Sunday, April 01, 2018

எதிர்பார்ப்பைத் துறப்பாயாக! - சாந்திபர்வம் பகுதி – 128

Abandon your hope! | Shanti-Parva-Section-128| Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 128)


பதிவின் சுருக்கம் : மன்னன் வீரத்யும்னனுக்கும் தனு என்ற முனிவருக்கும் இடையில் நடந்த உரையாடலை மன்னன் சுமித்திரனுக்குச் சொன்ன முனிவர் ரிஷபர்; ரிஷபரின் வார்த்தைகளை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-128
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-128
{ரிஷபர் மான் வேட்டையாட வந்த மன்னன் சுமித்திரனிடம் தொடர்ந்தார்}, “மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நான் வீரத்யும்னன் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு மன்னனாவேன். என் புகழ் திசைகள் அனைத்திலும் பரவியிருக்கிறது. என் மகன் பூரித்யும்னன் காணாமல் போனான். அவனைத் தேடியே நான் இந்தக் காட்டுக்கு வந்திருக்கிறேன்.(1) பிராமணர்களில் முதன்மையானோரே, அந்தப் பிள்ளை என் ஒரே மகனாவான். பாவமற்றவர்களே, வயதில் அவன் மிகவும் இளையவனாவான். எனினும், அவனை இங்கும் காண முடியவில்லை. அவனைக் காணவே நான் எங்கும் திரிந்து வருகிறேன்” என்றான்”.(2)

ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “மன்னன் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், தவசி தனு தமது தலையைத் தொங்கவிட்டார். அவர் பதிலாக எந்த ஒரு வார்த்தையையும் சொல்லாமல் முற்றிலும் அமைதியாக இருந்தார்.(3) முற்காலத்தில் அந்தப் பிராமணர், இந்த மன்னனால் கௌரவிக்கப்படாதவராவார். ஓ! ஏகாதிபதி, ஏமாற்றமடைந்திருந்த அவர், அந்தக் காரணத்திற்காகவே நெடுங்காலம் கடுந்தவம் இருந்தார்;(4) மன்னர்கள் எவரிடம் இருந்தோ, வேறு எந்த வகையினரிடம் இருந்த கொடையாக எதையும் ஒருபோது ஏற்பதில்லை என்று தமது மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டார்.(5)

அவர் தமக்குள்ளேயே, “மூட அறிவு கொண்ட ஒவ்வொரு மனிதனையும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} கலங்கடிக்கிறது. நான் என் மனத்திலிருக்கும் நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} அகற்றுவேன்” என்று தீர்மானித்தார். இதுவே அவரது தீர்மானமாக இருந்தது. வீரத்யும்மன் அந்தத் தவசிகளில் முதன்மையானவரிடம் மீண்டும் இந்த வார்த்தைகளில் கேள்வியைக் கேட்டான்.(6)

மன்னன் {வீரத்யும்னன் தவசி தனுவிடம்}, “நம்பிக்கையுடைய மெலிவின் அளவென்ன? இந்த உலகில் அடைவதற்கு மிகக் கடினமானது எது? ஓ! புனிதமானவரே, அறநெறி மற்றும் பொருளை நன்கறிந்திருப்பதால், இவை யாவற்றையும் நீர் எனக்குச் சொல்வீராக?” என்று கேட்டான்”.(7)

ரிஷபர் {மன்னன் சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “புனிதமானவரும், மெலிந்த உடலைக் கொண்டவருமான அந்த முனிவர் {தனு}, (மன்னனிடம் தான் அடைந்த அவமானம் குறித்த) கடந்த கால நினைவுகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து, மன்னனுக்கும் அவற்றைத் திரும்ப நினைவுப்படுத்திப் பின்வரும் வார்த்தைகளை அவனிடம் சொன்னார்:(8)



அந்தத் தவசி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “ஓ! மன்னா, மெலிந்ததில் நம்பிக்கைக்கு {எதிர்பார்ப்புக்கு} இணையானது வேறேதும் கிடையாது. நான் பல மன்னர்களிடம் வேண்டிக் கேட்டிருக்கிறேன். நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது} மனத்தின் முன் நிறுவும் {கொண்டுவரும்} காட்சியைப் போல அடைதற்கரிதான வேறெதுவும் இல்லை எனவும் நான் கண்டிருக்கிறேன்” என்றார்[1].(9)

[1] கும்பகோணம் பதிப்பில், “அரசனே, மெலிந்ததில் ஆசைக்குச்சரியானது ஒன்றுமில்லை. ராஜனே, அந்த ஆசையை ஜயிப்பது கடினமாகையால் தான் என்னால் அரசன் பிரார்த்திக்கப்பட்டான்” என்றிருக்கிறது.

மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! பிராமணரே, உமது வார்த்தைகளைக் கொண்டு மெலிவு என்றால் என்ன? அவ்வாறல்லாதவை எவை? என்பதைப் புரிந்து கொள்கிறேன்[2]. நம்பிக்கையால் {எதிர்பார்ப்பின் மூலம்} மனத்தின் முன் நிறுவப்படும் காட்சிகள் எவ்வாறு அடைதற்கரியனவாக இருக்கின்றன என்பதையும் புரிந்து கொள்கிறேன். உமது வார்த்தைகள் ஸ்ருதியில் சொல்லப்பட்டவை என்று நான் கருதுகிறேன்.(10) ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, எனினும் என் மனத்தில் ஓர் ஐயம் எழுகிறது. ஓ! தவசியே, என்னால் கேட்கப்படும் உமக்கு, அதை விரிவாக விளக்குவதே தகும்.(11) உமது உடலைவிட மெலிதானது எது? ஓ! புனிதமானவரே, ஓ! தவசிகளில் சிறந்தவரே, இதைக் குறித்துப் பேசுவது முறையென்றால் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(12)

[2] “அதாவது, நம்பிக்கையானது மெலிதானதாக இருந்தாலும், நம்பிக்கையுடன் தொடர்புடைய பொருட்கள் நேர்மாறானவை என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அதற்கு அந்த மெலிந்த துறவி {தனு மன்னன் வீரத்யும்னனிடம்}, “வேண்டுபவர்களில் {யாசகர்களில்} மனம் நிறைந்தவனைக் காண்பது மிக அரிதானதாகும். ஒருவேளை, இவ்வுலகில் அப்படிப்பட்ட எவரும் இல்லை என்றே கொள்ளலாம். ஓ! ஐயா, வேண்டும் ஒருவனை ஒருபோதும் அவமதியாதவன் இன்னும் அரிதானவனாவான்.(13) வேண்டுபவர்களுக்கு உறுதி அளித்துவிட்டு, தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, அவர்களுக்கு {வேண்டுபவர்களுக்குத்} தகுந்த நன்மையைச் செய்யாத மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்[3].(14) நன்றியற்ற மனிதர்களிடம் வைக்கப்படும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு}, அல்லது கொடூரன், சோம்பேறி, பிறருக்குத் தீங்கிழைப்பவன் ஆகியோர் மீது வைக்கப்படும் நம்பிக்கையானது என் உடலைவிட மெலிதானதாகும்.(15) ஒரே மகனுடைய தந்தை, தொலைந்து போன, அல்லது தவறவிட்ட தன் மகனைக் காணத் தனக்குள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} என் உடலைவிட மெலிதானதாகும்.(16) ஓ! மன்னா, ஒரு வயதுமுதிர்ந்த பெண் {கிழவி} மகன்களைப் பெறக் கொள்ளும் நம்பிக்கையும், செல்வந்தர்களால் வளர்க்கப்படும் நம்பிக்கையும் என் உடலைவிட மெலிதானதாகும்.(17) வளர்ந்த கன்னியரின் இதயங்களில், திருமணம் குறித்து எவரும் பேசும்போது மட்டும் எழும் நம்பிக்கையானது {எதிர்பார்ப்பானது}, என் உடலைவிட மெலிந்ததாகும்[4]” என்றார் {முனிவர் தனு}.(18)

[3] “அத்தகைய மனிதர்கள் எப்போதும் நம்பப்படக்கூடாதவர்க்ள என்பது பொருளாகும். எனினும், அவர்களிடம் நன்மையை நம்பி எதிர்பார்க்கும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகு நம்பிக்கையானது தமது உடலைவிட மெலிதானதாகும் என அந்தத் தவசி சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[4] “14 மற்றும் 18ம் சுலோகங்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் மாயை maya என்ற சொல்லானது மதம் mattah என்ற பொருளைக் கொண்டதென நீலகண்டரால் விளக்கப்படுகிறது. அதன் பொருளும் மிக வெளிப்படையானவையே. இருப்பினும் பர்துவான் மொழிபெயர்ப்பார்கள் வினோதமான வகையில் அதைத்தவறாகப் பொருள் புரிந்து கொள்கிறார். கே.பி.சின்ஹா சரியா பதிப்பைத் தருகிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். 18ம் சுலோகம், கும்பகோணம் பதிப்பில், “ஸரியான பிராயமிருக்கும்பொழுது விவாகத்தை விரும்பும் கன்னிகைகளுக்கு அந்த விவாகத்தைப் பற்றிய கதைகளைக் கேட்டு உண்டாகும் ஆசையானது என்னைவிட மிகவும் கிருசமானது” என்றிருக்கிறது.

ஓ! ஏகாதிபதி {சுமித்திரா}, இந்த வார்த்தைகளைக் கேட்டு, மன்னன் வீரத்யும்னனும், அவனது வீட்டைச் சேர்ந்த பெண்களும் அந்தப் பிராமணர்களில் காளையின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, அவரது பாதத்தைத் தீண்டி தலைவணங்கினர்.(19)

மன்னன் {வீரத்யும்னன்}, “ஓ! புனிதமானவரே, நான் உமது அருளை வேண்டுகிறேன். நான் என் மகனைக் காண விரும்புகிறேன். ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் சொன்னது உண்மையே. நீர் சொன்ன உண்மைகளில் எந்த ஐயமும் இல்லை” என்றான்”.(20)

ரிஷபர் {சுமித்திரனிடம்} தொடர்ந்தார், “அறவோரில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, புன்னகைத்தபடியே, தமது கல்வி மற்றும் தவங்களின் மூலமாக மன்னனின் மகனை {பூரித்யும்னனை} அந்த இடத்திற்குக் கொண்டு வந்தார்.(21) அந்த இளவரசனை அங்கே கொண்டுவரச் செய்த அந்தத் தவசி மன்னனை (அவனது தந்தையைக்) கண்டித்தார்[5]. அப்போது அறவோரில் முதன்மையான அவர் {தவசி தனு}, தம்மையே அற தேவனாக {தர்மதேவனாக} வெளிப்படுத்திக் கொண்டார்.(22) உண்மையில் ஆச்சரியமிக்கத் தமது தெய்வீக வடிவை வெளிப்படுத்திய அவர், கோபம் மற்றும் பழிதீர்க்கும் விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட இதயத்துடன் அருகில் இருந்த காட்டுக்குள் நுழைந்தார்.(23) ஓ! மன்னா {சுமித்திரா}, இவை யாவற்றையும் நான் கண்டேன். நான் {இப்போது} சொன்ன வார்த்தைகளையும் கேட்டேன். (அந்தத் தவசி குறிப்பிட்டவற்றில் எதையும் விட) மிக மெலிந்ததான உன் நம்பிக்கையை விரட்டுவாயாக” என்றார் {ரிஷபர்}”.(24)

[5] “முந்தைய காலத்தில் அந்த மன்னன் தவசியை அவமதித்த காரணத்திற்காகக் கண்டித்தார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ஓ! ஏகாதிபதி, உயர் ஆன்ம ரிஷபரால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் சுமித்திரன், தன் இதயத்தில் இருந்ததும், (மெலிந்த தவசியால் குறிப்பிடப்பட்ட எந்த வகை நம்பிக்கையையும் விட) மெலிந்ததுமான நம்பிக்கையை {எதிர்பார்ப்பை} விரைவாகக் கைவிட்டான்.(25) ஓ! குந்தியின் மகனே, நீயும் இந்த என் வார்த்தைகளைக் கேட்டு இமய மலையைப் போல அமைதியடைந்து, அசைவற்றவனாக {உறுதிமிக்கவனாக} இருப்பாயாக.(26) துயரில் மூழ்கியவனான நீ, என்னைக் கேள்வி கேட்டு, நான் சொன்ன பதிலையும் கேட்டாய். ஓ! ஏகாதிபதி, உன் வருத்தங்களை அகற்றிக் கொள்வதே உனக்குத் தகும்” {என்றார் பீஷ்மர்}.(27)

சாந்திபர்வம் பகுதி – 128ல் உள்ள சுலோகங்கள் : 27

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்