Tuesday, February 19, 2013

கத்ரு இந்திரனிடம் வேண்டுதல்! | ஆதிபர்வம் - பகுதி 25

Kadru's prayer to Indra! | Adi Parva - Section 25 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 13)

பதிவின் சுருக்கம் : வினதை கத்ருவையும், கருடன் பாம்புகளையும் நடுக்கடலில் உள்ள தீவை நோக்கிச் சுமந்து செல்வது; கதிரவனின் கதிர்களால் சுடப்பட்ட பாம்புகள் அடைந்த துன்பம்; இந்திரனிடம் வேண்டிய கத்ரு; கத்ரு சொன்ன இந்திரத்துதி...

சௌதி சொன்னார், "எந்த இடத்திற்கும் தன் இச்சைப்படி செல்லக்கூடிய அந்தப் பெரும்பலம்பொருந்திய பறவையானவன், தனது தாயின் {வினதையின்} இருப்பிடம் சென்று கடற்கரையில் இறங்கினான்.(1) அங்கே வினதை பந்தயத்தில் தோல்வியுற்று, {கத்ருவிற்கு} அடிமையாகச் சோகத்துடன் வாழ்ந்து வந்தாள்.(2)

ஒருமுறை கத்ரு, வினதையை அழைத்தாள். வினதை அவளை விழுந்து வணங்கி எழுந்ததும், கத்ரு அவளது மகனின் {கருடனின்} முன்னிலையிலேயே, “ஓ மென்மையான வினதையே, கடலுக்கு நடுவிலே, யாரும் அணுகமுடியாத ஓர் இடத்திலே, அழகானதும், இன்பம் தருவதுமான பாம்புகளின் வசிப்பிடம் ஒன்று இருகிறது. என்னை அங்கே தூக்கிச் செல்வாயாக” என்றாள்.(3)

இப்படிச் சொன்னதும், அந்த அழகான இறகுகளுடைய பறவையின் {கருடனின்} தாய் {வினதை}, (தனது தோளில்) பாம்புகளின் தாயை {கத்ருவை} சுமந்து சென்றாள். கருடனும் தனது தாயின் {வினதையின்} சொல்படி, பாம்புகளைத் {கத்ருவின் மக்களை} (தனது முதுகில்) தூக்கிச் சென்றான்.(4) வினதைக்குப் பிறந்த அந்த விண்ணோடி {கருடன்} அப்படியே கதிரவனை நோக்கி எழும்பினான். அதனால், அந்தப் பாம்புகள் கதிரவனின் கதிர்களால் சுடப்பட்டு, மயக்கமடைந்தன.(5) தனது மைந்தர்களின் {பாம்புகளின்} அந்த நிலையைக் கண்ட கத்ரு, இந்திரனிடம் இப்படி வேண்டினாள், "உன்னை வணங்குகிறேன். தேவதேவா! உன்னை வணங்குகிறேன், விருத்ரனைக் கொன்றவனே! நான் உன்னை வணங்குகிறேன்.(6) நமுசியைக் கொன்றவனே, ஆயிரங்கண் கொண்டவனே, சச்சியின் {சசியின்} மணாளனே, சூரியனால் சுடப்பட்ட பாம்புகளை உனது மழைத்துளிகளால் காப்பாற்றுவாயாக.(7)

ஓ தேவர்களில் சிறந்தவனே! எங்கள் சிறந்த காப்பாளன் நீயே. ஓ புரந்தரா! பருவகாலத்தில் மழைத்தாரைக்கு உத்தரவிடுபவன் நீயே.(8) வாயு நீயே, மேகம் நீயே, நெருப்பு நீயே, வானில் {காணும்} மின்னல் நீயே, மேகங்களைப் பரவச் செய்பவன் நீயே, (யுக முடிவில் அண்டத்தை இருளாக்கும்) பெருமேகம் என்றழைக்கப்படுபவன் நீயே.(9) ஒப்புயர்வற்ற, பயங்கரமான இடியும் முழங்கும் மேகங்களும் நீயே. உலகத்தைப் படைத்தவன் நீயே, அதை அழிப்பவன் நீயே. வெல்லப்பட முடியாதவன் நீயே.(10) அனைத்து உயிரினங்களுக்கும் ஒளி நீயே, ஆதித்யன், விபாவசு, அற்புதமான பூதங்கள் நீயே. தேவர்கள் அனைவருக்கும் தலைவன் நீயே.(11)

விஷ்ணு நீயே, ஆயிரங்கண் கொண்டவனே! தேவன் நீயே, இறுதிப் பாதுகாப்பு நீயே. ஓ தேவனே! அமுதமும், போற்றுதலுக்குரிய சோமமும் நீயே.(12) சந்திர நாள் {திதி [அ] ஒரு நாள்} நீயே, பலா ({லவம்} ஒரு நிமிடம்) நீயே, க்ஷணம் (நான்கு நிமிடம்) நீயே. வளர்பிறையும் {சுக்லபக்ஷமும்} நீயே, தேய்பிறையும் {கிருஷ்ணபக்ஷமும்} நீயே. {கண் இமைக்கும் நேரமான} த்ருடி நீயே, {பதினெட்டு த்ருடிகள் கொண்ட} காஷ்டை நீயே, {முப்பது காஷ்டைகள் கொண்ட} கலை நீயே. வருடம் நீயே, பருவங்கள் நீயே, மாதங்கள் நீயே, இரவுகள் நீயே, பகல்கள் நீயே.(13) மலைகளும், கானகங்களும் நிறைந்த அழகான பூமி நீயே. சூரியனால் ஒளிரும் வானம் நீயே. திமிங்கலங்களையும், திமிங்கலங்களையே விழுங்கும் உயிரினங்களையும், மகரங்களையும் பல்வேறு மீன்களையும் தன்னகத்தே கொண்ட அலைகள் நிறைந்த பெருங்கடல் நீயே.(14) மிகுந்த கவனமுடைய ரிஷிகளாலும், ஞானமுள்ளவர்களாலும் போற்றப்படுபவன் நீயே. வேள்விகளில் உண்டாகும் சோமரசத்தையும், மந்திரங்களோடு கூடிய தெளிந்த நெய்யையும், உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் நன்மைக்காகவும் குடிப்பவன் நீயே.(15) ஆசையின் கனிகளில் விருப்பமுள்ள பிராமணர்களால் எப்போதும் வேள்விகளில் வழிபடப்படுபவன் நீயே. ஒப்பில்லாத பலம் வாய்ந்தவன் நீயே, வேதங்களிலும் வேதாங்கங்களிலும் பாடப்படுபவன் நீயே. படித்த பிராமணர்கள் எப்போதும் வேள்விகளை நடத்திக் கொண்டு, வேதங்களை அதிக அக்கறையுடன் படிக்கக் காரணம் நீயே" {இப்படியே கத்ரு இந்திரனை போற்றினாள்} {என்றார் சௌதி}.(16)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்