Thursday, September 19, 2013

ஆலோசனைகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? - சபாபர்வம் பகுதி 13

Types of counsels! | Sabha Parva - Section 13 | Mahabharata In Tamil

(லோகபால சபாகயானா பர்வம் - 09)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் ராஜசூய வேள்வி செய்வது குறித்து தனது தம்பிகளுடனும், நண்பர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசிப்பது; அமைச்சர்கள் வேள்வியை நடத்துமாறு ஆலோசனை வழங்குவது; யுதிஷ்டிரன் மறுபடி மறுபடி சிந்திப்பது; இக்காரியத்தில் கிருஷ்ணனின் முடிவை ஏற்பது எனத் தீர்மானிப்பது; துவாரகைக்குத் தூதுவரை அனுப்பவது; கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தத்தை அடைவது; யுதிஷ்டிரன் கிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்பது...

வைசம்பாயனர் சொன்னார், "நாரதரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன் கடுமையாக பெருமூச்சு விட ஆரம்பித்தான். ஓ பாரதா {ஜனமேஜயா}, ராஜசூயத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால், அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} மன அமைதியை இழந்தான்.(1) அந்தச் சிறப்பு வாய்ந்த (பழங்காலத்தின்) ஏகாதிபதிகளின் புகழைக் கேள்விப்பட்டும், வேள்விகள் செய்பவர்களும், புனித காரியம் செய்பவர்களும் வற்றாத இன்பம் உள்ள பகுதிகளை அடைவார்கள் என்பதில் உறுதி கொண்டான். குறிப்பாக, அந்த வேள்வியை {ராஜசூய வேள்வியைச்} செய்த அரசமுனி ஹரிச்சந்திரனை நினைத்துப் பார்த்த மன்னன் யுதிஷ்டிரன், ராஜசூய வேள்விக்கான தயாரிப்புகள் செய்ய விரும்பினான்.(2,3) பிறகு தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்}, அந்தச் சபையில் இருந்தவர்களையும் வணங்கி, அவர்களால் வணங்கப்பட்டு வேள்வி குறித்த விவாதங்களில் ஈடுபட்டான்.(4) அதிகமாக சிந்தித்த அந்த மன்னர்களின் மன்னன் {யுதிஷ்டிரன்}, அந்த குருக்களின் காளை, ராஜசூயத்துக்கான தயாரிப்புகளில் தனது மனத்தை ஈடுபடுத்தினான்.(5)

இருப்பினும், அற்புதமான வீரமும், சக்தியும் கொண்ட இளவரசன் {யுதிஷ்டிரன்}, அறம் மற்றும் நீதியை நினைத்துப் பார்த்து, மக்களுக்கு எது நன்மையைத் தரும் என்ற ஒரு முடிவுக்கு வர தனது இதயத்தை நிலைக்க வைத்தான்.(6) அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையான யுதிஷ்டிரன் தனது குடிமக்களிடம் அன்போடு இருந்தான்.(7) எந்த வேறுபாடுகளும் பார்க்காமல் அனைத்து மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டான். கோபத்தையும் கடுமையையும் தவிர்த்த யுதிஷ்டிரன் எப்போதும், "ஒவ்வொருவருக்கும் எது கொடுக்கப்பட வேண்டுமோ, அதை ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும்" என்று சொல்வான். "அறம் {தர்மம்} அருளப்பட்டிருக்கட்டும், அறமும் யுதிஷ்டிரனும் அருளப்பட்டிருக்கட்டும்" என்பவை மட்டுமே அவன் கேட்கக்கூடிய ஒலிகளாக இருந்தன.(8) யுதிஷ்டிரன் தன்னை அப்படி வழிநடத்திக் கொண்டு, பகை வளர்த்தலை ஆதரிக்கும் எவரும் அந்த நாட்டில் இல்லாதவாறு அனைவருக்கும் ஒரு தகப்பன் கொடுக்கும் உறுதியைக் கொடுத்தான். அதனாலேயே அவன் {யுதிஷ்டிரன்} அஜாதசத்ரு (எதிரிகள் இல்லாதவன்) என்று அழைக்கப்பட்டான்.(9)

அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, அனைவரையும் தனது குடும்பத்தில் ஒருவரைப் போலப் பாதுகாத்தான். பீமன் அனைவரையும் நீதியுடன் ஆண்டான். அர்ஜுனன் தனது இரு கரங்களையும் பயன்படுத்தி, மக்களை (வெளிப்புற/ வெளிநாட்டு) எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தான்.(10) ஞானம் கொண்ட சகாதேவன் நடுநிலையாக {பாரபட்சம் இல்லாமல்} நீதியுடன் நிர்வாகம் செய்தான். நகுலன் அனைவரிடமும் பணிவான தனது இயற்கை குணத்துடன் நடந்து கொண்டான். மேற்கண்ட அனைத்துக் காரணங்களாலும் நாடு கலகங்களிலும், அனைத்துவிதமான அச்சங்களில் இருந்தும் விடுபட்டது. அனைத்து மக்களும் தங்களுக்குரிய தொழிலில் கவனம் செலுத்தினர்.(11) மேலும் வேண்டும் என்று விரும்பாத அளவுக்கு மழை நிறைந்திருந்தது. நாடும் வளமையில் வளர்ந்தது. மன்னனின் அற ஒழுக்கத்தால், கடன் கொடுப்பவர்களும், வேள்விக்குத் தேவையான பொருட்களும், கால்நடை வளர்த்தலும், உழுதலும், வணிகமுமான அனைத்துத் தொழில்களும் வளம் பெற்றன.(12) உண்மையில் வாய்மைக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சிகாலத்தில், அச்சுறுத்திப் பணம் பறித்தலோ, வாடகை பாக்கிக்காகத் துன்புறுத்துதலோ, நோய், நெருப்பு, நஞ்சு அல்லது மந்திரத்தால் உண்டாகும் மரணத்தைக் குறித்த பயமோ அந்த நாட்டில் இல்லாதிருந்தது.(13) திருடர்களோ, ஏமாற்றுப் பேர்வழிகளோ, அரசுகுல நண்பர்கள் மன்னனிடமோ அல்லது தங்களுக்குள்ளோ தவறாக நடந்து கொண்டார்கள் என்று, யாரும் எப்போதும் கேள்விப்படவில்லை. ஆறு சந்தர்ப்பங்களில் {போர், ஒப்பந்தம் போன்றவை மூலம்} கைப்பற்றப்பட்ட மன்னர்கள், அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} எப்போதும் நன்மை செய்ய காத்திருந்தனர். பல வகைப்பட்ட வணிகர்கள் தாங்கள் செய்த தொழிலுக்கு ஏற்றவாறு கட்டவேண்டிய வரியை சரியாகக் கட்டி வந்தனர். அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த யுதிஷ்டிரனின் ஆட்சியில் அவனது நாடு பெரும் வளமையை அடைந்தது.(14-16) உண்மையில், நாட்டின் வளமை இவற்றால் மட்டும் வளராமல், சிற்றின்பப் பற்றுள்ளவர்களாலும், நிறைவான இன்பங்களில் ஈடுபட்டு வந்தவர்களாலும் கூட அதிகரித்தது. மன்னர்களுக்கு மன்னன் யுதிஷ்டிரன் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தி, அனைத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு, அனைத்து சாதனைகளையும் சாதித்தான்.(17) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்தக் கொண்டாடப்பட்ட சிறப்பு மிகுந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} எந்தெந்த நாடுகளை எல்லாம் கைப்பற்றினானோ, அந்தந்த நாடுகளில் பிராமணர்களில் இருந்து குடியானவன் வரை, அனைவரும் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்} தங்கள் தந்தையிடமும் தாயிடமும் உள்ள பிணைப்புடன் இருந்தனர்".(18)

வைசம்பாயனர் சொன்னார், "வாக்கில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், தனது ஆலோசகர்களையும் {அமைச்சர்களையும்} தம்பிகளையும் அழைத்து அவர்களிடம் ராஜசூய வேள்வி குறித்துத் தொடர்ந்து கேட்டான்.(19) வேள்வி செய்ய விரும்பிய ஞானமுள்ள யுதிஷ்டிரனிடம் அந்த அமைச்சர்கள் இயல்பான வார்த்தைகளைக் கூறினர். அவர்கள் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(20) "ஏற்கனவே நாட்டை அடைந்திருக்கும் ஒருவன், மாமன்னர்களுக்கு {சக்ரவர்த்திகளுக்கு} உரிய எல்லா குணங்களையும் அடைய விரும்புகிறான். அந்த வேள்விகள், வருணனின் குணங்களை அடைய அந்த மன்னனுக்கு உதவி செய்கின்றன.(21) ஓ குரு குல இளவரசனே {யுதிஷ்டிரனே}, உமது நண்பர்கள் உம்மை மாமன்னர்களுக்குரிய அனைத்து தகுதிகளும் உடையவராக நினைக்கின்றனர். நீர் ராஜசூய வேள்வியை நடத்தும் சமயம் வந்துவிட்டது.(22) சாம வேதங்களின் மந்திரங்களைக் கொண்டு ஆறு நெருப்புகளை மூட்டும், கடும் நோன்புகள் நோற்கும் முனிவர்களைக் கொண்டு வேள்வியைத் தொடங்க, உமது க்ஷத்திரிய சக்தியால் உமக்கு வாய்ப்பு வந்திருக்கிறது.(23) ராஜசூய வேள்வியின் முடிவில், அந்த வேள்வியை நடத்திய நாட்டின் ஆட்சி உரிமை பெற்றவன், அக்னிஹோத்ரம் உள்ளிட்ட பல வேள்விகளைச் செய்ததன் கனிகளை {பயன்களை} அடைகிறான். இதனாலேயே அவன் {மன்னன்} அனைத்தையும் கைப்பற்றுபவன் என அழைக்கப்படுகிறான்.(24) ஓ பலம் வாய்ந்த கரம் கொண்டவரே {யுதிஷ்டிரரே}, இந்த வேள்வியைச் செய்ய உம்மால் முடியும். நாங்கள் அனைவரும் உமக்குக் கட்டுப்பட்டவர்கள். ஓ மாமன்னா, விரைவில் உம்மால் ராஜசூய வேள்வியை நடத்த முடியும்.(25) எனவே, மேலும் விவாதங்களை நடத்தாமல் வேள்வியை நடத்த தீர்மானியும்" என்று மன்னனின் {யுதிஷ்டிரனின்} நண்பர்களும் ஆலோசகர்களும் தனித்தனியாகவும் சேர்ந்தும் சொன்னார்கள்.(26)

மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, எதிரிகளைக் கொல்லும் யுதிஷ்டிரன், அறம்சார்ந்தவையும், துணிவு, இனிமை மற்றும் கனம் நிறைந்தவையுமான இந்த வார்த்தைகளை மனதார ஏற்றுக் கொண்டான்.(27) ஓ பாரதா {ஜனமேஜயா}, நண்பர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்டு, தனது பலத்தையும் அறிந்து கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, இந்தக் காரியம் குறித்து மீண்டும் மீண்டும் ஆலோசித்தான்.(28) அதன் பிறகு, ஆலோசனை வழங்குவதில் ஞானமுள்ள, புத்திகூர்மையுள்ள அறம் சார்ந்த யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடனும், சிறப்புமிகுந்த ரித்விஜர்களுடனும், தனது அமைச்சர்களுடனும், தௌமியருடனும், துவைபாயணருடனும் {வியாசர்}, மேலும் மற்றவர்களுடனும் ஆலோசித்தான்.(29)

யுதிஷ்டிரன், "மாமன்னர்கள் செய்யத் தகுதி வாய்ந்ததும், சிறந்தவேள்வியுமான ராஜசூயத்தை செய்யும் எனது விருப்பம், நான் கொண்டிருக்கும் நம்பிகை மற்றும் பேச்சால் மட்டுமே கனி கொடுத்துவிடுமா?", என்று கேட்டான்[1].(30)

[1] கும்பகோணம் பதிப்பில், "அரசர்க்கரசன் செய்யத்தக்க சிறந்த யாகமாகிய ராஜஸூயமென்னும் மஹாயாகம் சிரத்தையுள்ள எனக்கு எப்படி முடியும்? நீங்கள் சொல்லுங்கள்" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் சொன்னார், "ஓ தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவனே {ஜனமேஜயா}, இப்படிப் பேசிய யுதிஷ்டிரனிடம் அவர்கள் {நண்பர்களும் ஆலோசகர்களும்} அனைவரும்,(31) "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அறத்தின் விதிகளை அறிந்த நீர், இந்தப் பெரும் வேள்வியான ராஜசூயத்தைச் செய்யத் தகுதி வாய்ந்தவரே" என்றனர். ரித்விஜர்களாலும், முனிவர்களாலும் இப்படிச் சொல்லப்பட்ட அந்த மன்னன்,(32) தனது அமைச்சர்கள் மற்றும் தம்பிகளின் பேச்சைப் பெரிதும் அங்கீகரித்தான். இருப்பினும், பெரும் ஞானம் கொண்ட அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, தனது மனத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்து, உலகத்திற்கு நன்மை செய்ய விருப்பம் கொண்டு, மறுபடியும் இந்தக் காரியத்தை மனத்தில் நினைத்து, தனது பலத்தையும் ஆதாரங்களையும் நினைத்து, நேரம், இடம், வரவு, செலவு ஆகியவற்றையும் எண்ணிப்பார்த்தான்.(33,34)

நன்கு ஆலோசிக்கப்பட்டு செய்யப்பட்ட ஒரு செயலால் ஞானமுள்ளவர்கள் துயரடைய மாட்டார்கள் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான். இந்த வேள்வியைச் செய்யும் முடிவைத் தான் மட்டுமே எடுத்துவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவனும்,(35) இந்தச் சுமையைத் தனது தோள்களில் தாங்கிக் கொண்டிருந்தவனுமான யுதிஷ்டிரன், ’அனைவரையும் பாவங்களில் இருந்து காப்பாற்றும் கிருஷ்ணனே, இந்தக் காரியத்தை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன்’ என்று நினைத்தான்.(36) அவனே {கிருஷ்ணனே} மனிதர்களில் முதன்மையானவன், அளவிடமுடியா சக்தி கொண்டவன், பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவன், தனது சுயவிருப்பதின் மூலம் மட்டுமே மனிதனாகப் பிறந்த  அவனே {கிருஷ்ணனே} இதை முடிவு செய்யத் தகுதி வாய்ந்தவன் என்பதை அவன் {யுதிஷ்டிரன்} அறிந்திருந்தான்.(37) தெய்வம் போன்ற அவனது {கிருஷ்ணனது} செயல்களை நினைத்துப் பார்த்த பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, அவன் {கிருஷ்ணன்} அறியாத எதுவும் கிடையாது என்றும், அவனால் {கிருஷ்ணனால்} அடைய முடியாததும் எதுவு இல்லை என்றும், அவனால் {கிருஷ்ணனால்} தாங்கக்கூடாது எதுவும் இல்லை என்று நினைத்தான். இந்தத் தீர்மானத்துக்கு வந்த பிருதையின் {குந்தியின்} மகனான யுதிஷ்டிரன்,(38,39) விரைவாக ஒரு தூதுவனை அனைத்து உயிர்களின் தலைவனிடம் {கிருஷ்ணனிடம்} அனுப்பி வைத்தான்.

தனது வாழ்த்துகளையும், மூத்தவர் இளையவருக்கு உரிய மதிப்புடனும் செய்திகளைத் தூதுவனிடம் சொல்லி அனுப்பினான். விரைவாகச் செல்லும் தேரில் சென்ற அந்தத் தூதுவன் யாதவர்களுக்கு மத்தியில் துவாராவதியில் {துவாரகையில்} வசித்த கிருஷ்ணனை அணுகினான்.(40) தன்னைக் காண பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} விருப்பம் கொண்டுள்ளான் என்பதை அறிந்த அச்யுதன் {கிருஷ்ணன்}, தனது மைத்துனனைக் காண ஆவல் கொண்டான்.(41)

வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் பல பகுதிகளை வேகமாகக் கடந்த கிருஷ்ணன், இந்திரசேனனுடன் சேர்ந்து இந்திரப்பிரஸ்தத்தை அடைந்தான்.(42) இந்திரப்பிரஸ்தத்தை அடைந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, நேரத்தைக் கடத்தாமல் யுதிஷ்டிரனை அணுகினான். யுதிஷ்டிரன் கிருஷ்ணனை ஒரு தந்தையின் அன்புடன் வரவேற்றான்.(43)  பீமனும் அதே போல வரவேற்றான். பிறகு ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தனது தந்தையின் தங்கையிடம் {குந்தியிடம்} சென்றான். அங்கே இரட்டையர்களால் {நகுலன் மற்றும் சகாதேவனால்} வழிபடப்பட்டு, தன்னைக் கண்டதால் பெருமகிழ்ச்சி அடைந்த தனது நண்பன் அர்ஜுனனுடன் மகிழ்ச்சியாகப் பேசத்தொடங்கினான். சிறிது நேரம் அற்புதமான அறையில் ஓய்வெடுத்த பிறகு, யுதிஷ்டிரன் அவனை {கிருஷ்ணனை} அணுகி, ராஜசூய வேள்வியைக் குறித்துச் சொன்னான்.(44,45)

யுதிஷ்டிரன், "நான் ராஜசூய வேள்வியைச் செய்ய விரும்புகிறேன். அந்த வேள்வியை ஒருவரின் தீர்மானத்தால் செய்ய முடியாது. ஓ கிருஷ்ணா, சாதிக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் நீ அறிவாய்.(46) அனைத்தையும் செய்ய முடிந்தவனால் மட்டுமே இந்த வேள்வியைச் செய்ய முடியும். எவனை அனைவரும் வழிபடுகின்றனரோ, எவன் மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக இருக்கிறானோ அவன்தான் இந்த வேள்வியைச் சாதிக்க முடியும்.(47) எனது நண்பர்களும் ஆலோசகர்களும் என்னை அணுகி இந்த வேள்வியைச் செய்யச் சொல்கிறார்கள். ஆனால், ஓ கிருஷ்ணா, இக்காரியத்தில் உன் சொற்களே எனக்கான வழிக்காட்டிகளாகும்.(48) ஆலோசகர்களில் சில நண்பர்கள் சிரமங்களைக் கவனிக்க மாட்டார்கள்; சிலர் சுய விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்வார்கள்.(49) சிலர் ஒரு காரியத்தால் தங்களுக்கு விளையும் நன்மையை எண்ணி அப்படிச் செய்ய சொல்வார்கள். முடிவை நோக்கி இருக்கும் தீர்மானங்களில் மனிதர்கள் இப்படித்தான் ஆலோசனை வழங்குகிறார்கள்.(50) ஆனால் கிருஷ்ணா, நீ அந்த நோக்கங்களுக்கு மேலானவன். நீ ஆசையையும், கோபத்தையும் வென்றவன். உலகத்திற்கு மிகுந்த நன்மை தரக்கூடியது எது என்பதை எனக்கு நீதான் சொல்ல வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(51)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்