha! | Anusasana-Parva-Section-91 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 91)
பதிவின் சுருக்கம் : சிராத்தம் உண்டான வரலாறு மற்றும் சிராத்தத்தில் கைவிட வேண்டியவை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "சிராத்தம் என்பது முதலில் யாரால், எந்த நேரத்தில் கருதப்பட்டது? அதன் சாரம் என்ன? {அது எவ்வகையானது?} பிருகு மற்றும் அங்கிரஸின் வழித்தோன்றல்கள் மட்டுமே உலகத்தில் இருந்த நேரத்தில் எந்த முனிவர் சிராத்தத்தை நிறுவினார்?(1) சிராத்தத்தில் எச்செயல்களைச் செய்யக் கூடாது? கிழங்குகளும், கனிகளும் காணிக்கையளிக்கப்படும் சிராத்தங்கள் யாவை? சிராத்தங்களில் என்ன வகை அரிசி தவிர்க்கப்பட வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)