Thursday, September 12, 2013

நாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5ஆ

The enquiry of Narada | Sabha Parva - Section 5b | Mahabharata In Tamil

 (லோகபால சபாகயானா பர்வம்)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "நீ சம்பாதிக்கும் செல்வம் உரிய பொருள்களுக்காகச் செலவிடப்படுகிறதா? உனது மனம் அறத்தில் இன்பம் காண்கிறதா? நீ வாழ்க்கையின் இன்பங்களை அனுபவித்து வருகிறாயா? உனது மனம் அதன் {இன்பத்தின்} கனத்தால் மூழ்கிவிடவில்லையா? ஓ! மனிதர்களின் தலைவனே {யுதிஷ்டிரனே}, மூன்று வகையான (நல்ல, அலட்சிய, தீய வகைகளாக இருக்கும்) உனது குடிகளிடம், உனது மூதாதையர்கள் பயின்றதைப் போல அறம் மற்றும் பொருளுக்கு இசைவான உன்னத நடத்தை கொண்டிருக்கிறாயா?



பொருளுக்காக அறத்துக்கும், அல்லது எளிதாக மயக்கும் இன்பத்துக்காக, அறத்துக்கும் பொருளுக்கும் தீங்கு செய்யாது இருக்கிறாயா? ஓ! அனைவரின் நலனிலும் அர்ப்பணிப்புடன் இருக்கும் அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, குறித்த நேரத்தில் அனைத்தையும் செய்ய அறிந்தவனான நீ,

அறம் {அனைத்திலும் நல்லவனாக இருக்க முயற்சித்தல்}, பொருள் {சம்பாதிப்பது}, இன்பம் {மகிழ்ச்சியாக இருப்பது}, வீடு {முக்தி அடைய முயற்சி செய்தல்} ஆகியவற்றுக்கு நீதியுடன் சரியாக நேரத்தைப் பிரித்து செலவிடுகிறாயா?

ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, மன்னர்களின் ஆறு{6} பண்புக்கூறுகளைக் கொண்டு {attributes} (பேச்சில் புத்திசாலித்தனம், வழி செய்ய தயாராக இருத்தல், எதிரியைக் கையாள்வதில் புத்திசாலித்தனத்துடன் இருத்தல், நினைவுத் திறனுடன் இருத்தல், அறங்களையும், அரசியலையும் அறிந்து வைத்திருத்தல் ஆகியனவற்றைக் கொண்டு) ஏழு{7} வழிமுறைகளைக் (வேற்றுமை விதைத்தல், தண்டனை அளித்தல், சமரசம், பரிசுகள், மந்திரங்கள், மருத்துவம் மற்றும் மாயம் ஆகியவற்றைக்) கவனிக்கிறாயா?

நீ உனது சொந்த பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்த பிறகு எதிரிகளின் பதினான்கு{14} உடைமைகளைப் பரிசோதிக்கிறாயா? அவையாவன: நாடு, கோட்டைகள், ரதங்கள், யானைகள், குதிரைப்படை, காலாட்படை, மாநிலத்தின் {நாட்டின்} முதன்மை அதிகாரிகள், உயர்குடி பெண்களின் அந்தப்புரம், உணவு வழங்கல், இராணுவம் மற்றும் பொருள் வரவுக்கான கணக்கீடுகள், நடைமுறையில் உள்ள சமயக் கட்டுப்பாடுகள் {நடைமுறையில் உள்ள மத ஒப்பந்தங்கள்}, மாநில {நாட்டின் கணக்கு வழக்குகள்} கணக்குகள், வருவாய், மதுக்கடைகள், இரகசிய எதிரிகள் ஆகும்.

ஓ! அறம்சார்ந்த ஏகாதிபதிகளில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, உனது எதிரிகளுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, உனது நாட்டிலும் எதிரியின் நாட்டிலும் எட்டு{8} தொழில்களை (விவசாயம், வணிகம் போன்றவை) {விவசாயம், வணிகம், கோட்டை, அணை, யானை பிடித்தல், புதையல் எடுத்தல், தங்கம் வெட்டுதல், காலி இடங்களில் மக்களைக் குடியேற்றுதல் ஆகியன என்று கங்குலி அல்லாத வேறு உரையில் கண்டேன்} சரியாக ஆய்வு செய்து கவனிக்கிறாயா?

ஓ! பாரத குலத்தில் வந்த காளையே {யுதிஷ்டிரா}, உனது நாட்டின் ஏழு{7} முக்கிய அதிகாரிகள் (கோட்டையின் ஆளுநர், படைகளின் தளபதி, தலைமை நீதிபதி, உள்துறை தளபதி, தலைமைப் பூசாரி, தலைமை மருத்துவர், தலைமை சோதிடர் ஆகியோர்) யாரும் உனது எதிரியின் செல்வாக்கின் காரணமாக இறக்கவில்லை என நம்புகிறேன். மேலும் அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} தாங்கள் சம்பாதித்த செல்வத்தால், சோம்பேறிகள் ஆகவில்லை எனவும் நம்புகிறேன். அவர்கள் {நாட்டின் எழு முக்கிய அதிகாரிகள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்த நடக்கிறார்கள் என்றும் நம்புகிறேன். மாறுவேடத்தில் இருக்கும் உனது நம்பிக்கைக்குரிய ஒற்றர்களோ, நீயோ, அல்லது உனது அமைச்சர்களோ உனது ஆலோசனைகளை பகிரங்கப்படுத்துவதில்லை என நான் நம்புகிறேன். உனது நண்பர்கள், எதிரிகள், அந்நியர்கள் ஆகியோர் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டிருக்கிறாயா? அமைதியையும் போரையும் சரியான நேரங்களில் செய்கிறாயா?

அந்நியர்களிடமும், உன்னிடம் நடுநிலையுடன் நடந்து கொள்பவர்களிடமும் நீ நடு நிலைமையுடன் நடந்து கொள்கிறாயா? ஓ! வீரனே {யுதிஷ்டிரனே}, உனது அமைச்சர்களை, வயதில் மூத்தவர்களாக, கண்டிக்கும் குணம் கொண்டவர்களாக, எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதைப் புரிந்து கொள்பவர்களாக, பிறப்பாலும் இரத்தத்தாலும் சுத்தமானவர்களாக, உன்னிடம் அர்ப்பணிப்புள்ளவர்களாக, தகுதியில் உன்னைப் போலவே இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறாயா?

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அரசர்களின் வெற்றிகளுக்கு நல்ல ஆலோசனைகளே காரணம். ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, உனது நாடு, சாத்திரங்களைக் கற்று தங்கள் ஆலோசனைகளை ரகசியமாக வைத்துக் கொள்ளும் அமைச்சர்களால் காக்கப்படுகிறதா? எதிரிகள் அதை பலவீனப்படுத்தாமல் இருக்கின்றார்களா? நீ தூக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கிறாயா? சரியான நேரத்தில் விழிக்கிறாயா? லாபம் விளைவிக்கும் தேடுதல்களை, இரவின் கடைசி மணிநேரங்களில் நினைத்து, அடுத்த நாள் நீ என்ன செய்ய வேண்டும் என்றும் என்ன செய்யக்கூடாதென்றும் தீர்மானிக்கிறாயா?

எதையும் தனிமையாக நீயே தீர்மானிக்காமலும், அதே நேரத்தில் பல பேரிடம் ஆலோசனை கேட்காமலும் இருக்கிறாயா? நீ செய்ய நினைக்கும் ஆலோசனைகளை உனது நாடு அறியாமல் இருக்கிறதா? சிறிய சாதனையும், பெரிய பயனும் உள்ள காரியங்களைத் தேர்ந்தெடுத்து அப்படிப்பட்டவற்றை இடையூறு வராதவாறு விரைவாகச் செய்கிறாயா? உழவர்களை உனது பார்வையில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா? அவர்கள் உன்னை அணுக அச்சமில்லாமல் இருக்கிறார்களா? நீ உனது காரியங்களை நம்பிக்கைக்குரிய தூய்மையானவர்களையும், அனுபவம் கொண்டவர்களையும் கொண்டு செய்கிறாயா? ஓ! வீர மன்னா {யுதிஷ்டிரா}, உன்னால் சாதிக்கப்பட்ட சாதனைகளையும் உன்னால் தொடங்கப்பட்டு முடியாத காரியங்களை மட்டுமே மக்கள் அறிந்து, தொடங்கப்படாததையும், ஆலோசனையில் உள்ளதையும் அறியாமல் இருக்கிறார்களா?

இளவரசர்களுக்கும், படைகளின் தலைவர்களுக்கும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும், ஒழுக்க அறிவியலையும் கற்றுக் கொடுக்க அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமித்திருக்கிறாயா? ஆயிரம் பாமரர்களைக் கொடுத்து ஒரு கற்ற மனிதனை விலைக்கு வாங்கிக் கொள்கிறாயா? கற்ற மனிதன், நாட்டுக்குத் துயர் நிறைந்த காலங்களில் பெரும் நன்மையைச் செய்கிறான். உனது கோட்டைகளில் எப்போதும், செல்வமும், உணவும் ஆயுதங்களும், நீரும், பொறிகளும் கருவிகளும், இருக்கின்றனவா? அங்கே பொறியாளர்களும் வில்லாளிகளும் இருக்கிறார்களா? புத்திசாலித்தனமும், வீரமும் கொண்ட ஒரே அமைச்சர்கூட, தனது ஆசைகளைக் கட்டுக்குள் வைத்து, ஞானமும் நீதியும் கொண்டிருந்தால், அவனால் ஒரு மன்னனுக்கோ அல்லது மன்னனின் மகனுக்கோ பெரும் வளமையைக் கொடுக்க முடியும். ஆகையால், நான் உன்னிடம் கேட்கிறேன். உன்னிடம் அப்படிப்பட்ட அமைச்சர் இருக்கிறாரா?

மூன்று உளவாளிகளைக் கொண்டு உனது எதிரியின் பதினெட்டு{18} தீர்த்தங்களைக் {1.அமைச்சன், 2.புரோகிதன், 3.இளவரசன், 4.தளபதி, 5.வாயில் காப்போன், 6.அந்தப்புர அதிகாரி, 7.சிறைச்சாலை அதிகாரி, 8.செல்வங்களை வாங்கி  வைப்பவன், 9.செல்வங்களை செலவழிப்பவன், 10.கட்டளையை நிறைவேற்றுபவன், 11.நகர அதிகாரி, 12.காரியங்களை விதிப்பவன், 13.நீதிபதி 14.சபைத் தலைவர், 15.தண்டனை அளிப்பவன், 16.தண்டனையை நிறைவேற்றுபவன், 17.எல்லைக்காவலாளி, 18.காட்டதிகாரி ஆகியோரைக்} குறித்து அனைத்தையும் அறிந்து கொண்டு, பிறகு உன்னுடைய பதினைந்து{15} தீர்த்தங்களையும் {மேற்கண்டதில் அமைச்சன், புரோகிதன், இளவரசன் நீங்கலாக மற்றது அனைத்தும்}  அறிந்து கொண்ட பிறகு அந்த மூன்று உளவாளிகளும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறியாமல் இருக்கின்றனரா?

----------------- நாரதரின் விசாரணை -சபாபர்வம் பகுதி 5இ யில் தொடர்கிறது.

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்