Tuesday, July 23, 2013

கடோத்கசன் பிறப்பு! - ஆதிபர்வம் பகுதி 157

Birth of Ghatotkacha! | Adi Parva - Section 157 | Mahabharata In Tamil

(ஹிடிம்ப வத பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : ஹிடிம்பையைக் கொல்லத் துணிந்த பீமன்; பீமனைத் தடுத்த யுதிஷ்டிரன்; ஹிடிம்பையை ஏற்கும்படி பீமனுக்குச் சொன்ன குந்தி...

வைசம்பாயனர் சொன்னார், "ஹிடிம்பை அவர்களைத் {பாண்டவர்களைத்} தொடர்ந்து வருவதைக் கண்ட பீமன், அவளிடம் {ஹிடிம்பையிடம்}, "ராட்சசர்கள் தங்கள் பகைமையை மனத்திலேயே வைத்துக் கொண்டு, எதிரிகளை ஏமாற்றிப் பழி தீர்ப்பார்கள். எனவே, ஓ ஹிடிம்பையே, நீ உன் அண்ணன் {ஹிடிம்பன்} சென்ற வழியிலேயே செல்வாயாக" என்றான். {ஹிடிம்பையைக் கொல்லத் துணிந்தான் பீமன்}.

கோபப்பட்ட பீமனைக் கண்ட யுதிஷ்டிரன், "ஓ பீமா, ஓ மனிதர்களில் புலியே, கோபவசப்பட்டு ஒரு பெண்ணைக் கொல்லாதே.  ஓ பாண்டவா {பீமா}, அறத்தைக் கடைப்பிடிப்பது உடலைக் காப்பதைவிட உயர்ந்த கடமையாகும்.(2) நம்மைக் கொல்லும் நோக்கத்தில் வந்த ஹிடிம்பனை ஏற்கனவே நீ கொன்றுவிட்டாய். இந்தப் பெண் {ஹிடிம்பை} அந்த ராட்சசனின் {ஹிடிம்பனின்} தங்கையாவாள். இவள் கோபப்பட்டால் கூட, இவளால் நம்மை என்ன செய்துவிட முடியும்?" என்றான்".(3)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு ஹிடிம்பை, குந்தியையும், அவளது மகன் யுதிஷ்டிரனையும் மரியாதையாகக் கரங்கூப்பி வணங்கி,(4) "ஓ மரியாதைக்குரியவளே {குந்தியே}, காம தேவன் கைகளில் அகப்பட்ட பெண்ணின் வேதனை என்ன என்பது உனக்குத் தெரியும். ஓ அருளப்பட்ட மங்கையே {குந்தியே}, பீமசேனரால் உண்டான அந்த வேதனை என்னைச் சித்தரவதை செய்கிறது.(5) நான் இதுவரைத் தக்க நேரத்திற்காகக் காத்திருந்து, தாங்கமுடியாத வேதனையைத் தாங்கி வந்தேன். நான் மகிழ்ச்சியடையத்தக்க அந்த நேரம் இப்போது வந்திருக்கிறது.(6) என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் எனது குல வழக்கங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு, ஓ அருளப்பட்ட மங்கையே {குந்தியே}, நான் இந்த மனிதர்களில் புலியான, உனது மகனை {பீமனை},  எனது கணவராகத் தேர்ந்தெடுத்தேன்.(7) ஓ சிறப்பு வாய்ந்த மங்கையே! நான் உண்மையைச் சொல்கிறேன். இந்த வீரராலோ, உன்னாலோ கைவிடப்பட்டால், நான் இந்த உயிரை இனியும் தாங்கிக் கொள்ள மாட்டேன்.(8) எனவே, ஓ அழகான நிறம் கொண்டவளே {குந்தியே}, அறிவற்றவளாக, அல்லது உனக்குக் கீழ்ப்படிந்த ஓர் அடிமையாக என்னை நினைத்துக் கொண்டு, எனக்குக் கருணை காட்டுவாயாக.(9) ஓ சிறப்புமிக்க மங்கையே {குந்தியே}, என்னை உனது மகனோடு {பீமனோடு} சேர்த்து, அவரை எனது கணவராக்குவாயாக.  இந்தத் தெய்வீக அழகுடையவரை, நான் விருப்பப்படும் இடத்திற்கு அழைத்துச் செல்ல அனுமதி கொடுப்பாயாக. ஓ அருளப்பட்டவளே என்னை நம்புவாயாக.  நான் அவரை மீண்டும் உங்களிடமே கொண்டு வந்துவிடுவேன்.(10)

நீ எப்போது என்னை நினைக்கிறாயோ அப்போதே நான் உன்னிடம் வந்து, நீ சொல்வதையெல்லாம் செய்வேன். உங்களை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பேன். நுழையமுடியாத சமமற்ற பகுதிகளுக்கெல்லாம் உங்களைச் சுமந்து செல்வேன்.(11) நீங்கள் வேகமாகச் செல்ல நினைக்கும்போதெல்லாம் உங்களை என் முதுகில் வைத்துச் சுமந்து செல்வேன். ஓ, என்னிடம் கருணை கொண்டு, பீமரை என்னை ஏற்கச் செய்வாயாக.(12) ஒருவன் துன்பத்திலிருக்கும் போது, எவ்வழியை மேற்கொண்டாவது அவனைக் காக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(13) துன்ப காலத்திலும் அறவழியில் நடப்பவன், அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனாவான். துன்பமே அறத்திற்கும், அறம் சார்ந்த மனிதர்களுக்கும் பெரும் அபாயமாகும். அறமே வாழ்வைக் காக்கிறது.(14) எனவே அதுவே {அறமே} வாழ்வைக் கொடுக்கிறது. ஆகவே, அறத்தின் அல்லது கடமையின் பாதுகாப்பை நாம் நாடினால், அது அழிவைக் கொடுக்காது" என்றாள்.(15)

ஹிடிம்பையின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், "ஓ ஹிடிம்பையே, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. அதில் ஐயம் இல்லை. ஆனால், ஓ கொடியிடையாளே {ஹிடிம்பையே}, நீயும் நீ சொல்வது போல நடந்து கொள்ள வேண்டும்.(16) பீமன், தன் நீராடலை முடித்துத் தனது தினசரி துதிகளையும் சடங்குளையும் {பூஜைகளை} முடித்துச் சூரியன் மறையும் வரை உன்னைக் கவனிப்பான்.(17) நீ விரும்பியவாறு அவனுடன் பகலெல்லாம் விளையாடு, ஓ மனோவேகம் கொண்டவளே! ஆனால் நீ தினமும் பீமசேனனை இரவுக்கு முன்னர் இங்குத் திரும்பக் கொண்டு வந்துவிட வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}"[1].(18)

[1] கும்பகோணம் பதிப்பில், இவ்விடத்தில், பாண்டவர்கள் ஹிடிம்பையோடு சாலிஹோத்ரசரஸுக்குச் சென்று சாலிஹோத்ர முனிவரைக் காண்கின்றனர். அவர் மூலமாக ராஜநீதிகளையும், தர்க்க சாத்திரங்கள் பலவற்றையும் கற்கின்றனர். ஹிடிம்பை அவர்களுக்கு ஒரு வசிப்பிடத்தை அமைத்துத் தருகிறாள். பிறகு சமாதானமடைந்த பீமன் ஹிடிம்பையை ஏற்கிறான். இது கும்பகோணம் பதிப்பில் இரண்டு அத்தியாயங்களில் விவரிக்கப்படுகிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இக்குறிப்புகள் இல்லை.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமன், தனது சம்மதத்தை யுதிஷ்டிரனுக்கு உணர்ந்தி ஹிடிம்பையிடம், "ஓ ராட்சசி, நான் சொல்வதைக் கேள்! உண்மையில் உன்னிடம் ஓர் ஒப்பந்தம் செய்கிறேன்.(19) ஓ கொடியிடையாளே, உனக்கு ஒரு மகன் பிறக்கும் வரை நான் உன்னுடன் இருப்பேன்" என்றான்.(20)


 அதற்கு ஹிடிம்பை, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீமனைத் தனது உடலில் தாங்கி வானத்தில் வேகமாகச் சென்றாள். அழகாகக் காட்சியளிக்கும் மலை முகடுகளிலும், தேவர்களுக்கும் புனிதமான பகுதிகளிலும், மான்கள் நிறைந்த இனிய கானம், பாடும் பறவைகள் நிறைந்த இடங்களிலும், தன்னை அழகாக அலங்கரித்துக் கொண்டு, சில சமயங்களில் வழவழப்பானவற்றை வந்து கொட்டிய அந்த ஹிடிம்பை அந்தப் பாண்டவனுடன் {பீமனுடன்} விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(22,23) அக்கானகத்தில் யாரும் நுழைய முடியாத பகுதிகளிலும், பெரிய அளவுக்கு வளர்ந்து பூத்து குலுங்கிய மரங்களும், தாமரைகளும், அல்லி மலர்களும் நிறைந்த மலையின் சாரலிலும்,(24) நதிகள் அமைத்த தீவுகளிலும், அதன் கரைகளிலும், ஓடைகளிலும், அதன் கரைகளிலும், மலை அருவிகளிலும்,(25) அடர்ந்த மரங்கள் நிறைந்த கானகத்திலும், கொடிகள் நிறைந்த இமயத்திலும், பலவிதமான குகைகளிலும்,(26) தாமரைகள் பூத்துக் குலங்கும் தெளிந்த நீருடைய தடாகங்களிலும், தங்கமும், முத்துக்களும் ஒளிரும் கடற்கரலைகளிலும்,(27) அழகிய நகரங்கள், அழகிய நந்தவனங்கள், தேவர்களுக்குப் புனிதமான காடுகள், மலைச்சாரல்கள் ஆகியவற்றிலும்,(28) குஹ்யர்கள் மற்றும் துறவிகள் வாழும் பகுதிகளிலும், எல்லாக் காலத்திற்கும் ஏற்ற வகையில் பழங்களும் மலர்களும் நிறைந்த மானசரோவரின் (ஏரி) கரைகளிலும் ஹிடிம்பை அழகான பெண்ணுருக் கொண்டு பீமனுடன் விளையாடி அவனை மகிழ்வித்தாள்.(29) மனோவேகம் கொண்ட அவள் {ஹிடிம்பை} இந்தப் பகுதிகளிலெல்லாம் அந்தப் பாண்டவன் {பீமன்} மூலம் ஒரு பிள்ளை பெறும் வரை விளையாடினாள்.(30)



சிறிது காலங்கழித்து, பயங்கரமான கண்களுடனும், பெரிய வாயுடனும், அம்பு போன்ற நீண்ட காதுகளுடனும் பார்ப்பதற்குப் பயங்கரமாகவும் ஒரு மகனை அவள் பெற்றெடுத்தாள்.(31) உதடுகள் தாமிரத்தைப் போன்று சிவப்பாகவும், பற்கள் கூர்மையாகவும், சத்தம் உறுமலாகவும், பெரும் கரங்களுடனும், பெரும் பலத்துடனும், கட்டுக்கடங்காத வீரத்துடனும் வளர்ந்த அந்தப் பிள்ளை, பெரும் வலிமைமிக்க வில்லாளி ஆனான்.(32) நீண்ட நாசியும், அகலமான மார்பும், பயமுறுத்தும் வகையில் வீங்கிய கால் ஆடு (Calf) தசைகளும், வேகமான இயக்கமும் கொண்ட அவன், மனிதனுக்குப் பிறந்திருந்தாலும், மனிதனுக்குரிய எந்த அம்சமும் இல்லாதிருந்தான். பிசாசங்கள் மற்றும் அனைத்து ராட்சசர்களையும் பலத்தால் விஞ்சியிருந்தான்.(33,34) ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அவன் குழந்தையாக இருந்தாலும், பிறந்த அந்த மணிநேரத்திலேயே ஓர் இளைஞனுக்கு உரிய வளர்ச்சியை அடைந்தான். அந்தப் பலம் வாய்ந்த வீரன் உடனே அனைத்து ஆயுதங்களிலும் நிபுணத்துவமும் அடைந்தான்.(35)

ராட்சசப் பெண்கள், தாங்கள் கருத்தரித்த உடனேயே விரும்பிய வடிவை அடையும் சக்திவாய்ந்த பிள்ளையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் எப்போதும் தங்கள் வடிவை மாற்றிக் கொள்வார்கள்.(36) வழுக்கைத் தலையுடைய பிள்ளையான அந்தப் பெரும் வில்லாளி, தான் பிறந்தவுடனேயே, கீழே குனிந்து தனது தாய் {ஹிடிம்பை} மற்றும் தந்தையின் {பீமனின்} பாதங்களைத் தொட்டு வணங்கினான். அவனது பெற்றோர்கள் {பீமனும் ஹிடிம்பையும்} அவனுக்கு ஒரு பெயர் வைத்தனர்.(37) அவனது தாய், அவனது தலை கடத்தைப் {பானையைப்} போல (வழுக்கையாக) இருப்பதைக் குறிப்பிட்டாள். பெற்றோர் இருவரும் சேர்ந்து அவனைக் கடோத்கசன் (பானைத்தலையன்) என்று அழைத்தனர்.(38) அந்தக் கடோத்கசன் பாண்டவர்களுக்குப் பெரும் அர்ப்பணிப்புடன் இருந்து, அவர்களுக்கு விருப்பமானவனாகி, அவர்களில் ஒருவனானான்.(39)

பிறகு ஹிடிம்பை, தனது (கணவனுடன் பீமனுடன்) தங்கும் காலம் முடிவுக்கு வந்ததை உணர்ந்து, பாண்டவர்களை வணங்கி அவள் விரும்பிய இடத்திற்குச் சென்றாள்.(40) ராட்சசர்களில் முதன்மையான கடோத்கசன் விரும்பிய நேரம் திரும்பி வருவதாகத் தனது தந்தையிடம் உறுதியளித்து, அவர்களனைவரையும் வணங்கிவிட்டு, வடதிசை நோக்கிச் சென்றான்.(41) சிறப்பு வாய்ந்த இந்திரன், கர்ணனுக்குக் கணையொன்றைக் (அது யார் மீது தொடுக்கப்படுகிறதோ, அவனது மரணம் நிச்சயம்) கொடுத்ததன் நிமித்தமாக, உண்மையில், பெரும் தேர்வீரனான கடோத்கசன் (தனது ஒரு பகுதியைக் கொடுத்து), நிகரற்ற சக்தி கொண்ட அந்தக் கர்ணனுக்குத் தகுதிவாய்ந்த பகைவன் ஆனான்" {என்றார் வைசம்பாயனர்}.(42)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்