Thursday, August 07, 2014

தேவர்கள் படை அணிவகுப்பு! - வனபர்வம் பகுதி 230ஆ

The march of the celestial army!  | Vana Parva - Section 230b | Mahabharata In Tamil

(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)

சிவன் தேரில் பார்வதியுடன் பத்திரவடம் சென்றது; இந்திரன் அவனுக்குப் பின்புறத்தில் சென்றது; கந்தன் வலதுசாரியாகச் சென்றது; இயற்கையில் உள்ள அனைத்தும் சிவனின் பின்னால் சென்றது; கந்தனிடம் சிவன் ஏழாவது படைப்பிரிவைக் காக்கும்படி சொன்னது; கந்தன் அதை ஏற்றது...

மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அக்னி தேவனின் புகழத்தக்க மகன் {ஸ்கந்தன்} தேவர்கள் படைக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டபோது, மகிழ்ச்சியடைந்த ஹரன் (மகாதேவன்) பார்வதியுடன் சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட தேரில் பத்திரவடம் என்ற இடத்திற்குச் சென்றான். அவனது அற்புதமான தேர் {தேரோட்டியாக இருந்த} காலனால் செலுத்தப்பட்டு ஆயிரம் சிம்மங்களால் இழுக்கப்பட்டது. வெற்றிடத்தைக் கடந்து செல்லும் அவற்றைக் காண வானத்தையே விழுங்கிவிடுபவை போலத் தெரிந்தன. உலகங்களின் அசையும் பிரிவுகளில் உள்ள அனைத்து உயிரினங்களின் இதயத்திலும் பயங்கரத்தை {சிங்கங்கள்} உணர்த்தின. பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்த அந்த விலங்குகள் ஆகாயத்தில் விரைந்து கொண்டிருந்தன. அனைத்து விலங்குகளுக்கும் தலைவன் (மகாதேவன்), உமையுடன் தேரில் அமர்ந்து, இந்திரவில்லுடன் (வானவில்) கூடிய மேகத்தில் மின்னலோடு கூடிய சூரியனைப் போலப் பிரகாசித்தான். புகழத்தக்கவனான செல்வங்களின் தலைவன் {குபேரன்}, மனிதர்களின் முதுகில் அமர்ந்தபடியும், அவனது {குபேரனின்} தொண்டர்களான குஹ்யர்கள் அவனது {குபேரனின்} அழகிய புஷ்பக விமானத்திலும் {சிவனைத்} தொடர்ந்து சென்றனர்.


தேவர்கள் படைக்குத் தலைமையானவனும், வரங்களை அருள்பவனுமான மகாதேவனுக்குப் பின்புறத்தில் சக்ரனும் {இந்திரனும்} தனது யானையான ஐராவதத்தில் சென்றான். ஜம்பக யக்ஷன் மற்றும் பிற ராட்சதர்களையும் தொண்டர்களாகக் கொண்டவனும் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தவனுமான பெரும் யக்ஷனான அமோகன் அந்தப் படையின் வலது சாரியில் இடம்பெற்றான். வசுக்கள் மற்றும் ருத்திரர்களோடு கூடிய, அற்புதப் போராற்றல் கொண்ட பல தேவர்களும் அப்படையின் வலதுசாரியில் {Right Wing} அணிவகுத்து சென்றனர்.

மரணத்தைத் துணையாகக் கொண்டிருக்கும் கோர உருவம் கொண்ட யமனும் {(தன்னை நூற்றுக்கணக்கான பயங்கர நோய்கள் பின்தொடர) அவனுடன் {சிவனுடன்} அணிவகுத்துச் சென்றான். அவனுக்குப் பின்னால் எடுத்துச் செல்லப்பட்ட, கூர்முனை கொண்ட பயங்கர ஆயுதமான நன்கு அலங்கரிக்கப்பட்ட சிவனின் திரிசூலம் விஜயம் என்று அழைக்கப்படுகிறது. புகழத்தக்க நீர்த் தேவனான வருணன், பயங்கரமான பாசத்தோடும் [1], எண்ணிலடங்கா நீர் விலங்குகளுடனும் மெதுவாகத் திரிசூலத்தோடு நடந்து வந்தான். ருத்திரனின் பட்டிசம் [2] கதை, உலக்கை, தண்டம் மற்றும் பிற அற்புதமான ஆயுதங்களால் சூழப்பட்டு விஜயம் என்ற திரிசூலத்தைப் பின்தொடர்ந்து சென்றது. ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தப் பட்டிசம் ருத்திரனின் பிரகாசமான குடை மற்றும் பெரும் முனிவர்கள் சேவிக்கும் கமண்டலம் ஆகியவற்றால் தொடரப்பட்டது. இவை அனைத்தும் பிருகு, அங்கிரஸ் மற்றும் இன்னும் பிறரின் துணையோடு சென்றன. இவர்கள் அனைவருக்கும் பின்னால், தனது வெள்ளைத் தேரில், தேவர்களுக்குத் தனது சக்திகளை வெளிப்படுத்தும் வண்ணம் ருத்திரன் சென்றான்.

[1] ஒரு வகை ஏவுகணை என்கிறார் கங்குலி
[2] ஒரு வகை ஆயுதம் என்கிறார் கங்குலி

ஆறுகள், தடாகங்கள், கடல்கள், அப்சரசுகள், முனிவர்கள், தேவர்கள், கந்தரவர்கள், பாம்புகள், விண்மீன்கள், கோள்கள், தேவர்களின் குழந்தைகள் ஆகியோரும் இன்னுப் பல பெண்களும் இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து சென்றனர். அழகான தோற்றம் கொண்ட அந்த மங்கையர் சுற்றிலும் பூக்களைத் தூவியபடியே சென்றனர். பினாகம் என்ற வில்லைத் தாங்கிச் சென்ற தேவனை (மகாதேவனை) வணங்கியபடி மேகங்களும் அணிவகுத்துச் சென்றன. அவற்றில் சில அவனது {சிவனின்} தலைக்கு மேலே வெண்குடையைப் பிடித்துச் சென்றன. அக்னியும் (நெருப்பு தேவனும்), வாயுவும் (காற்று தேவனும்) (அரச சின்னங்களான) வெண்சாமரம் வீசினர். அரசமுனிவர்கள் {ராஜரிஷிகள்} துணையுடன் மகத்தான இந்திரனும் பிற தேவர்களும், காளை சின்னம் கொண்ட தேவனின் {சிவனின்} புகழைப் பாடிக் கொண்டே அவனைத் தொடர்ந்து சென்றனர். கற்றோரால் படைக்கப்பட்ட அத்தனை வித்தைகளும் பார்வதியைத் தொடர்ந்து அவளுக்குப் பின்புறத்தில் தொடர்வது போலக் கௌரி, வித்யா, காந்தாரி, கேசினி, மித்திரை என்று அழைக்கப்பட்ட மங்கை ஆகிய அனைவரும் சாவித்திரியோடு சேர்ந்து அவளுக்குப் {பார்வதிக்குப்} பின்புறத்தில் சென்றார்கள்.

இந்திரன் மற்றும் பிற தேவர்களுக்குக் கீழ்ப்படிந்து பலதரப்பட்ட படைப்பிரிவுகளுக்கு உத்தரவுகளைக் கொண்டு சேர்க்கும் ராட்சச ஆவி, கொடியைத் தாங்கிக் கொண்டு படைக்கு முன்னணியில் சென்றான். சடலங்களை எரிக்கும் இடங்களில் எப்போதும் மும்முரமாக இருக்கும் ருத்திரனுக்கு நண்பனும், ராட்சசர்களில் முதன்மையானவனும், அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படுபவனுமான பிங்களன் என்ற பெயர் கொண்டவன், ஒரு நேரம் படைக்கு முன்னணியில் சென்றும், அடுத்த நேரம் பின்னுக்கு வந்தும் கணிக்கமுடியாத அசைவுகளுடன் மகிழ்ச்சியாக அணிவகுத்துச் சென்றான்.

அறச்செயல்களைக் காணிக்கையாகக் கொடுத்தே ருத்திர தேவன் மனிதர்களால் வழிபடப்படுகிறான். அவன் சிவன் என்றும் அழைக்கப்படுகிறான். பினாகையைத் தாங்கி எங்கும் நிறைந்திருக்கும் அந்தத் தேவனே மகேஸ்வரன். அவன் பல வடிவங்களில் வழிபடப்படுகிறான்.

தேவர் படையின் தலைவனும், அந்தணர்களின் மரியாதைக்குரியவனுமான கிருத்திகையின் மகனும் {ஸ்கந்தன்}, தேவர் படையால் சூழப்பட்டு அந்தத் தேவாதி தேவனைத் தொடர்ந்து சென்றான். மகாதேவன் மஹாசேனனிடம் {ஸ்கந்தனிடம்}, "நீ கவனமாகத் தேவர்கள் படையின் ஏழாவது படைப்பிரிவினைக் {ஸ்கந்தத்தைக்} கட்டளையிடுவாயாக {காப்பாயாக}" என்ற கனம் நிறைந்த சொற்களால் சொன்னான்.

ஸ்கந்தன் {சிவனிடம்}, "என் தலைவா! {நான்} மிக நன்றாகக் {அந்தப் படைப்பிரிவைக்} காப்பேன்! நான் ஏழாவது படைப்பிரிவை வழிநடத்துவேன். இப்போது, வேறு ஏதேனும் செய்ய வேண்டுமா என்பதை விரைவாகச் சொல்லும்" என்றான்.

ருத்திரன் {ஸ்கந்தனிடம்}, "செயற்களத்தில் என்னை நீ எப்போதும் பார்க்கலாம். என்னை நோக்கிப் பார்த்து, எனக்கு அர்ப்பணிப்புடன் இருந்தால், நீ பெரும் நன்மையை அடைவாய்" என்றான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்
இப்பதிவின் Word DOC பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்