Friday, August 09, 2013

கர்ணன் பதிவுகளுக்கு சிவாஜி படத்தைப் பயன்படுத்தலாமா?

I am reading your Mahabharatam daily. Its interesting and just flowing like river. 

In the mahabharatam the hand made paintings you selected is good and also in the Karnan Part you had put actor Sivaji pictures which is not appropriate (am feeling). In all places hand made paintings makes the presence a nice one. Sorry if I mentioned anything wrong.

Really good work you are doing. Keep going on. If you need any support please mail us, whatever support possible I lend you

Regards
Panneer Selvam
***********************************************************
நண்பர் திரு.பன்னீர் செல்வம் அவர்களே,

முழு மஹாபாரதம் வலைப்பூவை நீங்கள் தொடர்ந்து வாசிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


உதவிக்கரம் நீட்ட முற்பட்ட உங்கள் உள்ளத்திற்கு நன்றி.


கோட்டோவியங்கள் குறித்து சொல்லியிருந்தீர்கள். பல கோட்டோவியங்களை Backtogodhead என்ற வலைத்தளத்திலிருந்தே எடுக்கிறேன். அங்கிருந்து எடுக்கப்படும் படங்கள் கருப்பு வெள்ளையாக இருக்கும். நான் வரைகலைஞனனானதால் (Graphic Designer), அப்படங்களை வண்ணமயமாக மாற்றி எனது மொழிபெயர்ப்பில் பயன்படுத்திக் கொள்கிறேன்.


சிவாஜியின் படம் குறித்து சொல்லியிருந்தீர்கள். என்னைப் பொறுத்தவரை கர்ணன் என்றாலே சிவாஜிதான் நினைவுக்கு வருகிறார். நான் என்ன செய்ய? (மற்றுமொரு காரணம் கூகுளில் படம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைக்காத  சமயத்தில்தால்சிவாஜியின் படத்தைப் பயன்படுத்துகிறேன்.)


படங்களைக் குறித்து எனக்கு ஒரு எண்ணம் உண்டு, வரையத் தெரிந்த நமது வாசக நண்பர்களில் யாராவது தகுந்த படங்களைக் கோட்டோவியமாக வரைந்து அனுப்பினால், அப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, எனது பதிவுகளில் பிரசுரிக்கலாம் என்று நினைக்கிறேன். படங்கள் பென்சில் ஓவியங்களாக இருப்பினும், நான் அவற்றுக்கு வண்ணம் தீட்டி அமைத்துக் கொள்வேன்.

பார்ப்போம். இப்பதிவைப் பார்த்து யாராவது படம் வரைந்து ஸ்கேன் செய்து அனுப்பினால், நிச்சயம் பிரசுரிப்பேன்.

நண்பரே, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்