கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சார்ந்து தமிழாக்கப்பட்டிருக்கும் இந்த அநுசாஸன பர்வத்தில் அநுசாஸனிகம் மற்றும் ஸ்வர்க்கரோஹனிகம் என்ற இரு உபபர்வங்களும், அவற்றில் 168 பகுதிகளும், 7670 ஸ்லோங்களும் இருக்கின்றன.
"The Mahabharata" நூலின் தமிழாக்கம்...
முகப்பு | பொருளடக்கம் | ஹரிவம்சம் | இராமாயணம் | உத்தர ராமாயணம் | தொடர்புக்கு
Showing posts with label அநுசாஸன பர்வம். Show all posts
Showing posts with label அநுசாஸன பர்வம். Show all posts
Tuesday, August 13, 2019
Thursday, August 08, 2019
அநுசாஸன பர்வச் சுவடுகளைத் தேடி
2018 டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி அன்று மஹாபாரதத்தின் பதிமூன்றாம் பர்வமான அநுசாஸன பர்வத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். மொத்தம் 168 பகுதிகளைக் கொண்ட இந்தப் பர்வத்தின் மொழிபெயர்ப்பு 2019 ஜூலை மாதம் 27ம் தேதி அன்று நிறைவடைந்தது. மொத்தம் 221 நாட்கள் ஆகியிருக்கின்றன. மஹாபாரதத்திலேயே கடினமான பகுதி சாந்தி பர்வம் மட்டும்தான் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மையில் அநுசாஸன பர்வம் சற்றும் அதற்குச் சளைத்ததல்ல. இது, மொத்த மகாபாரதத்தில் அளவில் மூன்றாவது பெரிய பர்வமாகும். அளவில் வன பர்வத்திற்குச் சற்றே குறைந்ததாகும்.
Saturday, July 27, 2019
கங்கையின் துயரம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 168
The grief of Ganga! | Anusasana-Parva-Section-168 | Mahabharata In Tamil
(ஸ்வர்க்காரோஹணிக பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : யோகத்தில் நிலைத்து தமது உயிரைப் பிரித்த பீஷ்மர்; பீஷ்மரின் ஈமச் சடங்குகள்; கங்கையின் துயரம்; கங்கையைத் தேற்றிய கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பகைவர்களைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, குருக்கள் அனைவரிடமும் இவ்வாறு சொன்ன சந்தனுவின் மகன் {பீஷ்மர்} சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(1) அவர் யோகத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அடுத்தடுத்து தன் உடற்பாகங்களில் இருந்து உயிர் மூச்சுகளை நிறுத்தினார். அந்த உயர் ஆன்மாவின் உயிர் மூச்சுகள் முறையாகக் கட்டுப்படுத்தப்பட்டு, மேல் நோக்கி எழுப்பப்பட்டது.(2) யோகத்தை ஏற்றிருந்ததன் விளைவால் உயிர்மூச்சுகள் மேல்நோக்கிச் செல்லும்போது, சந்தனு மகனின் {பீஷ்மரின்} உடற்பாகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வலியற்றவையாகின.(3) ஓ! மன்னா, வியாசரைத் தலைமையாகக் கொண்ட பெரும் முனிவர்கள் உள்ளிட்ட உயர் ஆன்ம மனிதர்களுக்கு மத்தியில் இந்தக் காட்சி வியப்பான ஒன்றாகப் பார்க்கப்பட்டது.(4) குறுகிய காலத்திற்குள் பீஷ்மரின் மொத்த உடலும் கணையற்றதாகவும், வலியற்றதாகவும் ஆனது. வாசுதேவனின் தலைமையிலான புகழ்பெற்ற மனிதர்களும், வியாசருடன் கூடிய தவசிகள் அனைவரும் இதைக் கண்டு ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(5) கட்டுப்படுத்தப்பட்டவை, எந்த வழியிலும் வெளியேற இயலாதவையுமான உயிர்மூச்சுகள், இறுதியாக உச்சந்தலையைத் துளைத்துக் கொண்டு சொர்க்கத்தை நோக்கிச் சென்றது.(6)
விடைகொடுத்த பீஷமர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 166
Bhishma gave leave! | Anusasana-Parva-Section-166 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 166)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் அனுமதி கேட்ட வியாசர்; யுதிஷ்டிரனின் ஐயங்களைத் தீர்த்த மனநிறைவுடன் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பிய பீஷ்மர்...
ஜனமேஜயன் {வைசம்பாயணரிடம்}, "கௌரவர்களில் முதன்மையான மனிதரான பீஷ்மர், வீரர்களால் எப்போதும் விரும்பப்படும் கணைப்படுக்கையில் கிடந்த போது, அவரைச் சுற்றிலும் பாண்டவர்கள் அமர்ந்திருந்தபோது,(1) என் பாட்டனும், பெரும் ஞானியுமான யுதிஷ்டிரன், கடமை குறித்த புதிர்களுக்கு விளக்கங்களைக் கேட்டு தன் ஐயங்கள் அனைத்தையும் தீர்த்துக் கொண்டான்.(2) கொடைகளின் காரியத்தில் பயன்படும் விதிகளையும் கேட்ட அவன், அறம் மற்றும் செல்வம் குறித்த காரியங்களில் தன் ஐயங்கள் அனைத்தும் அகலப்பெற்றான். ஓ! கல்விமானான பிராமணரே {வைசம்பாயணரே}, அந்தப் பெரும் பாண்டவ மன்னன் {யுதிஷ்டிரன்} அதன் பிறகு என்ன செய்தான் என்பதை எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்[1].(3)
Friday, July 26, 2019
நாமாவளி! - அநுசாஸனபர்வம் பகுதி – 165
Recitation of Names! | Anusasana-Parva-Section-165 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 165)
பதிவின் சுருக்கம் : பாவங்களை அகற்றவல்ல தேவர்கள், முனிவர்கள் மற்றும் அரசமுனிகளின் துதிக்கத்தக்க பெயர்ப்பட்டியலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரன், பாவங்களை அழிக்கும் நன்மையை அடைய விரும்பி, கணைப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் (பின்வரும் வார்த்தைகளால்) கேள்வி கேட்டான்.(1)
நடைமுறை அறம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 164
Practical ethics! | Anusasana-Parva-Section-164 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 164)
பதிவின் சுருக்கம் : அறத்தைப் பின்பற்றும் முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒருவன் தானே நல்லது செய்யும்போதும், அல்லது பிறரைச் செய்ய வைக்கும்போதும், அவன் அறத்தகுதிகளை அடைவதை எதிர்பார்க்கலாம். அதேபோல, ஒருவன் தானே தீமை செய்தாலும், பிறரைச் செய்ய வைத்தாலும், அறத்தகுதிகளை அடைவதை அவன் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.(1) எல்லா நேரங்களிலும், காலமே உயிரினங்கள் அனைத்தின் புத்தியிலும் நுழைந்து, அவற்றை அறச்செயல்களையோ, மறச் செயல்களையோ செய்வதில் நிறுவி, அதன் பின் அவற்றுக்கு இன்பத்தையோ, துன்பத்தையோ அளிக்கிறது.(2)
மெய்வருத்தக்கூலி! - அநுசாஸனபர்வம் பகுதி – 163
Reward of Exertion! | Anusasana-Parva-Section-163 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 163)
பதிவின் சுருக்கம் : விதி மற்றும் முயற்சிக்கிடையிலான வேறுபாட்டை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மனிதன் கெடுபேறு கொண்டவனாக இருந்தால் அவன் எவ்வளவு பலம் கொண்டவனாக இருந்தாலும் செல்வமீட்டத் தவறுவது காணப்படுகிறது. மறுபுறம் நற்பேறு பெற்ற ஒருவன் பலவீனனாகவோ, மூடனாகவோ இருந்தாலும் செல்வத்தை அடைகிறான்.(1) மேலும், அடைவதற்கான காலமாக இல்லாதபோது, ஒருவன் சிறப்பாக முயற்சி செய்தாலும் ஒன்றையும் அவனால் அடைய முடிவதில்லை. எனினும், அடைவதற்கான காலம் வரும்போது, எந்த முயற்சியும் இல்லாமலே ஒருவன் பெருஞ்செல்வத்தை வெல்கிறான்.(2) சிறப்பாக முயற்சி செய்தும் விளைவேதும் அடையாத நூற்றுக்கணக்கான மனிதர்கள் காணப்படுகின்றர். மேலும், எம்முயற்சியுமின்றிச் செல்வீட்டும் பலரும் காணப்படுகின்றனர்.(3)
அறம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 162
Righteousness! | Anusasana-Parva-Section-162 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 162)
பதிவின் சுருக்கம் : அறத்தைத் தீர்மானிப்பதில் ஐயம் நேரும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும், அறப்பலன்களையும், பல அறங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவகியின் மகனான கிருஷ்ணன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, யுதிஷ்டிரன் மீண்டும் சந்தனுவின் மகனான பீஷ்மரிடம்,(1) "ஓ! பெரும் நுண்ணறிவுமிக்கவரே, ஓ! கடமைகளை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு, நேரடியாகக்கண்டுணர்தல் மற்றும் சாத்திரங்கள் ஆகிய இரண்டில் அதிகாரமிக்கதாகக் கருதப்பட வேண்டியது எது?" என்று கேட்டான்.(2)
Wednesday, July 24, 2019
ஸதருத்ரீயம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 161
Sata-rudriya! | Anusasana-Parva-Section-161 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 161)
பதிவின் சுருக்கம் : சதருத்ரீயம் மற்றும் சிவலிங்கப் பெருமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
வாசுதேவன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரரே, ருத்திரனின் பல்வேறு பெயர்களையும், அந்த உயர் ஆன்மாவின் உயர்ந்த அருள்நிலையையும் சொல்கிறேன் கேட்பீராக.(1) முனிவர்கள் மஹாதேவனை அக்னி என்றும், ஸ்தாணு என்றும், மஹேஸ்வரன் என்றும், ஒற்றைக் கண்ணன் என்றும், அண்ட வடிவம் கொண்ட முக்கண்ணன் என்றும், சிவன் அல்லது மங்கலமானவன் என்றும் சொல்கிறார்கள்.(2) வேதங்களை அறிந்த பிராமணர்கள் இரு வடிவங்களைக் கொண்டவன் அந்தத் தேவன் என்று சொல்கின்றனர். ஒன்று பயங்கரமானதும், மற்றொன்று மங்கலமான மென்மை நிறைந்ததுமாகும். அவ்விரு வடிவங்களும் இன்னும் பல வடிவங்களாகப் பகுக்கப்படுகின்றன.(3) கடுமையான பயங்கர வடிவம், அக்னி, மின்னல் மற்றும் சூரியனோடு ஒப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. மென்மையான மங்கல வடிவம் அறம், நீர் மற்றும் சந்திரனோடு ஒப்பிடத்தகுந்ததாக இருக்கிறது.(4)
சங்கரன் மகிமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 160
The greatness of Sankara! | Anusasana-Parva-Section-160 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 160)
பதிவின் சுருக்கம் : சிவனின் பெருமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா, துர்வாஸரின் அருள்மூலம் நீ அடைந்த அறிவை எனக்கு விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்.(1) ஓ! நுண்ணறிவுமிக்கவர் அனைவரிலும் முன்மையானவனே, அந்த உயர்ந்த அருள், அந்த உயர் ஆன்மாவின் பெயர்கள் அனைத்தையும் விளக்கமாக நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான்[1].(2)
துர்வாஸர்! - அநுசாஸனபர்வம் பகுதி – 159
Durvasa! | Anusasana-Parva-Section-159 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 159)
பதிவின் சுருக்கம் : பிராமண வழிபாட்டின் சிறப்பையும், துர்வாஸ முனிவரை வழிபட்டதனால் தனக்குக் கிடைத்த மேன்மையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன கிருஷ்ணன்...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணரிடம்}, "ஓ! மதுசூதனா, பிராமண வழிபாட்டினால் உண்டாகும் செழிப்பென்ன என்பதை எங்களுக்குச் சொல்வாயாக. இக்காரியம் குறித்து நன்கறிந்தவன் நீயே. உண்மையில் நம் பாட்டன் {பீஷ்மர்} உன்னை அறிந்திருக்கிறார்" என்றான்.(1)
Tuesday, July 23, 2019
கிருஷ்ணன் மகிமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 158
The glory of Krishna! | Anusasana-Parva-Section-158 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 123)
பதிவின் சுருக்கம் : : கிருஷ்ணனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா புகழத்தக்க நோன்புகளைக் கொண்ட பிராமணர்களை எப்போதும் நீர் வழிபடுகிறீர். எனினும், ஓ! மன்னா, அவர்களை வழிபடுவதால் நீர் காணும் கனியென்ன?(1) ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிடைக்கும் எந்தச் செழிப்பால் நீர் அவர்களை வழிபடுகிறீர்? ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
Monday, July 22, 2019
கபர்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 157
Kapas! | Anusasana-Parva-Section-157 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 157)
பதிவின் சுருக்கம் : பூமியும், சொர்க்கமும் கபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது; தேவர்கள் பிராமணர்களால் அவற்றைத் திரும்பப் பெற்றது; கார்த்தவீரியார்ஜுனனுக்குப் பிராமணர்களால் ஏற்படப்போகும் அச்சம் ஆகியவற்றைக் குறித்து கார்த்தவீரியார்ஜுனனுக்குச் சொன்ன வாயு தேவன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "காற்றின் தேவனுடைய இவ்வார்த்தைகளைக் கேட்ட {கார்த்தவீரிய} ஆர்ஜுனன் அமைதியாக இருந்தான். இதன்பேரில் காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "இந்திரனின் தலைமையிலான சொர்க்கவாசிகள் அசுரன் மதனின் வாய்க்குள் தங்களைக் கண்டபோது, சியவனர் அவர்களிடம் இருந்து பூமியை அடைந்தார்.(1,2) ஏற்கனவே சொர்க்கத்தை இழந்தவர்களும், இப்போது பூமியை இழந்தவர்களுமான தேவர்க்ள உற்சாகமிழந்தனர். உண்மையில், அந்த உயர் ஆன்மாக்கள் துன்பத்தால் பீடிக்கப்பட்டு, பெரும்பாட்டனின் பாதுகாப்பின் கீழ் தங்களை நிறுத்திக் கொண்டனர் {பிரம்மனைத் தஞ்சமடைந்தனர்}.(3)
அத்ரி மற்றும் சியவனர் பெருமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 156
The greatness of Atri and Chyavana! | Anusasana-Parva-Section-156 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 156)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களான அத்ரி மற்றும் சியவனரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம், "ஓ! ஹைஹயர்களில் முதன்மையானவனே, உயர் ஆன்ம அத்ரியின் சாதனையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில், இருளில் தேவர்களும், தானவர்களும் ஒருவருக்கொருவர் போரிட்டபோது, சூரியன் மற்றும் சோமன் {சந்திரன்} ஆகிய இருவரையும் ராகு {ஸ்வர்ப்பானு} தன் கணைகளால் துளைத்தான்.(2) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, இருளில் மூழ்கிய தேவர்கள் வலிமைமிக்கத் தானவர்களின் முன்பு வீழத் தொடங்கினர்.(3) அசுரர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட சொர்க்கவாசிகள், தங்கள் பலத்தை இழக்கத் தொடங்கினர். அப்போது அவர்கள் தவங்களைச் செல்வமாகக் கொண்டவரும் கல்விமானுமான பிராமணர் அத்ரி கடுந்தவத்தில் இருப்பதைக் கண்டனர்.(4)
Sunday, July 21, 2019
அகத்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமை! - அநுசாஸனபர்வம் பகுதி – 155
The greatness of Agastya and Vasishtha! | Anusasana-Parva-Section-155 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 155)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களான அகஸ்தியர் மற்றும் வசிஷ்டரின் பெருமையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {கார்த்தவீரிய} அர்ஜுனன் அமைதியாக இருந்தான். காற்றின் தேவன் மீண்டும் அவனிடம் பேசினான், "ஓ! மன்னா, பிராமணரான அகஸ்தியரின் பெருமையைக் கேட்பாயாக.(1) ஒரு காலத்தில் தேவர்கள் அசுரர்களால் அடக்கப்பட்டதால் அவர்கள் உற்சாகமிழந்தவர்களாக இருந்தனர். தேவர்களுக்கான வேள்விகள் அனைத்தும் கொள்ளையடிக்கபட்டன, பித்ருக்களின் ஸ்வதாவும் அபகரிக்கப்பட்டது.(2) உண்மையில், ஓ! ஹைஹயர்களின் தலைவா, மனிதர்கள் செய்யும் அறச்செயல்கள் மற்றும் நோன்புகள் அனைத்தும் தானவர்களால் தடுக்கப்பட்டன. தேவர்கள் செழிப்பிழந்து பூமியில் திரிந்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(3) ஒரு நாள் அவ்வாறு அவர்கள் திரிந்து வருகையில் உயர்ந்த நோன்புகளையும் பெருஞ்சக்தியையும், சூரியனைப் போன்ற சுடர்மிக்கக் காந்தியையும் கொண்ட பிராமணரான அகஸ்தியரைக் கண்டனர்.(4)
உதத்தியரும் வருணனும்! - அநுசாஸனபர்வம் பகுதி – 154
Utathya and Varuna! | Anusasana-Parva-Section-154 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 154)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையை விவரிக்க கசியபர் மற்றும் உதத்தியரின் கதையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
காற்றின் தேவன் {வாயு கார்த்தவீரியார்ஜுனனிடம்}, "ஓ! மன்னா, ஒரு காலத்தில், அங்கன் என்ற பெயரைக் கொண்ட ஓர் ஆட்சியாளன், மொத்த பூமியையும் பிராமணர்களுக்கு வேள்விக் கொடையாக அளிக்க விரும்பினான். இதனால் பூமி கவலையில் நிறைந்தாள்.(1)
Saturday, July 20, 2019
வெட்டவெளிமெய்! - அநுசாஸனபர்வம் பகுதி – 153
Increate Space is the origin! | Anusasana-Parva-Section-153 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 153)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையைக் கார்த்தவீரியார்ஜுனனுக்கு எடுத்துரைத்த வாயு தேவன்...
காற்றின் தேவன் {வாயு தேவன் கார்த்தவீரியனிடம்}, "ஓ! மூடா, உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களான பிராமணர்கள் அனைவரின் குணங்கள் என்னென்ன என்பதைக் கேட்பாயாக. ஓ! மன்னா, நீ சொன்ன அனைத்தையும்விடப் பிராமணன் மேன்மையானவன்.(1) பழங்காலத்தில் பூமாதேவியானவள், அங்கர்களின் மன்னனிடம் பகை பாராட்டி பூமியென்ற தன் தன்மையைக் கைவிட்டாள். மறுபிறப்பாளரான கஸ்யபர், அவளை {பூமா தேவியை} முடக்கி, அழிவடையச் செய்தார்[1].(2) ஓ! மன்னா, பிராமணர்களைப் பூமியில் உள்ளதைப் போலவே எப்போதும் சொர்க்கத்திலும் வெல்லப்படமுடியாதவர்கள். பழங்காலத்தில், பெரும் முனிவரான அங்கிரஸ், தன் சக்தியின் மூலம் நீரனைத்தையும் பருகினார்.(3) அந்த உயர் ஆன்ம முனிவர், பாலைக் குடிப்பது போல நீரனைத்தையும் குடித்தும், தன் தாகம் தணிந்தவராக உணரவில்லை. எனவே, அவர் பேரலைகள் எழும்பும் நீர் நிறைந்ததாகப் பூமியை மீண்டும் செய்தார்.(4) மற்றொரு சந்தர்ப்பத்தில், அங்கிரஸ் என்னிடம் கோபமடைந்த போது, நான் உலகத்தைவிட்டுத் தப்பிச் சென்று, அந்த முனிவரிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக, ஒரு பிராமணரின் {உதத்தியரின் / உசத்தியரின்} அக்னிஹோத்ரத்தில் நெடுங்காலம் ஒளிந்திருந்தேன்.(5)
எவ்வகை உயிரினம்? - அநுசாஸனபர்வம் பகுதி – 152
kind of creature? | Anusasana-Parva-Section-152 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 152)
பதிவின் சுருக்கம் : தத்தாத்ரேயரிடம் இருந்து நான்கு வரங்களை அடைந்த கார்த்தவீரியார்ஜுனன்; பிராமண மகிமை குறித்து வாயு தேவனுக்கும் கார்த்தவீரியார்ஜுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா, ஓ! மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவரே, பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெகுமதியைக் கண்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்? உண்மையில், பிராமணர்களை வழிபடுவதில் கிட்டும் எந்த வெற்றியால் வழிநடத்தப்பட்டு நீர் அவர்களை வழிபடுகிறீர்?" என்று கேட்டான்.(1)
Friday, July 19, 2019
பிராமண மேன்மை! - அநுசாஸனபர்வம் பகுதி – 151
The greatness of Brahmanas! | Anusasana-Parva-Section-151 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 151)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களின் மேன்மையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "வழிபடத்தகுந்தவர் எவர்? நாம் வணங்க வேண்டியவர் எவர்? உண்மையில், எவரிடமும் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, எந்தெந்த வகையினரிடம் எந்தெந்த ஒழுங்கு நடைமுறை களங்கமற்றதாகக் கருதப்படுகிறது?" என்று கேட்டான்.(1)
சாவித்ரி மந்திரம்! - அநுசாஸனபர்வம் பகுதி – 150
Savitri Mantra! | Anusasana-Parva-Section-150 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 150)
பதிவின் சுருக்கம் : தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் மற்றும் பலரின் பெயர்கள் அடங்கிய சாவித்திரி மந்திரத்தை {காயத்ரியை} யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும்ஞானியே, ஓ! ஞானத்தின் அனைத்துக் கிளைகளையும் அறிந்தவரே, ஒவ்வொரு நாளும் சொல்வதன் மூலம் ஒருவன் பெருமளவு அறத்தகுதிக்குரிய பலன்களை ஈட்டச் செய்யும் மந்திரம் எது?(1) பயணம் புறப்படும்போதோ, புதிய கட்டடத்திற்குள் நுழையும்போதோ, எந்தச் செயலையும் செய்யும்போதோ, தேவர்கள், அல்லது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் வேள்விகளின் போதோ சொன்னால் வெற்றியை உண்டாகும் மந்திரம் எது?(2) உண்மையில் வேதங்களுக்கு இணக்கமாக, தீய ஆதிக்கங்கள் அனைத்தையும் தணிக்கவோ, செழிப்பு, அல்லது வளர்ச்சிக்கு வழிவகுக்கவோ, தீமையிலிருந்து பாதுகாக்கவோ, பகைவர்களை அழிக்கவோ, அச்சங்களை விலக்கவோ உரிய மந்திரம் எது?" என்று கேட்டான்.(3)
Subscribe to:
Posts (Atom)
Kindle E-Books
மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்
அகம்பனன்
அகலிகை
அகஸ்தியர்
அகிருதவரணர்
அக்னி
அக்ருதவ்ரணர்
அங்கதன்
அங்காரபர்ணன்
அங்கிரஸ்
அசமஞ்சன்
அசலன்
அசுவினிகள்
அஞ்சனபர்வன்
அதிரதன்
அத்புதன்
அத்ரி
அத்ரிசியந்தி
அனுகம்பகன்
அனுவிந்தன்
அன்சுமான்
அபிமன்யு
அம்பரீஷன்
அம்பா
அம்பாலிகை
அம்பிகை
அம்பை
அயோதா தௌம்யா
அரிஷ்டநேமி
அருணன்
அருணி
அருந்ததி
அர்ஜுனன்
அர்வாவசு
அலம்பலன்
அலம்புசன்
அலம்புசை
அலர்க்கன்
அலாயுதன்
அவிந்தியன்
அவுர்வா
அஷ்டகன்
அஷ்டவக்கிரர்
அஸ்மர்
அஸ்வசேனன்
அஸ்வத்தாமன்
அஸ்வபதி
அஹல்யை
ஆங்கரிஷ்டன்
ஆஜகரர்
ஆணிமாண்டவ்யர்
ஆதிசேஷன்
ஆத்ரேயர்
ஆர்யகன்
ஆர்ஷ்டிஷேணர்
ஆஸ்தீகர்
இக்ஷ்வாகு
இந்திரசேனன்
இந்திரசேனை
இந்திரஜித்
இந்திரத்யும்னன்
இந்திரன்
இந்திரோதர்
இராவான் {அரவான்}
இல்வலன்
உக்கிரசேனன்
உக்தன்
உக்ரசேனன்
உசீநரன்
உச்சைஸ்ரவஸ்
உதங்கர்
உதங்கா
உதத்யர்
உத்தமௌஜஸ்
உத்தரன்
உத்தரை
உத்தவர்
உத்தாலகர்
உபமன்யு
உபரிசரன்
உபஸ்ருதி
உமை
உலூகன்
உலூபி
ஊர்வசி
எலபத்திரன்
ஏகதன்
ஏகதர்
ஏகலவ்யன்
ஐராவதன்
ஓகவதி
ஔத்தாலகர்
ஔத்தாலகி
கங்கன்
கங்கை
கசன்
கசியபர்
கடோத்கசன்
கணிகர்
கண்வர்
கதன்
கத்ரு
கந்தன்
கனகன்
கபிலர்
கபோதரோமன்
கயன்
கராளன்
கருடன்
கர்ணன்
கலி
கல்கி
கல்மாஷபாதன்
கவந்தன்
கஹோடர்
காகமா
காக்ஷிவத்
காசியபர்
காதி
காந்தாரி
காமதேனு
காயத்ரி
காயவ்யன்
கார்க்கோடகன்
கார்க்யர்
கார்த்தவீரியார்ஜுனன்
கார்த்திகை
காலகவிருக்ஷீயர்
காலகேயர்
காலன்
காலவர்
காளி
கிந்தமா
கிரது
கிரந்திகன்
கிராதன்
கிரிசன்
கிரிடச்சி
கிருதவர்மன்
கிருதவீர்யன்
கிருதாசி
கிருபர்
கிருபி
கிருஷ்ணன்
கிர்மீரன்
கீசகன்
கீசகர்கள்
குசிகன்
குணகேசி
குணி-கர்க்கர்
குண்டதாரன்
குந்தி
குந்திபோஜன்
குபேரன்
கும்பகர்ணன்
குரு
குரோதவாசர்கள்
குவலாஸ்வன்
கேசினி
கேசின்
கேதுவர்மன்
கைகேயன்
கைகேயி
கைடபன்
கோடிகன்
கோமுகன்
கௌசிகர்
கௌசிகி
கௌதமன்
கௌதமர்
கௌதமி
க்ஷத்ரபந்து
க்ஷேமதர்சின்
க்ஷேமதூர்த்தி
சகரன்
சகாதேவன்
சகுந்தலை
சகுனி
சக்திரி
சக்ரதேவன்
சங்கன்
சசபிந்து
சச்சி
சஞ்சயன்
சஞ்சயன் 1
சதயூபன்
சதானீகன்
சத்தியசேனன்
சத்தியஜித்
சத்தியபாமா
சத்தியர்
சத்தியவதி
சத்யசேனன்
சத்யபாமா
சத்யவான்
சத்ருஞ்சயன்
சந்தனு
சந்திரன்
சனத்சுஜாதர்
சமங்கர்
சமீகர்
சம்சப்தகர்கள்
சம்பரன்
சம்பா
சம்பாகர்
சம்பை
சம்வர்ணன்
சம்வர்த்தர்
சரபன்
சரஸ்வதி
சர்மின்
சர்மிஷ்டை
சர்யாதி
சலன்
சல்லியன்
சஹஸ்ரபத்
சாகரன்
சாண்டிலி
சாண்டில்யர்
சாத்யகி
சாத்யர்கள்
சாந்தை
சாம்பன்
சாம்யமணி
சாரங்கத்வஜன்
சாரஸ்வதர்
சாரிசிரிகன்
சாருதேஷ்ணன்
சார்வாகன்
சால்வன்
சாவித்ரி
சிகண்டி
சிங்கசேனன்
சிசுபாலன்
சித்திரசேனன்
சித்திரன்
சித்திராங்கதை
சித்ரகுப்தன்
சித்ரவாஹனன்
சிநி
சிந்துத்வீபன்
சிபி
சியவணன்
சியவனர்
சிரிகாரின்
சிரிங்கின்
சிருஞ்சயன்
சிவன்
சீதை
சுகன்யா
சுகர்
சுகுமாரி
சுகேது
சுக்ரது
சுக்ரன்
சுக்ரீவன்
சுசர்மன்
சுசோபனை
சுதக்ஷிணன்
சுதசோமன்
சுதன்வான்
சுதர்சனன்
சுதர்மை
சுதாமன்
சுதேவன்
சுதேஷ்ணை
சுநந்தை
சுந்தன் உபசுந்தன்
சுனந்தை
சுனஸ்ஸகன்
சுபத்திரை
சுப்ரதீகா
சுமித்திரன்
சுமுகன்
சுரதன்
சுரதை
சுரபி
சுருதகர்மன்
சுருதசேனன்
சுருதர்வன்
சுருதர்வான்
சுருதாயுதன்
சுருதாயுஸ்
சுருவாவதி
சுலபை
சுவர்ணஷ்டீவின்
சுவாகா
சுவேதகேது
சுஷேணன்
சுஹோத்திரன்
சூதன்வான்
சூரன்
சூரியதத்தன்
சூரியன்
சூரியவர்மன்
சூர்ப்பனகை
சேகிதானன்
சேதுகன்
சேனஜித்
சைகாவத்யர்
சைப்யை
சைரந்திரி
சோமகன்
சோமதத்தன்
சௌதி
சௌதியும்னி
சௌனகர்
ஜடாசுரன்
ஜடாயு
ஜந்து
ஜனகன்
ஜனதேவன்
ஜனபதி
ஜனமேஜயன்
ஜனமேஜயன் 1
ஜமதக்னி
ஜரத்காரு
ஜராசந்தன்
ஜரிதை
ஜரை
ஜலசந்தன்
ஜாஜலி
ஜாம்பவதி
ஜாரிதரி
ஜிமூதன்
ஜீவலன்
ஜெயத்சேனன்
ஜெயத்ரதன்
ஜைகிஷவ்யர்
ஜோதஸ்நாகாலி
தக்ஷகன்
தக்ஷன்
தண்டதாரன்
தண்டன்
தண்டி
ததீசர்
தத்தாத்ரேயர்
தனு
தபதி
தபஸ்
தமனர்
தமயந்தி
தம்போத்பவன்
தர்மதர்சனர்
தர்மதேவன்
தர்மத்வஜன்
தர்மவியாதர்
தர்மாரண்யர்
தளன்
தாத்ரேயிகை
தாரகன்
தாருகன்
தார்க்ஷ்யர்
தாலப்யர்
தியுமத்சேனன்
திரஸதஸ்யு
திரிசிரன்
திரிஜடை
திரிதர்
திருதராஷ்டிரன்
திருதவர்மன்
திருஷ்டத்யும்னன்
திரௌபதி
திலீபன்
திலோத்தமை
திவோதாசன்
தீர்க்கதமஸ்
துச்சலை
துச்சாசனன்
துந்து
துரியோதனன்
துருபதன்
துருபதன் புரோகிதர்
துரோணர்
துர்க்கை
துர்ஜயன்
துர்மதன்
துர்மர்ஷணன்
துர்முகன்
துர்வாசர்
துலாதாரன்
துவஷ்டிரி
துவாபரன்
துவிதன்
துஷ்கர்ணன்
துஷ்யந்தன்
தேவ
தேவகி
தேவசர்மன்
தேவசேனா
தேவசேனை
தேவமதர்
தேவயானி
தேவராதன்
தேவலர்
தேவஸ்தானர்
தேவாபி
தௌமியர்
நகுலன்
நகுஷன்
நமுசி
நரகாசுரன்
நரன்
நளன்
நளன்2
நாகன்
நாசிகேதன்
நாடீஜங்கன்
நாரதர்
நாராயணன்
நாராயணர்கள்
நிருகன்
நிவாதகவசர்கள்
நீலன்
நைருதர்கள்
பகதத்தன்
பகன்
பகர்
பகீரதன்
பங்காஸ்வனன்
பசுஸகன்
பஞ்சசிகர்
பஞ்சசூடை
பத்மநாபன்
பத்மன்
பத்ரகாளி
பத்ரசாகன்
பத்ரா
பப்ருவாஹனன்
பரசுராமர்
பரதன்
பரத்வாஜர்
பராசரர்
பராவசு
பரிக்ஷித்
பரீக்ஷித்1
பர்ணாதன்
பர்வதர்
பலன்
பலராமன்
பலி
பலிதன்
பாகுகன்
பாணன்
பாண்டியன்
பாண்டு
பானுமதி
பானுமான்
பாஹ்லீகர்
பிங்களன்
பிங்களை
பிரகலாதன்
பிரதர்த்தனன்
பிரதிவிந்தியன்
பிரதீபன்
பிரத்னஸ்வன்
பிரத்யும்னன்
பிரமாதின்
பிரம்மதத்தன்
பிரம்மத்வாரா
பிரம்மன்
பிரம்மாதி
பிராதிகாமின்
பிருகதஸ்வர்
பிருகத்யும்னன்
பிருகு
பிருது
பிருந்தாரகன்
பிருஹத்சேனை
பிருஹத்பலன்
பிருஹத்ரதன்
பிருஹந்நளை
பிருஹஸ்பதி
பீமன்
பீமன்1
பீஷ்மர்
புரு
புருரவஸ்
புரோசனன்
புலஸ்தியர்
புலஹர்
புலோமா
புஷ்கரன்
பூஜனி
பூமாதேவி
பூரி
பூரிஸ்ரவஸ்
போத்யர்
பௌரவன்
பௌரிகன்
பௌலோமர்
மங்கணகர்
மங்கி
மடன்
மணிமான்
மதங்கன்
மதயந்தி
மதிராக்ஷன்
மது
மதுகைடபர்
மந்தபாலர்
மந்தரை
மனு
மயன்
மருத்தன்
மலயத்வஜன்
மஹாபிஷன்
மஹிஷன்
மஹோதரர்
மாணிபத்ரன்
மாதலி
மாதவி
மாத்ரி
மாந்தாதா
மாரீசன்
மார்க்கண்டேயர்
மாலினி
மிருத்யு
முகுந்தன்
முசுகுந்தன்
முத்கலர்
முனிவர்பகன்
மூகன்
மேதாவி
மேனகை
மைத்ரேயர்
யது
யமன்
யயவரர்
யயாதி
யவக்கிரீ
யாஜ்ஞவல்கியர்
யாதுதானி
யுதாமன்யு
யுதிஷ்டிரன்
யுயுத்சு
யுவனாஸ்வன்
ரந்திதேவன்
ராகு
ராஜதர்மன்
ராதை
ராமன்
ராவணன்
ரிசீகர்
ரிதுபர்ணன்
ரிஷபர்
ரிஷ்யசிருங்கர்
ருக்மரதன்
ருக்மி
ருக்மிணி
ருசங்கு
ருசி
ருத்திரன்
ருரு
ரேணுகன்
ரேணுகை
ரைப்பியர்
ரோமபாதன்
ரோஹிணி
லக்ஷ்மணன்
லட்சுமணன்
லட்சுமி
லபிதை
லோகபாலர்கள்
லோபாமுத்திரை
லோமசர்
லோமபாதன்
லோமஹர்ஷனர்
வசாதீயன்
வசிஷ்டர்
வசு
வசுதேவர்
வசுமனஸ்
வசுமான்
வசுஹோமன்
வஜ்ரன்
வஜ்ரவேகன்
வதான்யர்
வந்தின்
வருணன்
வர்கா
வாசுகி
வாதாபி
வாமதேவர்
வாயு
வார்ஷ்ணேயன்
வாலகில்யர்
வாலி
விகர்ணன்
விசரக்கு
விசாகன்
விசித்திரவீரியன்
விசோகன்
விதுரன்
விதுலை
விந்தன்
வினதை
விபாண்டகர்
விபாவசு
விபீஷணன்
விபுலர்
வியாக்ரதத்தன்
வியாசர்
வியுஷிதஸ்வா
விராடன்
விருத்திரன்
விருபாகஷன்
விருஷகன்
விருஷசேனன்
விருஷதர்பன்
விருஷபர்வன்
விரோசனன்
விவிங்சதி
விஷ்ணு
விஸ்வகர்மா
விஸ்வாமித்ரர்
வீதஹவ்யன்
வீரத்யும்னன்
வீரபத்ரன்
வேதா
வேனன்
வைகர்த்தனன்
வைசம்பாயனர்
வைனியன்
வைவஸ்வத மனு
ஷாமந்தர்
ஸனத்குமாரர்
ஸுமனை
ஸுவர்ச்சஸ்
ஸ்கந்தன்
ஸ்தாணு
ஸ்தூணாகர்ணன்
ஸ்யூமரஸ்மி
ஸ்ரீ
ஸ்ரீமதி
ஸ்ரீமான்
ஸ்வேதகி
ஸ்வேதகேது
ஸ்வேதன்
ஹனுமான்
ஹயக்ரீவன்
ஹரிச்சந்திரன்
ஹர்யஸ்வன்
ஹாரீதர்
ஹிடிம்பன்
ஹிடிம்பை
ஹிரண்யவர்மன்
ஹோத்திரவாஹனர்



















