Friday, September 13, 2013

நாரதரின் விசாரணை - சபாபர்வம் பகுதி 5ஈ

The enquiry of Narada | Sabha Parva - Section 5d | Mahabharata In Tamil

 (லோகபால சபாகயானா பர்வம்)

இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண




"நாரதர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! எதிரிகளைக் கொல்பவனே {யுதிஷ்டிரனே}, எதிரியின் முக்கிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகுதிக்கேற்ப நகைகளையும், ரத்தினங்களையும் எதிரி அறியாதவாறு கொடுத்து வருகிறாயா? ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, முதலில் உனது ஆன்மாவை வெற்றி கொண்டு, உனது புலன்களை உனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்பு, உனது எதிரிகள் எந்த மாதிரியான ஆசைளுக்கெல்லாம் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து வெற்றி கொள்ள முனைகிறாயா?

நீ எதிரியை நோக்கி படையை நடத்திச் செல்லும் முன், நான்கு கலைகளான {1}வேற்றுமையை அகற்றல், {2}பரிசளித்தல், {3}ஒற்றுமையின்மையை விளைவித்தல், {4} பலத்தைப் பிரயோகம் செய்வது போன்ற உபாயங்களைக் கடைப்பிடிக்கிறாயா?



ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, முதலில் உனது நாட்டைப் பலப்படுத்திய பிறகு நீ எதிரி நாட்டின் மீது படையெடுக்கிறாயா? அப்படி எதிரியை நோக்கி படையெடுத்து சென்ற பிறகு, மிகுந்த சக்தியைப் பயன்படுத்தி வெற்றியை அடையப் பாடுபடுகிறாயா? அவர்களை வெற்றி கொண்ட பிறகு, அவர்களை கவனத்துடன் பாதுகாக்கிறாயா? உனது படைகள், வழக்கமான துருப்புகள் {1}, கூட்டணி துருப்புகள் {2}, கூலிப்படையினர் {3}, வழக்கமில்லாத ஒழுங்கற்ற படைகள் {4} என நான்கு வகை துருப்புகளையும், ரதங்கள் {1}, யானைகள் {2}, குதிரைகள் {3}, அதிகாரிகள் {4}, காலாட்படை {5},  பணியாட்கள் {6}, நாட்டைப் பற்றிய தெளிந்த ஞானம் கொண்ட ஒற்றர்கள் {7}, மேன்மையான அதிகாரிகளால் நன்கு பழக்கப்பட்டு எதிரிகளிடம் கொடிகளைச் சுமந்து செல்வோர் {8} ஆகிய எட்டு அங்கங்களையும் கொண்டிருக்கிறதா?


ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, ஓ! மாமன்னா {யுதிஷ்டிரா}, எதிரி நாட்டின் பயிர் அறுப்பு காலத்தையும், பஞ்ச காலத்தையும் {பயிரைக் காப்பாற்றும் காலத்தையும்} கருதாமல் எதிரிகளைக் கொல்கிறாயா?

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உனது பணியாட்களும், முகவர்களும், உனது நாட்டிலும், எதிரிகள் நாட்டிலும் தொடர்ந்து தங்கள் தங்கள் கடமைகளையாற்றி, ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்கிறார்கள், என நான் நம்புகிறேன்.

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உனது உணவு, நீ அணியும் ஆடைகள், நீ பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் ஆகியவற்றைப் பார்த்துக்கொள்ள நம்பிக்கையான பணியாட்களை நியமித்திருக்கிறாய், என நான் நம்புகிறேன்.

ஓ! மன்னா, {யுதிஷ்டிரா} உனது கருவூலம் {பொக்கிஷம்}, தானியக் களஞ்சியம், தொழுவங்கள் {மாட்டுத் தொழுவம், குதிரைக் கொட்டகை போன்றவை}, படைக்கலன்கள், பெண்களின் அந்தப்புரங்கள் ஆகியவை உனது நன்மையை விரும்பி, உனக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் பணியாட்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என நான் நம்புகிறேன்.

ஓ! ஏகாதிபதியே, {யுதிஷ்டிரனே} முதலில், உனது வீட்டுப் பணியாட்களிடம் இருந்தும், பொது பணியாட்களிடம் இருந்தும், உனது உறவினர்களின் பணியாட்களிடம் இருந்தும், உன்னை நீ பாதுகாத்துக் கொண்டும், உனது உறவினர்களால் உனது பணியாட்களைப் பாதுகாத்துக் கொண்டும் வருகிறாய் என நான் நம்புகிறேன்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, காலையில், நீ மதுவுக்கும், விளையாட்டுகளுக்கும், பெண்களுக்கும் செலவு செய்யும் மிதமிஞ்சிய செலவுகளைக் குறித்து, உனது பணியாட்கள் உன்னிடம் பேசாமல் இருக்கிறார்களா? எப்போதும் உனது செலவு, உனது வருமானத்தில் நாலில் ஒரு பாகத்திலோ, மூன்றில் ஒரு பாகத்திலோ அல்லது அரை பாகத்திலோ முடிகிறதா? உணவு, செல்வம், உறவினர், மூத்தவர், வணிகர், முதியவர், மற்ற கிளைகள், துயரத்தில் இருப்பவர்கள் ஆகியோரை எப்போதும் ஆதரித்து வருகிறாயா? உனது வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்ள உன்னால் நியமிக்கப்பட்ட கணக்கர்களும் {accountants} எழுத்தர்களும் {clerks}, ஒவ்வொரு நாளும் காலையில் உன்னிடம் வரவு செலவுகள் குறித்த மதிப்பீடுகளை அளிக்கிறார்களா? காரியங்களைச் சாதிக்கும் பணியாட்களையும், உனது நன்மைக்காகத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்களையும், புகழ் பெற்றவர்களையும் அவர்களிடம் குற்றம் இல்லாதபோதே அவர்களை அதிகாரங்களில் இருந்து விலக்காமல் இருக்கிறாயா?

ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மேன்மையானவர்கள், அலட்சியமானவர்கள், கீழ்மையானவர்கள் ஆகியோரை சோதனை செய்த பிறகு, அவர்களைத் தகுந்த அலுவலங்களில் நியமிக்கிறாயா?

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, திருடர்களையோ, சலனத்துக்கு ஆட்படுபவர்களையோ, பகையுள்ளவர்களையோ, வயதில் இளையவர்களையோ உனது பணியில் நியமிக்காமல் இருக்கிறாயா? திருடர்களாலும், பேராசைக்காரர்களாலும், சிறுவர்களாலும், பெண்களாலும் உனது நாட்டுக்குத் தொல்லை நேராமல் பார்த்துக் கொள்கிறாயா? உனது நாட்டில் இருக்கும் உழவர்கள் திருப்தியுடன் இருக்கிறார்களா? வேளாண்மை வான்மழையை மட்டும் நம்பியிராமல், பெரிய குளங்களும், ஏரிகளும் நாடு முழுவதும் தகுந்த இடைவெளி கொண்ட தூரங்களில் கட்டப்பட்டுள்ளனவா? உனது நாட்டின் உழவர்களுக்கு விதையோ உணவோ பற்றாக்குறையில்லாமல் இருக்கின்றனவா? உழுபவர்களுக்கு அன்புடன் நூற்றுக் கணக்கில் கடன் {விதை நெல்களை} கொடுத்து, அதிகமாக இருப்பதில் நான்காவதை எடுத்துக் கொள்கிறாயா? {4% வட்டி என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Grantest thou with kindness loans (of seed-grains) unto the tillers, taking only a fourth in excess of every measure by the hundred?  என்று வருகிறது}

ஓ! குழந்தாய் {யுதிஷ்டிரா}, நான்கு தொழில்களான, {1}விவசாயம், {2}வணிகம், {3}கால்நடை வளர்த்தல், {4}வட்டிக்கு கடன் கொடுத்தல் ஆகியவை நேர்மையான மனிதர்களால் நடத்தப்படுகின்றனவா? ஓ! ஏகாதிபதியே {யுதிஷ்டிரா} இவற்றிலேயே உனது மக்களின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வீரர்களும் ஞானவான்களுமான ஐந்து மனிதர்களை, நகரம் {1}, கோட்டை {2}, வணிகர் {3}, உழவர் {4}, குற்றவாளிகளைத் தண்டித்தல் {5}, ஆகிய ஐந்து அலுவலகங்களில் நியமித்து, அவர்களை {அந்த ஐவரை} நாட்டின் நன்மைக்காக ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வேலை செய்ய வைக்கிறாயா? உனது நகரங்களின் பாதுகாப்புக்காக, கிராமங்களை நகரங்கள் போலவும், சிறுகிராமங்களும், புறநகர்களும் கிராமங்கள் போலவும் செய்யப்பட்டிருக்கின்றனவா? இவையெல்லாம் உனது நேரடிக் கண்காணிப்பில் செய்யப்பட்டு, உனது முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனவா? உனது நகரத்தைக் கொள்ளையிடும் கொள்ளையரும், திருடர்களும், உனது நகர்க்காவலர்களால் உனது நாட்டின் சமமான மற்றும் சமமற்றப் {மேடு பள்ளமான} பகுதிகளிலும் பின்தொடரப்படுகிறார்களா? பெண்களை ஆறுதலுடன் நடத்துகிறாயா? அவர்களுக்கு உனது ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா? அவர்களிடம் {பெண்களிடம்} நீ எந்த நம்பிக்கையும் கொள்ளாமல், அவர்கள் {பெண்கள்} எதிரில் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறாயா?

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஏதாவது ஆபத்தைக் கேள்விப்பட்டாலும், அது குறித்து சிந்தித்த பிறகு, அந்தப்புரங்களில் அனைத்து இன்பங்களையும் அனுபவித்துக் கொண்டு படுத்துக்கிடக்காமல் இருக்கிறாயா? இரவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகளில் {மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 12 மணி நேரங்களை நான்காகப் பிரித்து, முதல் பிரிவு (ஜாமம்) மாலை நேரமாதலால் (6.00 - 9.00) தூங்காமல், இரண்டாவது பிரிவு (ஜாமம்) {9.00 - 12.00) மற்றும் மூன்றாவது பிரிவு (ஜாமம்) (12.00 - 3.00)ல்} தூங்கி, நான்காவது பிரிவில் {(ஜாமத்தில்) 3.00-6.00 மணிக்குள்} அறத்தையும் பொருளையும் சிந்தித்து எழுகிறாயா?

ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, சரியான நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து, நன்றாக உடுத்திக் கொண்டு, அதிர்ஷ்டமான நேரங்களை அறிந்த அமைச்சர்கள் துணையுடன் உன்னை உனது மக்களுக்கு காட்சியளிக்கிறாயா? ஓ! எதிரிகளை நசுக்குபவனே, கைகளில் வாளுடனும், பல ஆயுதங்களுடனும் இருக்கும் சிவப்பு ஆடை உடுத்தியவர்கள் {மெய்காப்பாளர்கள்}, உன்னைக் காப்பதற்காக உனது அருகில் இருக்கிறார்களா?

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, தண்டனைக்குத் உகந்தவர்களிடமும், வழிபாட்டுக்குத் தகுந்தவர்களிடமும், உன்னிடம் அன்புடன் இருப்பர்களிடமும், உன்னை விரும்பாதவர்களிடமும், நீதி தேவன் {தர்மதேவன், யமன்} போல சமமாக நடந்து கொள்கிறாயா?

ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரா}, மருந்துகளாலும், பத்தியங்களாலும், உடல்நோயையும், பெரியவர்கள் அறிவுரைகளால் மன நோயையும் குணப்படுத்திக் கொள்கிறாயா? உனது ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் மருத்துவர்கள் எட்டு வகை சிகிச்சைகளை அறிந்து உன்னிடம் பிணைப்புடனும், அர்ப்பணிப்புடனும் இருக்கிறார்களா?

ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, உன்னிடம் வந்த வாதி, பிரதிவாதிகளிடையே பேராசையாலோ, அறியாமையாலோ, கர்வத்தாலோ முடிவு காணமுடியாத நிலையில் அகப்படாமல் இருக்கிறாயா? பேராசையாலோ, அறியாமையிலோ, உனது பாதுகாப்பை நாடி நம்பிக்கையுடனும் அன்புடனும் வந்தவர்களை ஏமாற்றாமல் இருக்கிறாயா? உனது ஆட்சியில் வசிக்கும் மக்கள், எதிரிகளால் பொருள் கொடுத்து {லஞ்சம் கொடுத்து} வசப்படுத்தப்பட்டவர்களாக ஒன்றாகச் சேர்ந்து, உன்னிடம் பகை கொள்ளாமல் இருக்கிறார்களா? உனது எதிரிகளில் தளர்ந்தவர்கள், உனது ஆலோசனைகளாலும் வலிமையான துருப்புகளாலும் எப்போதும் நசுக்கப்படுகிறார்களா? உனது நாட்டின் முக்கியத் தளபதிகள் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களா? அவர்கள் உனது உத்தரவின் பேரில் அவர்களது உயிரைக்கூட உனக்காகத் தர சித்தமாக இருக்கிறார்களா?

---------------நாரதரின் விசாரணை- சபாபர்வம் பகுதி 5உ தொடர்கிறது.....

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்