Friday, January 25, 2013

விலகினான் அக்னி! | ஆதிபர்வம் - பகுதி 7

Agni Withdrew! | Adi Parva - Section 7 | Mahabharata In Tamil

(பௌலோம பர்வம் - 4)

பதிவின் சுருக்கம் : பொய் சாட்சி சொல்வதின் தீமை; அனைத்துப் புறங்களில் இருந்தும் விலகிக் கொண்ட அக்னி; பிரம்மனின் அறிவுரை; சாபத்தின் பாதிப்புக் குறைப்பு...

சௌதி சொன்னார், "பிருகுவின் சாபத்தால் கோபங்கொண்ட அக்னிதேவன், முனிவரிடம் {பிருகுவிடம்}, "ஓ பிராமணரே {பிருகுவே}, என்னிடம் நீர் இப்படிக் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதற்கு என்ன பொருள்?(1) நான் பெருமுயற்சி செய்து, பாரபட்சமின்றி உண்மையைப் பேசி, நீதியை நிலைக்கச் செய்த போது, வரம்பு {விதிகளை} மீறியதாகத் தாம் என்மேல் எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? என்னைக் கேட்டதால், நான் உண்மையான பதிலைச் சொன்னேன்.(2) ஓர் உண்மையை அறிந்தவனைச் சாட்சியாகக் கூப்பிட்டு விசாரிக்கும்பொழுது, அவன் உண்மைக்கு மாறாகப் பேசினால், அவனது முன்னோர்கள் ஏழு தலைமுறையினரையும், சந்ததியினர் ஏழு தலைமுறையினரையும் பாழாக்கியவனாவான் {நரகத்தில் தள்ளியவனாவான்}.(3) தான் முழுவதும் அறிந்திருந்தும், அறிந்ததை முழுமையாகக் கூறவில்லை என்றால், அவனும் குற்ற உணர்வால் கறைபட்டிருப்பான்.(4) என்னாலும் உமக்குச் சாபமிட முடியும். ஆனால் பிராமணர்கள் என்னால் பெரிதும் மதிக்கப்படுபவர்கள். இவையெல்லாம் உமக்கும் தெரிந்தாலும், ஓ பிராமணரே, நான் சொல்வதைக் கேளும்!(5)

எனது தவசக்தியால், நான் என்னைப் பெருக்கிக் கொண்டு, பல உருவங்களில் இருக்கிறேன். தினசரி ஹோமங்கள் நடக்கும் இடங்களிலும், வருடக்கணக்காக நடைபெறும் வேள்விகளிலும் இருக்கிறேன்.(6) (திருமணம் போன்ற) புனிதச் சடங்குகள், பலிகள் எங்கெல்லாம் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறேன். என் தழல்களின் மேல் வேத விதிகளின் படி இடப்படும் நெய்யைத் தேவர்களும், பித்ருக்களும் பெற்றுச் சாந்தம் அடைகின்றனர்.(7) தேவர்களும், பித்ருக்களும் நீர் {தண்ணீர்} ஆவர். தர்ஷம், பூர்ணமஷம் என்னும் வேள்விகளில் அளிக்கப்படுவனவற்றில் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சமபங்கு உரிமை உள்ளது.(8) ஆகையால் தேவர்களே பித்ருக்கள், பித்ருக்களே தேவர்கள். ஒரேமாதிரியான {சமமான} அவர்களைச் சேர்த்து வைத்தும், பிரித்தும் சந்திரனின் மாறுதல்களுக்கு ஏற்ப வழிபடப்படுகிறார்கள்.(9)

அந்தத் தேவர்களும் பித்ருக்களும் என் மீது ஊற்றப்படுவதையே உண்கின்றனர். எனவே, என்னைத் தேவர்களுக்கும், பித்ருக்களுக்குமான வாய் என்று அழைக்கிறார்கள்.(10) புதுமதியில் (அமாவாசையில்) பித்ருக்களும், முழுமதியில் (பௌர்ணமியில்) தேவர்களும், தூய்மையாக்கப்பட்ட நெய்யை, எனது வாய்மூலமாகத்தான் உண்கிறார்கள். அவர்களின் வாயாக இருப்பதால், அனைத்தையும் (சுத்தமானதும், சுத்தமில்லாததும்) உண்பவனாக எவ்வாறு நான் ஆக முடியும்?” என்றான் {அக்னி}.(11)

அதன்பிறகு, அக்னி சிறிது யோசித்துவிட்டு பிராமணர்களின் ஹோமங்களிலிருந்தும், நீண்ட வேள்விகளிலிருந்தும், புனிதச் சடங்குகள் மற்றும் வைபவங்களிலிருந்தும் என எல்லா இடங்களிலிருந்தும் விலகிக் கொண்டான்.(12) நெருப்பில்லாததால் ஓம்களும், வஷட்களும், சுவதாக்களும், சுவாஹாக்களும் (பிரார்த்தனைகளில் சொல்லப்படும் மந்திரங்கள்) இல்லாமல்[1], அனைத்து உயிரினங்களும் துயரடைந்தன.(13)


[1] ஓம் என்று வேதம் ஓதுவது, வஷட் என்று வேள்வி செய்வது, சுவதா என்று பிதுர்க்கடன் {சிராத்தம்} செய்வது, சுவாகா என்று ஹோமம் செய்வது ஆகியன நின்று போயின என்பது இங்கே பொருள்.

கவலை கொண்ட முனிவர்கள், தேவர்களிடம் சென்று, "குறைவற்றவர்களே! அக்னி இல்லாமல் வேள்விகள் மற்றும் சடங்குகள் தொடர்ந்து நின்று போனதால் மூன்று உலகங்களும் குழப்பத்தில் உள்ளன. காலந்தாழ்த்தாமல் இந்தக் காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவிடுங்கள்" என்றனர். பிறகு முனிவர்களும் தேவர்களும் சேர்ந்து பிரம்மனிடம் சென்றனர்.(14,15) அவனிடம் {பிரம்மனிடம்} அக்னியின் சாபத்தைப் பற்றியும், அதனால் அனைத்து விழாக்களும் தடைப்பட்டிருப்பதையும் பற்றிய விவரங்களையும் எடுத்துரைத்தனர். அவர்கள், "ஓ நற்பேறுபெற்றவரே! ஏதோ காரணத்திற்காகப் பிருகு முனிவரால் அக்னி சபிக்கப்பட்டிருக்கிறான்.(16) உண்மையில் தேவர்களுக்கு வாயாக இருப்பவனும், வேள்விகளில் தரப்படுவதை முதலில் உண்பவனும், வேள்வி நெய்யை உண்பவனுமாகிய அக்னியானவன் எவ்வாறு வரைமுறை இல்லாமல் அனைத்தையும் உண்ணும் நிலைக்கு ஆளாகலாம்?” என்று கேட்டனர்.(17)

இந்த வார்த்தைகளைக் கேட்ட அண்டப்படைப்பாளன் {பிரம்மன்}, அக்னியைத் தன் முன் வர ஆணையிட்டான். பிரம்மன் தன்னைப் போன்றே அனைத்தையும் படைப்பவனும், என்றும் நிலைத்திருப்பவனுமான அக்னியிடம் மென்மையான வார்த்தைகளால்,(18) "உலகங்களைப் படைத்தவன் நீயே, அவற்றை அழிப்பவன் நீயே! மூவுலகங்களைப் பாதுகாப்பவன் நீயே! வேள்விகள் அனைத்தையும் வளர்ப்பவனும் நீயே!(19) எனவே, சடங்குகள் தடைபெறாமல் இருக்குமாறு நடந்து கொள்வாயாக. ஓ வேள்வி நெய்யை உண்பவனே, நீயே எல்லாவற்றிற்கும் தலைவனாக இருக்கும்போது, ஏன் இவ்வளவு மூடனாக நடந்து கொள்கிறாய்?(20) அண்டத்தில் என்றுமே தூய்மையானவன் நீயே! அண்டத்தை நிலைத்திருக்க வைத்திருப்பவனும் நீயே! உன் முழு உடலாலும் வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும் தாழ்ந்த நிலைக்கு நீ ஆளாகமாட்டாய்.(21)

ஓ தழல்களால் ஆனவனே, பின்புறத்தில் இருக்கும் தழல்கள் {ஜ்வாலைகள்} மட்டுமே அனைத்தையும் உண்ணும்[2]. (ஊனுண்ணிகள் அனைத்தின் வயிற்றிலும் இருக்கும்) இறைச்சியை உண்ணும் உன்னுடைய உடலும்[3] வரைமுறையில்லாமல் அனைத்தையும் உண்ணும். எப்படிக் கதிரவனின் கதிர்பட்டதும் எல்லாம் தூய்மையாகின்றனவோ,(22) அப்படியே உன் தழல்களால் எரிக்கப்படுபவை அனைத்தும் தூய்மையாகும். ஓ நெருப்பே, தானாக உருவான எல்லாம்வல்ல சக்தி நீயே.(23) ஓ தலைவனே, உனது அந்தச் சக்தியால் {பிருகு} முனிவரின் சாபம் உண்மையாகட்டும். உன் வாயில் படைக்கப்படுவனவற்றில் உனக்குச் சேர வேண்டிய பங்கையும், தேவர்களுக்குச் சேர வேண்டிய பங்கையும் எடுத்துக் கொண்டு உனது பணியைத் தொடர்வாயாக" என்றான் {பிரம்மன்}.(24)

[2] தீயின் நாக்கு (அனல்) என்பது முன்பகுதி ஆகும். கனல் எனப்படும் கீழ்ப்பகுதி மட்டுமே தான் பற்றிய பொருட்கள் அனைத்தையும் உண்ணும். அனல் எனும் மேற்பகுதி, எரியும் (உண்ணப்படும்) பொருளிலிருந்து விலகியே இருக்கும்.

[3] இறைச்சியுண்ணும் விலங்குகளின் வயிற்றில் செரிமானம் செய்யும் அக்னி, செரிக்காததைச் செரிக்க வைப்பது. எல்லா உயிரினங்களின் வயிற்றிலும் உணவை செரிப்பதற்காக ஜாடராக்னி என்ற பெயரில் அக்னி இருக்கிறான். அவன் இறைச்சியைச் செரிக்கச் செய்யும் போது உண்ணத்தகாததை உண்பவனாகக் கருதப்படுகிறான்.

சௌதி தொடர்ந்தார், "அக்னி அந்தப் பிதாமகனிடம் {பிரம்மனிடம்}, "அப்படியே ஆகட்டும்" என்றான். மிக உயர்ந்த தலைவனின் {பிரம்மனின்} ஆணைப்படியே, அக்னி தனது வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டான்.(25) தேவர்களும், முனிவர்களும், தாங்கள் எங்கிருந்து வந்தனரோ அங்கேயே மகிழ்ச்சியுடன் திரும்பினர். முனிவர்கள், சடங்குகளையும், வேள்விகளையும் செய்யத் தொடங்கினார்கள்.(26) உலகில் அனைத்து உயிரினங்களும், மேலுலகில் தேவர்களும் மகிழ்வுற்றனர். அக்னியும் பாவத்திலிருந்து விடுபட்டதால் மகிழ்ந்தான்.(27)

ஓ அறுகுணங்கொண்டவரே! இவ்வாறு பழங்காலத்தில் பிருகுவினால் அக்னி சபிக்கப்பட்டான். புலோமை, அரக்கனின் {புலோமனின்} அழிவு,  சியவனனின் பிறப்பு ஆகியனவற்றுடன் தொடர்புடைய பழைய வரலாறுகள் இவ்வாறே இருக்கின்றன" {என்றார் சௌதி}.(28) 


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்