Saturday, March 31, 2018

ரிஷபர், தனு, வீரத்யும்னன்! - சாந்திபர்வம் பகுதி – 127

Rishava, Tanu and Viradyumna! | Shanti-Parva-Section-127| Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 127)


பதிவின் சுருக்கம் : ரிஷபரென்ற முனிவர் ஒருவர் தான் தீர்த்தயாத்திரை சென்று வந்தது குறித்தும், பதரியில் தாம் கண்ட முனிவர் தனு மற்றும் மன்னன் வீரத்யும்னன் குறித்தும் மன்னன் சுமித்திரனிடம் விவரித்தது...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-127
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-127
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது அந்த முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவரும், முனிவர்களில் சிறந்த மறுபிறப்பாளருமான ரிஷபர்[1], சிறிதாகப் புன்னகைத்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(1) “ஓ! மன்னர்களில் புலியே {சுமித்திரனே}, ஓ! தலைவா, புனிதத்தலங்களுக்குப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருந்தபோது, நரன் மற்றும் நாராயணரின் அழகிய ஆசிரமத்திற்குச் சென்றேன்.(2) பதரி {பத்ரிநாத்} என்றழைக்கப்படும் ஓர் இனிமையான இடம் இருக்கிறது. அங்கே (புனிதமான கங்கை பிறந்த) ஆகாயத்தில் ஒரு தடாகமும் இருக்கிறது[2]. ஓ! மன்னா, அங்கே தவசி அஸ்வசிரஸ் {ஹயக்ரீவர்} அழிவில்லாத வேதங்களை (எப்போதும்) படித்துக் கொண்டிருக்கிறார்.(3) அந்தத் தடாகத்தில் தூய்மைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்காணிக்கைகளை உரிய சடங்குகளுடன் காணிக்கையளித்த பிறகு நான் ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.(4) முனிவர்களான நரனும், நாராயணனும் அந்த ஆசிரமத்திற்குள் எப்போதும் தங்கள் நேரத்தை உண்மையான இன்பத்துடன் கடத்துகிறார்கள்[3]. அந்த இடத்தில் அருகிலேயே நான் வசிப்பதற்காக மற்றொரு ஆசிரமத்திற்குச் சென்றேன்.(5)

[1]  ரிஷபர் பிரம்ம சபையில் இருக்கும் ஒரு முனிவராக சபா பர்வம் பகுதி 12ல் குறிப்பு இருக்கிறது https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section12.html. இவர் ரிஷப மலையில் வசித்ததாக வன பர்வம் பகுதி 110ல் குறிப்பிருக்கிறது https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section110.html

[2] “இந்தத் தடாகம் இமயத்தில் பெரும் உயரத்தில் இருக்கிறது” எனக் கங்குலி விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “அவ்விடத்தில் அழகனா அந்தப் பதரீவிருக்ஷமும் (இலந்தைமரமும்) அவ்விதமே கங்காநதியைச் சேர்ந்த தடாகமும் இருக்கின்றன.

[3] “அந்த அழவில்லா தவசிகளின் ஆன்மாக்கள் உன்மையான இன்ப நிலையை அனுபவித்துக் கொண்டு அந்த ஆசிரமத்திலேயே எப்போதும் வசிப்பதாக நம்பப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அங்கே அமர்ந்திருந்த போது, மிக நெடியவரும், தோலாடையும் மரவுரியும் அணிந்திருப்பவரும், மெலிந்திருப்பவருமான ஒரு முனிவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். தவமெனும் செல்வத்தைக் கொண்ட அவர் தனு என்ற பெயரைக் கொண்டவராவார்.(6) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வேறு மனிதர்களை ஒப்பிடுகையில் அவரது {தனுவின்} உயரம் எட்டு மடங்கு பெரியதாகத் தெரிந்தது. ஓ! அரசமுனியே {சுமித்திரனே}, அவரது மெலிந்த உடலைப் பொறுத்தவரையில், அதபோன்றதொரு உடலை நான் இதுவரை கண்டதில்லை.(7) ஓ! மன்னா, அவரது உடல் ஒருவனின் சுண்டுவிரல் அளவுக்கு மெலிதாக இருந்தது. அவரது கழுத்து, கரங்கள், கால்கள் மற்றும் முடி ஆகியன இயல்புக்குமீறிய தன்மைகளுடன் இருந்தன.(8) அவரது தலையானது அவரது உடலின் அளவுக்குத் தகுந்ததாகவும், அவரது காதுகளும், கண்களும் அதே போலவும் இருந்தன. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அவரது பேச்சும், அசைவுகளும் பலவீனமாகவே இருந்தன.(9) மிக மெலிந்தவரான அந்தப் பிராமணரைக் கண்ட நான், உற்சாகத்தை இழந்தவனாகவும், அச்சமடைந்தவனாகவும் ஆனேன். அவரது பாதத்தை வணங்கிய நான், அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்றேன்.(10)



ஓ! மனிதர்களுள் காளையே {சுமித்திரா}, அவரிடம் என் பெயரையும், என் குடும்பத்தையும், என் தந்தையின் பெயரையும் அவருக்குச் சொன்னபிறகு, அவரால் குறிப்பிடப்பட்ட ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.(11) ஓ! ஏகாதிபதி, அப்போது, அறவோரில் முதன்மையானவரான தனு, அங்கே வசித்து வந்த முனிவர்களுக்கு மத்தியில் அறம் மற்றும் பொருள் சம்பந்தப்பட்டவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(12) அந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், படைகள் மற்றும் தன் வீட்டுப் பெண்மணிகள் ஆகியோரின் துணையுடன் கூடியவனுமான ஒரு மன்னன் வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் அந்த இடத்திற்கு வந்தான்.(13) அந்த மன்னனின் பெயர் வீரத்யும்னன் ஆகும். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், பெரும் குழைக் கொண்டவனாக இருந்தான். அவனுடைய மகனின் பெயர் பூரித்யும்னன் ஆகும். அந்தப் பிள்ளை தொலைந்து போகவும், உற்சாகமிழந்த அவனுடைய தந்தை, தொலைந்து போனவனைத் தேடிக் காடுகளில் அலைந்தபடியே,(14) “நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்! நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்” என்று நம்பிக்கொண்டே அந்தக்காலத்தில் அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(15)

அந்த மெலிந்த முனிவரிடம் பேசிய அவன், “உயர்ந்த அறவோனான என் மகனைக் கண்டுபிடிப்பது நிச்சயம் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஐயோ, அவன் என் ஒரே மகனாவான். தொலைந்து போன அவனை எங்கும் காண முடியவில்லை.(16) அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லையாயினும், கண்டுபிடித்துவிடுவோம் என்ற என்ற நம்பிக்கை {எதிர்பார்ப்பு} மிகப் பெரியதாக இருக்கிறது. உண்மையில் மரணத் தருவாயில் இருக்கும் நான், (தொடர்ந்து தவறினாலும்) அந்தத் நம்பிக்கையால் {எதிர்பார்ப்பால்} நிறைந்திருக்கிறேன்” என்றான்.(17)

மன்னின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், முனிவர்களில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, தலையைத் தொங்கவிட்டபடியே தியானத்தில் தம்மைப் புதைத்துக் கொண்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(18) தியானத்தில் புதைந்திருக்கும் அவரைக் கண்ட மன்னன், உற்சாகத்தைப் பெரிதும் இழந்தான். பெருந்துயரத்தில் மெதுவாகவும், மென்மையாகவும் பேசத் தொடங்கிய அவன்,(19) “ஓ! தெய்வீக முனிவரே, எது வெல்லப்பட முடியாதது? மேலும் எது நம்பிக்கையை விடப் பெரியது? ஓ! புனிதமானவரே, நான் கேட்பது முறையற்றதாக இல்லையென்றால் {முறையானதென்றால்}, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(20)

அதற்கு அந்த முனிவர் {தனு, மன்னன் வீரத்யும்னனிடம்}, “புனிதமான பெரும் முனிவர் ஒருவர் உன் மகனால் அவமதிக்கப்பட்டார். அவன் தன் தீயூழின் மூலமும், தன் மூட அறிவினால் உந்தப்பட்டும் அதைச் செய்துவிட்டான்.(21) அந்த முனிவர் உன் மகனிடம், ஒரு தங்கத்தாலான கொள்கலன் ஒன்றையும், மரவுரியையும் கேட்டார். உன் மகனோ அவமதிக்கும் வகையில், அந்தத் தவசியை நிறைவு செய்ய மறுத்தான்.(22) உன் மகனால் இவ்வாறு நடத்தப்பட்ட அந்தப் பெரும் தவசி ஏமாற்றமடைந்தார்” என்றார்.

இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், உலகம் அனைத்தாலும் வழிபடப்படும் அந்தத் தவசியை வழிபட்டான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அற ஆன்மா கொண்ட அந்த வீரத்யும்னன், நீ இப்போது இருப்பதைப் போலவே களைப்புடன் அங்கே அமர்ந்திருந்தான்.(23) பதிலுக்கு அந்தப் பெரும் முனிவரும், கானகவாசிகள் நோற்கும் சடங்குகளின்படி, மன்னனின் காலைக் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.(24) அப்போது, ஓ! மனிதர்களில் புலியே, துருவ நட்சத்திரத்தைச் சூழ்ந்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் போல அந்த மனிதர்களில் காளையைச் சுற்றிலும் முனிவர்கள் அனைவரும் அமர்ந்தனர்.(25) பிறகு அவர்கள், அந்த வெல்லப்பட முடியாத மன்னன் அந்த ஆசிரமத்திற்கு வந்ததற்கான காரணத்தை அவனிடம் கேட்டனர்” என்றார் {ரிஷபர்}.(26)

சாந்திபர்வம் பகுதி – 127ல் உள்ள சுலோகங்கள் : 26

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்