Friday, March 12, 2010

கடோத்கஜன்

கடோத்கஜன் {Ghatotkacha}= பானைத்தலையன் (the pot-headed)

     தந்தை : பீமா / பீமன் / பீமசேனன் / Bhima / Bhimasena
     தாயார் : ராட்சசி ஹிடிம்பை / ஹிடும்பி/ இடும்பி / Hidimva

ஹிடிம்ப வத பர்வம் (Hidimva-vadha Parva)- ஆதிபர்வம் 157- முழு மகாபாரதம்
கடோத்கஜன் பிறந்தான்
ஹிடிம்பை அழகான பெண்ணுரு கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள். சில காலத்தில்,  ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள். அவன் மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.
அவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஒரு இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான்.  அந்த வழுக்கைத் தலையுடைய பிள்ளை, அந்த பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் மற்றும் தந்தையின் பாதங்களைத் தொட்டு வணங்கினான்.  அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனை கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர். 
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:

கடோத்கசன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 157