Sunday, September 15, 2013

குபேர சபை! - சபாபர்வம் பகுதி 10

The Sabha of Kuvera! | Sabha Parva - Section 10 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : குபேரனின் சபா மண்டபம் எப்படி இருக்கும் என்பதை யுதிஷ்டிரனுக்கு நாரதர் விவரிப்பது…

நாரதர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, வைஸ்ராவணனின் {குபேரனின்} சபாமண்டபம், நூறு யோஜனை நீளத்துடனும், எழுபது யோஜனை அகலத்துடனும் பிரகாசத்துடன் இருக்கிறது.(1) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அது வைஸ்ரவணனின் ஆன்ம சக்தியாலேயே கட்டப்பட்டது. கைலாய மலைச் சிகரங்களின் பிராகாசத்துடன் இருக்கும் அந்த மாளிகை, தனது சுய கிரகணங்களினால் சந்திரனின் பிராகசத்துடன் இருக்கிறது.(2) குஹ்யர்களால் தாங்கப்படும் அந்த மாளிகை வானமண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. தெய்வீகத் தயாரிப்பான அது, தங்கத்தாலான உயர்ந்த அறைகளுடன் அழகாக இருக்கிறது.(3) எல்லையற்ற மகிழ்ச்சியுடன் தெய்வீக வாசனைத் திரவியங்களின் நறுமணம் கமழ, வண்ணமயமான விலையுயர்ந்த நகைகளுடன் இருக்கிறது. காற்றில் மிதந்து வரும் மலைக்குன்றுகள் போல இருக்கும் வெண்ணிற மேகங்களுக்கு ஒப்பானதாக அஃது இருக்கிறது.(4) தெய்வீகத் தங்க நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு, அது மின்னல் கீற்றுகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாளிகைக்குள், மேலே தெய்வீக விரிப்புகள் விரிக்கப்பட்டு, கால் வைக்க அழகான கால்மனையுடன் கூடிய, சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருக்கும் ஆசனம் ஒன்று இருந்தது. ஏற்றுக்கொள்ளும் உருவத்துடன் இருந்த வைஸ்ராவணன் {குபேரன்}, அருமையான உடுப்புகள் உடுத்தி, விலையுயர்ந்த ஆபரணங்கள் பூண்டு, பிரகாசிக்கும் காது குண்டலங்களுடன், தனது ஆயிரம் {1000} மனைவியரால் சூழப்பட்டு அந்த ஆசனத்தில், அமர்ந்திருக்கிறான்.(5,6)

மந்தர மலையில் இருந்து காடுகள் வழியாக முணுமுணுத்துக் கொண்டு அங்கு வரும் அருமையான குளிர்ந்த தென்றல், கூடவே தோட்டங்களில் இருந்த மல்லிகை மணத்தையும், அலகை நதியில் மார்பில் வீற்றிருக்கும் தாமரைகளின் மணத்தையும், யக்ஷர்களின் மன்னனின் நந்தனத் தோட்டத்தின் மணத்தையும் தாங்கிக் கொண்டு வருகிறது.(7,8) அங்கே கந்தர்வர்களுடன், தேவர்களும், பல இனங்களில் இருந்த வந்த அப்சரஸ்களும், ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தெய்வீக இனிமை கொண்ட பாடல்களைக் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(9) மிச்ரகேசி, ரம்பை, சித்ரசேனை, சுசிஸ்மிதை, சாருநேத்ரை, கிரிடச்சி {கிருதாசி}, மேனகை, புஞ்சிகஸ்தலை, விச்வாசி, சஹஜன்யை, பிரம்லோசை, ஊர்வசி, இரை, வர்க்கை, சௌரபேயி, சமீசி, புத்புதை, லதை போன்றோரும்,(10,11) இசையிலும் ஆடல்களிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஆயிரக்கணக்கான அப்சரஸ்களும் கந்தர்வர்களும் அங்கே கருவூலத் தலைவன் {பொக்கிஷத் தலைவன்} குபேரனுக்கு பணி செய்கின்றனர்.(12) பல்வேறு கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ் இனங்களின் கருவிகள் {இசைக் கருவிகள்} மற்றும் இனிமையான குரலால் அந்த மாளிகை எப்போதும் நிறைந்து இருக்கிறது.(13)

கின்னரர்கள் என்று அழைக்கப்பட்ட கந்தர்வர்களும், நரர்கள் என்று அழைக்கப்பட்ட மற்றவர்களும், மாணிபத்ரன், தனதன், ஸ்வேதபத்ரன், குஹ்யகன், கசேரகன், கண்டகண்டு, பெரும் பலம் வாய்ந்த பிரத்யோதன், குஸ்தும்புரு, பிசாசன், கஜகர்ணன், விசாலகன், வராஹகர்ணன், தாம்ரோஷ்டகன், பல்கக்ஷன், பலோதகன், ஹம்ஸசூடன், சிக்ஷவர்த்தன் {சிகாவர்த்தன்}, {ஹேமநேத்ரன்}, விபீஷணன், புஷ்பானனன், பிங்களகன், சோணிதோதன், பிரபாலகன், விருக்ஷவாஸி நிகேதன், சீரவாசஸ் {சீரவாஸன்} ஆகியோரும், ஓ பாரதா {யுதிஷ்டிரா}, பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான யக்ஷர்களும் குபேரனுக்காகக் காத்திருக்கின்றனர்.(14-18) தெய்வீகமான லட்சுமி தேவி அங்கேயே தங்கியிருக்கிறாள். குபேரனின் மகன் நளகுபேரனும் அங்கேயே தங்கியிருக்கிறான். நானும் {நாரதர்}, என்னைப் போன்றோரும் அங்கே அடிக்கடி சென்று வருவோம்.(19)

என்னால் பெயர் சொல்லப்படாத பல ராட்சசர்களும், பல கந்தர்வர்களும் அந்த மாளிகையில் காத்திருந்து அந்த கருவூலத் தலைவனை {குபேரனை} வழிபடுகின்றனர். மேலும், ஓ மன்னர்களின் புலியே {யுதிஷ்டிரா}, உமையின் சிறப்புவாய்ந்த கணவனும், படைக்கப்பட்ட அனைத்து பொருட்களுக்கும் தலைவனுமான திரிசூதலத்தைத் தாங்கி பாகநேத்ரன் என்ற அசுரனைக் கொன்றவனும், கடுமையான வில்லைக் கொண்ட வலிமை மிக்க தெய்வமுமான முக்கண் மகாதேவன் {சிவன்}, குள்ளமான உருவம் கொண்டவையாக சிலவும், கடுமையான முகம் கொண்டவையாக சிலவும், கூன் முதுகு கொண்டவையாக சிலவும், சிவந்த கண்கள் கொண்டவையாக சிலவும், பயங்கர ஓலமிடும் சிலவும், கொழுப்பையும் சதையையும் {இறைச்சியையும்} உண்ணும் சிலவும், காண்பதற்கு பயங்கரமான சிலவும் என நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஆவிகளால் சூழப்பட்டு, பலவகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, காற்றின் {வாயு} வேகம் கொண்டு, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண் தெய்வத்துடன் {பார்வதியுடன்}, களைப்பறியாது, அங்கே தனது நண்பனான கருவூலத் தலைவன் குபேரனுக்காகக் காத்திருக்கிறான்.(20-24)

மேலும், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் நூற்றுக்கணக்கான கந்தர்வத் தலைவர்களும், தங்களுக்குரிய ஆடைகளுடன் விசுவாவசு, ஹாஹா, ஹூஹூ,(25) தும்புரு, பர்வதன், சைலூஷன், இசையில் நிபுணனான சித்திரசேனன், சித்திரரதன் ஆகியோரும், எண்ணிலடங்கா கந்தர்வர்களும் அங்கே கருவூலத் தலைவனை {குபேரனை} வணங்கி நிற்கின்றனர். வித்யாதரர்களின் தலைவனான சக்ரதாமன், தன்னைத் தொடர்பவர்களுடன் சேர்ந்து(26,27) அந்த மாளிகையில் கருவூலத் தலைவனுக்காகக் {குபேரனுக்காகக்} காத்திருக்கிறான்.(28) மேலும், நூற்றுக்கணக்கான கின்னரர்களும், பகதத்தனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட எண்ணிலடங்கா மன்னர்களும், கிம்புருஷர்களின் தலைவனான துருமனும், ராட்சசர்களின் தலைவனான மகேந்திரனும், யக்ஷர்களுடனும் கந்தர்வர்களுடனும் கூடிய கந்தமாதனனும், பல ராட்சசர்களும் அங்கே கருவூலத் தலைவனுக்காகக் {குபேரனுக்காகக்} காத்திருக்கின்றனர்.(29,30) அறம் சார்ந்த விபீஷணனும் அங்கே தனது மூத்த தமையனான தலைவன் குபேரனை (Croesus[1] என்கிறார் கங்குலி) வழிபட்டு நிற்கிறான். இமயத்தில் இருக்கும் மலைகளும் {ஹிமாலயம்}, பாரிபாத்திரம் {பாரியத்ரம்}, விந்தியம், கைலாஸம், மந்தரம்,(31) மலயம், துர்துரம், மஹேந்திரம், கந்தமாதனம், இந்திரகீலம், சுனாபம் ஆகிய மலைகளும், மேலும் கிழக்கு மற்றும் மேற்கிலிருக்கும் {கிழக்கு மற்றும் மேற்குத் தொடர்ச்சி} மலைகளும்,(32) இன்னும் பல மலைகளும் உருவம் கொண்டு, மேருவைத் தங்கள் அனைவரின் முன்பும் நிறுத்தி, சிறப்புமிகுந்த கருவூலத் தலைவனுக்காகக் காத்திருந்து வழிபட்டு வருகின்றன.(33)


[1] கிரோயீசஸ் என்பவன் லிடியா {இன்றைய துருக்கி} என்ற நாட்டை ஆண்டவன் என்றும் கிரேக்க மற்றும் பாரசீக பண்பாட்டில் அவனது பெயர் வசதியான செல்வந்தனைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது என்றும் விக்கிப்பீடியா சொல்கிறது.

சிறப்பு மிகுந்த நந்தீஸ்வரன் {நந்திகேசுவரர்}, மஹாகாலன் மற்றும் அம்பு போன்ற காதுகளும், கூரிய வாய்களும் கொண்டு பல ஆவிகளும், காக்ஷன் {காஷ்டன்}, குடீமுகன், தந்தி, பெரும் ஆன்மத்தகுதியுடைய விஜயன், சிவனின் வாகனமான ஆழ்ந்த கர்ஜனை செய்யும் பெரும்பலம் வாய்ந்த காளை, {தபோதிகன், சங்குகர்ணன்} ஆகிய அனைவரும் அந்த மாளிகையில் காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் தவிர்த்து, மற்ற பல ராட்சசர்களும், பிசாசங்களும் (பேய்களும்) அந்தச் சபாமண்டபத்தில் குபேரனை வழிபட்டு நிற்கின்றனர். முன்னதாக அந்த புலஸ்தியரின் மகன் (குபேரன்) தேவர்களுக்குத் தேவன், மூன்று உலகைப் படைத்தவனான, பணியாட்களால் சூழப்பட்ட அந்தத் தலைமைத் தேவனான சிவனைப் பல வகைகளில் வணங்கி, அவனது உத்தரவு பெற்ற பிறகு அமர்ந்து கொள்கிறான். மேன்மையான பவன் {சிவன்} ஒரு நாள் குபேரனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டான். அந்த நாளில் இருந்து, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தனது நண்பனான கருவூலத் தலைவனுடன் {குபேரனுடன்} எப்போதும் மகாதேவன் {சிவன்} அமர்ந்து வருகிறான்.(34-38) ரத்தினங்களில் சிறந்தவர்களும், மூவுலகங்களிலும் உள்ள அனைத்து ரத்தினங்களின் இளவரசர்களான சங்கனும் பத்மனும், உருவம் கொண்டு, பூமியிலுள்ள அனைத்து ரத்தினங்களுடன் அங்கே குபேரனை வழிபட்டு வருகின்றனர்.(39)

வான மண்டலத்தில் இணைக்கப்பட்டு, நினைத்த இடத்திற்கும் நகரும் தன்மையுள்ள, மகிழ்ச்சி நிறைந்த குபேரனின் சபாமண்டபத்தை, நான் இப்படியே பார்த்திருக்கிறேன். இனி பெருந்தகப்பனான பிரம்மனின் சபையைக் குறித்துச் சொல்கிறேன்" {என்றார் நாரதர்}.(40)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்