Thursday, September 12, 2013

நாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5இ

The enquiry of Narada | Sabha Parva - Section 5c | Mahabharata In Tamil


(லோகபால சபாகயானா பர்வம்)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண





"நாரதர் சொன்னார், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, உனது எதிரிகளை அவர்களுக்குத் தெரியாமல் கவனத்துடன் கண்காணித்து வருகிறாயா? உன்னால் மதிக்கப்படும் உனது புரோகிதர், எளிமையும், சுத்தமான இரத்தமும், புகழ் கொண்டவருமாக இருந்து, பொறாமை அற்றவராகவும், தாராளத்தன்மை அற்றவராகவும் இருக்கிறாரா? கட்டளை இடும் அளவுக்கு உயர்ந்த அந்தஸ்தில், நன்னடத்தையுள்ள, புத்திசாலியான, வஞ்சனை அற்ற ஒரு அந்தணனை, நெருப்பு முன்பான உனது தினசரி சடங்குகளுக்காக நியமித்திருக்கிறாயா? அவர் சரியான நேரத்தில் எப்போதெல்லாம் ஹோமங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்கிறாரா? நீ நியமித்திருக்கும் சோதிடர் பொருள்களின் பொது அமைப்பை அறியும் திறன் வாய்ந்தவரா? சகுனங்களை அறிந்து சொல்லத்தக்கவரா? இயற்கைத் தடங்கல்களை சமன்படுத்தவல்ல தகுதி வாய்ந்தவரா?


மதிப்புமிக்க அலுவல்கள் நடைபெறும் இடங்களில், மதிப்புக்குரிய வேலையாட்களை நியமித்திருக்கிறாயா? அலட்சியமான அலுவல்களில் அலட்சியமானவர்களையும், கீழ்மையான அலுவல்களில் கீழ்மையானவர்களையும் நியமித்திருக்கிறாயா? உயர்ந்த அலுவல்களில் வஞ்சனையற்றவர்களாகவும், பரம்பரை பரம்பரையாக நன்னடைத்தைக்குப் பேர் போன குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவும், இயல்பானவர்களுக்கு மேலான குணம் கொண்டவர்களாகவும் இருக்கும் அமைச்சர்களை நியமித்திருக்கிறாயா? உனது மக்களை கடுமையான மற்றும் கொடூரமான தண்டனைகள் கொடுத்து தண்டிக்காமல் இருக்கிறாயா?

மேலும், ஓ! பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்கள் உனது கட்டளையின் பேரிலேயே நாட்டை ஆள்கிறார்களா? வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் சில வீழ்ந்த மனிதர்களிடம் லேசாகச் {மேலும் அவர்களால் வேள்விகளைச் செய்ய இயலாதவர்கள் என்று} சொல்வது போலவும், அல்லது கர்வம் கொண்ட கணவர்களை மனைவிகள் லேசாக எடுத்துக் கொண்டு அவமதித்து தன்னடக்கமற்றவர்களாக இருப்பது போல உனது அமைச்சர்கள் உன்னை அவமதிக்காமல் இருக்கின்றனரா?

உனது படைகளின் தளபதி, போதுமான நம்பிக்கையும், வீரமும், புத்திசாலித்தனமும், அமைதியும், நன்னடத்தையும், கொண்டு நல்ல பிறப்பாகப் பிறந்து, உனக்கு அர்ப்பணிப்புடன் இருந்து, தகுதி வாய்ந்தவனாக இருக்கிறானா? அனைத்து வகையிலும் திறன்வாய்ந்த, நன்னடத்தையுள்ள, பெரும் வீரம் கொண்ட உனது படையின் தலைமை அதிகாரிகளை மரியாதையுடன் கருதியும், நடத்தியும் வருகிறாயா? உனது படைகளுக்குத் தேவையான சலுகைகளையும், ஊதியத்தையும் குறித்த நேரத்தில் கொடுத்துக் கொண்டிருக்கிறாயா? இவற்றை {சலுகை + ஊதியம்} கொடுக்காதிருந்து அவர்களை ஒடுக்காமல் இருக்கிறாயா? ஊதியத்தை நிலுவையில் வைப்பதாலும், சலுகைகளை முறையான, குறித்த நேரங்களில் கொடுக்காமல் நினைத்த நேரங்களில் கொடுத்துக் கொண்டிருந்தாலும், படைகளைக் கலகம் செய்ய வைக்கும் என்றும், இதுவே தீமைகளில் பெரும் தீமை என்று கற்றவர்கள் கருதுகிறார்கள் என்பதையும் அறிந்திருக்கிறாயா?

உயர் குடி மனிதர்களில் பெரும்பாலானவர்கள் உன்னிடம் அர்ப்பணிப்புடனும், போரில் உனக்காக தங்கள் உயிரைக் கொடுக்க தாயாராகவும் இருக்கிறார்களா? படையைப் பொறுத்தவரை எந்தக் கட்டுப்பாடும் இல்லாத ஒருவன் தான் நினைத்தவாறு உத்தரவிட்டுக்கொள்ள நீ அனுமதிக்காமல் இருக்கிறாயா?

உனது பணியாட்களில் யாராவது, தனித்திறமையுடன் ஒரு சாதனையைச் செய்த பிறகு, உன்னிடம் கூடுதல் மரியாதையாக கூடுதல் உணவையும் கூடுதல் ஊதியத்தையும் அடைவதில் ஏமாற்றம் கொள்ளாமல் இருக்கின்றனரா? கற்ற எளிமையானவர்களையும், அனைத்து வகை அறிவிலும், நிபுணத்துவம் வாய்ந்தவர்களையும் சரியானபடி செல்வங்களைப் பரிசளித்தும், அவரவர் தகுதிக்கேற்ப மரியாதை கொடுத்தும் கௌரவித்து வருகிறாய் என நான் நம்புகிறேன்.

ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரனே}, உனக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்தவர்கள் மற்றும் உனது காரியத்தைச் செய்யப்போய் துன்பத்துக்குள்ளானவரின் மனைவிமாரையும், பிள்ளைகளையும் தாங்கி வருகிறாயா?

ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, போரில் உன்னால் வீழ்த்தப்பட்ட எதிரி, பலவீனப்பட்டோ அல்லது உனது பாதுகாப்பை நாடியோ வந்தால், அவனை தந்தையின் பாசத்துடன் பேணிப் பாதுகாக்கிறாயா?

ஓ! பூமியின் தலைவனே {யுதிஷ்டிரனே}, அனைத்து மனிதர்களுக்கும் சமமானவனாக இருந்து, அவர்கள் எளிதாக பயமற்று, ஒரு தாயையோ அல்லது தந்தையையோ அணுகுவது போல உன்னை அணுகும் வகையில் நீ நடந்து கொள்கிறாயா?

ஓ! பாரதகுலத்தின் காளையே,  உனது எதிரியின் துயரைக் கேட்டவுடன், நேரத்தைக் கடத்தாமல் உனது முப்படைகளையும் நினைத்துப் பார்த்து, அவற்றை அங்கே நடத்திச் செல்கிறாயா? ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, நேரம் வந்ததும், அனைத்து சகுனங்களையும் கண்டு, அவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு தீர்மானத்துக்கு வந்து, வெற்றியை அளிக்கும் பனிரெண்டு மண்டலங்களையும் {சேமிப்பு, மறைவிடம், போன்றவையும் படைவீரர்கள் ஊதியத்தை முன்பணமாகக் கொடுத்தல் ஆகியவையும்} குறித்துக் கொண்டு படைகளை நடத்துகிறாயா?

----------------- நாரதரின் விசாரணை -சபாபர்வம் பகுதி 5ஈ யில் தொடர்கிறது.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்