Showing posts with label சபா பர்வம். Show all posts
Showing posts with label சபா பர்வம். Show all posts

Sunday, October 13, 2019

சபா பர்வம் - கிண்டிலில்


கங்குலியின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சார்ந்து தமிழாக்கப்பட்டிருக்கும் இந்த சபா பர்வத்தில் சபா கிரியா, லோகபால சபாகயானம், ராஜசூய ஆரம்பம், ஜராசந்த வதம், திக்விஜயம், ராஜசூயீகம், அர்க்கியாஹரணம், சிசுபால வதம், தியூதம், அனுத்யூதம் என்ற பத்து உபபர்வங்களும், அவற்றில் 80 பகுதிகளும், 2708 ஸ்லோங்களும் இருக்கின்றன.

Thursday, September 11, 2014

ஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 13 -14

சபா பர்வம் பகுதி 13 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான். ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும்  கலகங்களிலும், அனைத்துவிதமான பயங்களில் இருந்தும் நாடு விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர். மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும்,  வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன. உண்மையில், உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, விஷம் அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ, அந்த நாட்டில் இல்லாதிருந்தது. திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section13.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



சபா பர்வம் பகுதி 14அ - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: இருப்பினும், தற்போது, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மன்னன் ஜராசந்தன், அவர்கள் அனைவரையும் விட வளமையில் அதிகரித்தும், பலத்தில் அதிகரித்தும், அனைத்து மன்னர்களுக்கும் தலைவனாகத் தன்னை நிறுவிக் கொண்டான். மேலும் ஜராசந்தன் பூமியின் மத்தியப் பகுதியை {மதுராவை} ஆட்சி செய்து நமக்குள் ஒற்றுமையின்மையைத் தோற்றுவிக்கிறான். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அந்த மன்னன் {ஜராசந்தன்}, மன்னர்களில் உயர்ந்த மன்னாக இருந்து, இந்த அண்டத்தின் ஆட்சியே அவனை மையப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அவன் {ஜராசந்தன்} மாமன்னன் {சக்கரவர்த்தி} என்று அழைக்கப்படக்கூடிய தகுதியுடன் இருக்கிறான். மேலும், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி படைத்த மன்னன் சிசுபாலன் {Sisupala}, அவனது {ஜராசந்தனின்} பாதுகாப்புக்குள் தன்னை நிறுத்திக் கொண்டு, அவனது {ஜராசந்தனது} படைகளுக்குத் தளபதியாகச் செயல்படுகிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


சபா பர்வம் பகுதி 14ஆ - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எங்களது பெரும் செல்வத்தைப் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக்கி, ஒவ்வொரு பகுதியையும் எளிதாக சுமந்து செல்லும்படியாக்கி, ஜராசந்தனுக்குப் பயந்து மதுராவை விட்டு எங்கள் மைத்துனர்களையும் உறவினர்களையும் அழைத்துக் கொண்டு ஓடினோம். அனைத்தையும் சிந்தித்து நாங்கள் மேற்கு நோக்கி ஓடினோம்.

மேற்கில் ரைவத மலைகளால் அலகங்கரிக்கப்பட்டிருந்த குசஸ்தலி {Kusasthali} என்ற அழகான நகரத்தை அடைந்தோம். அந்த நகரத்தில், ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, நாங்கள் எங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டோம். நாங்கள் அதன் கோட்டைகளை தேவர்களும் புகமுடியாதபடி மறுபடி கட்டினோம். அதன் உள் இருந்து பெண்கள் கூட சண்டையிடமுடியும் எனும் போது, அச்சமற்ற யாதவ வீரர்கள் எப்படிப் போரிடுவார்கள்? ஓ எதிரிகளைக் கொல்பவரே, நாங்கள் இப்போது அந்த நகரத்தில்தான் வாழ்கிறோம். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section14b.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Friday, August 22, 2014

ஆடியோ கோப்பு - சபா பர்வம் பகுதி 10 -12

சபா பர்வம் பகுதி 10 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும் , படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



சபா பர்வம் பகுதி 11 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த சபை விவரிக்க இயலாதது. நாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அது வேறு உருவை எடுக்கும். அதை வார்த்தைகளால் விவரிப்பது முடியாதது. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அதன் நீள அகலங்களையும், உருவத்தைக் குறித்துச் சொல்வதும் இயலாது. நான் அதுபோன்ற ஒன்றை என்றும் கண்டதில்லை. அதற்குள் இருப்பவர்கள் என்றும் மகிழ்ச்சியுடன் இருப்பர். அங்கே குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் ரம்மியமான சூழ்நிலை இருக்கும். பசி, தாகம், களைப்பு ஆகியவை அங்கு சென்றாலே காணாமல் போய்விடும். அந்தச் சபை பலவகைப்பட்ட பிரகாசமான ரத்தினங்களால் ஆனது. அது தூண்களால் தாங்கப்படுவதாகத் தெரியவில்லை. அது அழிவற்ற நிலைத்த தன்மை கொண்டது. அந்த சுய ஒளி கொண்ட மாளிகை, தனது பல எண்ணற்ற பிரகாசிக்கும் தன்மைகளாலும், ஒப்பற்ற பிரகாசம் கொண்ட தெய்வீகத்தன்மையாலும் சந்திரன், சூரியன், மற்றும் நெருப்பையே விஞ்சி நிற்கிறது. விண்ணுலகில் நிலைத்து, பகலை உண்டாக்குபவன் {சூரியனைப்} போல எரிந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் ஓ மன்னா, படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களுக்கும் பெருந்தகப்பன், மாயையினால் தன்னை உருவாக்கிக் கொண்டு அனைத்தையும் உருவாக்கி அங்கே நிரந்தரமாகத் தங்கியிருக்கிறார்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 


சபா பர்வம் பகுதி 12 - அசல் பதிவுக்குச் செல்ல


பதிவிலிருந்து சில வரிகள்: ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, உனது தந்தையின் {பாண்டுவின்} விருப்பத்தை நிறைவேற்று. நீ அந்த வேள்வியைச் செய்தாயானால், நீயும் உனது இறந்த முன்னோர்களுடன் சேர்ந்து இறவாதவர்கள் தலைவனின் {இந்திரனின்} பகுதியில் மகிழ்ச்சியுடன் இருப்பாய். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் தடைகளுக்குப் பிறகே அந்த வேள்வியைச் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வகை ராட்சசர்களான பிரம்ம ராட்சசர்கள் என்போர், இது போன்ற வேள்விகளைத் தடைசெய்ய எப்போதும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, அந்தப் பெரும் வேள்வியில் ஏதாவது குறையைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அது போன்ற ஒரு வேள்வியை நடத்துவதால் பெரும் போர் ஏற்பட்டு க்ஷத்திரிய குலமே உலகத்திலிருந்து அழியும் நிலை ஏற்படலாம். ஒரு சின்ன தடை கூட உலகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் சிந்தித்து, ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, உனது நன்மைக்கான செயலைச் செய்.

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, August 10, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 8 & 9

சபா பர்வம் பகுதி 8 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: அந்தச் சபா மண்டபத்தில், துக்கமோ, வயதால் ஏற்படும் பலவீனமோ, தாகமோ, பசியோ ஏற்படாது. ஏற்றுக் கொள்ள முடியாத எந்தப் பொருளுக்கும் அங்கே இடம் கிடையாது. எந்த வகையான தீய உணர்வுகளும் அங்கே எழாது. தேவர்களாலும், மனிதர்களாலும் விரும்பப்படும் அனைத்துப் பொருட்களும் அந்த மாளிகையில் உள்ளன. ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரனே}, இனிப்பான, நீர்த்தன்மையுள்ள, ஏற்புடைய, நக்கி, உறிஞ்சி, குடிக்கக்கூடிய ருசியான உணவு வகைகளும், சுவை மிகுந்த இன்பத்துக்குகந்த அனைத்துப் பொருட்களும் அபரிமிதமாக அங்கே இருக்கின்றன. அந்த மாளிகையை அலங்கரிக்கும் மலர் மாலைகளின் நறுமணம் அலாதியானது. அங்கே அந்த மண்டபத்தைச் சுற்றி நிற்கும் மரங்கள் விரும்பும் கனியைக் கொடுக்கவல்லவை. அங்கே இனிமையான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க குளிர்ந்த மற்றும் வெப்ப நீர்கள் உள்ளன. அந்த மாளிகையில் புனிதம் மிகுந்த அரச முனிகளும், தூய்மை மிகுந்த பிரம்ம முனிவர்களும் மகிழ்ச்சியுடன் காத்திருந்து, விவஸ்வத்தின் மகனான யமனை வழிபடுகின்றனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section8.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண



மேற்க்கண்ட வீடியோ கோப்பில் சபாபர்வப் பகுதியின் எண் தவறாக இருக்கிறது. இருப்பினும் அதில் உள்ள ஒலிப்பதிவு பகுதி 8 தான்.

எம.பி.3-ஆக பதிவிறக்க



சபா பர்வம் பகுதி 9 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: வருணனின் தெய்வீக சபை பிரகாசத்தில் இணையற்றதாக உள்ளது. அது நீள அகலங்களில் யம சபையைப் போன்றே உள்ளது. அதன் சுவர்களும், வளைவுகளும் தூய வெள்ளை நிறத்தில் உள்ளன. அது விஸ்வகர்மனால் (தேவ தச்சன்) நீருக்குள் கட்டப்பட்டது. அது சுற்றிலும் அற்புதமான கனிகளையும் மலர்களையும் கொடுக்கவல்ல தங்கத்தாலும் ரத்தினங்களாலும் ஆன மரங்களால் சூழப்பட்டுள்ளது. நீலமும் மஞ்சளும், கருப்பும் கருமையும், வெள்ளையும் சிவப்பும் ஆகிய நிறங்களில் பூங்கொத்துகள் மிகுந்து இருக்கும் பல மரங்கள் அங்கே இருந்தன. அந்த மரங்களில், பல வண்ணங்களில் அழகாக இருக்கும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள், தங்கள் இனிய இசையை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த மாளிகை குளிர்ச்சியாகவும் இல்லாமல், வெப்பமாகவும் இல்லாமல் மிகுந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலை கொண்டதாக இருந்தது. வருணனுக்குச் சொந்தமான அந்த சபா மண்டபத்தில் பல இருக்கைகளுடன் கூடிய, பல வெண்ணிற அறைகளும் இருக்கின்றன. அங்கே வருணன் தெய்வீக ஆடைகள் உடுத்தி, தெய்வீக ஆபரணங்களும், நகைகளும் பூண்டு, தெய்வீக வாசனைப் பொருட்களை மேனியில் தரித்து, தனது ராணியுடன் அமர்ந்திருக்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section9.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Wednesday, August 06, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 6 & 7

சபா பர்வம் பகுதி 6 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: தனது தம்பிகளுடனும், (தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும்) அந்தணர்களில் முதன்மையானவர்களுடனும் (பிரார்த்தனை செய்யும் வகையில்) கரங்கள் கூப்பினான். அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, நாரதரிடம், "அந்தச் சபாமண்டபங்களைக் குறித்து எங்களுக்கெல்லாம் விளக்குங்கள். நாங்கள் நீர் சொல்வதைக் கேட்க விரும்புகிறோம். ஓ அந்தணரே {நாரதரே}, எந்தப் பொருட்களைக் கொண்டு அந்த சபைகள் கட்டப்பட்டிருக்கின்றன? ஒவ்வொன்றின் பரப்பளவு என்ன? அவை ஒவ்வொன்றின் நீளங்களும் அகலங்களும் எவ்வளவு? பெருந்தகப்பனுக்காக அவரது சபாமண்டபத்தில் யார் காத்திருக்கிறார்கள்? {அவருக்கு சேவை செய்பவர்கள் யார்?}, தேவர்கள் தலைவன் வாசவனுக்காகவும் {இந்திரனுக்காகவும்} விவஸ்வானாவின் {சூரியனின்} மகன் யமனுக்காகவும் யார் காத்திருக்கிறார்கள்? வருணன் மற்றும் குபேரனுக்காக அவரவர் சபா மண்டபங்களில் யார் காத்திருக்கிறார்கள்? ஓ அந்தண முனிவரே {நாரதரே}, இவை எல்லாவற்றையும் எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அனைவரும் சேர்ந்து, நீர் விவரிப்பதைக் கேட்க விரும்புகிறோம். உண்மையில் எங்களது ஆவல் அதிகமாக இருக்கிறது", என்றான் யுதிஷ்டிரன். பாண்டுவின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட நாரதர் அவனுக்கு மறுமொழியாக, "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தெய்வீக சபா மண்டங்களைப் பற்றி ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். அனைவரும் கேளுங்கள்," என்றார் {நாரதர்}. see more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section6.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



சபா பர்வம் பகுதி 7 | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: பராசரர், பர்வதர், சவர்ணி, கலவா, சங்கா, யக்ஞவல்கியா பாலுகி, உத்யலகா, ஸ்வேதகேடு, தண்டியா, பாண்டாயணி, ஹவிஸ்மத், கரிஷ்டா, மன்னன் ஹரிச்சந்திரன்; ஹிருதியன், உதர்ஷண்டில்யா, பராசரியா, கிருஷிவலா, வதஸ்கந்தா, விசாகா, விதாதா, கலா, காராலதண்டா, தஸ்த்ரி, விஸ்வகர்மா, தும்புரு, மேலும் மற்ற முனிவர்கள், சிலர் பெண்கள் மூலம் பிறந்தவர்கள், மற்றவர்கள் காற்றின் மூலம் வாழ்பவர்கள், நெருப்பின் மூலம் வாழ்பவர்கள் ஆகியோர் இடியைத் தாங்கும் உலகங்களின் தலைவன் இந்திரனை சேவிக்கத் தயாராக நிற்கின்றனர். சகாதேவன், சுனிதன், பெரும் ஆன்மத் தகுதியுடைய வால்மீகி, உண்மை பேச்சு கொண்ட சமீகர், சத்தியங்களை நிறைவேற்றும் பிரசேதகர்கள், மேதாதிதி, வாமதேவர், புலஸ்தியர், புலாஹர், கிராது, மருதர், மரீச்சி, பெரும் ஆன்மத்தகுதியுடைய ஸ்தானு, காக்ஷிவத், கௌதமர், தார்கியர், வைஸ்ராவனா, காலகவ்ரிகிய முனிவர், அஸ்ரவ்யர், ஹிரண்மயர், சம்வர்த்தர், தேஹாவ்யர், பெரும் சக்தி கொண்ட விஸ்வக்ஷேனா, கண்வர், கத்யாயணா, ஆகியோரும் ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கர்கியா, கௌசிகா, ஆகியோர் அனைவரும், தெய்வீக நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள், நம்பிக்கைகள், புத்திசாலித்தனங்கள், கற்றலின் தேவதை, செல்வம், அறம், இன்பம், மின்னல் ஆகியவற்றுக்கு அதிபதிகளும் அங்கே இருந்தனர். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section7.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

-

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Monday, August 04, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5உ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5உ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: மன்னர்கள் ஆட்படக்கூடாத பதினான்கு{14} தீமைகளான நாத்திகம் {1}, பொய்மை {2}, கோபம் {3}, விழிப்பற்ற நிலை {அஜாக்கிரதை} {4}, காலம் கடத்துதல் {5}, ஞானமுள்ளோரை சந்திக்காமலிருத்தல் {6}, ஒன்றும் செய்யாது சும்மா இருத்தல் - சோம்பல் {Idle} {7}, மன அமைதியின்மை {ஐம்புலன்களுக்கு உட்படுதல்} {8}, ஒரே மனிதரிடம் {தான் மட்டும்} மட்டும் ஆலோசனை செய்வது {9}, பொருள் குறித்த அறிவியலை அறியாதவர்களிடம் ஆலோசனை பெறுவது {10}, ஒரு தீர்க்கப்பட்ட திட்டத்தைக் கைவிடுவது {11}, ஆலோசனையை ரகசியமாக வைத்துக் கொள்ளாது வெளிப்படுத்துதல் {12}, நன்மைக்கான மங்கள காரியங்களைச் செய்யாமை {13}, எதையும் சிந்திக்காமல் செய்வது {14} - ஆகியவற்றில் இருந்து நீ விடுபட்டு இருக்கிறாயா? ஓ மன்னா இவற்றால், ஏகாதிபதிகள் பாழடையாமல் தங்கள் அரியணையில் நிலைத்தும் இருப்பார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5e.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, August 03, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5ஈ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5ஈ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: நீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான {1}வேற்றுமையை அகற்றல், {2}பரிசளித்தல், {3}ஒற்றுமையின்மையை விளைவித்தல், {4} பலத்தைப் பிரயோகம் செய்வது போன்ற உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா? ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா? அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா? அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா? உனது படைகள், வழக்கமான துருப்புகள் {1}, கூட்டணி துருப்புகள் {2}, கூலிப்படையினர் {3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள் {4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள் {1}, யானைகள் {2}, குதிரைகள் {3}, அதிகாரிகள் {4}, காலாட்படை {5}, பணியாட்கள் {6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள் {7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர் {8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா? - See more at: http://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section5d.html

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Saturday, August 02, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 5இ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5இ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: உனக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் உனது காரியத்தைச் செய்யப்போய் துன்பத்துக்குள்ளானவரின் மனைவிமாரையும், பிள்ளைகளையும் தாங்கி வருகிறாயா? ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா? ஓ பூமியின் தலைவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களுக்கும் சமமானவனாக இருந்து, அவர்கள் எளிதாக பயமற்று, ஒரு தாயையோ அல்லது தந்தையையோ அணுகுவது போல உன்னை அணுகும் வகையில் நீ நடந்து கொள்கிறாயா?

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க

சபா பர்வம் ஒலிப்பதிவுகளுக்கான தனி பக்கத்திற்குச்செல்ல

http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

ஆடியோ கோப்பு - சபாபர்வம் 5ஆ | நாரதர் விசாரணை

சபா பர்வம் பகுதி 5ஆ | அசல் பதிவுக்குச் செல்ல

பதிவிலிருந்து சில வரிகள்: பாரத குலத்தில் வந்த காளையே {யுதிஷ்டிரா}, உனது நாட்டின் ஏழு{7} முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் சம்பாதித்த செல்வத்தால், சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன். உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா? அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா?

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Friday, August 01, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி5அ

சபா பர்வம் பகுதி 5அ | அசல் பதிவுக்குச் செல்ல

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Monday, July 28, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 4

சபா பர்வம் பகுதி 4

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section3.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Sunday, July 27, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் 3

சபா பர்வம் பகுதி 3

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section2.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Friday, July 25, 2014

ஆடியோ கோப்பு - சபாபர்வம் பகுதி 2 | முழு மஹாபாரதம்

சபா பர்வம் பகுதி 2

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




எம.பி.3-ஆக பதிவிறக்க 



http://mahabharatham.arasan.info/2014/07/Jeyalakshmi_Arun-Narrating-Sabhaparva-section1.html

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!

Wednesday, October 30, 2013

அந்தணர்கள் செய்த வேலைநிறுத்தம் - சபாபர்வம் பகுதி 80

Brahmanas on strike | Sabha Parva - Section 80 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 08)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் சென்ற பிறகு துயரத்தில் இருக்கும் திருதராஷ்டிரனிடம் சஞ்சயன் வருவது; திருதராஷ்டிரன் பாண்டவர்கள் குறித்த அச்சத்தை சஞ்சயனிடம் தெரிவிப்பது; சஞ்சயன் அனைத்துக்கும் காரணம் உமது மகனே என்று சொல்லுவது; சில காரியங்களை விதுரன் சொன்னதாக திருதராஷ்டிரன் சஞ்சயனிடம் சொல்வது...

Dhritarashtra and Sanjaya

வைசம்பாயனர் சொன்னார், "பகடையில் தோற்று பாண்டவர்கள் வனம் சென்ற பிறகு, ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் பெருந்துயரத்தில் மூழ்கினான்.(1) அவன் அமைதியற்றவனாகக் கவலையுடன் அமர்ந்து, துயரத்தால் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அப்போது சஞ்சயன் அவனை {திருதராஷ்டிரனை} அணுகி,(2) "ஓ பூமியின் தலைவா, பூமி முழுவதையும், அதன் செல்வங்களையும் அடைந்து விட்டீர்; பாண்டவர்களையும் நாடு கடத்திவிட்டீர்; இன்னும் ஏன் துயரத்தில் இருக்கிறீர்?" என்று கேட்டான்.

Tuesday, October 29, 2013

துரோணர் பயந்தாரா? - சபாபர்வம் பகுதி 79

Did Drona fear? | Sabha Parva - Section 79 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : விதுரன் பாண்டவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; தொடர்ந்து கெட்டசகுனங்கள் தோன்றுவது; நாரதர் தோன்றி பதினான்காம் வருடம் கௌரவர்கள் அழிவார்கள் என்று எச்சரிப்பது; துரியோதனன், கர்ணன், மற்றும் சகுனி ஆகியோர் துரோணரிடம் தஞ்சம் புகுவது; துரோணர் தன்னால் இயன்றவரை காப்பதாக உறுதியளிப்பது; திருதராஷ்டிரன் விதுரனிடம் மறுபடியும் பாண்டவர்களை அழைத்துவரும்படி சொல்வது...

Duryodhana, Karna, Sakuni and Drona

வைசம்பாயனர் சொன்னார், "பெரும் முன்னறியும் திறன் கொண்ட விதுரன் வந்தவுடன், அம்பிகையின் மகன் மன்னன் திருதராஷ்டிரன் தனது தம்பியிடம் {விதுரனிடம்},(1) "தர்மனின் மகன் யுதிஷ்டிரன் எப்படிச் சென்றான்? அர்ஜுனன் எப்படிச் சென்றான்? மாத்ரியின்மகன்களான அந்த இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} எப்படிச் சென்றனர்?(2) ஓ க்ஷத்தா {விதுரா} தௌமியர் எப்படிச் சென்றார்? சிறப்பு வாய்ந்த திரௌபதி எப்படிச் சென்றாள்? நான் அனைத்தையும் கேட்க விரும்புகிறேன். ஓ க்ஷத்தா, அவர்களது செயல்களை எனக்கு விளக்கிச் சொல்வாயாக" என்றான்.(3)

Sunday, October 27, 2013

குந்தியின் அழுகை | சபா பர்வம் - பகுதி 78

Kunti's lamentation | Sabha Parva - Section 78 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : திரௌபதி குந்தியிடமும் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை பெறுவது; குந்தி திரௌபதியைச் சமாதானப்படுத்தியது; பாண்டவர்களைக் கண்ட குந்தி துக்கம் கொண்டது; பாண்டவர்கள் குந்தியைச் சமாதானப்படுத்தியது, பாண்டவர்கள் கிளம்பியது; விதுரன் குந்தியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது; திருதராஷ்டிரன் விதுரைரை அழைத்தது...

Draupadi, Kunti

வைசம்பாயனர் சொன்னார், "பின்பு அனைவரும் புறப்படத் தயாரான போது, சிறப்புமிக்கப் பிருதையிடம் {குந்தியிடம்} சென்று திரௌபதி பிரியாவிடை கோரினாள். துயரத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை கோரினாள்.(1) தகுதியுடையவர்கள் அனைவரையும் வணங்கி, ஆரத்தழுவி செல்ல அவள் {திரௌபதி} விரும்பினாள். பின்னர் பாண்டவர்களின் அந்தப்புரத்திற்குள் இருந்து ஒப்பாரியும், அழுகையும் பேரொலியுடன் எழுந்தது.(2) அவர்கள் பயணப்படுவதற்கு முன்னர், திரௌபதியைக் கண்ட குந்தி, மிகவும் துன்புற்றவளாக, துயரத்தால் அடைபட்ட குரலுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.(3)

பாண்டவர்கள் வெளியேறினர் | சபா பர்வம் - பகுதி 77

The Pandavas went away | Sabha Parva - Section 77 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் அனைவரிடம் விடை பெறுதல்; விதுரன் குந்தி தன்னிடம் இருக்கட்டும் என்று கோருதல்; பாண்டவர்கள் சம்மதித்தல்; விதுரன் யுதிஷ்டிரனுக்கு நீதிகளைச் சொல்லல்; பாண்டவர்கள் வெளியேறுதல்...

Pandavas came out

யுதிஷ்டிரன், "எனது முதிர்ந்த பாட்டாவிடமும் {பீஷ்மரிடமும்}, மன்னர் சோமதத்தரிடமும், பெரும் மன்னன் பாஹ்லீகரிடமும்,(1) துரோணர், கிருபர் ஆகியோரிடமும், அனைத்து மன்னர்களிடமும், அஸ்வத்தாமன், விதுரர், திருதராஷ்டிரர் மற்றும் திருதராஷ்டிரரின் அனைத்தும் மகன்களிடமும்,(2) யுயுத்சு, சஞ்சயன், மற்றும் சபையோர் அனவரிடமும் நான் பிரியாவிடையைக் கோருகிறேன். நான் அனைத்து பாரதர்களிடமும் பிரியாவிடை கோருகிறேன். நான் திரும்பி வந்து உங்கள் அனைவரையும் காண்பேன்" என்றான்".(3)

நகுலனும் சபதமேற்றான் | சபா பர்வம் - பகுதி 76

The vow of Nakula | Sabha Parva - Section 76 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : துச்சாசனன் பாண்டவர்களைப் பார்த்து எள்ளி நகையாடி, திரௌபதியிடம் தங்களுள் ஒருவரைக் கணவனாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லல்; பீமன் கோபம் கொள்ளுதல்; துரியோதனனின் நையாண்டி; பீமன் சபதத்தை உரக்கச் சொல்லல்; அர்ஜுனன் சபதமேற்றல்; சகாதேவன் பீமனின் சபதத்தை உறுதி கூறல்; நகுலன் சபதம் ஏற்றல்; பிறகு பாண்டவர்கள் திருதராஷ்டிரனை அணுகுதல்...


வைசம்பாயனர் சொன்னார், "பிறகு {பகடை ஆட்டத்தில்} தோல்வியுற்ற பிருதையின் {குந்தியின்} மகன்கள், வனவாசத்துக்குத் தயாரானார்கள். அவர்கள் {பாண்டவர்கள்} ஒருவர் பின் ஒருவராக, முறையான வரிசையில் தங்கள் அரச உடுப்புகளைக் களைந்து மான் தோல் உடுத்தினர்.(1) மான் தோல் உடுத்தப்பட்டு நாட்டை இழந்து, நாடு கடத்தலுக்குத் தயாராக இருந்த அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களைக் கண்ட துச்சாசனன்,(2) "சிறப்புவாய்ந்த மன்னன் துரியோதனனின் முழு அரசாட்சி நடக்கத் தொடங்கிவிட்டது. பாண்டுவின் மகன்கள் வெற்றிகொள்ளப்பட்டு, பெரும் துயரத்தில் மூழ்கினர்.(3) அகலமான அல்லது குறுகலான பாதைகளில் சென்று எங்கள் குறிக்கோளை நாங்கள் அடைந்துவிட்டோம். இன்று நாங்கள் எங்கள் எதிரிகளைவிட செல்வத்திலும், அனைத்திலும் மேன்மையடைந்தோம்.(4) எங்கள் அரசாட்சி காலமும் மனிதர்கள் போற்றுதலுக்குரிய வகையில் இருக்கிறது. பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும் நிலைத்த நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். அவர்கள் காலாகாலத்துக்கும் நாட்டையும் மகிழ்ச்சியையும் இழந்துவிட்டனர்.(5) செல்வத்தில் செருக்கு கொண்டு, திருதராஷ்டிரன் மகனை {துரியோதனனை} ஏளனம் செய்து சிரித்தவர்கள், இப்போது தோல்வியுற்று, தங்கள் செல்வத்தையெல்லாம் இழந்து கானகத்திற்கு செல்ல வேண்டியவர்களானார்கள்.(6)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்