Sunday, February 17, 2013

பிறந்தான் கருடன்! | ஆதிபர்வம் - பகுதி 23

Garuda Born! | Adi Parva - Section 23 | Mahabharata In Tamil

(ஆஸ்தீக பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : பந்தயத்தில் வீழ்ந்த வினதை; கத்ருவுக்கு அடிமையான வினதை; கருடன் பிறந்தது; தேவர்களாலும் முனிவர்களாலும் துதிக்கப்பட்ட கருடன்...

சௌதி சொன்னார் "கடலைக் கடந்ததும், துரிதமான வேகம் கொண்ட கத்ரு தன் சகோதரி வினதையுடன் குதிரைக்கு அருகில் இறங்கினாள்.(1) அவர்கள் இருவரும் வேகமாக ஓடக்கூடிய குதிரைகளில் முதன்மையான அந்தக் குதிரை {உச்சைஸ்ரவஸ்}, சந்திரக்கதிர்களைப் போல உடல் முழுவதும் வெள்ளையாகவும், (வாலில்) கருமுடிகளுடன் இருந்ததையும் கண்டனர்.(2) குதிரையின் வாலில் நிறையக் கருமுடிகள இருப்பதைச் சுட்டிக்காட்டிய கத்ரு, மிகவும் வாட்டமுற்றிருந்த வினதையைத் தனது அடிமையாக்கிக் கொண்டாள்.(3) இப்படிப் பந்தயத்தில் தோற்று, அடிமைத்தனத்திற்குள் தான் புகுந்துவிட்டதை எண்ணி வினதை மிகவும் வருந்தினாள்.(4)



அதே வேளையில், தன் விருப்பப்படியே நினைத்த உருவெடுக்க வல்லவனும், நினைத்த இடத்திற்குச் செல்ல தகுந்தவனும், நினைத்த அளவிற்கு சக்தியைப் பெருக்கிக் கொள்ளத் தக்கவனும், காந்தி மிக்கவனும், பலசாலியுமான அந்தப் பெரும்பறவையான கருடன், அவனது {கருடனது} நேரம் வந்தவுடன்,(5) அண்டத்தின் அனைத்து புள்ளிகளையும் பிரகாசப்படுத்திக் கொண்டு, தாயின் உதவியில்லாமல் முட்டையை உடைத்துக் கொண்டு வெளிவந்தான்.(6) நெருப்புக் குவியல் போன்ற ஒளியுடன் அவன் பயங்கரமாகப் பிரகாசித்தான்.

மின்னலைப் போன்ற பார்வையுடனும், யுக முடிவின் நெருப்புக்கு ஒத்த காந்தியுடனும், இருந்த அந்தப் பறவையானவன் {கருடன்}, பிறந்தவுடனேயே வேகமாக வளர்ந்து, உருவத்தைப் பெருக்கிக் கொண்டு வானத்தில் பறந்தான்.

மூர்க்கமாகவும், மிகுந்த உணர்ச்சியுடனும் கர்ஜனை செய்த அவன் இரண்டாவது கடல் நெருப்பைப் {வடவாக்னி} போல அச்சந்தரும் வகையில் தோன்றினான்.(7,8) அவனைக் {கருடனை} கண்ட அனைத்துத் தேவர்களும் அச்சமுற்று, விபாவசுவிடம் (அக்னியிடம்) பாதுகாப்பை வேண்டினர். அவர்கள் தன் ஆசனத்தில் அமர்ந்திருந்த, பல உருவங்கள் கொண்ட அந்தத் தேவனிடம் {அக்னியிடம்} பணிந்து, இந்த வார்த்தைகளைச் சொன்னார்கள்,(9) "ஓ அக்னி, உமது உடலை பெருக்காதே, எம்மை உட்கொண்டு விடுவாயோ? இதோ இந்தப் பெருங்குவியலான தழல்கள் அகலமாகப் பெருகிக் கொண்டே வருகின்றனவே" என்றனர்.(10)

அதற்கு அக்னி, "ஓ அசுரர்களைத் துன்புறுத்துபவர்களே, நீங்கள் நினைப்பது போல அல்ல இஃது. இவன் பெரும்பலம் வாய்ந்த கருடன். ஒளியில் என்னை ஒத்திருப்பவன்;(11) பெரும் சக்தி படைத்தவன்; வினதையின் மகிழ்வைப் பெருக்கப் பிறந்தவன். நீங்கள் காணும் பிரகாசமான ஒளிக்குவியல் உங்களுக்குள் இந்த மயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.(12) இவன் கசியபரின் பெரும்பலம் பொருந்திய மகன்; நாகங்களை அழிப்பவன்; தேவர்களின் நன்மையில் ஈடுபடுபவன், தைத்தியர்களுக்கும், ராட்சசர்களுக்கும் எதிரியானவன்.(13) இவனைக் கண்டு சிறிதும் அஞ்சாதீர்கள். என்னுடன் வந்து பாருங்கள்" என்று தேவர்களுக்குச் சொன்னான்.(14)

தேவர்கள், கருடனைத் தூரத்தில் இருந்தே பார்த்து,(15) "முனிவன் நீயே (அனைத்து மந்திரங்களையும் அறிந்தவன்), வேள்விகளில் கிடைக்கும் அவிர்பாகத்தில் பெரும்பகுதியை பகிர்பவன் நீயே, எப்போதும் பிரகாசிப்பவன் நீயே, அசைவன, அசையாதன ஆகியவற்றின் தலைவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அனைத்தையும் படைப்பவன் நீயே, ஹிரண்யகர்பன் நீயே, தட்சனாகவும், பிரஜாபதிகளாகவும் அனைத்தையும் படைப்பவன் நீயே,(16) இந்திரன் (தேவர்களின் தலைவன்) நீயே, குதிரை முகம் கொண்ட விஷ்ணுவான ஹயக்ரீவன் நீயே, கணை நீயே (திரிபுரத்தை எரித்த மஹாதேவரின் {சிவனின்} கையில் கணையாக இருந்த விஷ்ணு), நான்முகம் படைத்த பத்மஜன் {பிரம்மன்} நீயே, பிராமணன் (ஞானமுள்ளவன்) நீயே, அக்னி நீயே,(17) பவனன் (அண்டதிலுள்ள அனைத்து பொருள்களுக்கும் தலைவன்) நீயே. அறிவு நீயே, எங்களை மயக்கும் மாயை நீயே, ஊடுருவும் ஆவி நீயே, தேவர்களுக்குத் தேவன் நீயே, பெரிய உண்மை நீயே, அச்சமற்றவன் நீயே, என்றும் மாறுதலில்லாதவன் நீயே, குணங்களற்ற (நிர்க்குணமான) பிரம்மம் நீயே,(18) கதிரவனின் சக்தி நீயே, சித்தத்தின் செயல்கள் நீயே, எங்கள் காப்பாளன் நீயே, தெய்வீகங்களின் கடல் நீயே, புனிதமானவன் நீயே, இருளின் {அறியாமையின்} தன்மைகளற்றவன் நீயே, உயர்ந்த ஆறு குணங்களின் சொந்தக்காரன் நீயே, எங்களால் போட்டிகளில் வெல்லப்படமுடியாதவன் நீயே,(19) உன்னிலிருந்தே எல்லாம் உற்பத்தியாயிற்று, அற்புதமான செயல்கள் செய்பவன் நீயே, இருந்தவை இல்லாதவை எல்லாம் நீயே, தூய அறிவு நீயே, கதிரவன் தன் கதிர்களால் ஒளி தருவது போல, எங்களுக்குக் காட்சி தருபவன் நீயே, அண்டத்திலுள்ள உயிருள்ளவை, உயிரற்றவை எல்லாம் நீயே,(20) சூரியனின் ஒளியை மறைப்பவன் நீயே, அனைத்தையும் அழிப்பவன் நீயே, அழிவது அழியாதது எல்லாமும் நீயே.

மூர்க்கமான கருடன்
ஓ ஒளிரும் அக்னியே! கதிரவன் கோபத்தால் உயிரினங்கள் அனைத்தையும் சுட்டெரிப்பதைப் போல, அனைத்தையும் எரிப்பவன் நீயே,(21) ஓ பயங்கரமானவனே, பிரளயத்தில் நெருப்பால் எல்லாம் அழிந்தாலும் அழியாதவன் நீயே. ஓ விண்ணில் உலவும் பலம்பொருந்திய கருடா, எங்கள் பாதுகாப்பை உன்னிடம் வேண்டுகிறோம். ஓ பறவைகளின் மன்னா! {கருடா}, இயல்புக்கு மீறிய {அசாதரணமான} சக்தியும், நெருப்புக்கு நிகரான காந்தியும் கொண்டு, இருள் அணுகமுடியாத மின்னலைப் போலப் பிரகாசிப்பவன் நீயே, மேகங்களைத் தொடுபவன் நீயே, காரணமும் காரியமும் நீயே, வரங்களைத் தருபவனும், வெல்ல முடியாத வீரத்தைக் கொண்டவனும் நீயே,(22,23) ஓ தேவனே! புடம்போட்ட தங்கம்போல இந்த அண்டமே உன் காந்தியால் வெப்பமடைந்தது. உன்னைக்கண்ட அச்சத்தால் அங்குமிங்கும் தங்கள் வாகனங்களில் தேவலோகத்தில் பறந்து திரியும் உயர் ஆன்மத் தேவர்களைக் காப்பாயாக.(24) ஓ பறவைகளில் சிறந்தவனே! {கருடா}, அனைத்துக்கும் தலைவன் நீயே, கருணையுள்ள உயர் ஆன்ம முனிவர் கசியபரின் புதல்வன் நீயே, அண்டத்தின் மீது கோபங்கொள்ளாமல் கருணை கொள்வாயாக. யாவற்றுக்கும் தலைமையானவன் நீயே, கோபத்தைத் தணித்து, எங்களைக் காப்பாற்றுவாயாக.(25)

இடியின் முழக்கம் போன்ற உனது குரலால், ஓ பறவையானவனே {கருடா}, அண்டத்தின் பத்துப் புள்ளிகளையும், விண்ணையும், தேவலோகத்தையும், பூமியையும், எங்கள் இதயங்களையும் தொடர்ந்து நடுங்க வைக்கிறாய். அக்னியைப் போன்ற உனது இந்த உடலைச் சுருக்குவாயாக.(26) கோபமடைந்த யமனைப் போன்ற காந்தியுடன் உன்னைப் பார்க்கும்போது, எங்கள் இதயத்தில் அமைதியை இழந்து நடுங்குகிறோம்.(27) ஓ பறவைகளின் தலைவா! {கருடா}, உன் இரக்கத்தை வேண்டும் எங்களுக்கு உனது கருணையால் நன்மை செய்வாயாக. ஓ சிறப்புமிக்கவனே! {கருடா}, எங்களுக்கு இன்பத்தையும் நற்பேறையும் அளிப்பாயாக" என்று வேண்டினர் {தேவர்கள்}. இப்படித் தேவர்களாலும், முனிவர்களாலும் போற்றப்பட்ட அழகான இறகுகளைக் கொண்ட அந்தப் பறவையானவன் {கருடன்}, தனது சக்தியையும் காந்தியையும் குறைத்துக் கொண்டான்" {என்றார் சௌதி}.(28)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்